ads

Friday 28 September 2012

சாக துணிவிருந்தால்....!

வாழ்க்கை வாழ்வதற்கே.  பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இது நியதி.  ஆனால் சிலருக்கு வழக்கத்திற்கு மாறான முடிவுகள் வருகிறதே....ஏன்?  நான் விபத்துக்களை சொல்லவில்லை. அவர்கள் விரும்பி எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத வகையில் முற்றுப்புள்ளி முன்னமே விழுகிறதே ஏன்?  விதி.. இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.இருப்பதை விட இறப்பதே மேல் என்ற எண்ணம் எப்போது தலை தூக்குகிறது?  விரத்தியின் விளிம்பிற்கே விரட்டப்பட்டவர்கள், வாழ வழிதெரியாமல் திகைத்து நிற்பவர்கள், வேறு வழி இன்றி, ஆழ்ந்து யோசிக்காமல் அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள்.  விளைவு தற்கொலை.    கயிற்றோடு கதை முடிந்தவர்களும் உண்டு. மருந்து பாட்டிளுக்கே விலையாகி போனவர்களும் உண்டு. சிலர் தீயிக்கே தன்னை தின்னக்கொடுக்கிரார்கள். அது மட்டும் அல்ல, நொந்து போனவர்களின் சில விந்தை முடிவுகள் விதவிதமாய்.  சரி வாழ்க்கை என்பது என்ன?  சில நேரம் மலர் மஞ்சம், பல நேரம் முள்படுக்கை.  விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. சூல் கொண்ட நேரத்தில் வேர் விட்ட உயிர் துடிப்பு, இல்லையா?  மண்ணில் அவதரித்த ஜீவ ஜந்துக்கள் அனைத்தும், விதித்தவன் விருப்பம் என்னவோ, விதி இட்ட வழி என்னவோ, அதன் பிரகாரம் சென்றுதான் ஆக வேண்டும்.  சரி வாழ்க்கை என்பது என்ன?  மேடுபள்ளங்கள் நிறைந்தது.  ஒத்து கொள்கிறோம்.  ஏற்ற தாழ்வுகளும் இருக்கிறது.  மறுக்கவில்லை. ஆனால் கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, சமசீராய் செல்லும் வாழ்க்கை பயணம், சிலருக்கு மட்டும் குடை சாய்ந்து விடுகிறதே   ஏன்? இந்த முடிவுகளின் முலகாரம் என்ன?  விதியா? விதி செய்த சதியா?  இரண்டும் இல்லை. தன்னமிக்கை குறைவு. எதையும் எதிர்த்து போராடும் மனோபாவம் குறைவு. அவ்வளவுதான். விதி என்பது நொண்டிசாக்கு.   வீதியில் செல்கிறோம். வேகமாக வருகிறது ஒரு வாகனம். கட்டுப்பாடில்லாமல்   வரும் வாகனத்தை பார்க்கும் பொது விபத்து நடக்க போகிறது என்பது புரிகிறது. என்ன செய்வோம்.  மோதனும்னு விதி இருந்தால் மோதட்டும். சாகனும்னு விதி இருந்தால் சாவோம் என்று நிற்போமா?  அந்நேரம் ஆறாம் அறிவு  என்ன ஆடு மேய்க்கவா போகும். ஆபத்து என்றதும், அனிச்சையாய் தற்காத்து கொள்ளவும், தப்பித்து செல்லவும் இயந்திர கதியில் செயல் பட்டு இருப்போமா இல்லையா?   இயக்கம் என்பது மதி, அப்படியும் வாகனம் மோதி வாழ்க்கை முடிகிறது என்றால் அது விதி.  எதன் பொருட்டு இந்த முன்னுரை?  காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. துர்மரணங்கள்  ஏற்பட என்ன காரணம்?  எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு  - பகவத்கீதை.  அவன் கொழுப்பு இப்படி செய்து கிட்டான் - ஒரு விமர்சகர்.  நாம என்ன செய்றது விதி அப்படி - ஒரு ஜோதிடர்.  இதில் எது உண்மை.  இதோ இருக்கிறது விடை.  நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன்.   நாம் ஆற்ற வேண்டிய கடமை முடிந்ததும் அழைத்து கொள்கிறான். இது இயற்கையாய் ஏற்படுவது.  அதாவது வாழ்ந்து சலித்து வயோதிகம் ஏற்பட்டு மறைந்தால் கவலை இல்லை.  எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்தால் கூட விதிவசம் எந்த செய்வது என்று விட்டு விடலாம்.  ஆனால் வாழ அனைத்து தகுதிகளும் இருப்பவர்கள் கூட, தற்கொலை என்ற பெயரால் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்களே, அதை தடுத்து நிறுத்த என்ன உபாயம்? மதி என்ற ஓன்று இருக்கிறதே என்பதை சுட்டிக்காட்டவும் இக்கட்டுரையின் களப்பகுதி, கண்ணீரோடு ஆராய்கிறது.  இதை படிக்கும் சிலர் இது போன்ற விரக்தியான நிலையில் இருக்கலாம்.   அப்போது இது போன்ற துர்ப்பாக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த நேரம் நான் சொல்லப்போவதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.  முன்பிறவி என்பதும் இல்லை, மறுபிறவி என்பதும் இல்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த கணமே உண்மையானது. இப்பிறவியில் நம்மை படைத்த இறைவன் நமக்கென்று சில பணிகளை ஒப்படைத்து இருக்கிறான்.  அதை செவ்வனே செய்தால் போதும். பின் அவன் அழைக்கும் போது போகலாம். அப்போது நாம் விரும்பினால் கூட இருக்க முடியாது.  சார்.... நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியவன். எந்த வசந்தமும் என் வாழ்க்கையில் வந்ததில்லை. வறுமையோடு போராடி என் ஆயுளில்  பாதி முடிந்து விட்டது.   இல்லானை இல்லாளும் மதியாள். ஈன்றெடுத்த தாயும் மதியாள் செல்லாது அவன் வாயின் சொல் - என்பார்கள்.  அப்படி ஒரு துர்பாக்கிய சூழலில் நான் சிக்கி கொள்ள விரும்பவில்லை. தலையை சொரிவதும், சலாம் போட்டதும் என்னோடு போகட்டும்.  என்வழியே பிறக்கும் சந்ததிக்கும் என் தரித்திரத்தையே பரிசாக விட்டுபோக விரும்பவில்லை. என் கதையை முடித்து கொள்ளப்போகிறேன்.  நன்று நண்பனே.... ஓன்று சொல்வேன் கேள். ஆறறிவு என்பது சிந்திக்க தெரிந்த உனக்கு மட்டும் தான் தெரியும். வரைமுறை இல்லாமல் வாழ்க்கை நடத்தும் வனவிலங்குகள் என்றாவது தற்கொலைக்கு முயன்றதாய் தகவல் உண்டா?  கோழி குடும்ப சண்டையில் கூண்டிலேயே தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போச்சு,  அழுதழுது குடும்பம் நடத்தின கொக்கு அரளி விதையை தின்னுட்டு செத்துப் போச்சு... இப்படை ஏதாவது சொல்ல முடியுமா? முடியாதில்ல. அப்பறம் ஏன் உனக்கு மட்டும் இந்த விபரீத புத்தி.   உன் முன்னோர்கள் செய்த பூர்வபுண்ணியம் என்ன என்பதை ஜாதகத்தில் ஐந்தாமிடமே  அடையாளம் சொல்கிறது. அதன்படி அமைந்த உன் வாழ்க்கை சரியான திசையில் தான் செல்கிறது.  நீ வறுமையில் வாடலாம். விரத்தியில் வேதனை படலாம். பரவாயில்லை. தரையில் படுத்தவன் தரையிலேவா படுப்பான். ஒருநாள் மெத்தையில் படுப்பதில்லையா? இறக்கம் இல்லாதவனா இறைவன்.  உன்னை சுற்றயுல்ள்ள உலகத்தை பார். எத்தனைபேர் ஏழையாக பிறந்து செல்வ சீமானாய் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா?  அதுபோல் உன்னாலும் வாழமுடியும் நம்பு. தொட்டுவிடும் தூரம்தான் புதையல் தோட்டம். நம்பிக்கையோடு நட. தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொள்.  எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலையை உன்னால் கற்றுக் கொள்ள முடியும். நாளைய உலகம் உன் கையில்.   ஐயா.. நான் ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன். ஊரே எதிர்க்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. வாழ்வில்தான் ஓன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஓன்று சேர தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்.  சபாஷ் கண்ணா... காதல் என்பது என்ன? அடர்த்தியான அன்பா?  இல்லை.. இல்லவே இல்லை.உணர்சிகளின் வடிகாலில் ஒளிந்திருக்கும் ஒரு தாகம்.  அட... விபரம் கெட்டப்பிள்ளையே. நீ.... சூறாவளி என்றல்லவா நினைத்திருந்தேன். நீ காத்திருக்கும் வரைதான் காற்று. புறப்பட்டால் புயல் என்று புரியமா உனக்கு.   சரி... நான் சொல்வதை கேள். நீ தினம்தோறும் சாப்பிடுகிறாய். உன்னை அறியாமல் சாதப்பருக்கைகள் தரையில் சிந்துகிறது. தட்டின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு மீதமிருக்கிறது.  உனக்காக தந்ததுதானே? ஏன் உன்னால் சாப்பிட முடியவில்லை. காரணம் அது உனக்கு தந்தது இல்லை. காக்கைக்கோ, குருவிக்கோ வேறு ஏதோ ஒரு உயிரினத்துக்கு  உரியது. அதை நீ சாப்பிட முடியாது.  அதேபோல் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர்ப்பு வருகிறதே. இறைவன் சித்தம் அதுவல்ல.   உன்னோடு சேர்ந்து வாழ, உனக்காக பிறந்த ஒரு உத்தமி யாரோ காத்திருக்கிறாள். அவளை அடையாளம் காண்.  ஆரம்ப்பமாகட்டும் புதிய வாழ்க்கை பயணம்.  அட நண்பனே..உதய காலத்தில் அஸ்தமனத்திற்கு ஆராத்தி எடுப்பார்கள். மாயையை விடுத்து வெளியே வா!   பிறப்பும் இறப்பும் பிரம்ம ரகசியம். அதை அறிந்து கொள்ள முடியாது. உணரலாம்.  எப்படி?  உன் வழியாய் பிறக்கும் சந்ததி வழியாய் இறைவன் எதையோ சாதிக்க நினைக்கிறான். அதற்காக வாழுங்கள்.   இறுதி பயணத்தை இறைவன் தீர்மானிக்கட்டும். ஏனெனில் வாழ்க்கையை நேசி... உன்னை வாழவைக்கும்.  வாழ்க்கையை யோசி...உன்னை வழிநடத்தும்.  வாழக்கையை வாசி.. உன்னை உனக்கு அடையாளம் காட்டும்.  சார்.. நான் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டேன். பாதகம் செய்திருந்தால் பரவாயில்லை. மகாபாதகம் செய்துவிட்டேன். மனசாட்சியே என்னை கொன்று விடும் போலிருக்கிறது.  மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.மானமே போய்விட்டது. இனி வாழ்ந்து என்ன பயன்  அப்படியா? வால்மீகியை தெரியுமா? ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்தான்.  சாகா வரம் பெற்ற ராமாயணத்தை இயற்றினார்.  நாம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோமே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்திருந்தால், என்னவாகி இருக்கும்?  ஏதோ வாழ்ந்து செத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார். அவ்வளவுதான்.  தவறு செய்தாய். அதை உளபூர்வமாக ஒத்து கொள்கிறாய். பரவாயில்லை. நீ மனசாட்சி உள்ள மனிதன்.  கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் மனிதருக்கு மத்தியில் நீ மாணிக்கம்.  உன்னை தூற்றியவர்கள் போற்றிப்பாடும் புகழ் மாலையை பெற வாழ்ந்து காட்டு. வரலாறு உன் பெயரையும் பதிவு செய்யட்டும். பழைய பாடல் வரிதான். இது உன் தேசியகீதம் என்பதை தெரிந்து கொள்.  உன்னை அறிந்தால் -நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்.  இதை நினைவில் கொள். வா... நண்பனே.. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்.  வாழும் கலையை நீயும் கட்டுக்கொள்.  சாதிக்க முடியும் என்பதை நினைவில் வை.  முயன்றால் முடியும் என்பதை மறக்காதே. நீயும் சாதிக்கலாம்.  சாக துணிவிருந்தால் வாழ்ந்து பார்க்கலாமே..

வாழ்க்கை வாழ்வதற்கே.

பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இது நியதி.

ஆனால் சிலருக்கு வழக்கத்திற்கு மாறான முடிவுகள் வருகிறதே....ஏன்?

நான் விபத்துக்களை சொல்லவில்லை. அவர்கள் விரும்பி எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத வகையில் முற்றுப்புள்ளி முன்னமே விழுகிறதே ஏன்?

விதி.. இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.இருப்பதை விட இறப்பதே மேல் என்ற எண்ணம் எப்போது தலை தூக்குகிறது?

