ads

Friday 26 December 2014

ஓசோ

 மரக் காது  - சொல்ல மறக்காது.
நாசாவிலிருந்து ஒரு குழு ஆய்வுக்காக  அமோசான் காடுகளுக்குள் சென்றதாம். அமோசான் ஆற்றுப் படுகைகளில் வாழும் காட்டுவாசிக் கிராம மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி, செல் போன் போன்றவையெல்லாம் அதிசமயாக இருக்கிறது. வானொலியில் பாட்டுக் கேட்டு திடுக்கிட்டுப்போனார்களாம்.  ஏனென்றால் இது போன்ற அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகளைப்பற்றி அவர்கள் அறிந்திருக்க வில்லை.  

அமோசான் மக்களின் தொலைத் தொடர்பைப் பார்த்து, நாசாக் குழுவினர் ஆச்சரியப்பட்டுப்போயினராம்.

அதாவது அவர்கள் வாழும் பகுதியில் ஒரு மரம் இருக்கிறதாம். தொலைவில் இருக்கும் யாருக்காவது தகவல் அனுப்ப வேண்டுமானால் அந்த மரத்தினருகில் சென்று அந்த மரத்திடம் சொல்ல வேண்டியச் செய்தியைச் சொல்கிறார்களாம்.  உடனே அத்தகவல் சேர வேண்டியவர்களை சென்றடைந்து விடுகிறதாம்..

உதாரணத்திற்கு ஒரு கிராமவாசி அடுத்த ஊருக்கு தன் வீட்டிற்கான பொருட்கள் வாங்கப் போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் மனைவி அவனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்திருந்தால், கணவன் போன பின் சட்டென ஞாபகம் வந்து விட்டால்  ,நேரே அந்த மரத்திடம் சென்று, என்னங்க.. வரும்போது மறக்காம மஞ்சத் தூள் வாங்கிட்டு வந்திடுங்க.. சொல்ல மறந்திட்டேன்னு சொல்வாளாம்.. அவனுக்கு அந்தச் செய்தி உடனே சென்று சேர்ந்து விடுமாம்.  

இதை ஆய்வுக்குழு அங்கேயே நான்கு நாட்கள் இருந்து சோதித்துப்பார்த்ததாம். கிராமவாசிகள் சொன்னது அந்த நபர்களிடம் சென்று சேர்ந்து    செய்தியை தெரிந்து கொண்ட நபர்கள் சரியாக சொன்னபடி நடந்து கொண்டதை அறிய முடிந்ததாம்.  

ஆய்வுக் குழுவினர் காட்டுவாசிகளிடம் பேசிப் பார்த்தனராம். ஆனால் ஏன் இந்த மரத்துக்கு இப்படி சக்தி? எப்படி அது அடுத்தவரின் மனதில் தகவல் சொல்கிறது என்பது போன்ற விசயங்களை அவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லையாம். அது அப்படி நிகழ்கிறது  அவ்வளவுதான்.

அவர்களுடைய முன்னோர்கள் மரத்தின் மூலம் பேசிக்கொண்டார்கள். இவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எளிய முறையாக ,   சௌகரியமாக இருக்கிறது. எப்படி ஆரம்பத்தில் அந்த மரத்தின் சக்தியை யார் கண்டறிந்தார்கள் என்ற விவரமெல்லாம் தெரியாது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அது நடந்து வருகிறது.  அந்த மரத்தின் கிளைகளை பல இடங்களில் நட்டு வைத்து, அந்த மர இனம் அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள். 

சரி ஏன் நாசா விஞ்ஞானிகள் அந்த கிராமத்திற்குப் போனார்கள்?

விண்வெளியில் செல்லும்போது பல சமயங்களில் தொலைத் தொடர்பு கருவிகள் பழுதான போது , அந்த விண்வெளி ஓடத்துடன் தொடர்பு கொள்வது சாத்தியமில்லாமலே போகிறது. 

விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால் என்ன செய்வது?  ஏதாவது ஒரு வழியில் பூமியில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டே ஆக வேண்டும்.. இதற்காக கருவிகளைக் கண்டுபிடிக்க,  புதுவிதமாய்  டெலிபதி, தொலை உணர்தல் போன்ற ஆராய்ச்சிகளில் அமெரிக்க , ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனராம்.  இந்த கிராமத்தைப் பற்றி கேள்விப் பட்டவுடன்  நாசா விஞ்ஞானிகள் அங்கு சென்றிருக்கிறார்கள்.

மாமன்னன் அசோகன் புத்த துறவியாய் மாறிய பிறகு , தன் மகன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புகிறார்.. 
  
‘தந்தையே நான் இலங்கைக்கு என்ன பரிசு கொண்டு போகட்டும்’ என்கிறான் மகேந்திரன்.

“உலகிலேயே சிறந்த பரிசு போதிமரம்தான். புத்தர் பல காலம் அதனடியில் கழித்திருக்கிறார். தியானம் செய்திருக்கிறார். அதனடியில் படுத்துறங்கினார். மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். அவருடைய அதிர்வுகளை அந்த மரம் ஈர்த்துக் கொண்டிருக்ககிறது.  எனவே போதிமரத்தின் கிளை ஒன்றைக் கொண்டு போ’ என்கிறார் அசோகர். 

ஈழ நாடே அந்த கிளையின் அதிர்வால் ஈர்க்கப்பட்டது. புத்த மதத்தை பின்பற்றியது.   பிற்காலத்தில் இலங்கையில் வளர்ந்த அந்த மரத்தின் கிளை ஒன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.  

      ஓஷோ - வின் உரையிலிருந்து

இறைவா உனக்கு நன்றி



வீட்டை விட்டு வெளியில் ஒருவாரம் வேலை விசயமாகத் தங்கியிருந்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

 எப்போதடா மனைவி பிள்ளைகளைப் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வத்துடன் இருக்கும். வீட்டில் வந்து நுழையும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் மனம் இருக்கும்.எல்லோருக்குமே அப்படித்தான்.

காதலியைச் சந்திக்கச் செல்லும் போது  காதலனின் மனம் அப்படித்தான் மகிழ்ச்சியில் துள்ளும்.

ஆனால் நமக்கு அன்பானவர், மிகவும் இனிமையானவர் ஒருவர் இருக்கிறார்.. அவரைப் பார்க்கும் போது மட்டும் உள்ளுக்குள் அழுது வடிந்து கொண்டு , நெஞ்சில் கவலையைச் சுமந்து கொண்டு செல்கிறோமோ ஏன்? 

இறைவனைத் தான் சொல்கிறேன். கோயிலுக்குப் போகும் போது நாம் கொண்டுபோவதைத்தான்  சொல்கிறேன். 

சிலருக்கு ஒரு குணம் உண்டு.. எப்போது கஷ்டம் வருகிறதோ அப்போதுதான் கோயிலுக்குச் செல்வார்கள்..  போய் ‘ஏப்பா எனக்கு மட்டும் இப்படி கஷ்டத்தைத் தந்து கொண்டிருக்கிறாய்’ என்று குற்றம் சாட்டுவார்கள்.. 

சிலர் கவலைகளை மூட்டையாய் கொண்டு வந்து கடவுளின் காலடியில் இறக்கி வைத்துவிடுவார்கள். அப்படிக் கொட்டப்படும் கவலைகளுக்கு மட்டும் உருவம் இருந்தால் , கடவுள் அக்கவலை மூட்டைகளுக்குள் புதைந்து போய் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பார். 

