ads

Tuesday 30 April 2013

இந்தியாவாகும் மலேசியா - ஸ்பெஷல் ரிப்போர்ட்


மலேசிய அரசியல் களம் எப்போதுமே ஒரு மாறுபட்ட தன்மை கொண்டது. உலக அரசியல் பேசாத ஒரு நாடு என்றால் அது மலேசியாதான். 

அவரை பற்றி இவரும், இவரை பற்றி அவரும் அறிக்கை விடுவார்கள், மற்றபடி மாறும் உலக சூழ்நிலை, அதில் மலேசியாவின் பங்கு என்பதை பற்றி யாரும் மூச்சு விடுவதே இல்லை.

சில தமிழ் தலைவர்கள்  அதிக பட்சம் இலங்கை தமிழர்களை பற்றி பேசுவார்கள். 

தமிழகத்தில் இன உணர்வோடு பேசி போராடும் தமிழ் தலைவர்களை சுயநலவாதிகள் என்று வர்ணிக்கும் இலங்கை தமிழர்கள் மாதிரி, மலேசிய தமிழ் தலைவர்கள் இந்தியாவை குற்றம் சொல்வதோடு  சரி. 

தங்கள் நாட்டு தலைமையை எதிர்க்க, இலங்கை தமிழர்களுக்கு  ஆதரவு குரல் கொடுக்க சொல்ல தைரியம் இருக்காது. 

அதிகபட்சம்  ராஜபெச்சே கொடும்பாவியை எரித்து விட்டு தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள்.

போகட்டும்.



எதிர்வரும் மே 5ம் தேதி பொதுத்தேர்தலை சந்திக்கிறது மலேசியா.

இந்தியா என்றில்லை. எந்த நாட்டு  அதிபர்  வேட்பாளாராக இருந்தாலும் அடுத்து ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யப்போகும் நலத்திட்டங்களை சொல்வது வழக்கமான ஒன்றுதான். செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதும் வழக்கமான ஒன்றுதான்.

இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாரிசான் நேஷனல் முன்னணியில் இருக்கிறது.

தேர்தல் நெருங்கிய பிறகு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார் நஜீப். இது அவருக்கு நல்ல பெயரை தேடி தந்தாலும், மாகாதீர் முஹமட்டுக்கு எதிரான கோவம், வெறுப்பு, முகமதுநஜீப்பை பூதம் மாதிரி விழிங்கி விடும் போலிருக்கிறது. .



1957 இல் சுதந்திரம் பெற்ற பிறகு இதுநாள் வரை ஆட்சியில் இருக்கும் பாரிசான், இப்போது அக்னி பரீட்சையை சந்திக்கிறது என்பதுதான் உண்மை.



துங்கு அப்துல் ரகுமான், நுன் அப்துல் ரசாக், துன் உசேன் ஆன், மகாதீர் முகமட், அகமது படாபி, என்று மாறி இப்போது முகமது நஜீப் வசம் ஆட்சி இருக்கிறது. ஆனால் இந்த முறை வலுவான எதிரியை களத்தில் சந்திக்கிறது பாரிசான்.

கே. அடிலான் கட்சியின் தலைவர் அன்வர் தான் அந்த வலுவான எதிரி.

மகாதீர் காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் அன்வர். கட்சிக்குள் அவர் வலுப்பெறுவதை விரும்பாத மகாதீர், அன்வரை பழிவாங்கும் விதமாக  ஓரின புணர்ச்சி  வழக்கை போட்டு சிறைக்கு அனுப்பி, அவமானப் படுத்தியதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அதற்கு பாரிசான்,  விலை தரும் தருணம் வந்து விட்டது போலவே காட்சியளிக்கிறது தேர்தல் களம்.



மலேசிய இந்தியன் காங்கிரஸ்  மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த போது, தமிழ் மக்களின் பாதுகாவலானாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டது ஹின்ட்ராப்.

ஒரு கட்டத்தில் தடை செய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் வெளியே வந்த பிறகும் தமிழர்கள் நலனுக்காக குரல் கொடுத்தது ஹின்ட்ராப்.

ஆனாலும் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழ் மக்களிடம் இப்போது ஹின்ட்ராப் விலை போய் விட்டது என்ற விமர்சனம் வெளிப்படையாக ஒலிக்கிறது.

அதோடு,  கே அடிலான் கட்சி தலைவர் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  இது ஆளும் கட்சிக்கு இனிப்பான செய்தி அல்ல.

நஜீப்பும் கூட இந்திய அரசியலை உற்று நோக்கினாரோ என்னவோ,  பல இலவச திட்டங்களை அறிவித்தார்.  பொங்கலுக்கு அரிசியும் கொடுத்தார். இப்போது பண பட்டுவாடாக்கள் கூட நடக்கிறது போல் இருக்கிறது.

கே. அடிலான் கட்சி தலைவர் அன்வர் பொது கூட்டத்தில் பேசும் போது இது தானாக கூடிய கூட்டம். காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல என்று பகிரங்கமாகவே சொல்கிறார்.

