ads

Friday 30 March 2012

first man born in india / முதல் மனிதன் பிறந்த இடம்- இந்தியா



மேலே இருக்கும் புகை படங்கள் என்ன? என்ற கேள்வி நிச்சயம் எழும். இது எல்லாமே மலாய் மொழியில் இருக்கிறது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளி வாசலில் உள்ள கல்வெட்டு.  

இந்த பூமியில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் ஏவாள் என்கிறது பைபிள். இஸ்லாமிய மார்க்கமும் இதை ஒத்து கொள்கிறது.   ஆனாலும் இன்னும் கூடுதலாய் சில தகவல்களை சொல்கிறது.

முதல் மனிதன் பெயர் ஆதாம்.  

அவன் பிறந்த இடம் இப்போதைய இந்தியா.  

அவன் வாழ்ந்த காலம் மொத்தம் ஆயிரம் ஆண்டுகள்.  

அவனுக்கு திருமணம் நடந்தது இந்தியாவில் தான். 

வெள்ளிகிழமையில் மதியம் தொழுகை நேரத்தில் அவனுக்கு திருமணம் நடந்தது.

இந்த பூமியில் 957 ஆண்டுகள் வாழ்ந்தான்.  

43 ஆண்டுகள் சொர்க்கத்தில் இருந்தான்.  சொர்க்கத்தில் அரை மணி நேரம் என்பது பூமியில் இப்போதைய 43 ஆண்டுகளுக்கு சமம். 

இவன் இறை தூதரை சந்தித்தான் என்று அந்த கல்வெட்டு சொல்கிறது.  ஹிந்து மதத்தில் முதல் மனித தோற்றம் பற்றி எந்த தகவலும் இல்லை.  புல்லாய். பூண்டாய், செடியாய், கொடியை, மரமாய்,  பின் புழுவாய் பரிணாம வளர்ச்சி பெற்று,  பின் மனித இனம் தோன்றியது என்கிறது. 

இந்தியா என்பது தெய்வங்கள் தோன்றிய பூமி.   இந்தியா என்பது தெய்வங்கள் வாழ்ந்த பூமி.  இந்தியா என்பது புண்ணிய புருஷர்கள் உதித்த பூமி.  அந்த வகையில் முதல் மனிதன் கூட இந்தியாவில் தான் தோன்றினான் என்பது நமக்கு பெருமையே.  

புகைபடங்கள் தந்து உதவியவர் -  ராஜேந்திரன்,  கேரளா

Thursday 29 March 2012

ராமர் பாலம்/ adam's Bridge

வாழ்ந்தவர்களை பற்றி சொல்வது வரலாறு.  

ராஜராஜசோழன்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் என்பதும், கல்லணை என்பது கரிகால்சோழனின் கைவண்ணம் என்பதும் வரலாறு சொல்வதால் தெரிந்து கொண்டோம்.

அசோகரை பற்றி சொன்னது வரலாறு.  அக்பரை பற்றி சொன்னதும் வரலாறு.  இந்த வரலாறுகள் மட்டும் இல்லாமல் போய் இருந்தால்,  இவர்கள் யாரையுமே நமக்கு தெரிந்து இருக்காது.

ஒரு சமுகத்தை அழிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் வழி.  

அவர்கள் வரலாறை அழிந்து விட்டால்,  அவர்கள் கலாச்சாரத்தை அழித்து விட்டால்,  பண்பாடுகளை இல்லாமல் செய்து விட்டால்,  மெல்ல மெல்ல அந்த சமுகம் அழிந்து விடும். 

இதைதான் எதிரி நாட்டவர்கள் செய்வார்கள்.   புராதன அடியாளங்களை தேடி தேடி அழிப்பார்கள்.  கலாச்சார சின்னங்களை தரைமட்டமாக்குவார்கள். அறிவு சார் கல்வெட்டுக்கள், எழுத்து வடிவங்கள் எதுவும் இல்லாமல் முற்றிலும் இல்லாமல் செய்வார்கள்.

இப்போது இந்த சிந்தனை வர காரணமே இதுதான். 

ராமர் பாலம்.

ஆராய்ந்து பார்ப்பது அறிவியல்.  அறுத்து பார்ப்பது மருத்துவம். பகுத்து பார்ப்பது  இயற்பியல்,  கூட்டி, கழித்து, பெருக்கி பார்ப்பது கணிதம்,  நம்பிக்கையின்   அடிப்படையில் வருவது ஆன்மீகம்.

தத்தா  சொன்னார் அப்பா பின்பற்றினார்.  அப்பா சொன்னார் நாம் பின்பற்றுகிறோம்,   நாம் சொல்வதைத்தான் நம் பிள்ளைகளும், பேர பிள்ளைகளும் செய்யப்போகிறார்கள். 

வழிபாடு மட்டும் அல்ல.  நம் கலாச்சாரங்களை மட்டும் அல்ல, பண்பாடுகளை மட்டும் அல்ல,  நம் வரலாறுகளும் தான். 

ராமரை பற்றி தெரியாதவர்கள்  இருக்க முடியாது.  முழுதும் அறியவில்லை என்றாலும்,  மேலோட்டமாகவது தெரிந்து இருக்கும்.

சீதையை கடத்தி கொண்டு போனான் ராவணன்,

அவளை மீட்க வாணர படைகளின் உதவியோடு ராமன்  கடலில் பாலம் கட்டினான் என்பதும்,  அந்த பாலத்தின் வழியே தான் கடலை கடந்து இலங்கைக்கு சென்றான் என்பதும்,  ராவணனை வென்று சீதையை மீட்டு வந்தான் என்பதும் ராமாயணம் சொல்லும் விபரங்கள்.

இது ஒன்றும் போகிற போக்கில் படித்து விட்டு அப்படியா என்று ஆச்சரிய படும்  சமாச்சாரம் இல்லை.  மறந்து விட்டு போகும் விஷயமும் இல்லை.  கோடிக்கணக்கான ஹிந்துக்களின்  நம்பிக்கை சார்ந்த விஷயம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்த பாலம் என்று நம் புராணகள் சொன்னபோதும்,  இதை பற்றி அறிந்து கொள்ள நாம் ஆர்வம் காட்டவில்லை.

அமெரிக்காவின் நாசா படம் எடுத்து காட்டிய பிறகுதான் நமக்கே தெரியும்.

இது மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது என்கிறார்கள்.

இது சுண்ணாம்பு  பாறையால் உருவானது என்கிறார்கள்.

3500 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாக தோன்றியது என்கிறார்கள்.

மூன்று முதல் முப்பது  மீட்டர் ஆழத்தில் தான் உள்ளது என்கிறார்கள்.

இது மனிதனால் கட்டப்பட்டது இல்லை என்கிறார்கள்.

கடைசியில்  இது ஆதாம் பாலம் என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்கள்.

இது இத்துடன் முடிந்து போயிருக்கும்.  சேதுசமுத்துற திட்டம் துவங்க பட்டதும் சூடுபிடித்தது இந்த விவகாரம்.