கடவுளிடம் போய் கவலையைச் சொல்லாமல் பின் யாரிடம் சொல்வது? உங்களிடமா ?  என்றக்  கேள்வி உங்களுக்கு எழும்.  

யாருக்குக் கவலை இல்லை? 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் இன்பமாய் இருந்து விடுவதில்லை. 

வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதும் துன்பமாயும் இருந்துவிடுவதில்லை. அவற்றின் அளவு வேண்டுமானால் கொஞ்சம் வித்தியாசப் படலாம்.

ஒரு மிதிவண்டியை இறக்கத்தில் ஓட்டும் போது நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதையே சமதளத்தில் ஓட்டினாலும் அதிக வருத்தம் இருப்பதில்லை.  ஆனால் உயரமான மேட்டில் ஏறும் போது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் அதற்காக பயணிக்காமல் நாம் ஒரு போதும் திரும்புவதில்லை. 

 சிரமப்பட்டாலும் நம் முயற்சியை , சக்தியைத் திரட்டி போகவேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுகிறோம். எனவே முயன்றால்  கவலைகளை நாம் விரட்டிவிடலாம். 

  கடவுள் அத்தகைய ஆற்றலை மனிதனுக்குத் தந்திருக்கிறார். மனிதனால் தன்னை விட வலுவான மிருகங்களை அடக்கி ஆளமுடிகிறது. பறவைகள் போல் பறக்க முடிகிறது. மீன் போல் கடலில் அலைய முடிகிறது. பூமியில் மனிதனால் முயன்றால் முடியாததொன்றும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்திருக்கிறார். 

ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களைப் பார்த்துக்கூறினார். 

‘வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை அறுவடை செய்வதும் இல்லை. ஆனாலும் அவை மகிழ்வோடு பறக்கின்றன’ என்றார். 

நாளை என்ன நடக்குமென்று தெரியாவிட்டாலும், நாளைக்கு வேண்டிய உணவை சேமித்து வைக்க வேண்டிய கவலையின்றி அவை சந்தோஷமாக அக்கணத்தில் வாழ்கின்றன. நாளைக்கு மட்டுமல்ல பல மாதங்களுக்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேமிக்கும் ஆற்றல் மிக்க மனிதனோ எப்போதும் கவலைகளுடனே வாழ்கிறான். 

 எப்போதும் மகிழ்ச்சியோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாய் மாறிவிடும். 

உங்கள¢ நண்பரை பார்க்கச் செல்லும் போது எப்போது நீங்கள் அழுது புலம்பிக்  கொண்டிருந்தால்..  ஒரு நாள் உங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொள்வார். 

உங்கள் உறவினர் வீட்டிற்கு போகிறீர்கள் போகும் போதெல்லாம் கவலைகளைச் சொல்லிச் சொல்லி ஒப்பாரி வைத்தால், தூரத்தில் உங்களைப் பார்க்கும் போதே வீட்டைப் பூட்டிவிட்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்துக் கொள்வார்கள். 

அழுது வடியும் குழந்தையை விட சிரிக்கின்ற குழந்தையை தூக்கத்தான் மனம் ஆசைப்படுகிறது. 

சோகமான முகத்தை விட சந்தோஷமான முகமே நமக்குப் பிடிக்கிறது. 

 கோயிலுக்குச் செல்லும் போது இறைவனைப் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் செல்லுங்கள். அங்கு நிலவுகின்ற அதிர்வுகள்.. நற் சக்திகள் மகிழ்ச்சி நிறைந்த உங்களுக்குள் ஊடுருவி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி வைத்துவிடும். உங்கள் கவலைகள் தானாகவே மறைந்து விடும். 

செல்லும் போதெல்லாம் இறைவனை மகிழ்வுடன் வழிபாடு செய்யுங்கள். கவலைகள் இதயத்தின் ஓரத்தில் மறைந்திருக்கட்டும். வழிபாட்டில் கவனம் இருக்கட்டும். 

வழிபாடு செய்து விட்டு அமைதியாய் , தெளிவான மனதுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து வாருங்கள். என்னை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் இறைவா உனக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்.
      
   மதிவாணன் 

Thursday 31 July 2014

தமிழகத்திலும் ISIS



தமிழக இளைஞர்கள் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவு வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டுகள் அணிந்த நிலையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் உலவி வருகிறது. 

ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் கடந்த சில நாட்களாக 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க ஆதரவு வாசகம், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ஆங்கில எழுத்துகளுடன் கறுப்பு டி சர்ட் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் உலா வருகிறது. 

இந்த புகைப்படம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள பதிவர்கள், "தொண்டியிலிருந்து புறப்பட்டுள்ள சூறாவளி....!! தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஊர் தொண்டி. 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி தமிழக முஸ்லிம் தலைவர்களை பெற்றெடுத்த ஊர். இப்பொழுது புதிதாக ஓர் சூறாவளி புறப்பட்டுள்ளது. புதிய சூறாவளி என்றாலும் உலகையே திரும்பி பார்க்க வைத்த அக்னி பிரவேசம்...." என்று பதிவு செய்துள்ளனர்.

Monday 30 June 2014

செயற்கைக்கோளை செலுத்த ஆற்றல் கொண்ட நாடுகள்



விண்வெளியில் ஏவுகணை செலுத்த மற்றும் அவற்றை தயாரிக்கும் ஆற்றலை கொண்ட நாடுகளின் அட்டவணை. 

செயற்கைக்கோளை தயாரிக்கும் ஆற்றல் இப்பொழுது நிறைய நாடுகளுக்கு இருக்கிறது. இதற்கு ஏராளமான பொருளாதார, அறிவியல் மற்றும் தொழிற்முறை வசதிகள் தேவையில்லை. ஆயினும் இவை வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்ப்பதினால் இவற்றால் செயற்கைக்கோள்களை ஏவ முடிவதில்லை. 

கீழ் உள்ள அட்டவணையில் ஆற்றல் இல்லாத நாடுகள் குறிப்பிடப்படவில்லை. ஏவுகனைகளை செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ள நாடுகளின் பெயர்கள் மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. 

1 சோவியத் ஒன்றியம்
2 அமெரிக்கா
3 பிரான்ஸ்
4 ஜப்பான்  
5 சீனா 
6 இந்தியா
7 இஸ்ரேல்
8 ஈரான்
வெளிநாட்டு விண்வெளி நிலையங்களில் இருந்து தங்கள் சொந்த ஏவுகணை செலுத்தும் கருவிகளைக்கொண்டு பிரான்ஸ் மற்றும் யுனைடட் கிங்டம் தங்கள் முதல் செயற்கைக்கோளை செலுத்தியுள்ளன.

வட கொரியா (1998) மற்றும் ஈராக் (1989) விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் போர்முனை ஏவுகணைகளை செலுத்தியுள்ளதாக கூறி இருந்தாலும் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மேலும் தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, எகிப்து போன்ற நாடுகளுடன் OTRAG போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த ஏவுகணை கருவிகளைத் தயாரித்து இருந்தாலும் அவை வெற்றிகரமானவையாக இல்லை.

2009 ஆம் ஆண்டு வரை பார்க்கப்போனால், ( யுஎஸ்எஸ்ஆர் அல்லாமல் ரஷ்யா மற்றும் உக்ரைன், யூஎஸ்ஏ, ஜப்பான், சீனா, இந்தியா, இஸ்ரவேல், ஈரான்) மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையம், ஈஎஸ்ஏ) எட்டு நாடுகள் மற்றும் ஒரு மையம் தாமாகவே செயல்பட்டு செயற்கைக்கோள்களை செலுத்தியுள்ளன. (யுனைடட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஏவுகணை ஆற்றல் தற்பொழுது ஈஎஸ்ஏ விடம் உள்ளது.)