இதை பார்க்கும் போது இந்திய அரசியல் வாதிகள் போலவே மக்களுக்கு இலவசம், பிரியாணி, பணம் கொடுத்து தங்கள் வாக்கு வங்கியை வளர்ந்து  கொள்ளும் நடைமுறையை  மலேசிய தலைவர்களும் கற்றுக் கொண்டு விட்டார்கள் போலவே தெரிகிறது.

எந்த நாடாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் நிறம் ஒன்றுதான். மொத்தத்தில் இந்தியாவாகிறது மலேசியா  .

Monday 29 April 2013

மௌனத்தின் சப்த்தங்கள்

அதையும் அறிந்து கொள்ளுங்கள் - உஷ்ஷ்ஷ் !!!


நான்கு சுவருக்குள் ஆணும் பெண்ணும் நடத்துகிற குடும்ப வாழ்க்கைதான் வாழ்க்கை நெறிகள் அனைத்திலுமே உன்னதமானது என்பதை வலியுறுத்தாத அறிஞர்களே இல்லை. 

திருமணம் என்கிற பந்தத்தின் மூலம் பெறுதற்கரிய பேறுகளை பெற முடியும் என்பதே இல்லறம். குடும்ப தர்மம்.

கல்யாணம் என்கிற பெயரில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என லைசன்ஸ் பெற்றுக் கொள்வதால் மட்டும் இல்லறம் பிறந்து விடுவதில்லை. 

நிறைவான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்றால் அதற்கும் முயற்சியும் தேவை.

முதலில் இல்வாழ்வு எவ்வாறு துவங்குகிறது என்று பார்ப்போம்.

ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியை  உரிமம்  பெறுகிற  போது அங்கெ முதலில் எழுவது காமமும் மோகமும் சார்புமே. இந்த காமமும் மோகமும் தான் இல்வாழ்க்கையின் முதலீடு. குடும்பத்தின் பிடிமானம். மனித வளத்தின் மூலாதாரம்.

இந்த முதலீட்டை செம்மையாகவும் கவனமாகவும் பயன்படுத்தும் தம்பதிகளின் வாழ்வு செம்மையாக அமைகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏழும் இனக்கவர்ச்சி வெறும் முதலீடு மட்டுமே.

கணவன் மனைவிக்கு இடையே நிகழும் கலவியும் புணர்ச்சியும் தான் ஆளுமையின் அச்சாணி. அந்த அச்சாணியை ஆதராமாக கொண்டு தான் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது.

கலவியில் பரிபூரமான ஈடுபாடும் நேர்மையும் தூய்மையும் அமைந்து விடுமானால் அந்த தம்பதிகளை எந்த தீய சக்தியாலும் திசை திருப்ப முடியாது.

வெற்றி அவர்கள் பக்கம்தான். இந்த தெளிவும்,  சுதந்திர உணர்வும்தான் காதலை வளர்க்கின்றன.

தேக பரிமாற்றத்தில் தொடங்கிய உறவு ஆன்ம பரிமாற்றத்தில் நிலைக்கிறது. இதுதான் ஆரோக்கிய குடும்பம் என்கிறார் பிரபல டாக்டர் எ. ரேணுகா.

இந்த உறவு நிலையை வெற்றிகரமாக செயல்படுத்துவது எப்படி என்பதை பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.

அதை படங்களாக இங்கே பிரசுரம் செய்திருக்கிறோம். நீண்ட யோசனைக்கு பிறகு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.








வானம் ஏற வழி இருக்கு தம்பி!!



எனக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அழகாக இல்லை. 

நான் அதிகம் படிக்கவில்லை. 

நான் ஏழையாக இருக்கிறேன். 

நான்கு பேருக்கு முன்னால் என்னால் தைரியமாக பேச முடியவில்லை என்று ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. 

இந்த  தாழ்வு மனப்பான்மை ஒருவருடைய தன்னம்பிக்கையை அழித்து விடுகிறது.

எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்க்கையில் இருக்கிற நிலையையே ஏற்றுக் கொண்டு கடைசி வரை அதே நிலையில் வாழ்ந்து விட்டு போகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இந்த தாழ்வு மனப்பான்மை என்ற கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தால் தான் உங்களால் பறக்க  முடியும்.

ஆஹா நமக்கு பறக்கவும் தெரிகிறது என்பதே உங்களுக்கு தெரியும். இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. அதே போல் முட்டாள் என்பவரும் இல்லை. முயற்சி செய்து பாருங்கள், முடியாது என்று நினைக்காதீர்கள்.

ஒரு சின்ன  குழந்தை  ஆங்கிலம் பேசுகிறது. சிறுவன் கார் ஓட்டுகிறான். நம்மால் முடியாதா என்று யோசித்து பாருங்கள். விமானம் ஓட்டுபவன் என்ன தேவலோகத்தில் இருந்தா வந்தான் பயிற்சிதான் காரணம்.

அம்பானி பிறக்கும் போது மில்லியனராக   இல்லை. நாம் பணக்காரராக இல்லையே,  இந்த மும்பை தொழில் அதிபர்களுடன் நாம் போட்டி போடமுடியுமா என்று அவர் நினைத்திருந்தால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரர்களின் வரிசையில் அவர் குடும்பம் இருக்க முடியாது.

இரண்டே செட் துணியோடும் ஒரு தகரப் பெட்டியோடும் தான் பஸ் ஏறி பம்பாய் வந்தாராம்.