விரத்தியின் விளிம்பிற்கே விரட்டப்பட்டவர்கள், வாழ வழிதெரியாமல் திகைத்து நிற்பவர்கள், வேறு வழி இன்றி, ஆழ்ந்து யோசிக்காமல் அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள்.

விளைவு தற்கொலை.

வாழ்க்கை வாழ்வதற்கே.  பிறந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இது நியதி.  ஆனால் சிலருக்கு வழக்கத்திற்கு மாறான முடிவுகள் வருகிறதே....ஏன்?  நான் விபத்துக்களை சொல்லவில்லை. அவர்கள் விரும்பி எடுக்கும் முடிவுகள் விரும்பத்தகாத வகையில் முற்றுப்புள்ளி முன்னமே விழுகிறதே ஏன்?  விதி.. இனி வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.இருப்பதை விட இறப்பதே மேல் என்ற எண்ணம் எப்போது தலை தூக்குகிறது?  விரத்தியின் விளிம்பிற்கே விரட்டப்பட்டவர்கள், வாழ வழிதெரியாமல் திகைத்து நிற்பவர்கள், வேறு வழி இன்றி, ஆழ்ந்து யோசிக்காமல் அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள்.  விளைவு தற்கொலை.    கயிற்றோடு கதை முடிந்தவர்களும் உண்டு. மருந்து பாட்டிளுக்கே விலையாகி போனவர்களும் உண்டு. சிலர் தீயிக்கே தன்னை தின்னக்கொடுக்கிரார்கள். அது மட்டும் அல்ல, நொந்து போனவர்களின் சில விந்தை முடிவுகள் விதவிதமாய்.  சரி வாழ்க்கை என்பது என்ன?  சில நேரம் மலர் மஞ்சம், பல நேரம் முள்படுக்கை.  விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. சூல் கொண்ட நேரத்தில் வேர் விட்ட உயிர் துடிப்பு, இல்லையா?  மண்ணில் அவதரித்த ஜீவ ஜந்துக்கள் அனைத்தும், விதித்தவன் விருப்பம் என்னவோ, விதி இட்ட வழி என்னவோ, அதன் பிரகாரம் சென்றுதான் ஆக வேண்டும்.  சரி வாழ்க்கை என்பது என்ன?  மேடுபள்ளங்கள் நிறைந்தது.  ஒத்து கொள்கிறோம்.  ஏற்ற தாழ்வுகளும் இருக்கிறது.  மறுக்கவில்லை. ஆனால் கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, சமசீராய் செல்லும் வாழ்க்கை பயணம், சிலருக்கு மட்டும் குடை சாய்ந்து விடுகிறதே   ஏன்? இந்த முடிவுகளின் முலகாரம் என்ன?  விதியா? விதி செய்த சதியா?  இரண்டும் இல்லை. தன்னமிக்கை குறைவு. எதையும் எதிர்த்து போராடும் மனோபாவம் குறைவு. அவ்வளவுதான். விதி என்பது நொண்டிசாக்கு.   வீதியில் செல்கிறோம். வேகமாக வருகிறது ஒரு வாகனம். கட்டுப்பாடில்லாமல்   வரும் வாகனத்தை பார்க்கும் பொது விபத்து நடக்க போகிறது என்பது புரிகிறது. என்ன செய்வோம்.  மோதனும்னு விதி இருந்தால் மோதட்டும். சாகனும்னு விதி இருந்தால் சாவோம் என்று நிற்போமா?  அந்நேரம் ஆறாம் அறிவு  என்ன ஆடு மேய்க்கவா போகும். ஆபத்து என்றதும், அனிச்சையாய் தற்காத்து கொள்ளவும், தப்பித்து செல்லவும் இயந்திர கதியில் செயல் பட்டு இருப்போமா இல்லையா?   இயக்கம் என்பது மதி, அப்படியும் வாகனம் மோதி வாழ்க்கை முடிகிறது என்றால் அது விதி.  எதன் பொருட்டு இந்த முன்னுரை?  காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. துர்மரணங்கள்  ஏற்பட என்ன காரணம்?  எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு  - பகவத்கீதை.  அவன் கொழுப்பு இப்படி செய்து கிட்டான் - ஒரு விமர்சகர்.  நாம என்ன செய்றது விதி அப்படி - ஒரு ஜோதிடர்.  இதில் எது உண்மை.  இதோ இருக்கிறது விடை.  நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன்.   நாம் ஆற்ற வேண்டிய கடமை முடிந்ததும் அழைத்து கொள்கிறான். இது இயற்கையாய் ஏற்படுவது.  அதாவது வாழ்ந்து சலித்து வயோதிகம் ஏற்பட்டு மறைந்தால் கவலை இல்லை.  எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்தால் கூட விதிவசம் எந்த செய்வது என்று விட்டு விடலாம்.  ஆனால் வாழ அனைத்து தகுதிகளும் இருப்பவர்கள் கூட, தற்கொலை என்ற பெயரால் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்களே, அதை தடுத்து நிறுத்த என்ன உபாயம்? மதி என்ற ஓன்று இருக்கிறதே என்பதை சுட்டிக்காட்டவும் இக்கட்டுரையின் களப்பகுதி, கண்ணீரோடு ஆராய்கிறது.  இதை படிக்கும் சிலர் இது போன்ற விரக்தியான நிலையில் இருக்கலாம்.   அப்போது இது போன்ற துர்ப்பாக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த நேரம் நான் சொல்லப்போவதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.  முன்பிறவி என்பதும் இல்லை, மறுபிறவி என்பதும் இல்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த கணமே உண்மையானது. இப்பிறவியில் நம்மை படைத்த இறைவன் நமக்கென்று சில பணிகளை ஒப்படைத்து இருக்கிறான்.  அதை செவ்வனே செய்தால் போதும். பின் அவன் அழைக்கும் போது போகலாம். அப்போது நாம் விரும்பினால் கூட இருக்க முடியாது.  சார்.... நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியவன். எந்த வசந்தமும் என் வாழ்க்கையில் வந்ததில்லை. வறுமையோடு போராடி என் ஆயுளில்  பாதி முடிந்து விட்டது.   இல்லானை இல்லாளும் மதியாள். ஈன்றெடுத்த தாயும் மதியாள் செல்லாது அவன் வாயின் சொல் - என்பார்கள்.  அப்படி ஒரு துர்பாக்கிய சூழலில் நான் சிக்கி கொள்ள விரும்பவில்லை. தலையை சொரிவதும், சலாம் போட்டதும் என்னோடு போகட்டும்.  என்வழியே பிறக்கும் சந்ததிக்கும் என் தரித்திரத்தையே பரிசாக விட்டுபோக விரும்பவில்லை. என் கதையை முடித்து கொள்ளப்போகிறேன்.  நன்று நண்பனே.... ஓன்று சொல்வேன் கேள். ஆறறிவு என்பது சிந்திக்க தெரிந்த உனக்கு மட்டும் தான் தெரியும். வரைமுறை இல்லாமல் வாழ்க்கை நடத்தும் வனவிலங்குகள் என்றாவது தற்கொலைக்கு முயன்றதாய் தகவல் உண்டா?  கோழி குடும்ப சண்டையில் கூண்டிலேயே தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போச்சு,  அழுதழுது குடும்பம் நடத்தின கொக்கு அரளி விதையை தின்னுட்டு செத்துப் போச்சு... இப்படை ஏதாவது சொல்ல முடியுமா? முடியாதில்ல. அப்பறம் ஏன் உனக்கு மட்டும் இந்த விபரீத புத்தி.   உன் முன்னோர்கள் செய்த பூர்வபுண்ணியம் என்ன என்பதை ஜாதகத்தில் ஐந்தாமிடமே  அடையாளம் சொல்கிறது. அதன்படி அமைந்த உன் வாழ்க்கை சரியான திசையில் தான் செல்கிறது.  நீ வறுமையில் வாடலாம். விரத்தியில் வேதனை படலாம். பரவாயில்லை. தரையில் படுத்தவன் தரையிலேவா படுப்பான். ஒருநாள் மெத்தையில் படுப்பதில்லையா? இறக்கம் இல்லாதவனா இறைவன்.  உன்னை சுற்றயுல்ள்ள உலகத்தை பார். எத்தனைபேர் ஏழையாக பிறந்து செல்வ சீமானாய் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா?  அதுபோல் உன்னாலும் வாழமுடியும் நம்பு. தொட்டுவிடும் தூரம்தான் புதையல் தோட்டம். நம்பிக்கையோடு நட. தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொள்.  எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலையை உன்னால் கற்றுக் கொள்ள முடியும். நாளைய உலகம் உன் கையில்.   ஐயா.. நான் ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன். ஊரே எதிர்க்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. வாழ்வில்தான் ஓன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஓன்று சேர தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்.  சபாஷ் கண்ணா... காதல் என்பது என்ன? அடர்த்தியான அன்பா?  இல்லை.. இல்லவே இல்லை.உணர்சிகளின் வடிகாலில் ஒளிந்திருக்கும் ஒரு தாகம்.  அட... விபரம் கெட்டப்பிள்ளையே. நீ.... சூறாவளி என்றல்லவா நினைத்திருந்தேன். நீ காத்திருக்கும் வரைதான் காற்று. புறப்பட்டால் புயல் என்று புரியமா உனக்கு.   சரி... நான் சொல்வதை கேள். நீ தினம்தோறும் சாப்பிடுகிறாய். உன்னை அறியாமல் சாதப்பருக்கைகள் தரையில் சிந்துகிறது. தட்டின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு மீதமிருக்கிறது.  உனக்காக தந்ததுதானே? ஏன் உன்னால் சாப்பிட முடியவில்லை. காரணம் அது உனக்கு தந்தது இல்லை. காக்கைக்கோ, குருவிக்கோ வேறு ஏதோ ஒரு உயிரினத்துக்கு  உரியது. அதை நீ சாப்பிட முடியாது.  அதேபோல் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர்ப்பு வருகிறதே. இறைவன் சித்தம் அதுவல்ல.   உன்னோடு சேர்ந்து வாழ, உனக்காக பிறந்த ஒரு உத்தமி யாரோ காத்திருக்கிறாள். அவளை அடையாளம் காண்.  ஆரம்ப்பமாகட்டும் புதிய வாழ்க்கை பயணம்.  அட நண்பனே..உதய காலத்தில் அஸ்தமனத்திற்கு ஆராத்தி எடுப்பார்கள். மாயையை விடுத்து வெளியே வா!   பிறப்பும் இறப்பும் பிரம்ம ரகசியம். அதை அறிந்து கொள்ள முடியாது. உணரலாம்.  எப்படி?  உன் வழியாய் பிறக்கும் சந்ததி வழியாய் இறைவன் எதையோ சாதிக்க நினைக்கிறான். அதற்காக வாழுங்கள்.   இறுதி பயணத்தை இறைவன் தீர்மானிக்கட்டும். ஏனெனில் வாழ்க்கையை நேசி... உன்னை வாழவைக்கும்.  வாழ்க்கையை யோசி...உன்னை வழிநடத்தும்.  வாழக்கையை வாசி.. உன்னை உனக்கு அடையாளம் காட்டும்.  சார்.. நான் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டேன். பாதகம் செய்திருந்தால் பரவாயில்லை. மகாபாதகம் செய்துவிட்டேன். மனசாட்சியே என்னை கொன்று விடும் போலிருக்கிறது.  மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.மானமே போய்விட்டது. இனி வாழ்ந்து என்ன பயன்  அப்படியா? வால்மீகியை தெரியுமா? ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்தான்.  சாகா வரம் பெற்ற ராமாயணத்தை இயற்றினார்.  நாம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோமே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்திருந்தால், என்னவாகி இருக்கும்?  ஏதோ வாழ்ந்து செத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார். அவ்வளவுதான்.  தவறு செய்தாய். அதை உளபூர்வமாக ஒத்து கொள்கிறாய். பரவாயில்லை. நீ மனசாட்சி உள்ள மனிதன்.  கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் மனிதருக்கு மத்தியில் நீ மாணிக்கம்.  உன்னை தூற்றியவர்கள் போற்றிப்பாடும் புகழ் மாலையை பெற வாழ்ந்து காட்டு. வரலாறு உன் பெயரையும் பதிவு செய்யட்டும். பழைய பாடல் வரிதான். இது உன் தேசியகீதம் என்பதை தெரிந்து கொள்.  உன்னை அறிந்தால் -நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்.  இதை நினைவில் கொள். வா... நண்பனே.. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்.  வாழும் கலையை நீயும் கட்டுக்கொள்.  சாதிக்க முடியும் என்பதை நினைவில் வை.  முயன்றால் முடியும் என்பதை மறக்காதே. நீயும் சாதிக்கலாம்.  சாக துணிவிருந்தால் வாழ்ந்து பார்க்கலாமே..

கயிற்றோடு கதை முடிந்தவர்களும் உண்டு. மருந்து பாட்டிளுக்கே விலையாகி போனவர்களும் உண்டு. சிலர் தீயிக்கே தன்னை தின்னக்கொடுக்கிரார்கள். அது மட்டும் அல்ல, நொந்து போனவர்களின் சில விந்தை முடிவுகள் விதவிதமாய்.