வட கொரியா ஏப்ரல் 2009ல் ஒரு ஏவுகணையை அனுப்பியதாக கூறினாலும் யு.எஸ் மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுத வல்லுனர்கள் இந்த இலக்கை வட கொரியா அடையவில்லை என்று கூறுகின்றனர்

Thursday 26 June 2014

கேள்விகள் ஆயிரம்

* தக்ஷிணாயனம், உத்தராயனம் என்பவை யாவை?

ஒரு வருஷத்துக்கு இரு அயனங்கள், தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆணி ஆகிய ஆறு மாதங்கள் உத்தர அயனம் என்றும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களை தக்ஷிண அயனம் எனவும் கூறுவர்.

* கோள்களிலிருந்து வருகின்ற காந்த அதிர்வு அலைகள் மனிதனின் எந்த பாகங்களோடுஅதிகம் தொடர்பு கொள்கின்றன?

சூரியனிலிருந்து வருகின்ற அலை- எலும்புகளோடும்
புதன் தோல் மீதும், சுக்கிரன்- ஜீவசக்தியோடும்
சந்திரன் இரத்த ஓட்டத்தோடும், செவ்வாய் எலும்பிலுள்ள மஜ்ஜையோடும்- ராகு கேது ஓஜஸோடும் தொடர்பு கொள்கின்றன. (யோகி வேதாத்ரி அவர்களின் ஆய்வு இது).

* எது ஒன்றையும் துவங்கும் போது நேரம்¢காலம் பார்ப்பது ஏன்?

மனிதன் எடுக்கின்ற காரியத்தை வெற்றிகரமாய் முடிக்க இயற்கையின் துணை வேண்டும் என்பது நம் முன்னோர்கள் அனுபவபூர்வமாக அறிந்த உண்மையாகும். நமக்கு ஏற்ற கோள்களின் நிலைகளிலிருந்து நன்மையே கிடைக்கின்ற காலத்தைக் கணிக்கவே வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரனம் என்ற ஐந்தையும் பார்க்கின்ற பழக்கத்தை வைத்துள்ளார்கள். 

* வாஸ்து சாஸ்திரம் அவசியம்தானா?

நான்கு சுவர்களை அமைக்கும் போது அதற்குள் உண்டாகும் காந்தக் கலம் மனிதனுக்கு நன்மை செய்வதாகவோ, தீமை செய்பவதாகவோ அமைவது உண்டு. மற்றும் திசைகளும், கோள்களும் இயற்கையும் அருகே ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே நன்மையளிக்கக் கூடிய வகையில் திசைகளுக்கேற்றவாறு வீட்டை எவ்வாறு அமைப்பது என்பதை கணித்து வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. 

* கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது? 

சூரியனுடைய மையத்தில் ஏற்படும் ராகு கேது காந்த அலைப்பாதைகளுக்கு நேராக சந்திரன், பூமி வரும் போது சுவடு மறைவு ஏற்பட்டு விடும். இதை கிரகணம் என்று சொல்கிறோம். 

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க் கோட்டில் வரும் போது அங்கு சூரியன் மையத்தில் ராகு அமையும் போது சூரியனிடமிருந்து வரக்கூடிய வெளிச்சத்தை அது மறைத்து விடும். இதை சூரிய கிரகணம் என்கிறோம். 

பூரண சந்திர தினத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க் கோட்டில் இருக்கும். அப்பொழுது பூமி சூரியனிடமிருந்து சந்திரன் மேல் படும் வெளிச்சத்தை மறைத்து விடும். அதை சந்திர கிரகணம் என்கிறோம். பூமி, ராகு, கேது என்ற நிழல்கிரகங்களுக்கு   நேராக வரும்போது அந்த மறைவு தெரியும். 

ராகு கேது இரண்டும் கருநிறமான நீண்ட காந்த அலைப் பாதைத்தான். அது நீளமாக வருவதால் பாம்பு என்று சொல்லி வைத்துள்ளார்கள். 

* கிரகண நாட்களில் ஏன் விரதமிருக்கிறார்கள்?

ராகு கேது காநத அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் போது நம் உடலில் ரசாயன மாற்றம் நிகழும். ஜீரண சக்தி குறையும். இச்சமயத்தில் தெய்வ நினைவோடு இருப்பது சிறந்தது. இந்நாட்களில் தாம்பத்ய உறவு கொண்டால் கர்ப்பம் தரித்து பிறக்கும்  குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளுடனும் நற்குணங்களில்லாமலும் இருக்க நேரிடும். 

* அமாவாசை, பௌர்ணமியன்று விரதமிருக்கக் காரணம் என்ன?

அமாவாசையன்று சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகரிக்கும். 

அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாக இருக்கும். 

மனநோயாளிகளுக்கு வெறி அதிகப்படும். மரணத் தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரியும். அந்நாளில் குழந்தை உண்டானால் மனவளர்ச்சி குன்றியதாயிருக்கும், தாம்பத்யம் ஆகாது. பௌர்ணமி நாளில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையில் வருகிறது. அந்நாளிலும் மனித உடலில் மாற்றங்கள் நிகழ்கிறது. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களை புனிதமாகவும் விரத நாட்களாகவும் வைத்து து£ய்மையாயிருந்து இறை வழிபாடு செய்வதை முன்னோர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 

* யுரேனஸ், நெப்டியூன், பிளுட்டோ இவற்றை சோதிடர் கணிப்பில் சேர்க்காது விட்டு விட்டார்களே! ஏன் அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களினால் பாதிப்புகள் வருவதில்லையா?

இந்தக் கோள்கள் ஜோதிட சாஸ்திரம் கணிக்கப்பட்டக் காலத்தில் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம். அடுத்து அவை சூரியனிலிருந்து மிகத் தொலைவில் அமைந்திருப்பதால் அவற்றிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் மனிதனை பாதிப்பதில்லை. யுரேனஸ் 178 கோடி மைல் தொலைவிலும் நெப்டியுன் 279 கோடி மைல் தொலைவிலும் புளுட்டோ 366 கோடி மைல் தொலைவிலும் இருக்கிறது. 

* மந்திரம் என்றால் என்ன?

உலக வாழ்க்கையில் மனிதன் ஒரு பொருளையோ, நலத்தையோ, உயர்வையோ அடைவதற்கு ஏற்படுத்திய ஒலி அமைப்புகளுக்கு மந்திரம் என்று பெயர். மந்திரஒலி அமைப்புகள் சொற்களால் அமைக்கப் படுகின்றன. அச்சொற்களை உச்சரிக்கும் போது சொல்லின் முதலுக்கும் முடிவிற்கும் இடைப்பட்ட ஒலியே மந்திரம் எனப்படும். 

மனித வாழ்வில் எந்த சம்பத்து குறைவாக உள்ளதோ அதைப் பெறுவதற்காக அதை நிறைவு செய்ய அதற்குத் தகுந்தாற்போல கடவுளுக்கு உருவம் அமைத்துள்ளார்கள். 

அக்கடவுளுடன் தொடர்புக் கொள்ள அதற்கான தனித்தனி மந்திர ஒலிகளை வடிவமைத்துள்ளனர். அம்மந்திரங்களை ஓதிக் கொண்டிருக்கும் போது நாடி நரம்புகளில் ஓர் காந்த அதிர்வு மையம் உருவாகி நம் மனதை இறை உணர்வுடன் தொடர்புக் கொள்ளும் ஆழ் நிலைக்கு மாற்றி அமைக்கிறது. மனமும் மந்திரமும் சரியாய் செயல் படும் போது நம் வேண்டுகோள்கள் இறை சக்தி மூலம் நமக்கு நிறைவேறும் நிலையை அடைகிறது. 