நம்மால் முடியுமா என்ற பயமே பலரின் முன்னேற்றத்தை தடுத்து விடுகிறது. எதையும் நமக்கு சாதகமாக நினைத்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மணிகணக்கில் சரளமாய் மேடையேறி பேசுகிறவர்கள் முதல் மேடையில் முதல் வரிக்கு மேல் பேச முடியாமல் நா குழறி வேர்த்து விறுவிறுத்து தான் போயிருப்பார்கள்.

முயற்சி  இருந்தால் இங்கு எதுவுமே சாத்தியம். நம்மாலும்   முடியும்.  விவேகானந்தர் அமெரிக்கா போனபோது ஆங்கிலத்தில் நாம்மால் மேடையேறி பேச முடியுமா என்ற எண்ணம் இருந்ததாம்.

ஆனால் அவரது தியானம், யோகத்தால் இயற்கையாகவே  அவருக்கு மனோதிடம் இருந்தது.

நியுயார்க்கில் உலக ஆன்மீக மகாசபையில் அவர் பேசும் போது எல்லோரும் பேசிய பின், கடைசியாகத்தான் அவரை அழைத்தார்களாம். அதன் பின் அவர் பேசிய எல்லா மேடையிலும் அவர்தான் முக்கிய பேச்சாளாராக இருந்தாராம்.

முதலில் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியில் வரவேண்டும். நம்மை சுதந்திர மனிதனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எந்த செயலை செய்ய நினைக்கிறோமோ அதைபற்றிய ஆய்வினை செய்ய வேண்டும். இது நம் முயற்ச்சிக்கு உட்பட்டது. முயன்றால் வெற்றி பெறலாம்.

நாம் எதிலும் குறைந்து போய்விடவில்லை. எதிரில் இருப்பவரை விட நாம் எதிலும் தாழ்ந்தவரில்லை.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. தெளிவாய் சிந்திக்கும் அறிவு இருக்கிறது.  அதுபோதும் வெற்றி கொள்ள.

பெரியோருக்கு மரியாதை தரலாம். மேலதிகாரிக்கு வணக்கம் சொல்லலாம். ஆன்மீகவாதிகளின் காலில் விழலாம். இது அவரவர் நிலைக்கு காட்டும் மரியாதை. ஆனாலும் உங்கள் தனிதன்மையில் நீங்கள் உயர்ந்தவர்தான். இதை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் வெற்றியாளர்.

Saturday 27 April 2013

உங்களுக்கு விருப்பம் இருந்தால் படிக்கலாம்..!!


உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர் உடல் வளர்த்தேன் என்பது உடலை பேணுதல், உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் செய்யும் செயல்களில் .மனம் ஒருமுகப்படும். வெற்றி கிட்டும்.

மனதும் உடலும் ஒன்றுக்கொன்று இணைத்திருப்பவை.மனம் உற்சாகமாக இருக்கும் போது, நோய்கள் உடலை தாக்குவதில்லை. நாம் நோய்வாய் படுவதற்கு மனபலவீனமும் ஒரு காரணம்  என்கிறார்கள் டாக்டர்கள். 



கோபம், பதட்டம் போன்ற தீவிர மன உணர்வுகள் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்ப்பட காரணமாக  இருக்கிறது. அதிக்கபடியான கவலை வயிற்று பிரச்சனையை ஏற்படுத்துகிறதாம்.

பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்து பார்த்துக் கொண்டால் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

உடல்நிலை சீர் கெடுவதற்கு  பெரும்பாலும் உணவு பழக்கம் ஒரு காரணம். உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடற்பயிற்ச்சி வேண்டும்.

உணவு கட்டுப்படும், உடற் பயிற்சியும்   ஏதோ வயதானவர்களுக்கு மட்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அப்படியல்ல. இவை சிறு வயதில் இருந்தே கடைபிடிக்க வேண்டிய பழக்கம்.



அப்படி பழக்கம் இருப்பவர்கள் உடல் பருமன், நீரழிவு, ரத்த கொதிப்பு பிரச்சனைகள் எதுவும் இன்றி இறுதி வரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். நோய்கள் இவர்களை அண்டுவதில்லை.

நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவு பழக்கத்திற்கு மாறிக்கொள்வதும், ஆன்மீகத்தின் மேல் முழு ஈடுபாடு காட்டுவதும், நமது உடல் மன ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

காய்கறி, கீரைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியமாகவும்,  உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகின்றன. இது அன்றைய சித்தர்கள் முதல் இன்றைய மருத்துவர்கள் வரை கூறும் அறிவுரை.

கோவில்களில் இறைவனுக்கு சாற்றிய துளசி, வில்வம், வேப்பிலை, அருகு போன்ற தலங்கள் எல்லாம் நோயை தீர்க்கும் மூலிகைதான்.

வீட்டுக்கு கொல்லைப்புறத்தில் வளர்த்த கீரை வகைகள் உடலுக்கு நல்லதை செய்யும் உணவு பொருள்கள்தான்.

இன்று விரைவு உணவு வகைகளுக்கு (பாஸ்ட் புட் ) மாறிய பின், விரைவாக நோய்வாய்பட்டு, வெகு விரைவாக போய் சேரவேண்டி இருக்கிறது.