சரி வாழ்க்கை என்பது என்ன?

சில நேரம் மலர் மஞ்சம், பல நேரம் முள்படுக்கை.  விந்து விழுந்த நேரத்தில் வந்துதித்த வாழ்க்கை. சூல் கொண்ட நேரத்தில் வேர் விட்ட உயிர் துடிப்பு, இல்லையா?

மண்ணில் அவதரித்த ஜீவ ஜந்துக்கள் அனைத்தும், விதித்தவன் விருப்பம் என்னவோ, விதி இட்ட வழி என்னவோ, அதன் பிரகாரம் சென்றுதான் ஆக வேண்டும்.

சரி வாழ்க்கை என்பது என்ன?

மேடுபள்ளங்கள் நிறைந்தது.

ஒத்து கொள்கிறோம்.

ஏற்ற தாழ்வுகளும் இருக்கிறது.

மறுக்கவில்லை. ஆனால் கஷ்டமோ, நஷ்டமோ, இன்பமோ, துன்பமோ, சமசீராய் செல்லும் வாழ்க்கை பயணம், சிலருக்கு மட்டும் குடை சாய்ந்து விடுகிறதே   ஏன்? இந்த முடிவுகளின் முலகாரம் என்ன?

விதியா? விதி செய்த சதியா?

இரண்டும் இல்லை. தன்னமிக்கை குறைவு. எதையும் எதிர்த்து போராடும் மனோபாவம் குறைவு. அவ்வளவுதான். விதி என்பது நொண்டிசாக்கு.


வீதியில் செல்கிறோம். வேகமாக வருகிறது ஒரு வாகனம். கட்டுப்பாடில்லாமல்   வரும் வாகனத்தை பார்க்கும் பொது விபத்து நடக்க போகிறது என்பது புரிகிறது. என்ன செய்வோம்.

மோதனும்னு விதி இருந்தால் மோதட்டும். சாகனும்னு விதி இருந்தால் சாவோம் என்று நிற்போமா?

அந்நேரம் ஆறாம் அறிவு  என்ன ஆடு மேய்க்கவா போகும். ஆபத்து என்றதும், அனிச்சையாய் தற்காத்து கொள்ளவும், தப்பித்து செல்லவும் இயந்திர கதியில் செயல் பட்டு இருப்போமா இல்லையா?


இயக்கம் என்பது மதி, அப்படியும் வாகனம் மோதி வாழ்க்கை முடிகிறது என்றால் அது விதி.

எதன் பொருட்டு இந்த முன்னுரை?

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. துர்மரணங்கள்  ஏற்பட என்ன காரணம்?

எதை கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு  - பகவத்கீதை.

அவன் கொழுப்பு இப்படி செய்து கிட்டான் - ஒரு விமர்சகர்.

நாம என்ன செய்றது விதி அப்படி - ஒரு ஜோதிடர்.

இதில் எது உண்மை.

இதோ இருக்கிறது விடை.

நம் பிறப்பிற்கு ஒரு ரகசியம் இருக்கிறது. நாம் எப்படி புதிது புதிதாக பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதை போல் காரண காரியம் இருப்பதால்தான் மனிதனை படைக்கிறான் இறைவன்.


நாம் ஆற்ற வேண்டிய கடமை முடிந்ததும் அழைத்து கொள்கிறான். இது இயற்கையாய் ஏற்படுவது.  அதாவது வாழ்ந்து சலித்து வயோதிகம் ஏற்பட்டு மறைந்தால் கவலை இல்லை.

எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்தால் கூட விதிவசம் எந்த செய்வது என்று விட்டு விடலாம்.

ஆனால் வாழ அனைத்து தகுதிகளும் இருப்பவர்கள் கூட, தற்கொலை என்ற பெயரால் வாழ்க்கையை முடித்து கொள்கிறார்களே, அதை தடுத்து நிறுத்த என்ன உபாயம்? மதி என்ற ஓன்று இருக்கிறதே என்பதை சுட்டிக்காட்டவும் இக்கட்டுரையின் களப்பகுதி, கண்ணீரோடு ஆராய்கிறது.

இதை படிக்கும் சிலர் இது போன்ற விரக்தியான நிலையில் இருக்கலாம்.


அப்போது இது போன்ற துர்ப்பாக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். அந்த நேரம் நான் சொல்லப்போவதை ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.

முன்பிறவி என்பதும் இல்லை, மறுபிறவி என்பதும் இல்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறோமே இந்த கணமே உண்மையானது. இப்பிறவியில் நம்மை படைத்த இறைவன் நமக்கென்று சில பணிகளை ஒப்படைத்து இருக்கிறான்.

அதை செவ்வனே செய்தால் போதும். பின் அவன் அழைக்கும் போது போகலாம். அப்போது நாம் விரும்பினால் கூட இருக்க முடியாது.

சார்.... நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியவன். எந்த வசந்தமும் என் வாழ்க்கையில் வந்ததில்லை. வறுமையோடு போராடி என் ஆயுளில்  பாதி முடிந்து விட்டது.


இல்லானை இல்லாளும் மதியாள்.
ஈன்றெடுத்த தாயும் மதியாள்
செல்லாது அவன் வாயின் சொல் - என்பார்கள்.

அப்படி ஒரு துர்பாக்கிய சூழலில் நான் சிக்கி கொள்ள விரும்பவில்லை. தலையை சொரிவதும், சலாம் போட்டதும் என்னோடு போகட்டும்.

என்வழியே பிறக்கும் சந்ததிக்கும் என் தரித்திரத்தையே பரிசாக விட்டுபோக விரும்பவில்லை. என் கதையை முடித்து கொள்ளப்போகிறேன்.

நன்று நண்பனே.... ஓன்று சொல்வேன் கேள். ஆறறிவு என்பது சிந்திக்க தெரிந்த உனக்கு மட்டும் தான் தெரியும். வரைமுறை இல்லாமல் வாழ்க்கை நடத்தும் வனவிலங்குகள் என்றாவது தற்கொலைக்கு முயன்றதாய் தகவல் உண்டா?

கோழி குடும்ப சண்டையில் கூண்டிலேயே தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போச்சு,  அழுதழுது குடும்பம் நடத்தின கொக்கு அரளி விதையை தின்னுட்டு செத்துப் போச்சு... இப்படை ஏதாவது சொல்ல முடியுமா? முடியாதில்ல. அப்பறம் ஏன் உனக்கு மட்டும் இந்த விபரீத புத்தி.


உன் முன்னோர்கள் செய்த பூர்வபுண்ணியம் என்ன என்பதை ஜாதகத்தில் ஐந்தாமிடமே  அடையாளம் சொல்கிறது. அதன்படி அமைந்த உன் வாழ்க்கை சரியான திசையில் தான் செல்கிறது.

நீ வறுமையில் வாடலாம். விரத்தியில் வேதனை படலாம். பரவாயில்லை. தரையில் படுத்தவன் தரையிலேவா படுப்பான். ஒருநாள் மெத்தையில் படுப்பதில்லையா? இறக்கம் இல்லாதவனா இறைவன்.

உன்னை சுற்றயுல்ள்ள உலகத்தை பார். எத்தனைபேர் ஏழையாக பிறந்து செல்வ சீமானாய் வாழ்ந்து வருகிறார்கள் தெரியுமா?

அதுபோல் உன்னாலும் வாழமுடியும் நம்பு. தொட்டுவிடும் தூரம்தான் புதையல் தோட்டம். நம்பிக்கையோடு நட. தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொள்.

எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலையை உன்னால் கற்றுக் கொள்ள முடியும். நாளைய உலகம் உன் கையில்.


ஐயா.. நான் ஒரு பெண்ணை மனதார விரும்புகிறேன். ஊரே எதிர்க்கிறது. அவள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. வாழ்வில்தான் ஓன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஓன்று சேர தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம்.

சபாஷ் கண்ணா... காதல் என்பது என்ன? அடர்த்தியான அன்பா?  இல்லை.. இல்லவே இல்லை.உணர்சிகளின் வடிகாலில் ஒளிந்திருக்கும் ஒரு தாகம்.

அட... விபரம் கெட்டப்பிள்ளையே. நீ.... சூறாவளி என்றல்லவா நினைத்திருந்தேன். நீ காத்திருக்கும் வரைதான் காற்று. புறப்பட்டால் புயல் என்று புரியமா உனக்கு.


சரி... நான் சொல்வதை கேள். நீ தினம்தோறும் சாப்பிடுகிறாய். உன்னை அறியாமல் சாதப்பருக்கைகள் தரையில் சிந்துகிறது. தட்டின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு மீதமிருக்கிறது.

உனக்காக தந்ததுதானே? ஏன் உன்னால் சாப்பிட முடியவில்லை. காரணம் அது உனக்கு தந்தது இல்லை. காக்கைக்கோ, குருவிக்கோ வேறு ஏதோ ஒரு உயிரினத்துக்கு  உரியது. அதை நீ சாப்பிட முடியாது.

அதேபோல் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இறைவன் விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர்ப்பு வருகிறதே. இறைவன் சித்தம் அதுவல்ல.


உன்னோடு சேர்ந்து வாழ, உனக்காக பிறந்த ஒரு உத்தமி யாரோ காத்திருக்கிறாள். அவளை அடையாளம் காண்.  ஆரம்ப்பமாகட்டும் புதிய வாழ்க்கை பயணம்.

அட நண்பனே..உதய காலத்தில் அஸ்தமனத்திற்கு ஆராத்தி எடுப்பார்கள். மாயையை விடுத்து வெளியே வா!


பிறப்பும் இறப்பும் பிரம்ம ரகசியம். அதை அறிந்து கொள்ள முடியாது. உணரலாம்.

எப்படி?

உன் வழியாய் பிறக்கும் சந்ததி வழியாய் இறைவன் எதையோ சாதிக்க நினைக்கிறான். அதற்காக வாழுங்கள்.


இறுதி பயணத்தை இறைவன் தீர்மானிக்கட்டும். ஏனெனில் வாழ்க்கையை நேசி... உன்னை வாழவைக்கும்.

வாழ்க்கையை யோசி...உன்னை வழிநடத்தும்.  வாழக்கையை வாசி.. உன்னை உனக்கு அடையாளம் காட்டும்.

சார்.. நான் செய்யக்கூடாத தவறை செய்துவிட்டேன். பாதகம் செய்திருந்தால் பரவாயில்லை. மகாபாதகம் செய்துவிட்டேன். மனசாட்சியே என்னை கொன்று விடும் போலிருக்கிறது.

மற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது.மானமே போய்விட்டது. இனி வாழ்ந்து என்ன பயன்

அப்படியா? வால்மீகியை தெரியுமா? ஒரு காலத்தில் வழிப்பறி கொள்ளையர்தான்.  சாகா வரம் பெற்ற ராமாயணத்தை இயற்றினார்.

நாம் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோமே, இனி வாழ்ந்து என்ன பயன் என்று நினைத்திருந்தால், என்னவாகி இருக்கும்?

ஏதோ வாழ்ந்து செத்தவர்கள் பட்டியலில் சேர்ந்திருப்பார். அவ்வளவுதான்.

தவறு செய்தாய். அதை உளபூர்வமாக ஒத்து கொள்கிறாய். பரவாயில்லை. நீ மனசாட்சி உள்ள மனிதன்.

கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் மனிதருக்கு மத்தியில் நீ மாணிக்கம்.

உன்னை தூற்றியவர்கள் போற்றிப்பாடும் புகழ் மாலையை பெற வாழ்ந்து காட்டு. வரலாறு உன் பெயரையும் பதிவு செய்யட்டும். பழைய பாடல் வரிதான். இது உன் தேசியகீதம் என்பதை தெரிந்து கொள்.

உன்னை அறிந்தால் -நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்.
மாபெரும் சபையில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்.
ஒரு மாற்று குறையாத மன்னன் இவன் என்று
போற்றி புகழ வேண்டும்.

இதை நினைவில் கொள்.
வா... நண்பனே..
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம்.

வாழும் கலையை நீயும் கட்டுக்கொள்.

சாதிக்க முடியும் என்பதை நினைவில் வை.

முயன்றால் முடியும் என்பதை மறக்காதே. நீயும் சாதிக்கலாம்.  சாக துணிவிருந்தால் வாழ்ந்து பார்க்கலாமே..

Thursday 27 September 2012

உணர்வால் ஓன்று படுவோம் !!


டெல்லி தமிழ் சங்கம் நடத்திய இலக்கிய அமைப்புகளின் மாநாட்டு மலருக்கு தினமணி ஆசிரியர் ஐயா.. கே. வைத்தியநாதன் அவர்கள் எழுதிய சிறப்பு கட்டுரை இது.  

பலருக்கு இதை படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கலாம். அதனால் இதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.


சில நாட்களுக்கு முன்பு பெரியவர் ப. முத்துகுமாரசாமி அவர்களோடு பேசிகொண்டிருந்தேன். 

அப்போது திரு வைத்தியநாதன் அவர்களை பற்றி பல நல்ல குறிப்புகளை சொன்னார். அதையும்,  இந்த மாநாட்டு மலரை சிறப்புற தயாரித்த  முத்துகுமாரசாமி ஐயா அவர்களை பற்றியும் விரைவில் ஒரு சிறப்பு கட்டுரையோடு உங்களை சந்திக்கிறேன். 