* யந்திரம் என்றால் என்ன?

மந்திரங்களை உச்சரிக்கும் போது உச்சரிப்பவரின்   காந்த சக்தி உயர் நிலைக்கு மாறுகிறது. என்ன தேவையோ அந்த கருத்தை மனம் இணைந்து அனுப்ப ஒரு மீடியம் அல்லது மையப் பொருள் வேண்டும் அது படமாகவோ  தகரமாகவோ இருக்கலாம். அதுவே யந்திரம் எனப்படுகிறது. 

மந்திரங்களை தகட்டில் பதித்து அதை  குறிப்பிட்ட நாட்களுக்கு பூஜையில் வைத்து சக்தி ஏற்றுகிறார்கள். யந்திரங்களிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் இயற்கை சக்திகளுடன், அதாவது ஐம்பூதங்களுடன் இணைந்து எந்த நோக்கத்திற்கு அந்த யந்திரங்கள் எழுதப்பட்டனவோ, அதையருளும் சக்தியுடன் இணைந்து சாதகமாய் உருவெடுத்து பலன் தருகிறது. 

* திலகமிட்டுக் கொள்ளும் காரணம் என்ன? 

குங்குமம் அல்லது மை வைத்துக் கொள்வதை திலகமிடுதல் அல்லது பொட்டு வைத்துக் கொள்ளல் என்பார்கள். குங்குமம் , சாந்து மை இவைகள் பண்டைக் காலத்துப் பெண்கள் சொந்தமாகத் தயாரித்துக் கொள்வார்கள். 

புருவமத்தியில் திலகமிடுவது மங்களமாகக் கருதப்படுகிறது. புருவமத்திக்கு யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ரம் என்று பெயர். இதை நெற்றிக்கண் என்பார்கள். தியானத்தின் போது சிந்தனை இங்கே குவியும் போது குண்டலிணி சக்தி  பிரகாசிக்கும். அப்போது தெய்வத்துடன் தொடர்புக் கொள்ளும் ஆற்றல் வருகிறது. 

சாதாரணமாக குங்குமத்திற்கு மின் கடத்தும் ஆற்றல் இருக்கிறது. நெற்றியில் குங்குமம் இட்டவுடன் அது மூளையின் பீனியல் கிளாண்ட் என்ற பகுதியை து£ண்டிவிட்டு இறைவனோடு தொடர்புக் கொள்ளும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

எனவேதான் கோவிலில் குங்குமம் திருநீறு கொடுத்தவுடன் நெற்றியில் இட்டுக் கொண்டு பின் சிறிது நேரம் அமர்ந்து இறை சிந்தனையுடன் ஒன்றி மௌனமாய் இருந்துவிட்டு வருவது பழக்கமாக இருக்கிறது. 

மற்றபடி, மற்றவரின் பார்வை மற்றும் எண்ண அலைகள் நெற்றிக்கண் என்கிற புருவமத்தி வழியே உட்புகுகின்றன. வசியம், ஹிப்நாட்டிசம் போன்ற சக்திகள் நம்மை ஆட் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் வெளியில் செல்லும் போது வெறும் நெற்றியுடன் போகக்கூடாது என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர். 

‘ ஆரத்தி ஏன் எடுக்கப்படுக்கிறது? 

பொதுவாக மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் அல்லது ஒரு பெண் பெரியவள் ஆகிவிட்டாள் என்று சடங்கு சுற்றும் போது, குழந்தை பிறந்து வீட்டிற்கு வரும் போதோ இது போன்ற சடங்குகள் நடைபெறுகிறது. 

ஆரத்தியில் மஞ்சள் சுண்ணாம்பு இவற்றை நீரில் கரைத்து ஒரு வெற்றிலையைக் கிள்ளிப் போட்டிருப்பார்கள். மஞ்சலும் சுண்ணாம்பு கலந்த நீர் செந்நீரமாக மாறிவிடும். மஞ்சள் கிருமி நாசினி. கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பில் சாந்த சக்தியும் வெற்றிலையில் இரும்பு சக்தியும் உண்டு. 

பொதுவாக மணமக்களும் அல்லது ஒரு பொது நிகழ்வில் முக்கிய பாகமாய் இருக்கும் நபரும் பலருடைய பார்வைகளுக்கும் எண்ணங்களுக்கும் ஆட்படுகிறார்கள். அது அவருடைய ஒளி உடலில் அதாவது ஓளரா  எனப்படும் வளையத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடும் அதனால் உடல் நிலை பாதிப்படையும். 

ஆரத்தியை கரைத்து மூன்று சுற்று சுற்றி சில சமயம் சூடம் கொளுத்தி கீழே ஊற்றுவார்கள். அதில் ஒளியுடலின் சுற்றித் தொடரும் எதிர் மறை அதிர் வலைகள் சமன் படுத்தப்பட்டு ஒளியுடலின் சலனங்கள் மறைகின்றன. திருஷ்டி சுற்றிப் போடுவதும் இது போலவேதான் சில எதிர்மறை எண்ண அதிர்வுகளிலிருந்து நம் உடலின் ஒளி வளையத்தை காத்து உறுதிப் படுத்துகிறது. 

* இறப்பு வீட்டிற்கு சென்று வந்தப் பின் குளிப்பது ஏன்?

இறந்தவர் நோய் வாய்ப்பட்டு இறந்திருந்தால் அவர் இருக்கும் இடத்தில் காற்றணுக்களில் நோய் கிருமிகள் பரவி இருக்கும் சா£த்தியம் உண்டு. அடுத்து பிணத்தை இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்கையில் அந்த உடலிலிருந்து துர்வாடை காற்றிகல் கலந்து உடைகளில் தொற்றும் நிலையும் உண்டு. துக்கத்தில் பங்கு பெற வந்தவர்களில் தொற்று நோயாளிகளும் இருக்கலாம் மற்றும் சோகமான எண்ண அலைகளே அவ்வீட்டில் பரவியிருக்கும். 

வீட்டிற்கு வந்து குளிர் நீரில் தலையோடு குளித்து உடைகளைத் துவைத்து உடலையும் சுத்தப் படுத்திக் கொண்டால் மனமும் அதீத சோக உணர்விலிருந்து விடுபடுகிறது. கிருமிகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.

* வாயில் படியில் அமரக்கூடாது, அமர்ந்து உண்ணக் கூடாது, ஏன்?

வாயின் நிலையின் நாலு பக்கங்களும் செவ்வக அமைப்பில் சீராக இருப்பதால் எதிர் மறை சக்திகள் வெளிப்படுகின்றன. இதை ‘டௌசிங்ராட்’ என்ற கருவியின் மூலம் கண்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். 

வாயில் படியில் அமர்வதால் நம் உடலில் எதிர் சக்திகள் உட்புகும் என்பது உறுதியாகிறது. இதனால் தான் வாயிலின் அருகில் உட்புறமோ வெளிப்புறமோ நின்றுக் கொண்டு கொடுத்து வாங்கக் கூடாது என்றும் சொல்லி வைத்துள்ளனர். அரை வட்ட வடிவில் சன்னல்களின் மேற்பகுதியோ அல்லது வாயிலின் மேற் பகுதியோ அமைக்கப்பட்டிருந்தால் அங்கே எதிர் மறை சக்திகள் வெளிப்படுவதில்லை. 