சிறுவயதிலேயே எல்லாவித நோய்களின் உறைவிடமாகவும் உடல் மாறிவிட நமது உணவு பழக்கமே காரணமாக இருக்கிறது.

அடுத்து

வயிறு புடைக்க உண்ணுதல் தவறு. முக்கால் வயிறு உணவு, மீதி வயிறு காலியாக இருக்க வேண்டும். பசியோடு உணவுக்கு அமர்ந்து, பசியோடு எழு என்பது சித்தர்கள் கருத்து.



அதாவது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றும் போதே உண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு வைத்தியரிடம் சென்றார் ஒருவர். ஐயா.. உங்களுக்கு தெரிந்து எல்லா வியாதிகளையும் போக்கும் மருந்து இருக்கிறதா என்றார்.

அதற்கு வைத்தியர் இருக்கிறது. அது வியாதிகளை போக்காது. வியாதி வராமல் பாதுகாக்கும் என்றார்.

உடனே உற்ச்சாகமாக அது என்ன மருந்து என்றார் வந்தவர்.

அதற்கு வைத்தியர்  சொன்னார் .. அதன்  பெயர்  உழைப்பு .

இன்று உழைப்பதற்கு நேரம் இல்லாமல் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாயங்கால நேரத்தில் நடை பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சரியான உணவு, உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, இனிய நினைவுகள், எளிமையான வாழ்க்கை, வழிபாடு இவையெல்லாம் இருந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. வாழ்க்கையை அருமையாக அமைத்துக் கொள்ளலாம்.


Friday 26 April 2013

முகப் பக்க முத்து!!

பேஸ்புக் என்பது பொண்ணுங்க போட்டோ போட்டால் லைக் பண்ணுவார்கள். மற்றபடி அங்கே என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கிறார்கள்.

உண்மையில் அங்கே பல அற்புத தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பது தான் உண்மையே.

நான் பார்த்த சில முத்துக்களை மாலைகளாக கோர்த்திருக்கிறேன். உங்கள் பார்வைக்கு.



மற்ற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாக தமிழில் மட்டும் தான் உறவுகளை சிறப்பிக்க ஒவ்வொரு உறவுக்கும் தனிதனியாக பெயர் இட்டு சரியாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. 

இந்த படம் அதற்கு ஒரு சான்று. தன் முன்னோர்களையும் தனக்கு பின் வரும் சங்கதியரையும் தனி தனியே வெவ்வேறு பெயர் இட்டு மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். 

ஆனால் வேதனை என்னவெனில் நம் தலைமுரையினரோ இதை பற்றி எல்லாம் அறியாமல், எந்த உறவையும் uncle என்றும் aunty என்றும் ஒரு வார்த்தையில் அடக்கி விடுகின்றனர். இவ்வாறு சென்றால், எப்படி நம் உறவுகளுக்குள் பாசப்பிணைப்பு வளரும்?











சனி பார்வையில் கிரகங்கள்!!




சனீஸ்வரன் பெயரை கேட்டாலே அண்ட சராசரங்களே ஆடிப்போகும். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமில்லை. அனைவருக்கும் ஒரே நீதி, அது சமநீதி என்ற கோட்பாடு கொண்டவர். 

அதனால் பயம் கலந்த பக்தியோடு பார்க்கப்படுகிறார். இவர் பார்க்கும் இடங்கள் விருதிக்காது என்கிறது சாஸ்திரம். 

இவர் பார்வையில் உள்ள கிரகங்கள் பல தொல்லைகளை தரும் என்கிறது சாஸ்திர குறிப்புகள்.

நீலமாய் இருப்பார், கருப்பாய் மருவார். இயந்திரமாய் உழலுவார். உழைப்பை அதிகமாக்குவார். 

அரசியலுக்கு அடித்தளம், மருத்துவத்திற்கு பக்கப்பலம், தொழில் நுட்பத்திற்கு உதவிகரம் என்று வேறுகிரக அமைப்பிற்கு தகுந்த மாதிரி உதவி செய்வார். 

ஆனாலும் கல்வியில் தடை, கல்யாண யோகத்திற்கும் முட்டுக்கட்டை போடுவார். சோம்பலுக்கு சொந்தக்காரர். சுயநலத்திற்கு உடன் பிறந்தவர். 

இவரின் பார்வையில் கிரகங்கள் இருந்தால் என்னாகும் என்பதே இந்த ஆய்வு.

சூரியன் சனி பார்வையில் இருந்தால்!

சமூகத்தில் ஒருவருக்கான அந்தஸ்த்து, கவுரவம், தந்தையார் உறவு நிலை, அரசாங்க வெகுமதி, பதவி, உதவி, உயர்ந்தோர் நட்பை பற்றி பேசுவது சூரியன்.

இவருக்கு சனி பார்வை கிட்டினால்?

தந்தைக்கும் மகனுக்கும்மான  உறவு தன்டாவாளம் மாதிரி ஒட்டாது. நேசமும் பாசமும் நெஞ்சில் இருந்தாலும் உறவு நிலைகளில் உறுத்தல் வந்துவிடும். அன்னியோன்னியம் குறையும்.

