ads

Wednesday 3 April 2013

சீமான் உயிருக்கு ஆபத்து!!


தமிழ் உணர்வாளர், பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர், சமுதாய நோக்குடன் திரையில் தோன்றியவர், ஈழ தமிழர்களுக்காக, அவர்களின் அவல நிலையை உலகறிய செய்யவும் முழுமுயற்சியாய்  ஈடுபட்டவர். 

இந்திய அரசாங்கத்தின் கவனத்தை திருப்பவும், தமிழக மக்களிடையே ஒரு விழிப்புர்ச்சியை உருவாக்கவும் அல்லும்  பகலும் அயாராது பாடு பட்டவர், 

இலங்கை பிரச்சனைக்காக பல முறை சிறைவாசம் சென்றவர் ... இப்படி பல பெருமைகளுக்கு உரிய சீமானுக்கு இப்போது கால நேரம் சரியில்லை. 

தினம் ஒன்றாக பல சுட்டு விரல்கள் சீமானை நோக்கி நீண்டுக் கொண்டே இருக்கின்றன. 

அது அரசியல் நாடகம் போடுகிறார் என்று கலைஞரை சொல்வதுபோல் இல்லை.     

ஈழ பிரச்சனை உயிரோடு இருக்க வேண்டுமானால் பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும்.  அந்த  நோக்கத்தில் இல்லாத பிரபாகரனை இருப்பதாக பொய் சொல்கிறார் என்று விமர்சிக்கப் படும் நெடுமாறன் போல் இல்லை.

தமிழக அரசியல்வாதியாவும் இல்லாமல், ஈழத்து பிரதிநிதியாகவும் இல்லமால் ரெண்டும்கெட்டான் நிலையில் தவிக்கிறார் என்று விமர்சனத்திற்கு உள்ளாகும்  வை. கோ மாதிரியும் இல்லை.

அன்று ஓன்று சொல்வார். இன்று வேறொன்றை செய்வார், நாளை என்பது யாருக்கும் தெரியாது என்று புதிராய் பார்க்கப்படும் ஜெயலலிதா மாதிரியும் இல்லை.

இது வேற...

புலிகளின் பணத்திற்கு புள்ளி வைக்கிறார் சீமான் என்று செய்தி கிளம்பி அடங்குவதற்குள், புது பூதம் கிளம்பி இருக்கிறது.

seeman

சீமான் மேல் சொல்லப்படும் குற்றசாட்டுக்கள் அத்தனையும் பாலியல் குற்றசாட்டுக்கள்.

seeman


இலங்கை இணையதளங்களில் இந்த செய்தி பரபரப்பாக உலா வருகிறது.

(அந்த செய்தியின்  வடிவத்தை நம் தளத்தின்  தரத்தை மனதில் கொண்டு, சில வரிகளை நீக்கி தருகிறோம்.   ஆபாச படங்களையும் தவிர்த்திருக்கிறோம்.)

மேலும் ....

இது வெறும் பாலியல் குற்றசாட்டுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. சீமான் உயிருக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.  அதை செய்ய தூண்டும் பிரச்சாரமாகவும்  இருக்கிறது.

இதற்கு விளக்கம் சொல்லவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறதோ இல்லையோ, அதை அவர் உணர்கிறாரோ இல்லையோ, தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

செய்தி   இதுதான்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அடையத் துடிக்கின்ற, அனுபவித்து வருகின்ற தமிழீழத்தின்  ஒட்டுமொத்த வடிவத்தை நாம் உங்களுக்கு காட்டப் போகின்றோம்.

அடைந்தால் தமிழீழம்… என்று தமிழ் உணர்வு கொப்பளிக்க அடிக்கடி சூடாக சூளுரைப்பவர் சீமான்.



ஆனால் மலேசியாவில் வசித்து வருகின்ற   தமிழ்  யுவதி  ஒருவரின்  தங்கமேனியில் ஈழத்தை கண்டு   தணித்துக் கொள்கின்றார்.

தமிழ் யுவதிக்கு யாழ்ப்பாண  பூர்வீகமும் உள்ளது. புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளராக மலேசியாவில் செயற்பட்டு வந்து இருக்கின்றார்.

புலிச் சின்னத்தை முதுகில் பச்சை குத்தி வைத்து உள்ளார்.



புலிச் சின்னம் என்றால் சீமானுக்கு தனிப் பிடிப்பு வந்து விடும் என்கின்றனர். இதனால்தான் போலும் இந்த யுவதியை படுக்கைக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

சீமானுக்கும்  தமிழ் யுவதிக்கும் இடையிலான தொடர்பு  குறித்து  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளர் ஒருவர் சமூகதளம் ஒன்றில் எழுதி உள்ள பதிவை இங்கு இணைக்கின்றோம்…



கடந்த 30 வருட கால யுத்தம் எத்தனையோ தமிழ் இளைஞர்களை பலி எடுத்தது. இந்த யுத்தத்தின் திருப்பு முனை முள்ளிவாய்க்கால் பேரழிவு.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து புதிய தலைவராக புறப்பட்டவர் சீமான்.இவருக்கு பின்னால் இளைஞர்கள் குழு ஒன்று அணி வகுத்து நிற்கத்தான் செய்கின்றது.

இவரது வீராவேச பேச்சுக்களால் உஷார் ஏற்றப்பட்டு பல இளைஞர்கள் தமிழ் நாட்டில் உடலை தீயிட்டு கொளுத்தி பலியாடுகள் ஆகி வருகின்றனர்.


புலம்பெயர் தமிழர்கள் இவரை தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனால் இவரோ யுவதி ஒருவரின் கள்ளத் தொடர்பில் உல்லாசம் அனுபவித்து வருகின்றார்.

எனவே இவர் போல இன்னொரு துரோகி இருக்க முடியாது. மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை இருந்தால் சீமான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.



சீமான்   சுவிஸ்,   பிரான்ஸ்,  ஜெர்மனி போன்ற ஜரோப்பிய நாடுகளுக்கு போன போது..,        எங்கட தமிழிச்சிகளும்  (புலிச்சிகள்)   நிறைய பேர் புருசனை விட்டு விட்டு சீமானை பார்க்க  ஓடினவையாம்..

சீமானை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் சாப்பாடு கொடுக்க புலிச்சிகள் தவம் கிடந்தவையாம்!!.

வன்னியில் அல்லது யாழ்பாணத்தில் யாராவது ஒரு பெண்ணுடன் ஒரு பொடியன் பேசினாலோ, காதல்  கொண்டாலே அல்லது கள்ளதொடர்பு வைத்திருந்தாலோ புலிகள் உடனே கூட்டிக் கொண்டு போய் சுட்டுப் போடுவினம்.

அப்ப  கள்ளிப்பால் குடிக்கின்ற சீமானை புலிகள் என்ன செய்யப் போயினம்..?

இந்த செய்திகளின் வழியாக நாம் உணர்வது ஒன்றுதான். சீமானுக்கு ஆபத்து காத்திருக்கிறது. கவனம் ... எச்சரிக்கை.


தொடர்புடைய கட்டுரைகள் :
இலங்கை பெண்ணோடு சீமானுக்கு கல்யாணமா?

2 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...