* இரவில் நகம் வெட்டக் கூடாது என்பது ஏன்?

பொதுவாக இரவில் நகம் வெட்டக்கூடாது, முடி வெட்டக்கூடாது என்று சொல்லி வைத்துள்ளனர். அதே போல் வெள்ளிக்கிழமை அமாவாசை மற்றும் புண்ணிய நாட்களிலும் இவ்வாறு செய்யக்கூடாது என்பார்கள். 

இரவில் வெட்டப்படும் நகமும், முடியும் நம் உடலில், உடையில் படிந்திருந்து நாம் உண்ணும் உணவோடு கலந்து விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பகலில் இதற்கு வாய்ப்பில்லை. இதுவும் காரணமாக இருக்கலாம்.  

‘ இரவில் வீட்டைக் கூட்டக் கூடாது என்பது ஏன்?

பொதுவாக இரவில் வீட்டைக் கூட்டினால் வீட்டிலிருக்கும் லட்சுமி வெளியேறிவிடும் என்பார்கள். 

பெரும்பாலும் இரவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விடுவார்கள். கூட்டும் போது அழுக்குகளும் து£சுகளும் காற்றி¢ல் பரக்கிறது. அது சுகாதாரக் கேடாகும். அடுத்து அக்காலத்தில் தற்காலத்தைப்போல் மின் வெளிச்ச வசதிகள் அதிகம் இல்லை. அதனால் சரியாக குப்பைகளைக் கூட்ட முடியாது. அடுத்து வீட்டில் தோடு, மூக்குத்தி எதும் சிறு சிறு பொருட்கள் விழுந்திருந்தாலும் பார்வையில் பட வாய்ப்பு இல்லை. எனவே இரவில் கூட்டுவதை இப்படிச் சொல்லி இருக்கலாம். 

‘ அதிகாலையில் எழுவது ஏன் வலியுறுத்திக் கூறப்படுகிறது.  

இரவில் து£க்கத்தைக் குறைத்து பகலில் து£ங்குவதால் ஆரோக்கியம் கெடுகிறது. அதிகாலை பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. அப்போது தியானம் செய்பவர்கள் மனத் தெளிவு பெறுகிறார்கள். காலை வேளை து£ங்குபவருக்கு தமோ குண வளர்ச்சி அதிகமாகும். அறிவு வளர்ச்சி தடையாகும். 

மாணவர்கள் காலையில் எழுந்து படித்தால் மனதில் தெளிவாய் பதியும். சூரியன் உதித்தெழுவதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகிறது. அப்போது சரஸ்வதி விழித்திருந்து செயல்படும் நேரம் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் தலையின் இடப்பக்க மூளைப் பகுதி சுறுசுறுப்பாக இருக்கிறது. இதில்தான் கல்வி, அறிவு ஞாபகசக்தி மையம் இருக்கிறது. எனவே மாணவர்கள் அதிகாலை எழுந்து படித்தால் மனதில் பதியும். 

* எண்ணைக் குளியலால் என்ன பயன்?

தேக உஷ்ணம் தணியும், தோல் நலமுறும், தேகத் தசை நன்கு மசாஜ் செய்யப்டுவதால் விறைப்பு, வாயுப்பிடிப்பு இருக்காது. சுளுக்கு ஏற்படாது. உடல் வலி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். உடல் இளமையுடன் இருக்கும். வேர்க்குரு, சொரி உண்டாகாது. 
 * எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள் எது?

 வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் வெள்ளி செவ்வாய் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும் எண்ணெய்¢தேய்த்துக் கொள்ளலாம். பிறந்த நாள் இக்கிழமைகளில் வரும் தினத்தில் எண்ணெய் தேய்த்தல் ஆகாது.

கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் சில நாட்களில் கட்டாயம் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும் அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, துவாதசி, விரதநாட்கள், ஞாயிறு, வியாழன் கார்த்திகை, பிதுர்தினங்கள் போன்ற நாட்களில் எண்ணெய் தேய்க்கக் கூடாது.

சூரியன் உதயமான பின்னால்தான் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவேண்டும்.
தீபாவளி தினம் மேற்கூரிய எல்லாவற்றிலிருந்தும் விலக்கு பெறுகிறது. அன்று எந்தக் கிழமையென்றாலும், அமாவாசை என்றாலும், சூரிய உதயத்திற்கு முன்னாலும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம்

* காலையில் யார் முகத்தில் விழிக்கலாம்?

 அன்றாடம் காலையில் தூங்கி எழுந்தவுடன் இறைவனின் படங்களைப் பார்க்கலாம். கோபுரம், சூரியன், படுக்கையில் இருந்தபடியே உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டு அகல விரித்து கைவிரல்களைப் பார்க்கலாம். கைகளின் நுனியில் லட்சுமி இருப்பதாகவும், நடுவில் சரஸ்வதியும், கீழ்ப்புரத்தில் பார்வதியும் இருப்பதாக எண்ணி  தியானித்து வணங்கலாம். தெய்வீக அம்சங்கள் நிறைந்த பொருட்களைப் பார்த்து நாளைத் துவக்குவது நல்லது.


தொகுப்பு : சிந்தனை சிற்பி மதிவாணன் 

Saturday 21 June 2014

வேதாளமும் வேதியனும்!!

குரு தட்சணை கேட்க துரோணருக்கு தகுதி உண்டா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

வேதியா!  இவ்வுலகில் சாதனைப்படைத்தவர்களின் வாழ்க்கையை பார்த்தாய் எனில் அவர்களில்  பெரும்பாலோர் தங்கள் முயற்சியில்,  சலிக்காத மனம் படைத்தவர்களாகவே இருப்பார்கள். 

சரித்திரத்தில் அப்படிஒன்றும் பெரிதாய் பேசப்படாதவனும், சாதிக்க துடித்தவனும்,  சலிக்காத மனமுடையவனுமாக இருந்த ஒரு வேடனின் கதையை உனக்குச் சொல்கிறேன் கேட்டுக் கொண்டே வா. எனக்கும் பொழுது போகும், உனக்கும் நடைக் களைப்புத் தெரியாது. 

பதின்ம வயதில் இருக்கும் சிறுவன் அவன்.  அஸ்தினாபுரத்திற்குச் சற்றுத் தொலைவில்  இயற்கை அரணாய் அமைந்திருந்த பெரும் மலைக் காட்டுக்குள் வசிப்பவன். 

நிஷாதர்கள் என்றழைக்கப்பட்ட,  வேடர் கூட்டத்தின் தலைவனான ஹிரண்யதனுஸ் என்பவனின் மகன். அவன் பெயர் ஏகலைவன். 

வேடர்குலத்தில் பிறந்ததினாலோ என்னவோ இயற்கையிலேயே வேட்டையாடும் திறன் அவனுக்கு இருந்தது. தன் வயதை ஒத்த பையன்கள் எல்லோரும் பறவையையும் முயலையும் வேட்டையாடுவதில் மும்முரம் காட்டும் போது சிறுத்தையை வேட்டையாடி,  கொண்டு வந்து  தன் கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்துவான்.  

வேடர்களெல்லாம் அவனைப் பெரிதும் மதித்துப் போற்றினர். தனது மகனது திறமையை வேடுவர் அனைவரும் போற்றுவதைக் கேட்டு ஏகலைவனின் தாய் தந்தைக்குப் பெருமை. 

ஏகலைவனுக்கும் ஒரு லட்சியம் இருந்தது. தனுர்வேதம் கற்று வில்வித்தையில் மிகச் சிறந்த வீரனென்று பெயரெடுக்க வேண்டும் என்பதே அது. சிறுவயதாய் இருக்கும் போது  அவனது தாத்தா அவனுக்கு ஸ்ரீஇராமரின் கதையைச் சொல்வதுண்டு. 