கடலை ஆழப்படுத்தி கப்பல் விட போகிறோம்.  அதற்கு இடையூறாக இருக்கும் பாலத்தை அகற்றி விட்டு திட்டம் செயல்படுத்த படும் என்று சொன்னதும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இப்போது இந்த பிரச்சனை கோர்ட்டில் இருக்கிறது.

எப்போதுமே பிரச்சனைகளை தீர்க்க  இரண்டு வழிகள் இருக்கும்.

1 .  அலசி ஆராய்ந்து,  பேசி தீர்வு காண்பது ஒருமுறை.

2 . அதை பற்றி கண்டு கொள்ளாமல்,  எப்படியோ தொலையட்டும்  என்று விட்டு விடுவது இன்னொரு வகை.

இரண்டாவது வழியைத்தான் பின்பற்றுகிறது மத்திய அரசு.

சுப்பிரமணியசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.   நீதிமன்றம் தேசிய பொது சொத்தாக அறிவித்து விடலாமா என்று கேட்டால்,  பதில் சொல்ல வேண்டிய மத்திய அரசு அவகாசம் கேட்டு நாட்களை நகர்த்துகிறது.

மதில் மேல் பூனை அந்த பக்கம் குதிக்குமா, இந்த பக்கம் குதிக்குமா என்பதை விட, பாதுகாப்பாய் குதிக்குமா என்பது தான் மதிய அரசின் எண்ணம்.  அதாவது ஆட்சிக்கு ஆபத்து எதுவும் வந்தும் வந்து விட கூடாது என்பது தான் அவர்கள் சிந்தனை.

ஆதிகாலத்தில் பயன்படுத்தியது என்றால்,  ஒவ்வொரு நாட்டிலும் உடைந்த  பானை துண்டாக இருந்தாலும்  பாதுகாத்து வைக்கிறார்கள்.  ஆனால் ஒரு பாலத்தையே பாதுகாக்க நாம் போராட வேண்டி இருக்கிறது.

எங்கே போய் முட்டிகொள்வது.

எப்படியோ....

மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பது நம் கேள்வி அல்ல.

அது தேசிய சொத்தாக அறிவிக்க பட வேண்டும்.  அது பாதுகாக்க பட வேண்டும்.  பின்னால் அந்த பாலத்திற்கு சென்று வர படகு சேவையை துவக்க வேண்டும்.

காரணம்....

ராமன்...

மண்ணில் உதித்த மகாவிஷ்ணுவின் மனித அவதாரம்.  இன்றும், என்றும் நம்பிக்கை உள்ள இந்துக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.  வணங்கும் கடவுள்.  அவர் கட்டியதாய் சொல்லப்படும் பாலம் எங்களுக்கு முக்கியம்.

நாங்கள் நம்புகிறோம்.....

அம்மா சொன்னால் இவர்தான் அப்பா...
நம்பினோம்...
அதைபோல்  .... ராமர் பாலத்தை ராமர் தான் கட்டினார் நம்புகிறோம்.

கடைசியாக  ஓன்று.


தற்கால நிழவுகளை சொல்வது வரலாறு. இதை எழுதியவர்கள் வரலாற்று ஆசிரியர்கள். 


அக்கால நிழ்வுகளை சொல்வது இதிகாசம் .  இதை எழுதியவர்கள் ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள்.  


வித்தியாசம் இது ஒன்றுதான்.  இரண்டும் நடந்தது.  ராஜராஜசோழனை, நம்மில் யாரும் பார்த்ததும் இல்லை.  ராமபிரானை பார்த்தவர்களும் இல்லை.  எல்லாமே நம்பிக்கை.  நம்பிக்கையை யாரும் நசுக்க வேண்டாம்.  


மனிதன் செய்தால் செயற்கை.  இறைவன் என்பது இயற்கை.  இயற்கை செய்தது இயற்கையாத்தான் இருக்கும். ராமர் பாலமும் அப்படித்தான்.  அறிவியலை தூக்கி கடலில் போடுங்கள்


சிம்மம் -ராசிகளின் ரகசியங்கள் / SIMMAM

ரோஜா இருக்கே ... அது என்ன நிறத்திலே இருந்தாலும் அதுக்கு பெயர் ரோஜாதான்.  அதோட மணம், குணம் எல்லாம் ஒண்ணுதான்.  ஆனால் மனிதர்களை அப்படி சொல்ல முடியுமா?

முடியாது.... ஏன்னா... சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தனித்துவமானவர்கள். 

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.  வீரியமுள்ளவர்கள்.  அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்கள்.  

எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலை கற்றவர்கள்.  எதிரிகளை வீழ்த்தி காலில் விழ வைக்கும் தைரியசாலிகள். 

சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது உங்கள் சித்தாந்தம்.  பெயரோடு புகழையும்.  அந்தஸ்த்தோடு அதிகாரத்தையும் பெற துடிப்பவர்கள்.

மூக்கின் மேல் கோவம்,  தாக்குதல் வார்த்தைகள் என்பதெல்லாம் அவசரகால ஆயுதங்கள். அதை அடிக்கடி பிரயோகிப்பதால் எதிரிகள் எண்ணிக்கை மட்டும் எப்போதும் குறையாது. 

ஆனாலும் யானைக்குதான்  அடிசறுக்கும்.  பூனைக்கு  சறுக்காது  என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள்.  அதனால் சில சமயம் பூனையாகவும் இருப்பிர்கள்.

வைரத்தை வைரத்தால்  அறுக்கணும் என்பது உங்களுக்கு தெரியும். 

உங்கள் வீக்னஸ் என்ன தெரியுமா? முகஸ்துதிக்கு மயங்குறது. நீங்க யாரு இந்திரன் சந்திரன்னு சொல்லிட்டா போதும், பழைய பகையை பரண்மேல் தூக்கி போட்டுட்டு போயே போய்டுவீங்க. 

எப்போதுமே முதலாளி தோரணை இருப்பதால் அடங்கி போவதை அவமானம் என்று நினைப்பவர்கள்.  நம்பர் எண்ணிக்கையில் நம்பிக்கை உள்ளவர்கள்.  நம்பர் ஒன் தான் உங்கள் கனவே. 

தைரியம், சாகசம், பராக்கிரமம், துணிச்சல், அஞ்சாமை, அதிகாரதொனி  என்பதெல்லாம் உங்கள் குட பிறந்த சொத்து. 

வெட்ட வெட்ட துளிக்கும் சூரன் தலை மாதிரி எத்தனை தோல்விகளை சந்தித்தாலும்,  வெற்றி படைகளை தேடிக்கொண்டே இருப்பவர்கள்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி சொன்ன மாதிரி இன்னொரு விதி செய்வீர்கள்.  வருமான வாய்ப்புகளை பெருக்கி,  ஏளனக்காரர்களை பொசுக்கி,  சூரனை வென்ற  சாமி மாதிரி சூளுரைத்து நிர்ப்பிர்கள்.