Tuesday 25 September 2012

எமனையும் வெல்லும் எமதிசை


தனிமனித வளர்ச்சிக்கு காரணமானது எது?

முயற்சி, திறமை, சரியான வாய்ப்புகள், பணபலம், பக்கபலம், இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போனால், முற்று புள்ளிக்கு சற்று முன்பாக வாஸ்து என்ற வார்த்தை இடம் பெறும்.


சரி...!

தனிமனித வளச்சிக்கு தடையாக இருப்பது எது?

அவசரம், ஆத்திரம், திட்டமின்மை, வறுமை, வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில் கவனக்குறைவு, அலச்சியம் இப்படி பட்டியல் போட்டுக்கொண்டே போனால், முற்று புள்ளிக்கு சற்று முன்பாக வாஸ்து என்ற வார்த்தை மறுபடியும் இடம்பெறும்.

இது காலத்தின் கட்டாயம். 

ஒரு நண்பரின் கேள்வி இது?

என் அறிவாற்றலால் சாதிக்க முடியாத ஒன்றை, என் விடாமுயற்சியால்  பெறமுடியாத ஒன்றை, பணபலத்தால் சாதிக்க முடியாத ஒன்றை, வாஸ்து செய்து விடுமா?

அடடா... நல்ல கேள்விதான். பொட்டில் அறைந்த மாதிரி கேட்கிறார். அதனால் பதில் தேடித்தான் ஆகவேண்டும். வாருங்கள் என் நண்பரின் கோணத்திலேயே யோசிப்போம்.  

வாஸ்து என்பது என்ன?

அதற்கென உருவம் இருக்கா?

மாமா, மச்சான், அண்ணன், தம்பி, பங்காளி பாகஸ்தான், நண்பன் மாதிரி ஆபத்திற்கு உதவும் அதிமுக்கிய உறவா? இல்லையே...!

இந்த கேள்வி உங்களுக்குள்ளும் இருந்தால் மேலே தொடருங்கள்.

வாஸ்து என்பது மாமா மச்சான் உறவல்ல. இயற்கையோடு மனிதன் ஒத்து போகவேண்டியத்தின் அவசியத்தை சொல்வதுதான் வாஸ்து.

இப்போ ஓடுற பஸ்ல இருந்து இறங்குறீங்க. பஸ் எந்த திசையை நோக்கி போகிறதோ, அந்த திசையை நோக்கி கொஞ்ச தூரம் ஓடி, உங்கள் வேகத்தை கட்டுப்படுத்தினால் ஓகே.

ஏன்?

உங்கள் உடல் முன்னோக்கி இழுக்கப்படும் போது, அந்த வேகத்தோடு ஒத்து  போகவேண்டியது அவசியம். கட்டாயம்.

மாறாக ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கும் போது எதிர் திசையில் போக முயற்சித்தால் கீழே விழுந்து அடிபட வேண்டியதுதான். இதுதான் இயற்கை.

அதுபோலதான் சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கம், மேடுபள்ளங்களால் ஏற்படும் தாக்கம், திசைகளின் ஈர்ப்பால் ஏற்படும் தாக்கம், இவற்றோடு ஒத்து போகவேண்டியத்தின் அவசியத்தை சொல்வதுதான் வாஸ்து.

ஓகே...நாம்   தலைப்புக்கு   வருவோம். பொதுவாக தெற்கு திசை வீடு என்பது சிறப்பில்லை என்று ஒரு செய்தி உலா வருகிறது.

காரணம் என்ன?


அது எமதிசையாம்.

அந்த திசையை நோக்கி வீடு கட்டினால், தலைவாசல் இருந்தால் தரித்திரம் என்று ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட புண்ணியவான் யார் என்று தெரியவில்லை.

உண்மையில் தெற்கு திசை பாதிப்பானதா?

இல்லை...இல்லை...இல்லை...!

தெற்கு செல்வத்தை குறிக்கும் திசை. பெயரை கேட்டால் சும்மா அதிரும்முல்ல என்று சொல்கிற மாதிரி யமதர்மனின் பெயர் வேண்டுமானால் கிலியை ஏற்படுத்தலாம். ஆனால் அவருக்கு உரிய திசை வளர்ச்சிக்கு உரிய திசை.

சரி.. இந்த எமன் யார்?

உலகத்திற்கு எல்லாம் வெளிச்சம் தரும் சூரியனின் மூத்த மகன். சனிபகவானின் அண்ணன். இவர்கள் இருவருமே தர்மதேவனின் இன்னொரு வடிவமாம்.

சனிபகவான் பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் நம்மை தீமைக்கு ஏற்ப நல்லதோ கெட்டதோ செய்கிறார் என்றால், மேலோகதிற்கு சென்றதும் அண்ணன் பார்த்துக்கொள்வார்.

ஆனால் எமன் உயிரை கவர்ந்து செல்லும் தொழிலில்  இருந்தாலும், உயர்ந்த குணம் படைத்தவர். எப்போதுமே பழியை ஏற்றுக்கொள்வதில்லை.

யோசித்து பாருங்கள்.

ஒருவர் இறந்தால் அதற்க்கு காரணம் எமன் என்று சொல்லுவதில்லை. அவரா... ஒரு வருஷமா  உடம்பு சரி இல்லாம இருந்தார்.. அதான்.

ரொம்ப நல்ல மனுஷன்.. விபத்திலே செத்து போய்ட்டார்.

ஹும்... குடி ... எப்பபாரு குப்பை வண்டி மாதிரி புல்லா இருப்பார். அதான்.

இறப்புக்குக்கான காரணம் இப்படி சொல்வார்களே தவிர, எமனை சொல்வதில்லை.


போகட்டும்....!

தெற்கு திசை நோக்கி தலைவாசல் இருந்தால் செல்வ செழிப்பாக வாழ வைக்கும்.

தெற்கு திசை நோக்கி வீடமைந்தால் புகழ், அந்தஸ்து, கவுரவத்தை தேடித்தரும்.

தெற்கு திசை நோக்கி நுழை வையில் அமைந்தால் நோயற்ற வாழ்வை பெறலாம்.

வாழ்க்கைக்கு பணம் தேவை. எவ்வளவு பணம் வேண்டும்? சரி.. நீடித்த ஆயுள் வேண்டும். 100 வயது வரை வாழலாம். ஆனால் நித்திய கண்டம், பூரண ஆயுள் என்பது மாதிரி, மருந்து மாத்திரையை விருந்து மாதிரிதான் சாப்பிடனும் என்றால், அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன?

அது வாழ்க்கையே இல்லை. நரகம்.

ஆனால் இந்த எம திசை வியாதிகளில் இருந்து விடுதலை, விபத்துக்களில் இருந்து பாதுகாப்பு. பொருள் சேர்க்கை என்று பல நன்மைகளை தருகிறது தென்திசை,  என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஆராய்ந்து பார்த்தால் அனுபவ உண்மையும் அதுதான்..

அப்படியானால் எமனையும் வெல்ல எம திசை உதவி செய்கிறது.

அதனால் உங்கள் ஜாதகப்படி எந்த திசை வருகிறதோ, அந்த திசையில் வாசல் அமைக்க வேண்டும். உங்களுக்கு தென் திசை வந்தால் எந்த தயக்கமும்  தேவை இல்லை.

தமிழ் தத்துவம்

tamil thathuvam

Monday 24 September 2012

கடல் கடந்த திருமணங்கள்

தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அதற்கொரு குணம் உண்டு என்பார்கள். 

இன்று கடல் கடந்து வாழும் தமிழர்கள் வாழ்க்கை முறையில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டது. 

பக்தி மார்க்கத்தை விடாது பிடித்து கொண்டாலும், நடை உடை பாவனையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. கிட்டத்தட்ட அமெரிக்கர்கள் மாதிரி மாறி விட்டார்கள். 

குடும்ப பாசம் குறைந்து விட்டது. ஆண் பெண் இருபாலாரும் கற்றவர்களாக இருப்பதால், பணி வாய்ப்பிலும் பல மடங்கு முன்னேறற்றம். 

இருக்கட்டும். 

இருமனம் இணைந்து இனிய இல்லறம் நடத்துவதற்கு திருமணம் வந்தது. அந்த திருமண பந்தத்தில் சமய சடங்குகளையும், கலாச்சார நெறிகளையும் விடாது பிடித்து கொண்டாலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று முற்றிலும் மாறி விட்டது கடல் கடந்த தமிழர்களின் வாழக்கை. அதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 










Sunday 23 September 2012

பரிகாரங்கள் பலன் தருமா?