ஸ்ரீஇராமர் லட்சுமணர்களின் வில்திறனைக் கேள்விப்பட்டதிலிருந்து தானும் வில்வித்தைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களைப் போலவே அஸ்திரப் பயிற்சிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

இந்த சமயத்தில் அஸ்தினாபுரத்துக்கு கொம்புத் தேன் விற்கச் சென்ற மாயன் வந்து  சொன்னத் தகவல் அவனுக்கு நம்பிக்கைத் தருவதாய் அமைந்தது.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில் வித்தை கற்றுத் தர, துரோணாச்சாரியார் என்பவர் வந்திருக்கிறார், பரத்வாஜரின் புதல்வர். பீஷ்மருக்கு வில்வித்தைக் கற்றுத் தந்த பரசுராமரிடம் பயின்றவராம். வில்வித்தையில் மிகச் சிறந்த கெட்டிக்காரர் என்கிறார்கள். 

நகருக்குப் புறத்தே  அவரது ஆசிரமம் அமைந்திருக்கிறது என்று மாயன் சொன்னதும், அவரிடம் சென்று விற்பயிற்சியை மேற்கொள்வது என்று ஏகலைவன் முடிவு செய்தான்.

அடுத்தநாள் அதிகாலையில் துரோணரின் ஆசிரமத்தின் முன் பழங்கள், தேன் , காட்டில் கிடைக்கும் அரியவகை கிழங்கள், பூக்கள் நிரம்பிய தட்டுடன் நின்று கொண்டிருந்தான்.  துரோணர் தன் குடிலைவிட்டு வெளியே வந்தவுடன் அவர் காலில் விழுந்து வணங்கி தன் காணிக்கையைச் செலுத்தினான். 

யாராப்பா நீ? 

சுவாமி, நான் அஸ்தினாப்புரத்தை  அடுத்துள்ள மலைப்பகுதியில்  வசிக்கும் வேடர் குலத் தலைவனின் மகன். என் பெயர் ஏகலைவன். தங்களிடம் தனுர்வேதத்தைக் கற்றுக் கொள்ள ஆவலுடன் வந்திருக்கிறேன். என்னை தங்களின் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கருணை புரியுங்கள் சுவாமி.

ஏகலைவா!  நான் அரசகுமாரர்களுக்கு மட்டுமே ஆசிரியனாயிருந்து பயிற்சி தருவது என்ற கொள்கையில் உறுதியாயிருக்கிறேன். அதில் மாற்றம் செய்து கொள்வதாக இல்லை.  உன் காணிக்கையை எடுத்துக் கொண்டு நீ போகலாம்.

ஆச்சாரியாரே! நானும் ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவனின் மகன்தான். என் தந்தைக்கு அடுத்து நானே அவர்களின் தலைவனாக ஆவேன். எனவே தங்கள் கொள்கைக்கு உட்பட்டவனாகத்தானே ஆகிறேன்?

இல்லை ஏகலைவா! அரசகுலத்துக்கு இணையாக உன்னை வைத்துப் பேசாதே!  மலையில் வசிக்கும் காட்டுவாசிகளுக்கு தலைவனாக இருப்பதால் நீ அரசனாகி விடமுடியாது. 

நீ வசிக்கும் பகுதிக்கு அரசன் உண்மையில் அஸ்தினாபுரத்து அரசனான திருதராஷ்டிரர்தான். அவரின் குடிமக்களே நீங்கள் அனைவரும்.  எனவே இனி என்னிடம் வாதம் செய்யாமல் திரும்பிப் போய்விடு, என்று கூறியபடி திரும்பி குடிலுக்குள் நுழைந்து விடுகிறார்  துரோணர். 

மிகுந்த மனவருத்தத்துடன் கானகம் திரும்பிய ஏகலைவன். ஒரு மரத்தினடியில் அமர்ந்து யோசிக்கிறான். ‘தன் ஆர்வத்திற்கு இப்படி ஒரு தடையா? சரி பரவாயில்லை, ஆர்வம் இருந்தால் யார்வேண்டுமானாலும் எதையும் கற்றுத்தேர முடியும். என்னால் முடியும் என்று நம்பும்போது எதையும் சாதிக்க முடியும், உனக்குள்ளிருக்கும் சக்தியே உனக்கு  வழிகளைக் காட்டித்தரும் என்று என் பாட்டனார் கூறியிருக்கிறார். 

துரோணாச்சாரியார் எனக்கு கற்றுத் தர மறுத்தாலும் நான் அவர்மீது வைத்திருக்கும் மரியாதை சிறிதும் குறையவில்லை. இது, வில்வித்தையில் அவருக்கிருக்கும் ஆற்றலின் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பு. 

அவரையே என் மானசீக குருவாக வைத்து தனுர்வித்தையை கற்றுக் கொள்கிறேன்’ என முடிவு செய்தான். களிமண்ணால் துரோணர் போலவே  சிலை ஒன்றை செய்தான்.  அதை தான் அமைத்த பயிற்சி திடலில் வைத்தான்.  
நல்ல நாளில் சிலையை வணங்கி வில்லைக் கையிலெடுத்தான்.  மன ஒருமுகத்துடன் குறி பார்த்து அம்பை இழுத்து இலக்கை நோக்கி எய்தான்.  தனுர் வேதத்தின் அத்தனை வித்தைகளும் அவனுக்கு கைவந்தது.

பயிற்சியையே ஒரு தியானமாக மேற்கொண்டான். அறியாத பல உண்மைகள் அவனுக்கு விளங்கியது. அஸ்திரம் எய்யும் திறன்களெல்லாம்   

ஓடிவந்து,  அவனிடம் ஒட்டிக் கொண்டது. 

மிகச் சிறந்த வில்வீரனாக மெருகேறினான் ஏகலைவன். 

ஓருநாள் பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் விற்களோடு கானகத்திற்குள் வேட்டையாட வருகிறார்கள். அவர்களுடன் சில வேட்டைநாய்களும் வருகின்றன. 

ஏகலைவன் தன் பயிற்சியில் ஒரு முகப்பட்ட மனதோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். மனமும் ,  கைகளும், கண்களும் ஒன்றின.  காற்றைக் கிழித்துக் கொண்டு  பறந்த அம்பு முள் முனையளவும் விலகாது சரியாய் இலக்கினைத் தொலைத்தது.

அடுத்த அம்பினை எடுத்தான். ‘வள் வள் ளென்று’ எங்கிருந்தோ வந்த நாயின் சத்தம் அவனது கவனத்தை சிதைத்தது. நாயின் சத்தம் அதிகரித்து ஏகலைவனுக்கு எரிச்சல் மூட்டியது. அதை நிறுத்து என்று அவனுள் குரல் ஒன்று எழுந்தது.

கண்களை மூடி, செவிகளைக் கூராக்கினான். சத்தம் வந்த திசையினை நோக்கி அம்புகளை செலுத்தினான்.  நாயின் சத்தம் அடங்கியது. மீண்டும் தன் பயிற்சியில் கவனம் செலுத்தினான்.

தன்பின்னால் இருந்த நாயின் குரைப்புச் சத்தம் திடீரென அடங்கி , அதன் முனகல் சத்தம் மட்டும் கேட்டதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து  அர்ச்சுனன் திரும்பிப் பார்த்தான். திகைத்தான்.