பிறப்பு உயர்ந்ததாக இருந்தாலும் பழக்க வழக்கங்கள் சிறப்பதில்லை. தன்னிலும் தாழ்ந்தவரோடு நட்பு,தகுதி குறைவான சகவாசம், சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாத மூர்க்கத்தனம், பாதை மாறி போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல், இல்லற வாழ்வில் இடர்பாடு,கண்டங்கள் என்று ஆலை கரும்பாய் ஆட்டி படைத்துவிடும்.

சந்திரனுக்கு  சனி பார்வையில் இருந்தால்!

புனர்பூ தோஷம் என்ற புதுப் பெயரை சூட்டிக் கொள்ளும். பெயர் இருக்கட்டும் பலன் என்ன?

வரட்சி அவ்வப்போது புரட்சி செய்யும்.எவ்வளவு வந்தாலும் செலவு, கடன் வாங்கும் சூழ்நிலை எனபது கண்கூடு. அது அதற்கு ஒரு கவலை, ஐயாவிற்கு பல கவலை என்பது உண்மையாகும்.

சோம்பல், சோர்வு அதிகம். அசதி மறதி இலவச இணைப்பு. கலையான மேடை ஏற காத்திருக்க    வேண்டிவரும். வாலிபம் கடக்கும் போதுதான் வாழ்க்கைத் துணை ஆணுக்கு அத்தான்,மாமா,என்னங்க என்ற குரல் கேட்கும்.

பெண்ணுக்கு?

என்னடி, செல்லம், என்ற அன்பொழுகும் வார்த்தையை கேட்க எப்படியும் முப்பதை தொடும் வரை முடியாது.

செவ்வாய்,  சனி பார்வையில் இருந்தால்?

முன்கோபி, முரட்டுத்தனம், எடுத்தெறிந்து பேசுவது சகஜம். இவர்கள் வாழ்க்கையில் எதுவும் நிரந்திரம் இல்லை. எல்லாம் வருவதும் போவதுமாக இருக்கும்.

வாழ்க்கையே ஏற்ற இறக்கம் நிறைந்தது. அதாவது திரிசங்கு சொர்க்கம். இவர்கள் எந்த உடல் பாகத்தை குறிக்கும் இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்தில் காயம் தழும்பு, ரணம் வராமல் போகாது.

புதன்,  சனி பார்வையில் இருந்தால்?

நாவில் சரஸ்வதி நர்த்தனமாடும்.  வாதம் செய்தால் வக்கீல், அறிவுரை சொன்னால் ஆசிரியர். கணக்கில்  புலிகள். கண்ணதாசனுக்கு   கூட பிறந்த தம்பி மாதிரி கவிதை எழுத்தும் ஆற்றல் கூட பெறுவதுண்டு. ஆனாலும் இவர்கள் யோசனை, அறிவு அடுத்தவருக்கே   அதிகம் பயன்படும்.

குரு,   சனி பார்வையில் இருந்தால்?


ஒருதரம் முடிவு செய்து விட்டால் இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். பிடிவாதம் அதிகம். அதைவிட நன்றாக தூங்க பிடிக்கும்.


எதையும் சிரத்தையோடு செய்வதில்லை. செய்ய தெரியாமல் இல்லை.செய்யணுமே. அப்படியே அரசியல்வாதி குணம். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இருக்காது.

சுக்கிரன் சனி பார்வையில் இருந்தால்?


ஆன்மீக உணர்வு அதிகம். கடைசி காலத்தில் காவி கட்ட கூட ஆசை வரும். அல்லது காவி கட்டிய மாதிரி பற்றற்ற வாழ்க்கை அமையும்.


ஆணுக்கு  இந்த அமைப்பு இருந்தால் பொண்டாட்டியா வந்த வந்த பொண்ணு பொழுதுக்கும் கரிச்சு கொட்டும். குறை சொல்லும், குற்றம் கண்டுபிடிக்கும். தலையெழுத்துடா சண்டாளா.. போட்டஎழுத்துடா பொண்டாட்டி.

பெண்ணுக்கு இந்த அமைப்பு இருந்தால்.. அதே பதில் தான். மாற்றம் இல்லை.

ராகு, சனி பார்வையில் இருந்தால்?

கரடு முரடானவர்கள். முன் கோவம் முன்னாலும், பின் கோவம் தன்னாலும் வரும். குறுக்கு புத்தி. சுயலாப சிந்தனை. ஆதாயம் வரும் என்றால் ஆற்றை மட்டும் அல்ல, கடலை கூட இறைப்பார்கள். மறைமுக வருமானம் வரும்.

கேது, சனி பார்வையில் இருந்தால்?

ஆன்மீக சிந்தனை. பற்றற்ற நிலை. வேதாந்தி. குடும்ப பாசம் குறைவு. வறுமை.

Thursday 25 April 2013

சீனா நம்பத்தகுந்த நண்பன் இல்லை!!




அந்த காலத்தில் நாடு பிடிக்கும் ஆசையில் வெறிபிடித்து திரிந்த மன்னர்கள் மாதிரி, எல்லைகள் தோறும் தொல்லைகளை வளர்ந்துக் கொண்டே போகிறது சீனா. 