பரிகாரங்கள் பலன் தருமா?  இது என்ன விசித்திரமான கேள்வி..!  காரணமிருக்கிறது. ஒரு தவறை செய்து விட்டு அதற்கு பரிகாரம் செய்வது ஒரு வகை - இது மனசாந்தி.  எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாமல் பட்டகாலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல், அடிமேல் அடி விழும்போது நிவாரணம் தேடி செய்யப்படுவது மறுவகை.  பரிகாரங்களை பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், அவ்வளவு ஏன்? கிராம தேவதை கோவில் பூசாரிகள் கூட சொல்வதுண்டு.பாதிக்க பட்டவர்கள்  அதையே வேதவாக்காக கொண்டு நிறைவேற்றுவது உண்டு.  விரதமிருப்பது ஒரு வகை. பூஜைகள் செய்வது மறு வகை. ஒரு சில வசதி படைத்தவர்கள் யாகம், வேள்வி என்று தடபுடலாக செய்பவர்களும் இருக்கிறார்கள்.  சிலர் ஆடு, மாடு, கோழி என்று உயிர் பலி தந்தும் நிறைவேற்றுகிறார்கள்.  பரிகாரம் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  ஜோதிடம் தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது.  அதற்கு ஆதாரமாய் புராண இதிகாசங்களில் தேவாதி தேவர்களும், அரக்கர் இனங்களும் விரும்பியதை அடைய பல்வேறு யாகங்களை செய்து இறைவனை திருப்திப்படுத்தி,  வேண்டியதை பெற்றதாய் விவரம் சொல்கிறது.  தவம், யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு என்று பல பெயர்களில் வந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.  நமக்கு தேவையானதை பெற மெய்வருத்தி, உடல்வருத்தி, ஒரே சிந்தையோடு  இறைவனை சரணாகதி அடைந்தால் விரும்பியதை பெறலாம். துன்ப சுமைகளை இறக்கி வைக்கலாம் என்பதே அது.  ராவணன் தவம் இருந்து மூன்றரை கோடி ஆண்டுகள் ஆயுளை பெற்றானாம். அவன் ஆசை சிரஞ்சீவியாக வாழ்வது.  மார்கண்டேயன் தவமிருந்து  என்றும் 16 வரம் பெற்றான்.  அர்ச்சுனன் தவமிருந்து   பாசுபாஸ்திரம் பெற்றான். இவர்கள் நோக்கமெல்லாம் இவ்வுலகில் சர்வ வல்லமை பெற்றவர்களாக திகழ்வது.  நாம் மனிதர்கள். தேவர்கள் மாதிரி அதிகபடியான ஆசை இல்லாவிட்டாலும் பூமியில் மனிதனாக பிறந்து விட்டோம்.  ஏதோ நாமும் வாழும் காலம் வரையில் வறுமையில் வாடாமல், நோய்நொடிகள் இல்லாமல், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், வசதியான வீடு, கொஞ்சூண்டு நிலம் நீச்சு, அப்படியே போக வர ஒரு வாகனம் இப்படி இருந்து விட்டால் கூட போதும், இந்த நிலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.  சரி  பரிகாரங்கள் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலையாகி விட முடியுமா? ஒரு கேள்வி எழுகிறது.  ஒருவர் ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள் அந்த ஜாதகரை வழிநடத்தி செல்லும். பொதுவாக எந்த கிரகத்தையும் இது கெட்ட கிரகம் என்று கட்டம் கட்ட தேவையில்லை.  காரணம் அது அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தியம் பெறுகிறதோ, அதை பொறுத்தே தங்கள் பலனை தரபோகிறார்கள். இதில் மாறுபட்ட கருத்துக்கு வழியில்லை.  என்ன செய்ய? ரெண்டு கண்ணும் தெரியாதவனை ராஜபார்வை பார்க்க சொன்னால் என்னாகும்.  சரி விஷயத்திற்கு வருவோம்.  கிரகம் நம்மை செய்யும் நிலையில் இருந்தால் நம்மை செய்யும். தீமை செய்யும் நிலையில் இருந்தால் தீமை செய்யும். வீடு வாசல், கன்று காலிகள், வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, செல்வ செழிப்பு, ஆளடிமை என்று ராஜயோக வாழ்க்கையை அள்ளித்தருவதும் கிரகங்களே.  இத்தனை சுகங்களை அனுபவித்துகொண்டிருப்பவரை, ஒன்றும் இல்லாத ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வருவதும் கிரகங்களே.   சரி துன்ப சுமையை தாங்க முடியாத மனிதன் பரிகாரம் செய்வதால் பலன்கள் மாறிவிடுமா? பிழைத்து போகிறான் மனிதன் என்று கிரகம் பொறுத்து போகுமா?  ஆராய்வோம்.  எனக்கு தெரிந்த பெரியவர் தன் மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார். எதுவுமே ஒத்து வரவில்லை. ஜாதகம் ஒத்துழைத்தால் மன பொருத்தம் இல்லை.  மன பொருத்தம்  இருந்தால் ஜாதகம் ஒத்துழைக்கவில்லை. அதற்காக அவர் சலிப்படையவும் இல்லை. திருமண அமைப்பாளர் பலரிடம் அந்த பெண்ணின் ஜாதகம் இருக்கிறது. அதற்கு இப்போதே வயது 35 ஐ தாண்டிவிட்டது.   அவர் செய்யாத பரிகாரமா? எதுவும் மீதமில்லை. எதை சொன்னாலும் உடனே செய்து விடுவார். அப்படி ஒரு நம்பிக்கை. என்ன செய்ய...!! பொண்ணை கரையேத்தனுமே.  அந்த பொண்ணும் சும்மா இல்லை. பாய் தலையனையோடு போய் கோவிலில் குடி இருக்கவில்லையே தவிர, மற்றபடி ஆளை காணும் என்று தேடினால் அனேகமாக ஆலயத்தில் இருக்கும் என்று அடையாளம் சொல்லலாம்.   அது தன் பங்க்குக்கு வழிபாடு, விரதம், சுமங்கலி பூஜை என்று ஏதேதோ செய்துகொண்டு தான் இருக்கிறது.  ஆனாலும் இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் கதறல், கல்லாய்ப்போன எந்த கடவுளின் காதிலும் விழவில்லை. ஏன் இரக்கமே இல்லாத கிரகமும் கண் திறந்து பார்க்கவில்லை.   என்ன  காரணம்?  லக்னாதிபதி ஏழாம் அதிபதியோடு கூடி லக்னத்திற்கு 12 இல்  இருந்தான். ஆட்சி பெற்ற பத்தாம் அதிபதியோடு மூன்று பேர் கூடி நின்றார்கள்.  இந்த லெச்சனத்தில் சுக்கிரனும் நீச்சம். இந்த அமைப்பு கல்யாணம் என்பது கனவிலும் இல்லை என்று கட்டியம் கூறியது. விதி வழியில் தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.  என்னவாயிற்று பூஜை?  என்னவாயிற்று பரிகாரம்?  சரி அதுதான் போகட்டும்.  சுமதி + சுந்தர், காதல் + கல்யாண ஜோடி. சந்திப்பில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.  ஜாதகம் பார்க்கவில்லை. பொருத்தம் இருக்கிறதா தெரியாது. ஒருவருக்கு ஒருவர் பார்த்தார்கள், பிடித்திருந்தது. இருவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவுதான்.  இவர்களின் மன பொருத்தத்திற்கு முன்பு தச பொருத்தங்கள் தேவைப்படவில்லை. கடைசியில் திருமணத்தில் முடிந்தது. அதன்பின்பும்  வாழ்க்கை நல்ல நிலையில் தான் சென்று கொண்டிருந்தது.   எதேச்சையாக நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமான ஜோதிடர் ஒருவர் தம்பதிகளின் ஜாதகத்தை பார்த்தார்.  பெண் பரணி. ஆண் பூசம். எடுத்த எடுப்பில் நட்சத்திர பொருத்தம் அவுட். அடுத்து பெண்ணோ துலாம் லக்னம். 2 இல் ராகு, 8 இல் செவ்வாய் மற்றும் கேது.  சுபக்கிரக   பார்வையும் இல்லை. சுக்கிரன் கவலை படாமல் கன்னியில் இருந்தான்.  ஜோதிடருக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. தயங்கி தயங்கி விஷயத்தை  சொன்னார். பொண்ணுக்கு நடப்பது ராகு திசை. பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.   உயிருக்கு உலை வைக்கும் போது உதாசினப்படுத்த முடியுமா? அவர்களும் சம்மதித்தார்கள். ராகு கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்யப்பட்டது.  மாங்கல்ய தோஷ நிவர்த்தி வழிபாடு, திருநாகேஸ்வரம், கீழபெரும்பள்ளம் என்று ஆன்மிக உலாவும் போய் வந்தாகி விட்டது.  பிரச்சனை தீர்ந்ததா? இல்லையே.. வாகன விபத்தொன்றில் சுந்தர் காலமானார்.  பரிகாரம் பலனளிக்கவில்லையே ஏன்?  நான் இப்படி எழுதுவதால் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சில சமயம் இப்படி அசம்பாவிதங்கள் நடந்து விடுவதுண்டு. அதற்காக பரிகாரமே தேவை இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா?   கேள்வி எழுகிறதா இல்லையா?  ஏழரை சனியோ, அஷ்டமத்து சனியோ நடப்பில் வந்தால் விநாயகரை அல்லது ஆஞ்சநேயரை வழிபட சொல்லி ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.  ஏன்?  சனியின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள்  இவர்கள் மட்டும்தான். இவர்களை வணங்கினால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம்  என்ற கோணத்தில் சொல்லபடுபவை. நாமும் வணங்குகிறோம்.   உடனே விநாயகரும் ஆஞ்சநேயரும் ... என் பத்தன் என்னை சரணடைந்து விட்டான். என்னை எப்படி தீண்டவில்லையோ, அதைபோல் என் பத்தனையும் பாதுகாக்க வேண்டும் என்று சனியிடம் சொல்வார்களா?  சொல்வார்கள் என்ற நம்பிக்கையை ஜோதிட சாஸ்த்திரம் ஊட்டுகிறது. இதில் உள்ள உண்மை நிலையை பின்னால் சொல்கிறேன்.  நம்பினோர் கைவிடப்படார். இது நான்கு மறை தீர்ப்பு. நமக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். என்ன செய்வோம்.  அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள்  யார்? யாரை பிடித்தால் நம் காரியம் நடக்கும் என்று யோசித்து அவர்களை அணுகி,  பவ்யமாக நமது நிலையை எடுத்து கூறி, நமக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறோம் அல்லவா. அதை போல்தான் கிரகங்களும்.  ஜோதிட சாஸ்திரத்தை சொல்லி வைத்த ஞானிகள், மகான்கள், ரிஷிகள் மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்லி வைத்தார்கள். அது கிரகங்களின் அதிதேவதை.   ஒரு தசையோ புத்தியோ பாதகமான பலன்களை செய்து கொண்டிருந்தால் கிரகங்களுக்கு எஜமானாக, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிதேவதைகளை வணங்கினால் நம்மை கிட்டும் என்கிறது சாஸ்த்திரம். அது ஓங்கி அடிப்பதை தாங்கி விடுவதற்கு சமம்.  சரி....கிரகங்களின் அதிதேவதை என்ன?   சூரியன் .......சிவன் சந்திரன் ......பார்வதி செவ்வாய் ..சுப்பிரமணியர் புதன் ........... மகாவிஷ்ணு குரு ..............பிரம்மா, தட்ச்சினாமூர்த்தி சுக்கிரன் ......லக்ஷ்மி, இந்திரன் சனி ..............எமன், சாஸ்த்தா ராகு .............காளி கேது ............விநாயகர்  இது நவகிரங்களின் எஜமானர்கள். இவர்களை வணங்கும்போது நம்மை கிட்டும் என்பது ஜோதிட வாக்கு. என்னதான் கல் நெஞ்சக்கார கிரகமாக இருந்தாலும் ஒரு ஈரம் இருக்கத்தானே செய்யும்.   சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.  இங்கே சொன்ன பரிகார தேவதைகளை வணங்கும் போது கெடுதல் செய்யும் கிரகங்கள் தங்கள் கெடு பலனை குறைத்து கொள்ளும் என்பது உண்மையானால், முன்னே சொன்ன இரண்டு ஜாதகர்கள் தங்கள் விதியமைப்பை மற்ற முடியவில்லையே ஏன்?  பரிகாரங்கள் பலன் தராமல் போனதின் மர்மம் என்ன?  காரணம் இதுதான்.  அவர்கள் ஜாதகத்தில் பலமாக பிடித்திருந்த பிரம்மகத்தி தோஷம். ஊழ்வினையின் பயனாய் வாழ்க்கையோடு விளையாடியது. அதுதான் காரணம்.  அதோடு கோவிலுக்கு போவதும், அர்ச்சனை செய்வதும், விளக்கு ஏற்றுவதும் பரிகாரத்தின் ஒரு வடிவம். அதோடு  ஹோமம் செய்வது முழு பலனை தரும்.  இதுபோன்ற கர்ம வினைகளை தீர்க்க கூடிய சக்தி அதற்கு உண்டு.      ஆனால் அதன் வழியே போய் பலனை பெற வேண்டும் என்ற அமைப்பிருந்தால்,  ஆகமம் தெரிந்த, புரிந்த, நல்ல குருமார்கள் வழியாக ஹோமம் செய்து விடுபட ஒரு வழி பிறக்கும்.   அதையும் மீறி விதி விளையாடினால்?  ஆண்டவன் விருப்பம் அதுவானால் என்று கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன சொல்ல.  முதலில் நம்பிக்கை தேவை. நம்புவோம்.


பரிகாரங்கள் பலன் தருமா?

இது என்ன விசித்திரமான கேள்வி..!

காரணமிருக்கிறது. ஒரு தவறை செய்து விட்டு அதற்கு பரிகாரம் செய்வது ஒரு வகை - இது மனசாந்தி.

எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாமல் பட்டகாலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல், அடிமேல் அடி விழும்போது நிவாரணம் தேடி செய்யப்படுவது மறுவகை.

பரிகாரங்களை பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், அவ்வளவு ஏன்? கிராம தேவதை கோவில் பூசாரிகள் கூட சொல்வதுண்டு.பாதிக்க பட்டவர்கள்  அதையே வேதவாக்காக கொண்டு நிறைவேற்றுவது உண்டு.

விரதமிருப்பது ஒரு வகை. பூஜைகள் செய்வது மறு வகை. ஒரு சில வசதி படைத்தவர்கள் யாகம், வேள்வி என்று தடபுடலாக செய்பவர்களும் இருக்கிறார்கள்.

சிலர் ஆடு, மாடு, கோழி என்று உயிர் பலி தந்தும் நிறைவேற்றுகிறார்கள்.

பரிகாரம் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  ஜோதிடம் தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது.

அதற்கு ஆதாரமாய் புராண இதிகாசங்களில் தேவாதி தேவர்களும், அரக்கர் இனங்களும் விரும்பியதை அடைய பல்வேறு யாகங்களை செய்து இறைவனை திருப்திப்படுத்தி,  வேண்டியதை பெற்றதாய் விவரம் சொல்கிறது.

தவம், யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு என்று பல பெயர்களில் வந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.

நமக்கு தேவையானதை பெற மெய்வருத்தி, உடல்வருத்தி, ஒரே சிந்தையோடு  இறைவனை சரணாகதி அடைந்தால் விரும்பியதை பெறலாம். துன்ப சுமைகளை இறக்கி வைக்கலாம் என்பதே அது.

ராவணன் தவம் இருந்து மூன்றரை கோடி ஆண்டுகள் ஆயுளை பெற்றானாம். அவன் ஆசை சிரஞ்சீவியாக வாழ்வது.

மார்கண்டேயன் தவமிருந்து  என்றும் 16 வரம் பெற்றான்.

அர்ச்சுனன் தவமிருந்து   பாசுபாஸ்திரம் பெற்றான். இவர்கள் நோக்கமெல்லாம் இவ்வுலகில் சர்வ வல்லமை பெற்றவர்களாக திகழ்வது.

நாம் மனிதர்கள். தேவர்கள் மாதிரி அதிகபடியான ஆசை இல்லாவிட்டாலும் பூமியில் மனிதனாக பிறந்து விட்டோம்.

ஏதோ நாமும் வாழும் காலம் வரையில் வறுமையில் வாடாமல், நோய்நொடிகள் இல்லாமல், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், வசதியான வீடு, கொஞ்சூண்டு நிலம் நீச்சு, அப்படியே போக வர ஒரு வாகனம் இப்படி இருந்து விட்டால் கூட போதும், இந்த நிலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.

சரி  பரிகாரங்கள் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலையாகி விட முடியுமா? ஒரு கேள்வி எழுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள் அந்த ஜாதகரை வழிநடத்தி செல்லும். பொதுவாக எந்த கிரகத்தையும் இது கெட்ட கிரகம் என்று கட்டம் கட்ட தேவையில்லை.

காரணம் அது அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தியம் பெறுகிறதோ, அதை பொறுத்தே தங்கள் பலனை தரபோகிறார்கள். இதில் மாறுபட்ட கருத்துக்கு வழியில்லை.

என்ன செய்ய? ரெண்டு கண்ணும் தெரியாதவனை ராஜபார்வை பார்க்க சொன்னால் என்னாகும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

கிரகம் நம்மை செய்யும் நிலையில் இருந்தால் நம்மை செய்யும். தீமை செய்யும் நிலையில் இருந்தால் தீமை செய்யும். வீடு வாசல், கன்று காலிகள், வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, செல்வ செழிப்பு, ஆளடிமை என்று ராஜயோக வாழ்க்கையை அள்ளித்தருவதும் கிரகங்களே.