அன்பானவர்களை அரவணைத்து, பாசமானர்களை நேசித்து வாழ கற்று கொண்டவர்கள்.

கடைசியாக ஓன்று. 

உங்கள் வாழ்க்கை பாதை யாருக்கும் கட்டுபடாத காட்டாற்று வெள்ளம்.  புரிந்த கொள்ள முடியாத புதிரும் நீங்கள்தான்.  

Wednesday 28 March 2012

முன் ஜெம்மம்.

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்குது.  குழந்தை எப்படி இருக்கும்?

அவரை போட்டா அவரை முளைக்கும்.  துவரை போட்டா துவரை முளைக்கும்.  இதுதான் இயற்கை நியதி. 

எதுக்கு இந்த விளக்கம்?

இதில் என்ன சந்தேகம்.  அப்பா அம்மா மாதிரி இருக்கும். 

நீங்க சொல்றது உருவ அமைப்பில். அப்படிதானே..!

ஆமாம்.   

நானும் ஒத்துகிறேன்.  ஒரு குழந்தை அப்பா அம்மா மாதிரியோ ,  தாத்தா, பாட்டி மாதிரியோ இருக்கலாம்.     அப்படியே உரிச்சு வச்ச மாதிரி இருக்கணும்னு கட்டாயம் ஒன்னும் இல்லை. இல்லாமலும் போகலாம்.

சரி கிட்டத்தட்ட உருவ அமைப்பு ஒத்து வருதுன்னு வச்சுக்குவோம்.   இந்த குணாசியம் ஒத்து வருமா?

வந்துதானே ஆகணும்.  எத்தனயோ பேர் சொல்ல கேள்வி படுறோம்.  அப்படியே அப்பன் புத்தி.   இவனோட தாத்தா இப்படிதான்.  இந்த வசனம் எல்லாம் கேட்கலையா..

இங்கதான்  ராசா நம்ம கேள்வியே வருது.   அது எப்படி சாத்தியம்?  மரபியல் பண்புகளை கடத்தும் குரமொசொம்கள்,  அது இதுன்னு கதை சொல்லலாம். 

அது அப்படியே முழுசா ஒத்து போகணும்னு அவசியம் இல்லை.  ஒத்து போவதும் இல்லை. 

எப்படி?

அப்பா படிப்பு வாசனையே இல்லாம இருப்பார்.  உலகஞானம் ஒரு மண்ணும் தெரியாம இருப்பார்.  ஆனா அவருக்கு பிறக்கிற பிள்ளைங்க A to Z எல்ல விஷயத்திலேயும் வெளுத்து வாங்கும்.  எப்படி....?

அதை விடுங்க.... 

எத்தனயோ கலைஞர்கள் . குண்டும்  இல்லாம மருந்தும் இல்லாம வெடி சத்தம் கேட்ட மாதிரி கொடி கட்டி பறக்கிறாங்க.  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இல்லையா.

அரசியல்வாதி பையன் அரசியலில் இருக்கலாம்.  ஆனா அப்படிதான் இருக்கனும்னு  கட்டாயம் ஒன்னும் இல்லை.   இருக்கலாம். பிஸ்னஸ்மேனா  கூட  இருக்கலாம்.

இங்குதான் இந்து மதம் மிக தெளிவாக சொல்கிறது.    நம் எண்ணங்களையும்,  பழக்க வழக்கங்களையும் உயிர் என்று சொல்லபடுகிற ஆன்மா சுமந்து நிற்கிறது.

உடலுக்கு மட்டும் தான் அழிவு.  உயிருக்கு இல்லை.

உயிர்  மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது,  அப்போது அவர்களின் பிறவி வாசனை என்று சொல்லப்படும் அறிவு மட்டும் அவர்களோடு தொடர்ந்து செல்லுமாம்.

அப்படியானால் ... இப்போது அறிவாளிகளாக இருப்பவர்கள்... சென்ற பிறவியிலும் அறிவாளிகளாக இருந்து இருப்பார்கள் என்பது தான் உண்மை.  மாறி இருப்பது நிலை இல்லாத உடல்.  மாறாதிருப்பது அவர்கள் அறிவு,

கன்னி - ராசிகளின் ரகசியங்கள் / RASIKALIN RAGASIYANGAL - KANNI

பொதுவா கன்னி ராசியில் பிறப்பதற்கு புண்ணியம் செய்திருக்கணும். 

ஏன்?

கற்ற கல்வியும், பெற்ற ஞானமும் யாருக்கு முழுமையாக பயன் படுகிறது என்று பார்த்தால், சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கன்னி ராசியே முன்னிலை பெரும்.

உங்கள் ஆற்றலும் அறிவும் போற்றுதலுக்கு உரியது. வெற்று கோழத்தையும்,  வீர வசனத்தையும் நம்பாமல்,  காரியத்தில் கண் வைக்கும் காரியவாதிகள்.

அறிவாளிகள், அறிவுஜீவிகள், திறமை, திட்டமிடல் நிறைந்தவர்கள்.  சுயநலமும் பொது நலமும் சரிக்கு சரி.   படிப்பு என்பது நடிப்பல்ல.  உயிர் துடிப்பு.  கண்டதை தின்றால் குண்டாகலாம். கண்டதை படித்தால்?

பண்டிதனாகலாம்.  நீங்கள் பல்கலை வித்தகர். இல்லை... இல்லை.. பல்கலைகழகம். மனதை ஆராய மருத்துவ கருவி எல்லாம் தேவை இல்லை.  துல்லியமாக எடை போடுவீர்கள். 

எல்லாம் தெரிந்தவர்கள்.  வெறும் பள்ளி படிப்போடு நின்றவராக இருந்தாலும், புள்ளி வைத்து பேச ஆரம்பித்தால் வெல்வது கடினம். 

எந்த முயற்சி இருப்பினும் சொந்த முயற்சி இல்லாவிட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதவை.  அதிமேதாவியான நீங்கள் இதை உணர்ந்ததாலோ என்னவோ சுய முயற்சி என்பது மற்றவர்களை விட அதிகம்.

பழமைகளை விரும்பினாலும், புதுமையானவர்கள். அதனால் கானா பாடலும் பிடிக்கும், காதல் பாடலும் பிடிக்கும்.

உண்மையான அன்பை மற்றவர்களுக்கு கொடுத்து பார், அதைவிட அதிகமான அன்பை அவர்களிடம் இருந்து பெறுவாய் என்பது உங்கள் சித்தாந்தம்.  ஆனாலும் கலகலன்னு பேசுறதும் நீங்கதான். தொட்டால் சிணுங்கி மாதிரி  கவுந்தடிச்சு படுத்துகிறதும் நீங்கதான்.

தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பதில் கறார் பேர்வழிகள். அதனால் மற்றவர்கள் சுயநலவாதிகள் என்று சொல்வதுண்டு.  சொன்னால்  சொல்லிவிட்டு போகட்டுமே.  அதைப்பற்றி நீங்கள் அதிகம் அலட்டி கொள்வது இல்லை.