எவனோ எய்த அம்புகள் கச்சிதமாய் நாயின் வாயை வளைத்து நாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் வளைபோல் பின்னி மூடிவிட்டன.

தான் அறியாத வித்தையாக இருக்கிறதே. தனக்கு அனைத்து வித அஸ்திரப்பயிற்சிகளையெல்லாம் கற்றுத் தந்துள்ளதாகக் கூறிய  ஆச்சாரியார் இப்படி ஒரு வித்தையை தனக்குக் கற்றுத் தரவில்லையே?  அர்ச்சுனனின் மனம் சுருங்கியது. மனதை முகம் பிரதிபலித்தது.

யுதிர்ஷ்டர் இதைக் கவனித்து விட்டார். ‘என்ன அர்ச்சுனா ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?’

‘ஒன்றும் இல்லையண்ணா, உடல் சற்று அசதியாக இருந்தது. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை.’

‘சரி , அப்படியென்றால் திரும்பி விடலாம். படுத்து,  ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். எல்லோரும் திரும்புங்கள், வேட்டையாடியது போதும், நேரமாகிவிட்டது. மீண்டும் வேறொருநாள் வருவோம், எனக் கட்டளையிட்டார் யுதிஷ்டர். எல்லோரும் அரண்மனை திரும்பினர்.

அர்ச்சுனன் மனம்  அமைதியடையவில்லை. நேரே ஆச்சாரியாரின் ஆசிரமம் சென்றான்.    அர்ச்சுனனின் வாடிய முகம் பார்த்ததும், ஏதோ காரணம் இருக்கிறது என்று துரோணருக்குப் புரிந்து விட்டது.

என்ன அர்ச்சுனா? இந்த நேரத்தில் என்னைத்தேடி வரக்காரணம் என்ன? 

ஆச்சாரியாரே! அஸ்திரப்பயிற்சி யாவும் எனக்கு கை வந்து விட்டதா?

அதிலென்ன சந்தேகம் அர்ச்சுனா? உன்னை மிஞ்ச இந்த பரதகண்டத்தில் ஒருவரும் இல்லை. வில்லுக்கு விஜயன் என்று உன்பெயரைத்தான் இந்த வையகம் நாளை நினைவு கூறும். ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாய்?

குருவே! எனக்கு நீங்கள் சொல்லித்தராதது இன்னும் பாக்கியிருக்கிறது என நினைக்கிறீர்களா?

அர்ச்சுனா! உன் கேள்வியின் தொனி என்னை சந்தேகப்படுவது போல் ஒலிக்கிறது. என் மகன் அஸ்வாத்துமனுக்கு சொல்லித்தந்த வித்தைகளையெல்லாம் உனக்கும் சொல்லித் தந்திருக்கிறேன். நானறிந்த அஸ்திரப் பயிற்சிகளையெல்லாம் உனக்குக் கற்றுத் தந்திருக்கிறேன். 

இனி மேல் அதை மெருகுப்படுத்திக் கொள்வதென்பது   தனிப்பட்ட உனது திறைமையிலும் முயற்சியிலும்தான்  இருக்கிறது.  ஏன் உனக்கு இந்த சந்தேகம் வந்தது? சொல் அர்ச்சுனா?

குரு முதலில் என்னை மன்னிக்கவும். இன்று நாங்கள் வேட்டைக்குச் சென்றிருந்த போது ஒரு ஆச்சரியத்தைப் பார்த்தேன். எவனோ ஒருவன் எய்த அம்பொன்று என்னுடன் வந்த நாயின் வாயைக் கச்சிதமாய் தைத்து அதன் குரைப்பை அடக்கியது. 

அதைப் பார்த்த நொடியில் அதை எய்தவனின்  திறமையின் மேல் என்னையறியாமல் ஒரு பொறாமை உண்டாகியது. எனக்கு நிகராய் அல்ல, என்னை விட மேலான வில்லாளி ஒருவன் இங்கே இருக்கிறான், அல்லது உருவாகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு விளங்குகிறது. 

இனி எனக்கு உறக்கம் வராது, உணவும் பிடிக்காது ஜயனே! உங்களைத் தவிர என் வேதனையை நான் யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?

‘நல்லது அர்ச்சுனா! என் மீது நீ வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. நீ கூறியது எனக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நீ முயன்றால் வில்லினால் ஏகப்பட்ட வித்தைகளை செய்தகாட்டமுடியும். நாம் நாளை காலையில் கானகம் சென்று  யாரந்த வில்லாளி எனக் காண்போம். இப்போது நீ மனக்குழப்பம் இன்றி போய் தூங்கு.’   

அர்ச்சுனன் துரோணரிடம் விடைபெற்று அரண்மனை நோக்கிச் சென்றான்.

 அடுத்தநாள் காலை அர்ச்சுனனும், துரோணரும் கானகம் நோக்கி விரைந்தனர்.  நாய் வாயின் தைக்கப்பட்ட இடம் வந்ததும், சுற்றுப் புறம் முழுவதையும் தேடி அந்த பயிற்சி திடலைக் கண்டனர்.

பயிற்சி திடலின் ஒரமாய் குடிலொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன் புறத்தை கண்ட துரோணரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அவரது ஆளுயுரச் சிலையொன்று அமைந்திருந்தது. அர்ச்சுனனும் அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.

திடலின் வாயிற் பகுதியை நெருங்கிய வேளையில், குடிலுக்குள் இருந்து இளைஞன் ஒருவன் வெளிவந்தான். சிறுவன் என்றும் சொல்ல முடியாத இளைஞன் என்றும் சொல்லமுடியாத இரண்டும் கெட்டான் என்று சொல்லக்கூடிய தோற்றத்தில் இருந்தான்.

துரோணரின் மனம் அவனை உடனே எடைபோட்டது.  உறுதியான உடல் வாகு. வலிமையான முறுக்கேறிய புஜமும் கைகளும் அவன் சிறந்த வில்லாளன் என்பதை பறைசாற்றியது.  

முகத்தில் தெரிந்த அமைதி, அவன் மிகச் சிறந்த கெட்டிக்காரனாக இருக்க வேண்டும் என்பதையும், எளிதில் உணர்ச்சி வசப்படாத நிதானக்காரன் என்பதையும் உணர்த்தியது.

துரோணரைப் பார்த்த நொடியில் அவன் முகத்தில் மகிழ்ச்சியின் வெளிச்சம் பளிச்சிட்டது. விரைந்து வந்து, ஆச்சாரியாருக்கு வணக்கம்!   அவரது பாதங்களை வணங்கினான். 

ஏகலைவா உன் குடிலா இது? என்ன செய்கிறாய் இங்கு?

 ஆம் குருவே! என்குடில்தான்.  இதுதான் என் விற்பயிற்சிக்கூடம். 

அப்படியா, யார் உன் குரு? யாரிடம் நீ பயிற்சி பெறுகிறாய்?

ஆச்சாரியாரே! என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நீங்கள்தான் என் குரு. இதோ உங்கள் சிலை. உங்களை முன்நிறுத்தித்தான் என் பயிற்சியை ஆரம்பித்தேன். மனதுக்குள் இருந்து என்னை பயிற்றுவித்தவர் நீங்கள்தான்.

ஆச்சரியம் ஏகலைவா!  உன் அனைத்து திறமைகளும் என்னால் வந்தது என்கிறாயா?

இதிலென்ன சந்தேகம் இருக்க முடியும் குருவே. என்னை வழிநடத்தியவர் நீங்கள். என் மனதில் உங்கள் உருவை நிறுத்தி உங்களிடம் கேட்பேன் நீங்கள் கூறியதைப் பின் பற்றுவேன். அப்படித்தான் கற்றேன். 