இத்தனை சுகங்களை அனுபவித்துகொண்டிருப்பவரை, ஒன்றும் இல்லாத ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வருவதும் கிரகங்களே.


சரி துன்ப சுமையை தாங்க முடியாத மனிதன் பரிகாரம் செய்வதால் பலன்கள் மாறிவிடுமா? பிழைத்து போகிறான் மனிதன் என்று கிரகம் பொறுத்து போகுமா?

ஆராய்வோம்.

எனக்கு தெரிந்த பெரியவர் தன் மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார். எதுவுமே ஒத்து வரவில்லை. ஜாதகம் ஒத்துழைத்தால் மன பொருத்தம் இல்லை.

மன பொருத்தம்  இருந்தால் ஜாதகம் ஒத்துழைக்கவில்லை. அதற்காக அவர் சலிப்படையவும் இல்லை. திருமண அமைப்பாளர் பலரிடம் அந்த பெண்ணின் ஜாதகம் இருக்கிறது. அதற்கு இப்போதே வயது 35 ஐ தாண்டிவிட்டது.

அவர் செய்யாத பரிகாரமா? எதுவும் மீதமில்லை. எதை சொன்னாலும் உடனே செய்து விடுவார். அப்படி ஒரு நம்பிக்கை. என்ன செய்ய...!! பொண்ணை கரையேத்தனுமே.

அந்த பொண்ணும் சும்மா இல்லை. பாய் தலையனையோடு போய் கோவிலில் குடி இருக்கவில்லையே தவிர, மற்றபடி ஆளை காணும் என்று தேடினால் அனேகமாக ஆலயத்தில் இருக்கும் என்று அடையாளம் சொல்லலாம்.


அது தன் பங்க்குக்கு வழிபாடு, விரதம், சுமங்கலி பூஜை என்று ஏதேதோ செய்துகொண்டு தான் இருக்கிறது.

ஆனாலும் இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் கதறல், கல்லாய்ப்போன எந்த கடவுளின் காதிலும் விழவில்லை. ஏன் இரக்கமே இல்லாத கிரகமும் கண் திறந்து பார்க்கவில்லை.

என்ன  காரணம்?

லக்னாதிபதி ஏழாம் அதிபதியோடு கூடி லக்னத்திற்கு 12 இல்  இருந்தான். ஆட்சி பெற்ற பத்தாம் அதிபதியோடு மூன்று பேர் கூடி நின்றார்கள்.

இந்த லெச்சனத்தில் சுக்கிரனும் நீச்சம். இந்த அமைப்பு கல்யாணம் என்பது கனவிலும் இல்லை என்று கட்டியம் கூறியது. விதி வழியில் தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

என்னவாயிற்று பூஜை?  என்னவாயிற்று பரிகாரம்?

சரி அதுதான் போகட்டும்.

சுமதி + சுந்தர், காதல் + கல்யாண ஜோடி. சந்திப்பில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.

ஜாதகம் பார்க்கவில்லை. பொருத்தம் இருக்கிறதா தெரியாது. ஒருவருக்கு ஒருவர் பார்த்தார்கள், பிடித்திருந்தது. இருவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவுதான்.

இவர்களின் மன பொருத்தத்திற்கு முன்பு தச பொருத்தங்கள் தேவைப்படவில்லை. கடைசியில் திருமணத்தில் முடிந்தது. அதன்பின்பும்  வாழ்க்கை நல்ல நிலையில் தான் சென்று கொண்டிருந்தது.

எதேச்சையாக நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமான ஜோதிடர் ஒருவர் தம்பதிகளின் ஜாதகத்தை பார்த்தார்.

பெண் பரணி. ஆண் பூசம். எடுத்த எடுப்பில் நட்சத்திர பொருத்தம் அவுட். அடுத்து பெண்ணோ துலாம் லக்னம். 2 இல் ராகு, 8 இல் செவ்வாய் மற்றும் கேது.  சுபக்கிரக   பார்வையும் இல்லை. சுக்கிரன் கவலை படாமல் கன்னியில் இருந்தான்.

ஜோதிடருக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. தயங்கி தயங்கி விஷயத்தை  சொன்னார். பொண்ணுக்கு நடப்பது ராகு திசை. பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.

உயிருக்கு உலை வைக்கும் போது உதாசினப்படுத்த முடியுமா? அவர்களும் சம்மதித்தார்கள். ராகு கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்யப்பட்டது.

மாங்கல்ய தோஷ நிவர்த்தி வழிபாடு, திருநாகேஸ்வரம், கீழபெரும்பள்ளம் என்று ஆன்மிக உலாவும் போய் வந்தாகி விட்டது.

பிரச்சனை தீர்ந்ததா? இல்லையே.. வாகன விபத்தொன்றில் சுந்தர் காலமானார்.

பரிகாரம் பலனளிக்கவில்லையே ஏன்?

நான் இப்படி எழுதுவதால் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சில சமயம் இப்படி அசம்பாவிதங்கள் நடந்து விடுவதுண்டு. அதற்காக பரிகாரமே தேவை இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா?

கேள்வி எழுகிறதா இல்லையா?

ஏழரை சனியோ, அஷ்டமத்து சனியோ நடப்பில் வந்தால் விநாயகரை அல்லது ஆஞ்சநேயரை வழிபட சொல்லி ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.  ஏன்?

சனியின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள்  இவர்கள் மட்டும்தான். இவர்களை வணங்கினால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம்  என்ற கோணத்தில் சொல்லபடுபவை. நாமும் வணங்குகிறோம்.

உடனே விநாயகரும் ஆஞ்சநேயரும் ... என் பத்தன் என்னை சரணடைந்து விட்டான். என்னை எப்படி தீண்டவில்லையோ, அதைபோல் என் பத்தனையும் பாதுகாக்க வேண்டும் என்று சனியிடம் சொல்வார்களா?

சொல்வார்கள் என்ற நம்பிக்கையை ஜோதிட சாஸ்த்திரம் ஊட்டுகிறது. இதில் உள்ள உண்மை நிலையை பின்னால் சொல்கிறேன்.

நம்பினோர் கைவிடப்படார். இது நான்கு மறை தீர்ப்பு. நமக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். என்ன செய்வோம்.

அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள்  யார்? யாரை பிடித்தால் நம் காரியம் நடக்கும் என்று யோசித்து அவர்களை அணுகி,  பவ்யமாக நமது நிலையை எடுத்து கூறி, நமக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறோம் அல்லவா. அதை போல்தான் கிரகங்களும்.

ஜோதிட சாஸ்திரத்தை சொல்லி வைத்த ஞானிகள், மகான்கள், ரிஷிகள் மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்லி வைத்தார்கள். அது கிரகங்களின் அதிதேவதை.


ஒரு தசையோ புத்தியோ பாதகமான பலன்களை செய்து கொண்டிருந்தால் கிரகங்களுக்கு எஜமானாக, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிதேவதைகளை வணங்கினால் நம்மை கிட்டும் என்கிறது சாஸ்த்திரம். அது ஓங்கி அடிப்பதை தாங்கி விடுவதற்கு சமம்.

சரி....கிரகங்களின் அதிதேவதை என்ன?


சூரியன் .......சிவன்
சந்திரன் ......பார்வதி
செவ்வாய் ..சுப்பிரமணியர்
புதன் ........... மகாவிஷ்ணு
குரு ..............பிரம்மா, தட்ச்சினாமூர்த்தி
சுக்கிரன் ......லக்ஷ்மி, இந்திரன்
சனி ..............எமன், சாஸ்த்தா
ராகு .............காளி
கேது ............விநாயகர்

இது நவகிரங்களின் எஜமானர்கள். இவர்களை வணங்கும்போது நம்மை கிட்டும் என்பது ஜோதிட வாக்கு. என்னதான் கல் நெஞ்சக்கார கிரகமாக இருந்தாலும் ஒரு ஈரம் இருக்கத்தானே செய்யும்.


சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.

இங்கே சொன்ன பரிகார தேவதைகளை வணங்கும் போது கெடுதல் செய்யும் கிரகங்கள் தங்கள் கெடு பலனை குறைத்து கொள்ளும் என்பது உண்மையானால், முன்னே சொன்ன இரண்டு ஜாதகர்கள் தங்கள் விதியமைப்பை மற்ற முடியவில்லையே ஏன்?

பரிகாரங்கள் பலன் தராமல் போனதின் மர்மம் என்ன?

காரணம் இதுதான்.  அவர்கள் ஜாதகத்தில் பலமாக பிடித்திருந்த பிரம்மகத்தி தோஷம். ஊழ்வினையின் பயனாய் வாழ்க்கையோடு விளையாடியது. அதுதான் காரணம்.

அதோடு கோவிலுக்கு போவதும், அர்ச்சனை செய்வதும், விளக்கு ஏற்றுவதும் பரிகாரத்தின் ஒரு வடிவம். அதோடு  ஹோமம் செய்வது முழு பலனை தரும்.  இதுபோன்ற கர்ம வினைகளை தீர்க்க கூடிய சக்தி அதற்கு உண்டு.