கட்டான உடல்வாகு இருக்கும்.  கருப்பாக இருந்தாலும் கலையான  தோற்றமும் பெற்றுருப்பிர்கள். வயது முதிர்ந்தாலும் கூட தோற்றத்திற்கும் வயதிற்கும் இடைவெளி  அதிகம். 

என்றும் பதினாறு வரம் பெற்ற மார்கண்டேயன் மாதிரி  இளமை ததும்பும் உடல்வாகு பெற்றவர்கள்.  சில சமயம் வறட்டு பிடிவாதமும் நிறைந்தவர்கள்.

எப்படியோ காலத்தை கழித்து விட்டு,  கண்ணை மோதினால் சரி என்றிராமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்கள்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.  மற்றபடி  அழகை ரசிப்பவர்கள், அழகை ஆராதிப்பவர்கள், உல்லாசத்தை ஒரு கண்ணாகவும், உற்சாகத்தை மறு கண்ணாகவும் நினைப்பவர்கள்.  இதுதான் என் கணிப்பு. 

Tuesday 27 March 2012

உன்னை அறிந்தால்

நீ விரும்பியதை செய்.  

உன் உள்ளுணர்வு சொல்வதை கேள்.

உன்னை நம்பு.  

உன் மனம் கூறுவதை கவனி. 

எந்த எண்ணம் அடிக்கடி எழுந்து உன்னை உந்துகிறதோ அந்த வழியில் நட.  

அமெரிக்க நாட்டில் ஒரு சர்வே செய்தார்கள்.  உங்களுக்கு பிடித்த வேலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு சுமார் 95 % சதவீதம் பேர் இல்லை என்று பதில் அளித்தார்கள்.

ஊருக்கு செல்பவர்கள் ஏதோ கிடைத்த வண்டியில் ஏறிக்கொள்வார்கள். எந்த ஊருக்கு போக வேண்டும் என்கிற தெளிவில்லாமல் என்று வைத்து கொள்ளுங்கள் ,  அது போல ஏதோ சோற்று பாட்டிற்கு  வேலை  என்று,  ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து  எல்லாம் சரிதான் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். நகர்த்துகிறார்கள் பலர்.

வீட்டில் அப்பா, அம்மா, அத்தை, பாட்டி, ஆசிரியர் என்று பலர் கூறும் யோசனையை கேட்டு பலர் வேலையில் இறங்குகிறார்கள், தேர்ந்தெடுக்கிறார்கள். 

இந்த உலகம்  நம் காதுபட   சதா  சொல்லி கொண்டிருக்கிறது.  

வங்கி வேலைக்கு போ.... நிறைய பணம் கிடைக்கும். நல்ல இடத்தில் இருந்த பெண் கொடுப்பார்கள். 

சொந்த தொழில் இறங்கு.  ஒரு நாள் பெரிய பணக்காரனாவாய். 

தாலுக்கா ஆபிஸ் வேலையில் இறங்கு.  ஆயுசு பூராவுக்கும் யாரும் உன்னை அசைக்க முடியாது. 

ஆசிரியர் வேலைக்கு போ.  அதிக கஷ்டமில்லை. இப்படி பல வாசகங்களை கேட்கிறோம். 

நமக்கோ வாலிப வயசு,  அனுபவமோ இல்லை. பெரியவர்களை சார்ந்தே பழகி இருக்கிறோம்.  எனவே அவர்கள் யோசனையை ஏற்று வாழக்கையை அமைத்து கொள்கிறோம். 

பின்  கொஞ்ச  நாளில்..... நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், இங்கே என்ற கேள்வி ஆத்ம சோதனையாக எழுகிறது.  என்ன சாதிக்கிறேன் இதில் என்ற கேள்விக்குறி நம்மை வாட்டுகிறது.

இந்த செக்கு மாட்டு வாழ்க்கை, உப்பு சப்பில்லாத வாழ்க்கை, என் மனம் இதில் இல்லை.  என் திறமைக்கு இங்கு வழி இல்லை என்ற எண்ணம் கோவமாக எழுகிறது.

அக்கவுன்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை இருந்தது. நாடகம் சினிமாவில் மிகவும் வாய்ப்பு இருந்தது.  லாப நஷ்டம் பாதுகாப்பு என்று பார்க்காமல் கலைத்துறையை தேர்ந்தெடுத்தார் பாலசந்தர்.

கம்புட்டர் கம்பெனியில் வேலை.  எனினும் மனத்திலோ எழுதும் உந்துதல். அன்று உந்துதலை பின்பற்றிய சுஜாதா இன்று எழுத்துலகில் ஒரு தனி சிறப்பிடத்தை பெற்றார். 

அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எதிர்ப்பு இல்லை என்று என்னுகிறிர்களா?  லாப நஷ்டங்கள் ஏற்படுவதில்லை என்று கூற முடியுமா.

உள்ளுணர்வால் உந்தப்பட்டு தன் வாழ்நாளில் தன் துறையை தேர்ந்தேடுத்து கொள்பவர்கள், ஆத்ம திருப்தியை முக்கியமாக கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்.

தன்னை நம்புகிறார்கள் தன் காலில் நிற்கிறார்கள். தன்னால் சாதிக்க முடியும் என்ற பெருமையில் வாழ்கிறார்கள்.

தனக்கும், பிறருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன் படுகிறார்கள்.  அவர்கள் சவால்களை கண்டு அஞ்சுவதில்லை.

சவால்களும், சோதனைகளும் தான் மனிதனது முழு திறமையை வெளியே கொண்டு வருகிறது என்பது அவர்களுக்கு தெரியும்.

உலகால் அறியப்படாத ரகசியம் என்ற புத்தகத்தில் இருந்து.  
ஆசிரியர் M .S . UTHAYAMOORTHI 

Monday 26 March 2012

ராசிகளின் ரகசியங்கள் துலாம் / RASIKALAIN RAGASIYANGAL

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவரா...!

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சுதந்திர பிரியர்கள்.  விதிவழி வாழ்க்கை என்றாலும் மதியால் மாற்ற துடிப்பவர்கள்.  

நீதி நேர்மை என்பது உங்கள் கோட்பாடாக இருந்தாலும், சில  சமயம் அதில் இருந்து விலகி செல்வதுண்டு.  பேராசை பெரும் நஷ்டம் என்பதை உணர்ந்தவர்கள்.  சாத்தியமானது எதுவோ .... அது உங்கள் சாய்ஸ்.

பெரிசாய் கற்பனை செய்து சின்னதாய் நடப்பதை விட,  சின்னதாய் கற்பனை செய்து பெரிசாய் நடந்தால் சந்தோசம், இது உங்கள் அடிப்படை குணம்.

அதுமட்டுமா....  கிணற்றில் விழுந்ததை பற்றி கவலை படாதே.  அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி குளித்துவிட்டு வா என்கிற முற்போக்கு சிந்தனையாளர். 