முரட்டு ராணுவ பலத்தை வைத்திருக்கிற தைரியத்தில் அண்டை நாடுகளுடன் அனுசரித்து போவதே இல்லை.

இந்தியா விஷயத்திலும்  இதே கதைதான். உங்களுக்கு தெரியுமா? 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஓரம் உள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த 3 ஆண்டுகளில் சீனா இதுவரை 600 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்பது. 



குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரத்து 800 அடி உயரத்தில் உள்ள லடாக் பகுதியில் தான் சீனா, பலமுறை அத்துமீறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 சீன ராணுவத்தினர், ஊடுருவதும் பின் அங்கு தற்காலிக முகாம்களை அமைத்து கொள்வதும், இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும்  தன் பழைய நிலைக்கு திரும்புவதுமாக   அட்டூழியம் செய்து வருகின்றனர்.



இது தொடர்பாக இந்திய தேசிய ஆலோசகர் சிவசங்கரமேனன் சீன ஆலோசகருடன் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தையின் போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை சீன ராணுவத்தினர் எல்லை மீறும்போதும், இந்திய ராணுவ உயரதிகாரிகள் கொடிநாள் கூட்டம் போட்டு சீனாவின் அத்துமீறல்களை கண்டித்து வருகின்றனர்.



கொடிக் கூட்டம் என்பது, ஒரு நாட்டின் பகுதிக்குள், இன்னொரு நாடு ஊடுருவும் போது, பதட்டத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் முதல் நடவடிக்கை.

இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, இக்கூட்டம் நடக்கும். பிரச்னை சிறியதாக இருந்தால் பிரிகேடியர்கள் அளவிலும், பெரிதாக இருந்தால் கமாண்டர்கள் மட்டத்திலும் கூட்டம் நடக்கும். 



இதற்கிடையில், கடந்த வாரம் சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த சுமார் 20 ராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் வெளியானது. 

இதை மத்திய அரசோ, ராணுவ அமைச்சகமோ சொல்லவில்லை. ஊடகங்களில் செய்தி வெளி வந்த பிறகு உறுதி படுத்தினார் அமைச்சர். 

அதாவது வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல் (10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்தனர். 

மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் அவர்கள் முகாம் ஒன்றையும் அமைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தின் 5-வது பட்டாலியன் படைப்பிரிவு ஒன்று அங்கு விரைந்தது. 

சீன ராணுவம் அமைத்த முகாமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்திய ராணுவம் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளது.

சீன ராணுவத்தினர் நுழைந்துள்ள இடம் இந்திய பகுதிக்கு சொந்தமானது என்ற பேனர்களை இந்திய வீரர்கள் அசைத்துக் காட்டியும் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில், இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு, காஷ்மீர் மாநில உள்துறை மந்திரி சாஜத் கிச்லூ மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவசர கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் அவசரம் பயணமாக இன்று ஜம்மு விரைந்தார். 

ஆக்கிரமிப்பு நடந்த பகுதியில் 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர் சீன ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா விஷயத்தில் இந்தியா இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிருக்கிறது.  சீனா நம்பத்தகுந்த நண்பன் இல்லை என்பது மட்டும் உண்மை.

வரலாற்றில் கள்ளழகர்!!




அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி விழாக்கோலம் பூண்டிருந்தது மதுரை. 

கடந்த பத்து நாட்களாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.  திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று அழகர் ஆற்றில் இறங்கினார். 



இந்நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா... கோவிந்தா என்று முழக்கமிட்டனர். வருடம் தோறும் நடக்கும் இவ்விழாவிற்கு  ஒரு கதை உண்டு. 




புராண காலத்தில் ஒருநாள்...

அன்று நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார் சுதபஸ் முனிவர்.

தியானம் செய்தது கங்கை கரையில்.  தியானம் செய்தது திருமாலை நோக்கி. 

ஆனால் அவர் கெட்ட நேரம் துர்வாசர் ரூபத்தில் வந்தது.  துர்வாசர் தவமுனியாக இருந்தாலும், முன்கோபத்திற்கு பெயர் போனவர்.

முணுக்கென்றால் கோவம் வந்துவிடும்.  கோவம் கடைசியில் சாபமாக மாறிவிடும்.

சுதபஸ் தவம்செய்த வழியாக வந்தார் துர்வாசர்.  விழி மூடிஇருந்த சுதபசுக்கு விசுவாமித்திரர் வந்தது தெரியவில்லை.

அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை துர்வாசர். நான் வருகிறேன். நான் வந்ததை கவனிக்காமல் தியானம் ஒரு கேடா? பிடி சாபத்தை... என்று சபித்து விட்டு விட்டார்.

சபித்தது எப்படி?

மண்டுகமாக போ. மண்டுகம் என்றால் தவளை என்று அர்த்தம்.

தியானத்தில் இருந்த சுதபஸ் திடுக்கிட்டு போனார்.

அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என்று பணிகிறார்  சுதபஸ்.