பரிகாரங்கள் பலன் தருமா?  இது என்ன விசித்திரமான கேள்வி..!  காரணமிருக்கிறது. ஒரு தவறை செய்து விட்டு அதற்கு பரிகாரம் செய்வது ஒரு வகை - இது மனசாந்தி.  எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாமல் பட்டகாலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல், அடிமேல் அடி விழும்போது நிவாரணம் தேடி செய்யப்படுவது மறுவகை.  பரிகாரங்களை பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், அவ்வளவு ஏன்? கிராம தேவதை கோவில் பூசாரிகள் கூட சொல்வதுண்டு.பாதிக்க பட்டவர்கள்  அதையே வேதவாக்காக கொண்டு நிறைவேற்றுவது உண்டு.  விரதமிருப்பது ஒரு வகை. பூஜைகள் செய்வது மறு வகை. ஒரு சில வசதி படைத்தவர்கள் யாகம், வேள்வி என்று தடபுடலாக செய்பவர்களும் இருக்கிறார்கள்.  சிலர் ஆடு, மாடு, கோழி என்று உயிர் பலி தந்தும் நிறைவேற்றுகிறார்கள்.  பரிகாரம் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  ஜோதிடம் தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்திருக்கிறது.  அதற்கு ஆதாரமாய் புராண இதிகாசங்களில் தேவாதி தேவர்களும், அரக்கர் இனங்களும் விரும்பியதை அடைய பல்வேறு யாகங்களை செய்து இறைவனை திருப்திப்படுத்தி,  வேண்டியதை பெற்றதாய் விவரம் சொல்கிறது.  தவம், யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு என்று பல பெயர்களில் வந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.  நமக்கு தேவையானதை பெற மெய்வருத்தி, உடல்வருத்தி, ஒரே சிந்தையோடு  இறைவனை சரணாகதி அடைந்தால் விரும்பியதை பெறலாம். துன்ப சுமைகளை இறக்கி வைக்கலாம் என்பதே அது.  ராவணன் தவம் இருந்து மூன்றரை கோடி ஆண்டுகள் ஆயுளை பெற்றானாம். அவன் ஆசை சிரஞ்சீவியாக வாழ்வது.  மார்கண்டேயன் தவமிருந்து  என்றும் 16 வரம் பெற்றான்.  அர்ச்சுனன் தவமிருந்து   பாசுபாஸ்திரம் பெற்றான். இவர்கள் நோக்கமெல்லாம் இவ்வுலகில் சர்வ வல்லமை பெற்றவர்களாக திகழ்வது.  நாம் மனிதர்கள். தேவர்கள் மாதிரி அதிகபடியான ஆசை இல்லாவிட்டாலும் பூமியில் மனிதனாக பிறந்து விட்டோம்.  ஏதோ நாமும் வாழும் காலம் வரையில் வறுமையில் வாடாமல், நோய்நொடிகள் இல்லாமல், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், வசதியான வீடு, கொஞ்சூண்டு நிலம் நீச்சு, அப்படியே போக வர ஒரு வாகனம் இப்படி இருந்து விட்டால் கூட போதும், இந்த நிலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கிறோம்.  சரி  பரிகாரங்கள் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலையாகி விட முடியுமா? ஒரு கேள்வி எழுகிறது.  ஒருவர் ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள் அந்த ஜாதகரை வழிநடத்தி செல்லும். பொதுவாக எந்த கிரகத்தையும் இது கெட்ட கிரகம் என்று கட்டம் கட்ட தேவையில்லை.  காரணம் அது அந்த ஜாதகத்திற்கு எந்த ஆதிபத்தியம் பெறுகிறதோ, அதை பொறுத்தே தங்கள் பலனை தரபோகிறார்கள். இதில் மாறுபட்ட கருத்துக்கு வழியில்லை.  என்ன செய்ய? ரெண்டு கண்ணும் தெரியாதவனை ராஜபார்வை பார்க்க சொன்னால் என்னாகும்.  சரி விஷயத்திற்கு வருவோம்.  கிரகம் நம்மை செய்யும் நிலையில் இருந்தால் நம்மை செய்யும். தீமை செய்யும் நிலையில் இருந்தால் தீமை செய்யும். வீடு வாசல், கன்று காலிகள், வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, செல்வ செழிப்பு, ஆளடிமை என்று ராஜயோக வாழ்க்கையை அள்ளித்தருவதும் கிரகங்களே.  இத்தனை சுகங்களை அனுபவித்துகொண்டிருப்பவரை, ஒன்றும் இல்லாத ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வருவதும் கிரகங்களே.   சரி துன்ப சுமையை தாங்க முடியாத மனிதன் பரிகாரம் செய்வதால் பலன்கள் மாறிவிடுமா? பிழைத்து போகிறான் மனிதன் என்று கிரகம் பொறுத்து போகுமா?  ஆராய்வோம்.  எனக்கு தெரிந்த பெரியவர் தன் மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார். எதுவுமே ஒத்து வரவில்லை. ஜாதகம் ஒத்துழைத்தால் மன பொருத்தம் இல்லை.  மன பொருத்தம்  இருந்தால் ஜாதகம் ஒத்துழைக்கவில்லை. அதற்காக அவர் சலிப்படையவும் இல்லை. திருமண அமைப்பாளர் பலரிடம் அந்த பெண்ணின் ஜாதகம் இருக்கிறது. அதற்கு இப்போதே வயது 35 ஐ தாண்டிவிட்டது.   அவர் செய்யாத பரிகாரமா? எதுவும் மீதமில்லை. எதை சொன்னாலும் உடனே செய்து விடுவார். அப்படி ஒரு நம்பிக்கை. என்ன செய்ய...!! பொண்ணை கரையேத்தனுமே.  அந்த பொண்ணும் சும்மா இல்லை. பாய் தலையனையோடு போய் கோவிலில் குடி இருக்கவில்லையே தவிர, மற்றபடி ஆளை காணும் என்று தேடினால் அனேகமாக ஆலயத்தில் இருக்கும் என்று அடையாளம் சொல்லலாம்.   அது தன் பங்க்குக்கு வழிபாடு, விரதம், சுமங்கலி பூஜை என்று ஏதேதோ செய்துகொண்டு தான் இருக்கிறது.  ஆனாலும் இந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களின் கதறல், கல்லாய்ப்போன எந்த கடவுளின் காதிலும் விழவில்லை. ஏன் இரக்கமே இல்லாத கிரகமும் கண் திறந்து பார்க்கவில்லை.   என்ன  காரணம்?  லக்னாதிபதி ஏழாம் அதிபதியோடு கூடி லக்னத்திற்கு 12 இல்  இருந்தான். ஆட்சி பெற்ற பத்தாம் அதிபதியோடு மூன்று பேர் கூடி நின்றார்கள்.  இந்த லெச்சனத்தில் சுக்கிரனும் நீச்சம். இந்த அமைப்பு கல்யாணம் என்பது கனவிலும் இல்லை என்று கட்டியம் கூறியது. விதி வழியில் தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.  என்னவாயிற்று பூஜை?  என்னவாயிற்று பரிகாரம்?  சரி அதுதான் போகட்டும்.  சுமதி + சுந்தர், காதல் + கல்யாண ஜோடி. சந்திப்பில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.  ஜாதகம் பார்க்கவில்லை. பொருத்தம் இருக்கிறதா தெரியாது. ஒருவருக்கு ஒருவர் பார்த்தார்கள், பிடித்திருந்தது. இருவரும் ஒன்றிணைந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவுதான்.  இவர்களின் மன பொருத்தத்திற்கு முன்பு தச பொருத்தங்கள் தேவைப்படவில்லை. கடைசியில் திருமணத்தில் முடிந்தது. அதன்பின்பும்  வாழ்க்கை நல்ல நிலையில் தான் சென்று கொண்டிருந்தது.   எதேச்சையாக நண்பர் ஒருவர் மூலமாக அறிமுகமான ஜோதிடர் ஒருவர் தம்பதிகளின் ஜாதகத்தை பார்த்தார்.  பெண் பரணி. ஆண் பூசம். எடுத்த எடுப்பில் நட்சத்திர பொருத்தம் அவுட். அடுத்து பெண்ணோ துலாம் லக்னம். 2 இல் ராகு, 8 இல் செவ்வாய் மற்றும் கேது.  சுபக்கிரக   பார்வையும் இல்லை. சுக்கிரன் கவலை படாமல் கன்னியில் இருந்தான்.  ஜோதிடருக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. தயங்கி தயங்கி விஷயத்தை  சொன்னார். பொண்ணுக்கு நடப்பது ராகு திசை. பரிகாரம் செய்ய வேண்டும் என்றார்.   உயிருக்கு உலை வைக்கும் போது உதாசினப்படுத்த முடியுமா? அவர்களும் சம்மதித்தார்கள். ராகு கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்யப்பட்டது.  மாங்கல்ய தோஷ நிவர்த்தி வழிபாடு, திருநாகேஸ்வரம், கீழபெரும்பள்ளம் என்று ஆன்மிக உலாவும் போய் வந்தாகி விட்டது.  பிரச்சனை தீர்ந்ததா? இல்லையே.. வாகன விபத்தொன்றில் சுந்தர் காலமானார்.  பரிகாரம் பலனளிக்கவில்லையே ஏன்?  நான் இப்படி எழுதுவதால் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சில சமயம் இப்படி அசம்பாவிதங்கள் நடந்து விடுவதுண்டு. அதற்காக பரிகாரமே தேவை இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா?   கேள்வி எழுகிறதா இல்லையா?  ஏழரை சனியோ, அஷ்டமத்து சனியோ நடப்பில் வந்தால் விநாயகரை அல்லது ஆஞ்சநேயரை வழிபட சொல்லி ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.  ஏன்?  சனியின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள்  இவர்கள் மட்டும்தான். இவர்களை வணங்கினால் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம்  என்ற கோணத்தில் சொல்லபடுபவை. நாமும் வணங்குகிறோம்.   உடனே விநாயகரும் ஆஞ்சநேயரும் ... என் பத்தன் என்னை சரணடைந்து விட்டான். என்னை எப்படி தீண்டவில்லையோ, அதைபோல் என் பத்தனையும் பாதுகாக்க வேண்டும் என்று சனியிடம் சொல்வார்களா?  சொல்வார்கள் என்ற நம்பிக்கையை ஜோதிட சாஸ்த்திரம் ஊட்டுகிறது. இதில் உள்ள உண்மை நிலையை பின்னால் சொல்கிறேன்.  நம்பினோர் கைவிடப்படார். இது நான்கு மறை தீர்ப்பு. நமக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். என்ன செய்வோம்.  அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள்  யார்? யாரை பிடித்தால் நம் காரியம் நடக்கும் என்று யோசித்து அவர்களை அணுகி,  பவ்யமாக நமது நிலையை எடுத்து கூறி, நமக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறோம் அல்லவா. அதை போல்தான் கிரகங்களும்.  ஜோதிட சாஸ்திரத்தை சொல்லி வைத்த ஞானிகள், மகான்கள், ரிஷிகள் மறைமுகமாக ஒரு விஷயத்தை சொல்லி வைத்தார்கள். அது கிரகங்களின் அதிதேவதை.   ஒரு தசையோ புத்தியோ பாதகமான பலன்களை செய்து கொண்டிருந்தால் கிரகங்களுக்கு எஜமானாக, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிதேவதைகளை வணங்கினால் நம்மை கிட்டும் என்கிறது சாஸ்த்திரம். அது ஓங்கி அடிப்பதை தாங்கி விடுவதற்கு சமம்.  சரி....கிரகங்களின் அதிதேவதை என்ன?   சூரியன் .......சிவன் சந்திரன் ......பார்வதி செவ்வாய் ..சுப்பிரமணியர் புதன் ........... மகாவிஷ்ணு குரு ..............பிரம்மா, தட்ச்சினாமூர்த்தி சுக்கிரன் ......லக்ஷ்மி, இந்திரன் சனி ..............எமன், சாஸ்த்தா ராகு .............காளி கேது ............விநாயகர்  இது நவகிரங்களின் எஜமானர்கள். இவர்களை வணங்கும்போது நம்மை கிட்டும் என்பது ஜோதிட வாக்கு. என்னதான் கல் நெஞ்சக்கார கிரகமாக இருந்தாலும் ஒரு ஈரம் இருக்கத்தானே செய்யும்.   சரி நாம் விஷயத்திற்கு வருவோம்.  இங்கே சொன்ன பரிகார தேவதைகளை வணங்கும் போது கெடுதல் செய்யும் கிரகங்கள் தங்கள் கெடு பலனை குறைத்து கொள்ளும் என்பது உண்மையானால், முன்னே சொன்ன இரண்டு ஜாதகர்கள் தங்கள் விதியமைப்பை மற்ற முடியவில்லையே ஏன்?  பரிகாரங்கள் பலன் தராமல் போனதின் மர்மம் என்ன?  காரணம் இதுதான்.  அவர்கள் ஜாதகத்தில் பலமாக பிடித்திருந்த பிரம்மகத்தி தோஷம். ஊழ்வினையின் பயனாய் வாழ்க்கையோடு விளையாடியது. அதுதான் காரணம்.  அதோடு கோவிலுக்கு போவதும், அர்ச்சனை செய்வதும், விளக்கு ஏற்றுவதும் பரிகாரத்தின் ஒரு வடிவம். அதோடு  ஹோமம் செய்வது முழு பலனை தரும்.  இதுபோன்ற கர்ம வினைகளை தீர்க்க கூடிய சக்தி அதற்கு உண்டு.      ஆனால் அதன் வழியே போய் பலனை பெற வேண்டும் என்ற அமைப்பிருந்தால்,  ஆகமம் தெரிந்த, புரிந்த, நல்ல குருமார்கள் வழியாக ஹோமம் செய்து விடுபட ஒரு வழி பிறக்கும்.   அதையும் மீறி விதி விளையாடினால்?  ஆண்டவன் விருப்பம் அதுவானால் என்று கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன சொல்ல.  முதலில் நம்பிக்கை தேவை. நம்புவோம்.

ஆனால் அதன் வழியே போய் பலனை பெற வேண்டும் என்ற அமைப்பிருந்தால்,  ஆகமம் தெரிந்த, புரிந்த, நல்ல குருமார்கள் வழியாக ஹோமம் செய்து விடுபட ஒரு வழி பிறக்கும்.

அதையும் மீறி விதி விளையாடினால்?

ஆண்டவன் விருப்பம் அதுவானால் ஏற்றுக்  கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன சொல்ல.

முதலில் நம்பிக்கை தேவை. நம்புவோம்.

Friday 21 September 2012

சனி பகவானை எப்படி வணங்க வேண்டும்?



வண்ணத்தில் நீலத்திற்கு சொந்தக்காரர், கருப்பை ஆள்பவர், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர், பாடுபட்டு உழைக்க வைத்து பலனை பாதியாக்கி தருபவர், சூரிய புத்திரன், கர்மவினை கிரகம் என்றெல்லாம் வர்ணிக்க படுபவர் சனிபகவான்.

இவரை தர்மத்தின் தலைவன் என்கிறது புராணங்கள். எளிவன் வலியவன் பார்ப்பதில்லை.

ஏழை பணக்காரன் கணக்கில்லை, யாராக இருந்தாலும் வாங்கி வந்த வரத்திற்கு தகுந்த மாதிரி பலன்களை தருவார். அதனால்தான் கர்மவினை கிரகம் என்கிறது சாஸ்த்திரங்கள்.



இவர் சாமானிய மனிதர்களை மட்டும் அல்ல, மகத்தான சக்தி பெற்றவர்களை கூட விட்டு வைத்ததில்லை,.


மகுடம் சுமக்க வேண்டிய ராமன் மரவுரி தரித்து கானகம் சென்றான்.

காரணம் என்ன?

குரு திசையில் பிறந்த ராமன் சனிதிசையை சந்தித்த போதுதான். நாடாளும் பாக்கியம் இழந்து காடாள வேண்டிய கட்டாயம், வலிமையான எதிரியோடு மோதவேண்டிய நிர்பந்தம், அன்புக்கு உரிய மனைவியின் பிரிவு, அவ்வளவு ஏன்... கர்ம வினைகூட தேடி வந்தது. அதனால் பாசத்துக்கு உரிய தந்தையின் பிரிவையும் சந்திக்க வைத்தது.



நல்லவர்களாய் வர்ணிக்கப்பட்ட பாண்டவர்கள் கூட, நயவஞ்சக துரியோதனனால்   நாடிழந்து, நகரிழந்து, உரிமைகளை இழந்து காட்டில் திரிந்த காரணமும் சனிதிசைதான்.


நளன் சூதாடி தோற்றது சனிதிசைதான். உண்மையின் உரைகல்லாய் இருந்த அரிச்சந்திரன் எல்லாம் இழந்து, மனைவி மக்களை பிரிந்து சுடுகாட்டில் அலைந்ததற்கு காரணமும் சனிதிசைதான்.


