ads

Friday 26 December 2014

ஓசோ

 மரக் காது  - சொல்ல மறக்காது.
நாசாவிலிருந்து ஒரு குழு ஆய்வுக்காக  அமோசான் காடுகளுக்குள் சென்றதாம். அமோசான் ஆற்றுப் படுகைகளில் வாழும் காட்டுவாசிக் கிராம மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி, செல் போன் போன்றவையெல்லாம் அதிசமயாக இருக்கிறது. வானொலியில் பாட்டுக் கேட்டு திடுக்கிட்டுப்போனார்களாம்.  ஏனென்றால் இது போன்ற அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகளைப்பற்றி அவர்கள் அறிந்திருக்க வில்லை.  

அமோசான் மக்களின் தொலைத் தொடர்பைப் பார்த்து, நாசாக் குழுவினர் ஆச்சரியப்பட்டுப்போயினராம்.

அதாவது அவர்கள் வாழும் பகுதியில் ஒரு மரம் இருக்கிறதாம். தொலைவில் இருக்கும் யாருக்காவது தகவல் அனுப்ப வேண்டுமானால் அந்த மரத்தினருகில் சென்று அந்த மரத்திடம் சொல்ல வேண்டியச் செய்தியைச் சொல்கிறார்களாம்.  உடனே அத்தகவல் சேர வேண்டியவர்களை சென்றடைந்து விடுகிறதாம்..

உதாரணத்திற்கு ஒரு கிராமவாசி அடுத்த ஊருக்கு தன் வீட்டிற்கான பொருட்கள் வாங்கப் போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் மனைவி அவனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்திருந்தால், கணவன் போன பின் சட்டென ஞாபகம் வந்து விட்டால்  ,நேரே அந்த மரத்திடம் சென்று, என்னங்க.. வரும்போது மறக்காம மஞ்சத் தூள் வாங்கிட்டு வந்திடுங்க.. சொல்ல மறந்திட்டேன்னு சொல்வாளாம்.. அவனுக்கு அந்தச் செய்தி உடனே சென்று சேர்ந்து விடுமாம்.  

இதை ஆய்வுக்குழு அங்கேயே நான்கு நாட்கள் இருந்து சோதித்துப்பார்த்ததாம். கிராமவாசிகள் சொன்னது அந்த நபர்களிடம் சென்று சேர்ந்து    செய்தியை தெரிந்து கொண்ட நபர்கள் சரியாக சொன்னபடி நடந்து கொண்டதை அறிய முடிந்ததாம்.  

ஆய்வுக் குழுவினர் காட்டுவாசிகளிடம் பேசிப் பார்த்தனராம். ஆனால் ஏன் இந்த மரத்துக்கு இப்படி சக்தி? எப்படி அது அடுத்தவரின் மனதில் தகவல் சொல்கிறது என்பது போன்ற விசயங்களை அவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லையாம். அது அப்படி நிகழ்கிறது  அவ்வளவுதான்.

அவர்களுடைய முன்னோர்கள் மரத்தின் மூலம் பேசிக்கொண்டார்கள். இவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எளிய முறையாக ,   சௌகரியமாக இருக்கிறது. எப்படி ஆரம்பத்தில் அந்த மரத்தின் சக்தியை யார் கண்டறிந்தார்கள் என்ற விவரமெல்லாம் தெரியாது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அது நடந்து வருகிறது.  அந்த மரத்தின் கிளைகளை பல இடங்களில் நட்டு வைத்து, அந்த மர இனம் அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள். 

சரி ஏன் நாசா விஞ்ஞானிகள் அந்த கிராமத்திற்குப் போனார்கள்?

விண்வெளியில் செல்லும்போது பல சமயங்களில் தொலைத் தொடர்பு கருவிகள் பழுதான போது , அந்த விண்வெளி ஓடத்துடன் தொடர்பு கொள்வது சாத்தியமில்லாமலே போகிறது. 

விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால் என்ன செய்வது?  ஏதாவது ஒரு வழியில் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டே ஆக வேண்டும்.. இதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்க,  புதுவிதமாய்  டெலிபதி, தொலை உணர்தல் போன்ற ஆராய்ச்சிகளில் அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனராம்.  இந்த கிராமத்தைப் பற்றி கேள்விப் பட்டவுடன்  நாசா விஞ்ஞானிகள் அங்கு சென்றிருக்கிறார்கள்.

மாமன்னன் அசோகன் புத்த துறவியாய் மாறிய பிறகு , தன் மகன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புகிறார்.. 
  
‘தந்தையே நான் இலங்கைக்கு என்ன பரிசு கொண்டு போகட்டும்’ என்கிறான் மகேந்திரன்.

“உலகிலேயே சிறந்த பரிசு போதிமரம்தான். புத்தர் பல காலம் அதனடியில் கழித்திருக்கிறார். தியானம் செய்திருக்கிறார். அதனடியில் படுத்துறங்கினார். மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். அவருடைய அதிர்வுகளை அந்த மரம் ஈர்த்துக் கொண்டிருக்ககிறது.  எனவே போதிமரத்தின் கிளை ஒன்றைக் கொண்டு போ’ என்கிறார் அசோகர். 

ஈழ நாடே அந்த கிளையின் அதிர்வால் ஈர்க்கப்பட்டது. புத்த மதத்தை பின்பற்றியது.   பிற்காலத்தில் இலங்கையில் வளர்ந்த அந்த மரத்தின் கிளை ஒன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.  