கோவம் இருந்தாலும் பணிவோரை மன்னித்தருளுவார் துர்வாசர்.  அந்த வகையில் மனமிரங்கிய ரிஷிமுனி, முனிவரே...சாபத்தை திரும்ப பெற முடியாது. என்றாலும் நீர் மண்டுகமாக பிறந்து  மதுரை வைகை கரையில் திருமாலை நோக்கி தவம் செய்வீராக. .

திருமால் கருணையால்  கருணையால் சாபவிமோசனம் பெறுவீர் என்று திருவாய் மலர்ந்தார்.

சுதபஸ் முனிவரும் மண்டுகமாக பிறந்து,  வைகை கரையில்  தவம் செய்து திருமால் கருணையால் சுயவுரு பெற்ற நிகழ்வை குறிக்கும் விதமாக கள்ளழகர் வைகை கரைக்கு வருவதாக ஒரு ஐதீகம்.

இது புராண கதை.  

ஆனால் இதற்கு ஒரு, வரலாற்று கதை ஒன்றும் இருக்கிறது. அதையும் பார்ப்போம்.

திருமலை நாயக்கர் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் தான் அழகர் ஊர்வலம் மதுரைக்கு வந்தது என்கிறார்கள்.   அதருக்கு முன்பு வரை மதுரைக்கு அருகில் உள்ள சோழவந்தான் வரைதான் அழகர் வந்தார்.

இது இருக்கட்டும். அழகர் ஊர்வலத்தை பற்றி ஒரு சுவாரசியமான செய்தி உண்டு.

சைவமும் வைணவமும் ஓன்று சேராத காலம். அக்காலத்தில் கள்ளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் தான் அழகர் கோவில் இருந்தது.



கள்ளர்கள் சைவர்கள்.  பெரும் ஆள் பலமும், ஆயுத பலமும் கொண்டவர்கள். பெரும் செல்வ செழிப்பாக இருந்த அழகர் ஊர்வலம் வரும் போது எல்லாம், வழி மறித்து அவர்கள்  கொள்ளையடித்து விடுவார்களாம்.

வருடம் தோறும் நடக்கும் இத்துயரத்தால் கவலையுற்ற வைணவர்கள், கள்ளர்களோடு கலந்து பேசி ஒரு உடன்படிக்கைக்கு வருகின்றனர்.

அந்த சமாதான உடன்படிக்கைபடியே இப்போது நடக்கும் வைபோவம், விழா எல்லாமே.

அதாவது கள்ளர்களுக்கு முதல் மரியாதை தரும் விதமாக அழகர் கோவிலில் இருந்து மதுரை தல்லாகுளம்  வரை கள்ளர் குல ஆண் மகனை போல் உடை அணிந்து வருகிறார் அழகர்.

ஒவ்வொரு வருடமும் மதுரை அழகர் ஆற்றில் இறங்கும்  நிகழ்வால் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும்.

இன்றும் அப்படியே.


Wednesday 24 April 2013

ஆபத்து...ஆபத்து..ஆபத்து!!






நம்பினால் நம்புங்கள். நிச்சயம், இது தான் உலகின் ஆபத்தான சந்தையாக இருக்கும் என்கிறது சி.என்.என் .

இந்த பிசியான சந்தைப் பகுதி தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Talad Rom Hoop என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்த சந்தையை குறுக்காக வெட்டியது போல்  ரயில் செல்கின்றது.

ஒரு நாளைக்கு எட்டு தடவைகளுக்கு மேல் செல்லும் இந்த ரயில் சந்தையில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

இந்தக் காணொளியைப் கவனமாகப் பாருங்கள்…

ரெயில்  அடித்தபடி வருகின்றது. மக்கள், வியாபாரிகள் எல்லாம் ஓரமாக நிற்கின்றார்கள்.

ரெயில் கடந்து போனதும் வெயில், மழைக்கு வைத்திருந்த தரப்பாள்களை எடுத்து தண்டவாளத்தில் ஊன்றுகின்றனர்.

என்ன ஒரு மனிதர்கள் இவர்கள்?


இந்த ரயிலால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அநேகம் பேர்.

அனேகமாக எல்லாப் பொருட்களும் இந்த சந்தையில் கிடைக்கின்றது.

இப்படி ஒரு ஆபத்தான சந்தையை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா?

வீடியோ பார்க்க இணைப்பு இதுதான் கிளிக் செய்யுங்கள் 



ஆபத்தான சந்தையை பார்த்தீர்கள். அடுத்து ஆபத்தான பள்ளி செல்லும் வழி ஒன்றையும் பாருங்கள். 

இந்த உலகிலேயே இயங்கி வருகின்ற மிகவும் ஆபத்தான பள்ளிக்கூடம் செல்லும் வழி  இதுவாகத் தான் இருக்கும்.

ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் பள்ளிப் படிப்பு மிகவும் முக்கியமானது.

ஆனால், இந்தக் குழந்தைகள் படித்து தாங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு எப்படி ஒரு ஆபத்தில் ஒற்றைக் காலில் நிற்கின்றார்கள் என்று பாருங்கள்.

இந்தப் படங்கள் இந்தோனேசியாவின் மேற்கு கடற்கரை ஓரத்தில் உள்ள Sumua Bana என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டவை. கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது.

உடைந்து தொங்கும் பாலத்தில் மாணவர்கள் ஆபத்தில் பயணிப்பதைப் பார்க்க எங்களின் இதயம் வேகமாகப் படபடக்கின்றது.