வாழு... வாழ விடு என்பதும் உங்களுக்கு பொருந்தும்.

விதி ஊழ்வினை என்பதில் இருந்து விடுபட நினைப்பவர்.  காலம் வரும் வரை காத்திருப்பது உங்களுக்கு பிடிக்காது.   முன்னேற்றத்திற்கான முதல் அடி எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி,   முயற்ச்சி செய் என்பது உங்கள் மூலதனம். 

ஆடம்பர பிரியர்கள்.  அலங்கார வஸ்துகளில் அதிக நாட்டமுண்டு.  காக்கா மாதிரி கலரா இருந்தாலும்,  துக்கலா தெரியுறதுக்கு என்ன  கலர்ல ஆடை உடுத்தணும் என்பதை அறிந்து வைத்திருப்பவர்.   அதனால் எப்ப பார்த்தாலும் பளிச்.

தர்ம குணமும், தயாள சிந்தனையும் உண்டு.  உதவும் மனப்பான்மை கூடவே இருக்கும். அவனன்றி அணுவும் அசையாது என்று நம்புவதால் வர வேண்டியது வரும், வர வேண்டிய நேரத்தில் வரும்.

யாரையும் வாழ்த்தவில்லை  என்றாலும், வீழ்த்த நினைப்பதில்லை.  அதனால் ஊர் நிறைய உறவு  கூட்டம் இருக்கும்.  பேச்சில் இனிமை, வார்த்தைகளில் லாவகம் இருப்பதால் எதிரிகள் கூட எளிதில் வசப்படுவதுஉண்டு .

வெளிப்படையாய் பேசினாலும் வெகுளி அல்ல.  கண்டிப்பாய் பேசினாலும் முரட்டுத்தனம் இல்லை. 

உற்ற உறவுகளே குற்றவாளி ஆனாலும் சுற்றம் என்று பார்ப்பதில்லை.  குற்றம் குற்றம்தான் என்று வாதிடும் நீதிமான்கள்.  தர்ம தேவதை,  தர்மத்தின் தூதுவன், என்றெல்லாம் போற்றப்படும் சனி பகவான் உச்சம் பெரும் ராசி. 

தர்ம தேவதை  கையில் வைத்திருக்கும் தராசு சின்னம்தான் உங்கள் ராசி அடையாளம்.

எல்லாம் பெரிய கடவுளை நம்புகிறவர். அதனால் வாழ்த்துவது சுலபம், வீழ்த்துவது கடினம். 

செய்த உதவிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜபக்ஷே

இந்தியா செய்த உதவிக்கு எச்சரிக்கை விடுத்த ராஜபக்ஷே

இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்தது குறித்து, பெயரளவில் கூட நன்றி தெரிவிக்காத அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், பயங்கரவாத விளைவுகளைப் பற்றி, எதிர்காலத்தில் கவலைப்பட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
                                                                                                             ----  தினமலர் செய்தி

பாலை அள்ளி  கொடுத்தாலும் பாதகம்தான்னு சொல்லுவாங்க.  இந்த பழமொழி இந்தியாவிற்கு சரியா பொருந்தும்.  இந்தியா பிறந்த நேரமோ என்னவோ தெரியலை.  

அதன் ஜாதகத்தில் நல்லவர்கள் யாரும் நண்பர்களாக இருப்பதில்லை.  நண்பர்களாக இருப்பவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை.  இது தான் இந்தியாவின் ஜாதக விஷேசம்.

பாருங்க பக்கத்து நாட்டை.

சுண்டைக்கா நாடு இலங்கை. இங்கேருந்து இழுத்து முச்சு விட்டா கூட,  இருக்கிற இடம் தெரியாம போய்டும்.ஆனால் அதன் அதிபர் ராஜபக்ஷே, விசுவாமித்திரர் மாதிரி சாபம் விடுறார்.

ஆதிகாலம் தொட்டே அரக்கர்கள் ஆண்ட பூமி என்பதாலோ என்னவோ,  அங்கே ஆட்சியில் இருப்பவர்களுக்கு இரக்க குணம் என்பதே இருப்பதில்லை.

இலங்கையில் நடக்க கூடாத எல்லாம் நடந்தது.  இருந்தும் இந்தியா எதையுமே கண்டு கொள்ளவில்லை.  செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இருந்த இந்தியா,  உள்நாட்டு உணவர்வுகளை கூட புரிந்து கொள்ளவில்லை.

காரணம் நட்பு நாடு.

ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இனிமேல் மவுனமாக இருக்க முடியாது என்ற நிலை வந்த போது,  ஆதரிக்கும் முடிவை கையில் எடுத்தது.

ஆனாலும் பழைய  பாசம் விட்டு போகுமா. உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவர் வாக்கை மெய்பிக்கும் விதமாக,  இலங்கைக்கு பாதகம் இல்லமால் ஒரு திருத்தத்தை கொண்டு வந்து தீர்மானம் நிறைவேறியது. பின்னணியில் இந்தியா.

இருந்தும் ராஜபக்ஷே நன்றியை மறந்து சாபம் விடுகிறார்.  அவர் விடும் சாபத்தை பார்த்தால்,  எதிர்காலத்தில் அவரே தீவிரவாதிகளை உருவாக்கி ஊடுருவ விடுவார் போலிருக்கிறது.

இலங்கைக்காக கச்சதீவை விட்டு கொடுத்து இந்தியா.   தாராள உதவி, நீண்டகால கடன்கள்,  உள்கட்டமைப்பு வசதிகளுக்காக  தொழில் நுட்பம், என்று இந்தியா செய்தது என்னவோ,  இலங்கை இந்தியாவின் இன்னொரு மாநிலம் மாதிரியே இருந்தது.

உண்மையில் விடுதலைபுலிகள் எதிர்ப்பு நிலையை இந்தியா எடுத்த பிறகு இலங்கை பெற்ற ஆதாயம் அதிகம்.   ஆனால் அந்த நன்றி இருக்கிறதா?

பங்காளாதேஷ்.

இந்த நாடு உலக வரை படத்தில் இடம்பெற இந்தியாவே காரணம்.   அவ்வப்போது எல்லை பிரச்சனை வந்து வந்து போகும்.  உண்மையில் இந்தியாவிற்கு இது நட்பு நாடா என்பதே சந்தேகம் வரும்.

இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ இந்த நாடு துணை போகிறது என்பதை விட,  பல சமயம் கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறது என்பது உண்மை.

போலியான பொருள்களை உற்பத்தி செய்து,  கள்ள சந்தையில் விற்பனை செய்யும் சீனா .... மேடு இன் இந்தியா என்று சீல் வைத்து,  இந்தியாவிற்குள் அனுப்பி வைக்கிறது.

அதை பங்களாதேஷ்  கண்டு  கொள்வது இல்லை.  அதன் எல்லை வழியாகத்தான் இந்தியாவிற்குள் போலி பொருள்கள் கொண்டு வரப்படுகிறது.

இது இந்தியாவின் நட்பு நாடு. 