பொதுவாக சனிதிசை என்றில்லை, ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டம  சனி, கண்டக சனி நேற்று பல்வேறு பெயர்களில் வந்து படுத்தி எடுப்பார். அதோடு இவர் பார்வையும் பயங்கரமானது.

அதனால்தான் அவர் கண்கள் கட்டப்பட்டே இருக்கும். கண்கள் திறந்தால் என்ன நடக்கும் ஒரு உதாரணத்தை பார்ப்போமா?

ராவணன்.  சிவபெருமானுக்கு இணையாக, சனிக்கு அடுத்தபடியாக ஈஸ்வர பட்டம் பெற்றவன். தன் தவவலிமையால் சர்வலோகத்தையும் ஆட்டி படைத்தான்.


சிலசமயம் சிவபெருமானையே சீண்டி பார்த்ததும்  உண்டு. ஆனால் அவன் கஷ்டகாலம் சனி வடிவில் வந்தது.

ராவணன் சபையில் ஒருநாள் நவகிரங்களை பற்றிய பேச்சு வந்தது. உங்களை பார்த்து அனைவரும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் கேவலம் இந்த நவகிரகங்கள், உங்கள் அருமை பெருமையை உணராமல், தங்கள் தொழிலிலேயே கவனமாய் இருக்கிறார்கள்.


அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அவர்களை செயல்படமுடியாமல் கட்டிப்போட்டால் என்ன? கேள்வி திட்டமானது, திட்டம் செயல்பாட்டிற்கு வர உத்தரவு பிறபித்தான் ராவணன்.

இழுத்து வாருங்கள் நவகிரங்களை. அவ்வளவுதான் ... அரக்கர் சேனை அம்பாய் பாய்ந்தது. சற்று நேரத்தில் மற்றவர் விதிப்பயனை தீர்மானித்து பலன் தந்து கொண்டிருந்த கிரக கூட்டம் கட்டி இழுத்து வரப்பட்டது.

அதுசரி....கிரங்களின் போதாத காலம் குண்டுகட்டாக தூக்கிவரப்பட்டு ராவணன் அரியணை ஏறும் படிகளில், படிக்கு ஒருவராய் குப்பற கிடத்தபட்டார்கள். அவர்களை மிதித்து ஏறித்தான் அரியாசனத்தில் அமர்வது ராவணன் வழக்கமானது.

எதற்கும் ஒரு முடிவு உண்டு. சர்வவல்லமை பெற்ற கிரகங்களே அடிமைப்பட்டு போகிறது என்றால் அடுத்து  ஒரு எதிர்வினை இருக்கத்தானே செய்யும்.

அதற்கு அடித்தளம் அமைக்க நாரதர் வந்தார். வழக்கம் போல் ஆமாம் சாமி கூட்டத்தோடு அமர்ந்திருந்தான் ராவணன்.

என்ன ராவணா... உன் அரியணை படிகளில் ஏதோ கிடக்கிறதே என்ன?

ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார் நாரதர்.

அது நவகிரங்கள்.

அவர்களை ஏன் குப்பற படுக்க வைத்திருக்கிறாய். திருப்பி போடு.அதிலும் இந்த சனி இருக்கானே திமிர் பிடித்த ஆள். அவனை உன் காலால் மிதித்து ஏறு.. அப்போதுதான் அவன் கொட்டம் அடங்கும்.

நாரதர் சாமார்த்தியமாக காய்களை நகர்த்தினார். ராவணன் கெட்டகாலம் உடனே வேலை செய்தது. தன் காவலாளியை கூப்பிட்டு சனியை திருப்பி போடச்சொண்ணன்.

போட்டார்கள்...!

சனி பார்வை பட பட.. அவன் பலம் குறைந்தது. கடைசியில் அவன் அழிய காரணமாய் இருந்தது சனி பார்வையே.

கோவியில் சனி பகவானை வணங்கும் போது மற்ற தெய்வங்களை வணங்குவது போல் நேருக்கு நேர் நின்று வணங்ககூடாது. ஓரமாய் நின்றுதான் வணங்க வேண்டும்.

இது திருநள்ளாறு சனிபகவானுக்கு பொருந்தாது. காரணம் அங்கே இருப்பது அனுக்கிரக மூர்த்தி. அதனால் அவரை  நேருக்கு நேர் நின்று வணங்கலாம் தவறில்லை.

Thursday 20 September 2012

இதை யாரும் படிக்க வேண்டாம்!




ஈகோ

இது பரவலாக பயன்படுத்தும் சொல்லாகி விட்டது. யாராவது, யாரை பார்த்தாவது, அவர் நடவடிக்கை பிடிக்க வில்லை என்றால், அந்தாளு ஈகோ பேர்வழி என்று எளிதாக சொல்லிவிடுவார்கள்.

அது என்ன ஈகோ?

தலைக்கனம், திமிர், ஆணவம், கர்வம் இவற்றின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு இன்னொரு பெயர் ஈகோ.

நான் என்று சொல்வது கூட ஈகோ. நாம் என்று தண்டக்கமாக சொல்லணும். அல்லது யாம் என்று சொல்லலாம் தவறில்லை. 

அப்படியா?

அப்படித்தான். இதை நான் சொல்லலை. ஊருக்குள்ளே அப்படித்தான் பேசிக்கிறாங்க. 

பாருங்கையா.... இந்தாளை. நான்னு சொல்றதே ஈகோ, தலைக்கணம்னு சொல்லும்போது, என்ன தெனாவெட்டு இருந்தா, நெஞ்சழுத்தம் இருந்தா, நான்னு சொல்லுவான்!  சிந்தனை வருதா? வந்தால் சந்தோசம், வராவிட்டால் ரொம்ப சந்தோசம். வாங்க பேசி ஒரு முடிவுக்கு வருவோம். 

இந்த ஈகோ என்கிற  வார்த்தைக்குள் ஏகப்பட்ட பொருள் பொதிந்து இருப்பதாக சொல்கிறார்கள். 

தன்னம்பிக்கை, தலைக்கணம் இரண்டுக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய கோடுதான். இதையே கொஞ்சம் மேம்படுத்தி, என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கணம் அல்லது ஈகோ என்கிறார்கள்.

இங்கேதான் என்னால் உடன் பட முடியவில்லை. ஒரு சுலோகம் உண்டு. உழைக்க தெரிந்தவனால் தான் பிழைக்க முடியும். 

தன்னை உணர்ந்தவனால் தான் தலைவனாக முடியும். இந்த தன்னை என்கிற வார்த்தைதான் தவறுதலாக தலைக்கணம் என்று உச்சரிக்க  படுகிறது 

நான் என்று சொல்லுகிற அத்தனை பேருமே தலைக்கணம் பிடித்தவர்களும் அல்ல. நாம் என்று சொல்லுகிற அத்தனை பேருமே தன்னடக்க பேர்வழியும் அல்ல.

இன்று மைன்ட் பவர், ஆழ்நிலை தியானம், மூச்சு சுவாச பயிற்சி, இப்படி நீண்டு கொண்டே போகும் பல்வேறு கலைகள்  கற்று தருவது தன்னம்பிக்கையைதான்.

உன்னால் முடியும், முயன்றால் முடியும், முற்றும் செய்ய கற்றுக்கொள் என்று உபதேசம் செய்தால் தவறில்லை.

ஆனால் என்னால் முடியும் என்னால் மட்டும் முடியும் என்று சொல்ல முனைந்தால், அதை தன்னம்பிக்கை என்பதை விட, ஈகோ என்று தலையில் குட்டுகிற செயலும் அரங்கேறுகிறது.


அது ஒரு கிராமம்.

அந்த கிராமத்தில் குடியிருக்க சொந்த இடம் இல்லாத நூற்றுக்கணக்கான நபர்களுக்கு அரசாங்கம் இலவசமாக நிலத்தை பட்டா போட்டு கொடுத்தது. ஒரு நபருக்கு நாலு ஏக்கர்.

எல்லோரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை  போய் பார்த்தார்கள். அது உடனடியாக பயன்படுத்துவதற்கேற்ற நிலம் இல்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே அதில் வீடு கட்டவோ, விளைநிலமாகவோ மாற்ற முடியும்.

கூட்டத்தில் இருந்தவர்கள் கொதித்துப்போனார்கள். இந்த அரசாங்கம் நம்மை   எல்லாம்  வஞ்சித்து  விட்டது.

அரைப்படி அரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம் என்கிற மாதிரி, பெரிய அறிவிப்பு விட்டு நிலத்தை தந்தார்களே தவிர முற்றிலும் ஏமாற்று வேலை.

நம் வாழ்நாள் முழுவதும் போராடினாலும், இந்த நிலத்தை சீற்படுத்தவோ, செப்பணிடவோ முடியாது.

அதனால் நம் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு உடனே சாலை மறியல் செய்ய வேண்டும் என்று கூட்டமாக, சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஆனால் என்பது வயது முதியவர் மட்டும் மண்வெட்டி, கோடாலி, கடப்பாரை, கத்தி சகிதம் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

வளர்ந்து கிடந்த முற்புதர்களை அழித்து, மேடு பள்ளங்களை சீர்படுத்தி, வளர்ந்து கிடந்த பாறைகளை உளி சுத்தியல் கொண்டு உடைக்க தொடங்கினார்.


இதை கவனித்த கிராமவாசிகள்... உனக்கு என்ன பைத்தியமா?

நாங்கள் எல்லாம் அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வேறு நல்ல இடம் கேட்கும் போது,  நீ ஒருவன் மட்டும் இங்கே வந்து விட்டாயே.  உன்னால் இந்த பாறையை உடைத்து நிலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பெரியவர் என்னால் முடியும் என்றார்.

உனக்கு புத்தி பிசகி விட்டதா? உனக்கு வயது என்பது. உன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இந்த இடத்தில் ஒரு வீடு கட்டவோ, விவசாயம் செய்யவோ முடியாது.

தெரிந்தும் ஏன் விழலுக்கு இறைத்த நீர் மாதிரி உன் சக்தியை வீணடிக்கிறாய்  என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த பெரியவர்,  அது எனக்கும் தெரியும். இந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை நான் துவக்கி வைக்கிறேன்.

எனக்கு உறுதுணையாக என் மகன் இருப்பான். அவனுக்கு பின்னால் என் பேரன் காலத்தில் இதில் வீடு கட்டவும், விவசாயம் செய்யவும் அருமையான இடம் கிடைத்துவிடும் என்றாராம்.

இந்த பெரியவர் சொன்னது தன்னம்பிக்கையா? தான் என்ற அகந்தையா?  தன்னால் முடியும் நேற்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் தான் சாதிக்கிறார்கள்.


ஒரு விமானி விமானத்தை ஓட்டுகிறார் என்றால் அவர் பயிற்சி பெற்றதால் ஓட்டுகிறார். நீங்கள் பயிற்சி பெற்றால் ஓட்ட முடியாதா?

முடியும்.

முயன்றால் முயற்ச்சி செய், முடியாவிட்டால் பயிற்சி செய் என்பதுதானே வாழ்க்கை தத்துவம்.

அதனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என்னால் முடியும் என்கிறிர்களா!

பலே..!

என்னால் மட்டும் முடியும் என்கிறீர்களா?

பலே...பலே...!

உங்கள் தன்னம்பிக்கையின் பலம் அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம்.


லட்சம்  பேர் கூடிய சபையில் கூட சொல்வேன். நான் எபது அகந்தையின் அடையாளம் அல்ல. நான் என்பது உணர்தலின் வெளிப்பாடு.

நான் என்பது எதிர்மறை எண்ணங்களுக்கு கடிவாளம். நான் என்பது முயற்சியின் முகவரி. அதனால் நான் என்று சொல்லுங்கள்.

அப்படியானால் ஈகோ என்பது எது?

ஒப்பிட்டு பார்க்கும் குணம் எப்போது தலை தூக்குகிறதோ, அப்போது தான் ஈகோ பிறக்கிறது.


உயர்ந்தவன்  தாழ்ந்தவன் என்று யோசிக்க முடிகிறதா? அப்போது தான் ஈகோ பிறக்கிறது.

நான் மெத்த படித்த மேதாவி. பட்டங்கள் பல பெற்றதால் எனக்கு கொம்பு முளைத்து விட்டது. எனக்கு இணையாக யாருமே இல்லை என்று நினைத்தால், படிக்காத நபர்களோடு நான் பழக மாட்டேன் என்று வட்டம் போட்டுக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால், அது ஈகோ அல்லது தலைக்கணம்.

அவர் படித்த முட்டாள்.

நான் பணபலம் பெற்றவன். அவன் ஏழை. என்னோடு சரிசமமாக அவனை ஏற்றுக்    கொள்ள முடியாது என்று நினைத்தால் அது ஈகோ மட்டும் அல்ல, அவர்தான் மாடி வீடு ஏழை.

பணம் என்பதும், பதவி என்பதும், இன்று வரும் நாளை போகும். வரும் போது சொல்லிக்கொண்டு வருவதில்லை. போகும் போது சொல்லிக்கொண்டு போவதும் இல்லை. இதுதான் உஅல்க நியதி.




Today 's Facebook

சத்தியமா இது எல்லாமே பேஸ்புக்கில் சுட்டதுதான் 














குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...