2008 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற பாரிய பூகம்ப அழிவுக்குப் பின்னர் இந்தப் பாலம் இன்னும் திருத்தப்படவில்லை என்பது தான் மாணவர்களின் சோகத்துக்கு காரணம்.







பாவங்களில் இருந்து விடுதலை பெற..!




சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்த்தன் பிறந்தாராம். 

யார் இந்த சித்ரகுப்த்தன்?

உயிர்களை கவர்ந்து செல்லும் எமனுக்கு உதவியாளராக இருப்பவர். மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை வைத்திருக்கும் கணக்கப்பிள்ளை. 

சிவபெருமானால் பொற்பலகையில் வரைய பட்டு, பார்வதி தேவியால் உயிர் பெற்றவர் சித்திரகுப்தன்.  ஆனாலும் பிம்மாவை நோக்கி தவமிருந்து ஒரு பசுவின் வயிற்றில் உதித்தார் என்று கூட ஒரு கதை உண்டு. 

எதற்காக இவர் கதை இப்போது? 

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. நாளை சித்ரா பௌர்ணமி. பெளர்ணமிகளில் மிக விஷேசமாக குறிக்கப்படுவது சித்திரா பௌர்ணமி. 

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வருகிற முழு நிலவு நாள் சித்திரா பௌர்ணமி அல்லது சித்ரா பூர்ணிமா எனப்படும்.

அக்காலத்தில் காவேரி கடலோடு தொடர்பு கொள்ளும் காவிரி பூம்பட்டினத்தில் இந்த சித்தரா பௌர்ணமியன்று இந்திர விழா எனப்படும்  விழா மிக சிறப்பாக நடைபெற்றதாக சிலப்பதிகார செய்தி கூறுகிறது. 



இந்த பௌர்ணமியன்று சித்திரகுப்த்தனை வழிபாடு செய்யும் போது, மனித பிறவியில் நாம் செய்துவிட்ட பாவங்களின் சுமை குறையும் என்கிறது புராண செய்தி.

சித்திரகுப்த வழிபாட்டில் சித்திரகுப்தனின் உருவம் போல் அரிசிமாவால் எழுதி, அவர் கையில் எழுத்தாணியும்  ஏடும், காதில் குண்டலங்களும் எழுதி பூஜை செய்ய வேண்டும்.

தலைவாழை இலையில் பச்சனங்கள், வடை, பாயசம், அன்னம், தேன் எல்லா காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதனம்  செய்ய வேண்டும். சக்கரை   பொங்கல் வைத்து படைப்பது விஷேசம். உப்பில்லாமல் சமைத்து சாப்பிடுவது உத்தமம் என்று கூறப்படுகிறது.

அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். ஏழை பிள்ளைகளுக்கு நோட்டு பென்சில், புத்தகங்கள் வாங்கி கொடுக்கலாம். அரிசி, காய்கறிகள், பருப்பு, போன்றவைகளை முறத்தில் வைத்து குருமார்களுக்கு தட்சணையாக தரலாம்.

இவ்விரதங்கள் இருப்பவர்கள் அறியாமல் செய்த பல பாவங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.

நீங்களும் செய்து, ஏழைகளுக்கு உதவி, புண்ணியத்தை நாடுங்களேன்.


Tuesday 23 April 2013

தலிபான்களின் குட்டி கமோண்டோக்கள் ! திகிலைக் கிளப்பும் வீடியோ


குழந்தையும் தெய்வமும் ஓன்று என்பார்கள்.  கராணம் அதற்கு எந்த வஞ்சக குணமும் இருக்காது.

 பழிவாங்கும் உணர்வும் இருக்காது.  எழுதப்படாத வெற்று காகிதமாக இருக்கும்.

அவர்களுக்கு நல்லதை சொல்லி கொடுக்கலாம், அற உணர்வை உருவாக்கலாம்.  ஆன்மீகத்தை, மனித நேயத்தை, சகோதரத்துவத்தை ஆழ்மனதில் பதிய வைக்கலாம்.  ஆனால் அதுவே தீவிரவாதிகளின் பார்வை இந்த குழந்தைகளின் மேல் விழுந்தால்? 

Little Commandos என்று பெயரிடப்பட்டு தலிபான்களினால் வெளியிடப்பட்டுள்ள வீடியோக் காட்சி ஒன்றில் 20 க்கும் மேற்பட்ட சின்னம் சிறுவர்கள் சிறு ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை பாவித்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

குறித்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டு லண்டன் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படங்களில் நான்கு சிறுவர்கள் பிஸ்டல் துப்பாக்கிகளிலும், ஐந்து சிறுவர்கள் AK 47 ரக துப்பாக்கிகளிலும், ஒருவர் இயந்திரத் துப்பாக்கிகளிலும் பயிற்சிகளைப் பெறுகின்றனர்.

நீங்களே பாருங்கள்.

இவர்களில் யாராவது ஒருவர் இந்தியாவில் குண்டு வைக்க வரலாம். நாச வேளையில் ஈடுபடலாம் யாருக்கு தெரியும்?

வீடியோ லிங்க் 








குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...