உலக அளவில் இந்திய பொருள்கள் தரமற்றவை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்ச்சிக்கும் சீனா நட்பு நாடா எதிரியா என்பதே தெரியவில்லை.

புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கும் நாடு.   1962 இல் இந்தியா மீது போர் தொடுத்த சீனா,

இப்போதைக்கு அமைதியாக இருந்தாலும்,  இந்தியா எங்கள் நட்பு நாடு என்று சொன்னாலும்,  இந்தியா மீது இன்னும் ஒரு யுத்தத்தை திணிக்க காத்திருக்கிறது என்பது தான் உண்மை.

காஷ்மீரில் அத்து மீறல், காஷ்மீர்வாசிகள் சீனாவிற்கு சென்றால் வெள்ளை காகிதத்தில் தனி விசா, நாகாலாந்து, அருணாச்சலபிரதேசம் என்று எல்லையோர வட மாநிலங்களை சொந்தம் கொண்டாடுவது என்பது எல்லாம் சீனாவின்  வாடிக்கையாகி   விட்டது.

இருந்தும் இந்தியா அமைதி காக்கிறது.

பாகிஸ்தான் .

சொல்வவே தேவை இல்லை.  ஆனாலும் நட்பு கரம் நீட்டியபடியே இந்தியா இருக்கிறது.  எப்போது புரிந்து கொள்வார்கள் இந்தியாவை.












Sunday 25 March 2012

ராசிகளின் ரகசியங்கள் - விருச்சிகம் RASIKALIN RAGASIYANGAL

நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்தவரா...?  அப்படியானால் நீங்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

பார்பதற்கு பதவுசு தங்கம் மாதிரி தெரிந்தாலும், பழகியவர்களுக்குத்தான் தெரியும் உங்களுக்கு உள்ளே ஒரு எரிமலையே இருக்குன்னு.

சரளமா பேசுவீங்க, சந்தோஷமா  பழகுவீங்க, எதிர் தரப்பில் இருந்து எக்கு தப்பா ஒரு வார்த்தை ஒரு வார்த்தை வந்தால், அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்ச்சுபுடுவீங்க.

ஒன்னும் கேட்டவர் இல்லை. வலிய வம்புக்கு போறது இல்லை. வந்துட்டா விடுறதும் இல்லை. போராட்டகுணம்.

பார்பதற்கு பழமைவாதி மாதிரி தெரியும்.  ஆனால் நாகரிக மோகம் உள்ளவர்தான்.  ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டு என்கிறமாதிரி,  தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்பது ஒற்றை வரி ரூல்.

பொதுவா அறிவாளி.  நிறைவா  சொல்லறதுன்னா புத்திசாலி. பாம்பின் கால் பாம்பறியும் என்பது மாதிரி,  எதிரில் இருப்பவரின் முக பாவத்தை கொண்டே வந்தவரின் நோக்கத்தை அறிந்து கொள்வதில் கெட்டிக்காரர்.

குணத்திலே தேள்.  ஆனால் மனசளவில் பால்.  ஆனால் பிடிவாத குணம் தான் சாஸ்த்தி.  பணத்தை நேசிப்பிங்க.  குணத்தையும் நேசிப்பிங்க.  கலகலப்பாக பேசினாலும் சில சமயம் கலகக்காரராக கட்சி அளிப்பதுண்டு.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாதுன்னு சொல்லற மாதிரி,  பணம் பெருத்தவர்,  பலம் பொருந்தியவர்  என்றெல்லாம் அஞ்சி நடுங்கும் பழக்கமெல்லாம் இல்லை.

மோதினால் மோதி பார்ப்பதும்,  கடைசி வரை களத்தில் நிற்பதும் உங்கள் சிறப்பு. 

விலை போவதில்லை.  என்ன விலை கொடுத்தாவது வேண்டியதை பெற முயற்சிப்பிர்கள்.   சந்தோசத்தை தேடி தேடி அனுபவித்தாலும்,  சந்தேகம் என்பது கூடவே இருக்கும். 

சட்டன்று யாரையும் நம்புவதில்லை.  நம்பி விட்டால் சந்தேகமே படுபவதில்லை,

உயர்வதற்கான உபாயம் தேடி வரும்.   எப்போதுமே வி ஐ பி   ஆசை விட்டு போவதில்லை.  நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி.  அதனால்தானோ என்னவோ வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

அதை நழுவ விடாமல் பிடித்துகொண்டு உயர்வு பாதையில் உற்சாகமாக நடை போடுவீர்கள்.

சீர்திருத்தவாதிகள்,  சிந்தனையாளர்கள், நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பதால் சங்கடங்களை கூட,  சடுதியில் மறந்துடுவீங்க.

நீங்கள் நல்லவர்தான்.  ஆனால் எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதில்லை. நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?
  

மலேசியாவில் நடந்த இலங்கை எதிர்ப்பு போராட்டம் விடியோ


Saturday 24 March 2012

ஆலய வழிபாட்டு முறைகள்

ஒரு உண்மையை சொல்லப்போனால் நம்மில் பலர்  பக்திமானா இருக்கலாம்.  விழுந்து விழுந்து சாமி கும்பிடலாம்.  ஆனாலும்  அந்த பக்தி பாமரத்தனமான வழிபாடா இருக்கும்..

அது என்னங்க பாமரத்தனமான வழிபாடு?

அதுவா..   ஆகம விதி,  சாஸ்த்திர நியதி எதையும் கண்டுக்கிறது இல்லை. மனசுல என்ன தோணுதோ அதை செய்திட்டு வர்றது.  

அது ஒன்னும் தப்பு இல்லையே... கண்ணப்பநாயனார்  பரம்பரைன்னு வச்சுக்குவோம்.

கடவுள்  ஒன்னும் கோவிச்சுக்க மாட்டார்.  இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்கே.

ஏனோதானோன்னு பக்தி செலுத்துற ஏகாம்பரம் கோவிலுக்கு போறார்ன்னு வச்சுக்குவோம்.   தப்பு தப்பா அவர் செய்யுறதை பார்த்து கடவுள் வாய் திறந்து ஒன்னும் சொல்ல போறது இல்லை.

ஆனா.......உள்ள நுழையும்போதே கடவுள் பார்ப்பார்.  அடடா... ஏகாம்பரம் வர்றான்னு ரெண்டு கண்ணையும்  மூடிப்பார்.   அப்படியெல்லாம் நடக்காமல் இருக்கணும்னா சரியா...முறையா... வழிபாடு செய்றதுதான் சரி.

அது எப்படி சரியா...முறையா... வழிபாடு செய்றது?

இதோ டிப்ஸ்..

சிவன் கோவிலுக்கு போறிங்களா.... முதலில் சிவனை வணங்கிட்டு அப்பறம் தான் உமாதேவியை வணங்கனும்.

பெருமாள் கோவிலுக்கு போறிங்களா....முதலில் தாயாரை வணக்கிட்டு அப்பறம் தான் பெருமாளை வணங்கனும்.