      ஓஷோ - வின் உரையிலிருந்து

இறைவா உனக்கு நன்றி



வீட்டை விட்டு வெளியில் ஒருவாரம் வேலை விசயமாகத் தங்கியிருந்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

 எப்போதடா மனைவி பிள்ளைகளைப் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வத்துடன் இருக்கும். வீட்டில் வந்து நுழையும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் மனம் இருக்கும்.எல்லோருக்குமே அப்படித்தான்.

காதலியைச் சந்திக்கச் செல்லும் போது  காதலனின் மனம் அப்படித்தான் மகிழ்ச்சியில் துள்ளும்.

ஆனால் நமக்கு அன்பானவர், மிகவும் இனிமையானவர் ஒருவர் இருக்கிறார்.. அவரைப் பார்க்கும் போது மட்டும் உள்ளுக்குள் அழுது வடிந்து கொண்டு , நெஞ்சில் கவலையைச் சுமந்து கொண்டு செல்கிறோமோ ஏன்? 

இறைவனைத் தான் சொல்கிறேன். கோயிலுக்குப் போகும் போது நாம் கொண்டுபோவதைத்தான்  சொல்கிறேன். 

சிலருக்கு ஒரு குணம் உண்டு.. எப்போது கஷ்டம் வருகிறதோ அப்போதுதான் கோயிலுக்குச் செல்வார்கள்..  போய் ‘ஏப்பா எனக்கு மட்டும் இப்படி கஷ்டத்தைத் தந்து கொண்டிருக்கிறாய்’ என்று குற்றம் சாட்டுவார்கள்.. 

சிலர் கவலைகளை மூட்டையாய் கொண்டு வந்து கடவுளின் காலடியில் இறக்கி வைத்துவிடுவார்கள். அப்படிக் கொட்டப்படும் கவலைகளுக்கு மட்டும் உருவம் இருந்தால் , கடவுள் அக்கவலை மூட்டைகளுக்குள் புதைந்து போய் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பார். 

கடவுளிடம் போய் கவலையைச் சொல்லாமல் பின் யாரிடம் சொல்வது? உங்களிடமா ?  என்றக்  கேள்வி உங்களுக்கு எழும்.  

யாருக்குக் கவலை இல்லை? 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் இன்பமாய் இருந்து விடுவதில்லை. 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் துன்பமாயும் இருந்துவிடுவதில்லை. அவற்றின் அளவு வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசப் படலாம்.

ஒரு மிதிவண்டியை இறக்கத்தில் ஓட்டும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதையே சமதளத்தில் ஓட்டினாலும் அதிக வருத்தம் இருப்பதில்லை.  ஆனால் உயரமான மேட்டில் ஏறும் போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் அதற்காக பயணிக்காமல் நாம் ஒரு போதும் திரும்புவதில்லை. 

 சிரமப்பட்டாலும் நம் முயற்சியை , சக்தியைத் திரட்டி போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுகிறோம். எனவே முயன்றால்  கவலைகளை நாம் விரட்டிவிடலாம். 

  கடவுள் அத்தகைய ஆற்றலை மனிதனுக்குத் தந்திருக்கிறார். மனிதனால் தன்னை விட வலுவான மிருகங்களை அடக்கி ஆளமுடிகிறது. பறவைகள் போல் பறக்க முடிகிறது. மீன் போல் கடலில் அலைய முடிகிறது. பூமியில் மனிதனால் முயன்றால் முடியாததொன்றும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். 

ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களைப் பார்த்துக்கூறினார். 

‘வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை அறுவடை செய்வதும் இல்லை. ஆனாலும் அவை மகிழ்வோடு பறக்கின்றன’ என்றார். 

நாளை என்ன நடக்குமென்று தெரியாவிட்டாலும், நாளைக்கு வேண்டிய உணவை சேமித்து வைக்க வேண்டிய கவலையின்றி அவை சந்தோஷமாக அக்கணத்தில் வாழ்கின்றன. நாளைக்கு மட்டுமல்ல பல மாதங்களுக்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேமிக்கும் ஆற்றல் மிக்க மனிதனோ எப்போதும் கவலைகளுடனே வாழ்கிறான். 

 எப்போதும் மகிழ்ச்சியோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாய் மாறிவிடும். 

உங்கள¢ நண்பரை பார்க்கச் செல்லும் போது எப்போது நீங்கள் அழுது புலம்பிக்  கொண்டிருந்தால்..  ஒரு நாள் உங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்வார். 

உங்கள் உறவினர் வீட்டிற்கு போகிறீர்கள் போகும் போதெல்லாம் கவலைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்தால், தூரத்தில் உங்களைப் பார்க்கும் போதே வீட்டைப் பூட்டிவிட்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்துக் கொள்வார்கள். 

அழுது வடியும் குழந்தையை விட சிரிக்கின்ற குழந்தையை தூக்கத்தான் மனம் ஆசைப்படுகிறது. 

சோகமான முகத்தை விட சந்தோஷமான முகமே நமக்குப் பிடிக்கிறது. 

 கோயிலுக்குச் செல்லும் போது இறைவனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் செல்லுங்கள். அங்கு நிலவுகின்ற அதிர்வுகள்.. நற் சக்திகள் மகிழ்ச்சி நிறைந்த உங்களுக்குள் ஊடுருவி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி வைத்துவிடும். உங்கள் கவலைகள் தானாகவே மறைந்து விடும். 

செல்லும் போதெல்லாம் இறைவனை மகிழ்வுடன் வழிபாடு செய்யுங்கள். கவலைகள் இதயத்தின் ஓரத்தில் மறைந்திருக்கட்டும். வழிபாட்டில் கவனம் இருக்கட்டும். 

வழிபாடு செய்து விட்டு அமைதியாய் , தெளிவான மனதுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து வாருங்கள். என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் இறைவா உனக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்.
      
   மதிவாணன் 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...