நவகிரக வழிப்பாடு செய்யணுமா... அந்த கோவிலில் பிரதான தெய்வங்களை எல்லாம் வணங்கிட்டு, பிரகாரம் சுத்தி முடிச்ச பிறகுதான் வணங்கனும்.

ஆஞ்சநேயர் வழிபாடு   செய்றிங்களா..  அவரை வணக்கிட்டு ஒரு நிமிடமாவது  கோவிலில் அமர்ந்து அப்பறம்தான் வீட்டுக்கு கிளம்பனும்.

சண்டிகேசுவர் சன்னதியில் கை தட்டி சாமி கும்பிடுறது,  சுண்டுறது இதெல்லாம் கூடாது.   அவர் மவுனமா சிவதரிசனம் செய்றார். அவரை தொல்லை பண்ண கூடாது.

விநாயகர் கோவிலுக்கு போனால் ஆலய பிரகாரம் ஒரு முறை சுற்ற வேண்டும்.

சிவன் கோவிலுக்கு போனால்... மூன்று முறை ஆலய பிரகாரம் பிரகாரம் சுற்ற வேண்டும்.

பெருமாள் கோவிலுக்கு போனால் ... நான்கு முறை ஆலய பிரகாரம் சுற்ற வேண்டும்.

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.

அம்மம் கோவிலுக்கு வெள்ளிகிழமை போறது நல்லது.   துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் தரிசிக்க வேண்டும்.

காளியம்மனை அஷ்டமி திதியில் வணங்குதல் நல்லது.

ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு உள்ளே நுழையும் போதே  காசு போட்டு விட வேண்டும்.  வெளியே வரும் போது போட்டால்,  தரிசன பலனை தாரை வார்த்து போல ஆகிவிடும்.

சாமி பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டாம். அவர்தான் சகல வசதியோடும் இருக்காரே.  நம் பேர் நட்ச்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

 

ராசிகளின் ரகசியங்கள் / RASIKALIN RAGASIYANGAL - DHANUSU

நீங்க தனுசு ராசியா?  

குரு பகவானின்  ஆதிக்கத்தில் பிறந்தவர்  என்று அர்த்தம். ஆனாலும் நீங்க ஒரு தினிசு.  அதாவது பிடிவாத குணம் கொண்டவர்கள்.  வெள்ளை காக்காய் மல்லாக்க பறக்குதுன்னா ஆமாம் காலு கூட மேலாக்க இருக்குன்னு சொல்லணும்.  

இல்லைன்னா ... 

கோவம்தான்.  எளிதில் உணர்ச்சி வசப்படுவீங்க.  உங்களுக்குள்ள... ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு கரடி, ஒரு எரிமலை தூங்குமாம்.  அது எப்போ வெடிக்கும், எப்போ கடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

ஆனாலும் தப்பான ஆட்டத்தை ஆட எப்போதுமே உங்களுக்கு பிடிக்காது.  குறி வச்சா பொறி வச்ச மாதிரிதான்.  வச்ச குறி தப்பாது.

நீங்கள் கம்பீரமானவர்.  அடங்கி போவதும், அடி பணிவதும் கொஞ்சம் சிரமம்.  உரத்த குரலில் பேசுவதும், மற்றவரை ஊடுருவி பார்ப்பதும்  உங்கள் மேனரிசம்.

அதுவும் இருட்டை ஒளி  ஊடுருவி பார்ப்பது போல், மற்றவர் மனதை பார்ப்பவர்.   

இன்னும் விளக்கமா சொல்லனும்னா... தண்ணிக்குள்ளேயே தடம் பார்க்குற ஆசாமி நீங்க தான் சாமியோவ்.

முன் கோவம், பின் சாந்தம் கொண்டவர்கள்.  சரவெடி மாதிரி பேசிட்டு சாவகாசமா உட்கார்ந்து யோசிப்பிங்க.  

எப்படி?

கொஞ்சம் ஒவராத்தான் பேசிபுட்டோமோ......

அது சரி... 

இருப்பினும் அன்பும் ஆன்மீகமும் சம பங்கு நிறைந்த்தவர்கள்.  உங்கள் வாழ்க்கை பாதையை எல்லாம் வல்ல இறைவனே வகுப்பதாய் நம்புகிறவர்.

மனிதர்களை நேசிப்பது மாதிரி பகவானிடம் யாசிப்பவர்கள். விதியை நம்புகிற உங்களுக்கு எதிரான சதி வலைகள் எடுபடுவதில்லை. 

வாழ்க்கையில் எது வந்தாலும் இவ்வளவுதான் நம்ம குடுப்பினை என்றில்லாமல்  போராடுவீங்க.  ஆசைப்பட்ட வாழ்க்கையை ஓசைப்படாமல் அனுபவிக்க என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள்.

வண்ணங்கள் இல்லாமல் வானவில் கூட தோன்றலாம்.  ஆனால் உங்கள் எண்ணங்கள் இருக்கிறதே ... அடடா.... பிரமாதம்  போங்க.

உங்கள் வாழ்க்கை பாதையில் எப்போதும் புதுமைகள் பூத்திருக்கும்.  சவால்கள் காத்திருக்கும்.  அதை சந்தித்து, பின் சிந்தித்து சரித்திரமாக வாழும் உங்களுக்கு வாழ்க்கை என்பது நடிப்பல்ல. உயிர் துடிப்பு.

நீங்கள் நல்லவர்தான்.  நல்லவனாய் மட்டும் இருக்க கூடாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.  இளகிய மனதும் உண்டு.

உங்களை பற்றி நான் ஒரே வரியில் சொல்லுவேன்.  பாம்பை முட்டியில் கொல்லனும்.  புலியை குட்டியில் கொல்லனும் என்பதை புரிந்து வைத்திருப்பவர்.

ஆனாலும் ஒரு பழமொழி இருக்கு தெரியுமா....எல்லாருக்கும் பலன் சொல்லுமாம் பல்லி.  கழனி பானையில் விழுந்துச்சாம் துள்ளி.  அந்த கதையா  உங்ககிட்டே காரியம் ஆகணும்ன்னா காக்கா பிடிச்சா போதும் கைமேல் பலன்.  

ஈசியா எமாந்துடுவீங்க.  உங்களிடம் இருக்கும்  குறையே  இதுதான். 

நான் ஒன்னு சொல்லவா...  தனுசு ராசியில் பொண்ணு பிறக்க கூடாது, மீன ராசியில் ஆண் பிறக்க கூடாது. 

எங்க?

ரெண்டுமே குருவின் வீடுதான்.  

ஆனால் தனுசு என்பது கம்பீரம்.  

மீனம் என்பது அமைதி.

தனுசு என்பது பிடிவாதம்.

மீனம் என்பது அனுசரிப்பு.

தனுசு என்பது முரட்டுத்தனம்.

மீனம் என்பது சாந்த குணம்.

தனுசு என்பது ஆண்மை.

மீனம் என்பது பெண்மை.

தனுசு ராசியில் பிறக்கும் பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் குணம் இருக்காது.  ஆனால் மீன ராசி பெண் குடும்ப குத்து விளக்கு மாதிரி ரொம்ப அமைதி.   அதுனால் தான் அப்படி சொன்னேன்.     




மருத்துவ குறிப்புகள்

என் மெயில் முகவரிக்கு  Aatika Ashreen சில மருத்துவ குறிப்புகளை அனுப்பி இருக்கிறார்.  அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.  உங்களுக்கும் எழுதும் ஆற்றல் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கலாம். கவிதை, கட்டுரை, ஆன்மீகம், தன்னம்பிக்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  என் பிளாக்கில் பிரசுரம் செய்கிறேன்.  

நன்றி.

ஆடாதொடை - இருமல் மற்றும் சளி சம்பந்த பட்ட நோய்களுக்கு உண்டான மருந்தில் சேர்க்கப்படும் ஒரு மூலிகை
நுரையீரல் ரத்தவாந்தி, மூச்சுத்திணறல்,இரத்தம் கலந்த சளி,சன்னி, இருமல், வாந்தி, வயிற்றுவலி, ஆஸ்துமா, நிமோனியா இன்னும் பலவற்றுக்கு அருமருந்து ஆடாதொடா
                                                                                                                                   Aatika Ashreen 




நார்ச்சத்து இருவகைப்படும். அவை,

நீரில் கரையும் நார்கள் (Soluble fiber)

நீரில் கரையாத நார்கள் (Insoluble fiber)

நீரில் கரையும் நார்கள்

இவை நீரில் கரையக்கூடியவை. இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைத்து இரத்தத்தின் பசைத் தன்மை அதாவது கடினத் தன்மையைத் தடுக்கிறது. இதனால் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

நீரில் கரையாத நார்கள்

செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்களின் செரிமானத்தைத் தூண்டி, உணவைச் செரிப்பித்து மலத்தை அதிகளவு வெளியேற்ற உதவுகிறது.

இரைப்பை, சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போ-ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தை நார்கள் குறைக்கின்றன. இதனால் உடலில் அதிகளவு சர்க்கரை, கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது.

நார்கள் குடலினுள் அதிகளவு நீரை உட்கிரகிக்கச் செய்கின்றன. இதனால் வயிறு நிறைந்ததுபோல் உணர்வு ஏற்படும். இத்தன்மை உண்ணும் உணவின் அளவைக் குறைக்கிறது. இதுவே உடல் எடை குறையவும் காரணமாகிறது.

மேலும் நார்கள் பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை குடல் உட்கிரகிக்கச் செய்யவிடாமல் தடுத்து வெளியேற்றுகிறது. இதனால் குடலில் புண், அஜீரணக் கோளாறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நார்கள் இரத்தத்துடன் கலந்து அடர்த்தி குறைந்த லிப்போ புரதத்துடன் இணைந்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு

நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் அதிகம் உட்கொள்பவர்களுக்கு GIT (Gastro Intestinal Tract) உணவுக் குழலில் புற்றுநோய் உண்டாவததைத் தடுப்பதாக அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நார்கள் குடலின் உள் பகுதியில் உணவை சீரணித்து மீதப் பொருளை மலமாக்கி வேகமாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை மலத்துடன் சேர்த்து வெளியேற்றுவதால் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேவையற்ற நச்சுப் பொருள்களை நீக்க

நார்கள் அதிகளவு நீரை உட்கிரகிப்பதால் உண்ணும் உணவில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.

நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்தில் மாற்றம் அடைவதற்கு நார்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

மாவுப் பொருள் சர்க்கரைப் பொருளாக மாற்றப்பட்டு, அது புரதம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலம், கிளிசரோல் ஆக மாற்றமடைகிறது. இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற நார்கள் மிகவும் உதவுகின்றன.

ஒரு நாளைக்கு நார்ச்சத்து 28-35 கிராம் அளவு தேவைப்படுகிறது.

இவை கீரைகள், பசுமையான காய்கறிகள், பழங்கள் இவற்றில் அதிகமுள்ளது. அதுபோல் அதிகம் தீட்டப்படாத அரிசி, கோதுமை, பார்லியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன.

எனவே நலமான வாழ்வுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்
                                                      Aatika Ashreen 



ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பை கண்டுபிடிக்கலாம்

சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை.

தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள எண்டோ திலியல் செல் (உள் அடுக்கு படலம்) மாரடைப்பு நோயாளிகளுக்கு வழக் கத்தை விட மிகப் பெரிய மாறுபட்ட வடிவிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். அதை வைத்து மாரடைப்பு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய முடியும்.

இதற்கான சோதனையை மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்ட 50 பேரிடம் நடத்திய சோதனையில் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இந்த சோதனை இன்னும் 2 ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
                                                                                                                                     Aatika Ashreen 




பிறப்பு தழும்புகளை நீக்கும் தக்காளி சாறு!
ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்க்கு சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. இது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினசரி 10 நிமிடங்கள் தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். தழும்பு படிப்படியாக மறையும். சருமம் மென்மையாகும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்

ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் கட்டி தழும்பு உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் இறுக்கமாக உள்ள தசைகள் இளகி மென்மையாகும். ஐஸ் கியூப் கொண்டு தழும்பு உள்ள இடத்தில் மென்மையாக 5 நிமிடங்கள் தேய்க்கலாம் இதனால் தழும்புகள் நிறம் மாறும்.

எலுமிச்சை, தாக்காளி சாறு

எலுமிச்சை சிறந்த இயற்கை பிளீச்சாக செயல்படுகிறது. எலுமிச்சை சாற்றினை தழும்பு உள்ள பகுதியில் நன்கு தேய்த்து ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ தழும்பு நிறம் மாறும்.

தக்காளிச் சாறு எடுத்து அதனை தழும்பு உள்ள பகுதியில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்துவர பலன் தெரியும். தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் தழும்பு உள்ள பகுதியில் வினைபுரிந்து தழும்புகளை மறையச் செய்கிறது.

ரசாயன கலப்பு உள்ள விலை அதிகமான பொருட்களை உபயோகித்து தழும்புகளை மாற்ற முயற்சி செய்வதை விட இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக தழும்புகளை குணப்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
                                                                                                                                                    Aatika Ashreen 
செம்பருத்திப் பூக்களும் (காம்பும் நடுவிலுள்ள மகரந்தமும் நீக்கி) ஏலக்காயும் போட்டுக் கொதிக்கவைத்தநீரில் நாட்டுச் சர்க்கரையோ வெல்லமோ சேர்த்துக்கொண்டால் செம்பருத்தி டீ சுவையாக இருக்கும் உடம்புக்கும் நல்லது. ஒரு டம்ளருக்கு மூன்று பூவும் ஒரு ஏலக்காயும் போட்டால் நல்லது.
                                                                                                                Subash Krishnasamy 

 



குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...