துரோணரின் புருவம் சுருங்கியது. மானசீகமாக கற்ற இவனின் திறமையே இப்படி இருக்கிறது. ஒரு குருவின் முன்னிலையில் இந்த வித்தையைக் கற்றிருந்தால் இவனைப் பிடிக்கவே முடியாது. இவனை வெல்ல ஒருவனுமே இருக்க மாட்டார்கள். 

அர்ச்சுனனின் அச்சம் சரிதான போலிருக்கிறதே! அர்ச்சுனனை மிஞ்சிய வீரனாய் இவன் நிச்சயம் வருவான். நாளை அர்ச்சுனனுக்கு சவாலாய் இருக்கப்போவதும் இவன்தான். இதை இப்படியே விட்டுவிடக் கூடாது.. என்ன செய்யலாம் என்று சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார். 

அதற்குள் ஏகலைவன், அவர்கள் உண்பதற்கு பழங்களைக் கொண்டு வந்தான்.

ஏகலைவா! நீ என் மாணவன்தானே?

ஆம் குருவே! 

உன் குருவிற்கு நீ காணிக்கை செலுத்த வேண்டும்தானே?  நான் எதைக் கேட்டாலும் தருவாயா? 

நிச்சயமாக குருவே! அதற்காக காத்திருக்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?

பின்னால் ஏன் கொடுத்தோம் என்று வருந்த மாட்டாயே?

சத்தியமாய் மாட்டேன் குருவே!

 குருதட்சணையாய் எனக்கு உன் வலது கை கட்டைவிரலைத் தா ஏகலைவா! 

ஏகலைவன் குடிசைக்குள் ஓடி தன் தந்தை தனக்கு வழங்கிய இடைவாளை எடுத்து வந்தான்.

அங்கிருந்த பாறையின் மேல் தன் வலது கையை வைத்து, இடது கையில் வாளைப் பிடித்து ஒரே வெட்டாய் வெட்டினான், கட்டை விரல் துண்டாகித் துள்ளி விழுந்தது. 

 அய்யோ இது அநீதி, இது அநீதி  என்பது போல மரத்தின் மேலிருந்த அணில்கள் கிறீச்சிட்டன. இக்காட்சியை காண சகிக்காத பறவைகள் கூட்டம்  படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு, மரத்திலிருந்து எழுந்து, பறந்து வெகுதூரம் போயின.

கையிலிருந்து குருதி பீச்சியடித்தது. துரோணரின் முகத்தில் சில துளிகள் தெறித்தன.  இடது கையால் அழுத்திப்பிடித்துக் கொண்டே, வலது கட்டைவிரலை எடுத்து குருவின் பாதங்களில் வைத்தான் ஏகலைவன்.

‘ஏகலைவா உன் தட்சணையை ஏற்றுக் கொண்டேன்’  என்றார் துரோணர்.

அர்ச்சுனனுக்கு சாடை காட்டினார்.  அந்த விரலை எடுத்து ஒரு மர இலையில் சுற்றிக்  கொண்டான். இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர். 

வலியில் தவித்த ஏகலைவன்.பல்லைக் கடித்துக் கொண்டே,  சில பச்சிலைகளைப் பறித்து நசுக்கி விரலில் வைத்துக் கட்டினான் பீச்சியடித்த குருதி நின்றது.  பலவீனமாய் இருந்த ஏகலைவன் மயங்கித் தரையில் சரிந்தான்.

இரவில் அவனைத் தேடி வந்த நண்பர்கள் அவனைத் தூக்கிச் சென்றனர். 

அவனுக்கு நினைவு திரும்பிய போது, “குரு ஏன் என் கட்டை விரலை காணிக்கையாய் கேட்டார்’ என்றக் கேள்வி அவன் மனதில் எழுந்து கொண்டே இருந்தது. 

வேதியா!   கதை  இதற்கு மேல் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  ஒரு மாணவனுக்கு வித்தைகளை முறையாய் கற்றுத் தருபவனே நல்ல ஆசிரியன். தன்னைத் தேடி வந்து, தனக்கு பயிற்சி தரச்சொல்லி கெஞ்சிய ஏகலைவனை மாணவனாக ஏற்றுக் கொள்ளாத குரு. அவன் சுயமாய் பயிற்சிகளை கற்றுக் கொண்டு ஒரு சிறந்த வில்லாளி ஆனபின், நான் உன் குருதானே என்று குரு தட்சணை  கேட்டது நியாயமா? 

 ஒரு வீரனுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு மனிதனுக்கும் வலிமையைத் தருவது வலது கையின் கட்டைவிரல். அது இல்லையென்றால் அவனால் வலுவான வேலை எதையுமே செய்ய முடியாது. 

ஒரு வில்வீரனுக்கு, நாணிழுக்க மிகவும் இன்றியமையாதது அவனது வலது கையின் கட்டைவிரல், தான் ஒரு குருவாக எந்த ஒரு கடமையையும் செய்யாமல், ஏகலைவனது திறமைகளை இல்லாமல் செய்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டைவிரலை கேட்டது எந்த விதத்தில் சரியாகும்?

துரோணரின் செயல் சரியானதுதானா?  குருதட்சணைக் கேட்க அவருக்கு தகுதியிருக்கிறதா?  இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்திருந்தும், நீ சொல்லாமல் மௌனம் சாதிப்பாயானால் உனது தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறும். 

வேதாளமே ! சாமர்த்தியமான உன் கேள்வியை மெச்சுகிறேன்.  ஒரு செயலை அது நல்லதா கெட்டதா? சரியா தவறா? என்று எப்படி முடிவு செய்வது? அந்த செயல் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது, அலலது அச்செயலினால் ஏற்படும்   தொடர்விளைவு என்ன?   என்பதை வைத்தே முடிவு செய்கிறோம் என்பதுதானே சரி. 

சில சமயங்களில் உடனடி விளைவுகள் பார்ப்பதற்கு தவறாகத் தோன்றினாலும்  தொலைநோக்குச் சிந்தனையுடன் அதை ஆராய்ந்தால் பிற்கால விளைவுகள் மிகச் சரியானதாகவே இருக்கும். மிகப்பெரிய பாதகத்தை தடுப்பதாய் இருக்கும்.

இனி ஆராய்வோம்! 

துரோணரின் சிலையை செய்து வைத்து அவரை குருவாக ஏற்றுக் கொள்கிறான் ஏகலைவன். மானசீகக் குரு என்ற ஒரு ஸ்தானத்தை நம் சாஸ்திரங்கள் அங்கீகரிக்கிறது.  

நீங்கள் தான் என் குரு என்று  துரோணரிடம் கூறுகிறான் ஏகலைவன். எனவே அவனுக்கு குரு துரோணரே என்பது  தீர்மானமாகிவிடுகிறது. எனவே குருதட்சணை கேட்கும் உரிமையும் துரோணருக்கு வந்து விடுகிறது. அவர் கட்டை விரலை ஏன் கேட்டார் என்பதுதான் இப்போது முன்னிற்கும் கேள்வி.  அதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

ஏகலைவன் அஸ்தினாபுரத்தின் அருகில்  கானகத்தில் வசிக்கும் வேடன். எதிர்காலத்தில் அவன் அர்ச்சுனனுக்கு மேலானவனாய் உருவாவதோடு, எதிராக நிற்கக்கூடிய  கூடிய அபாயமும் நேரலாம்.  

துரோணரால் பயிற்றுவிக்க மறுத்து அனுப்ப்பட்ட இன்னொரு வீரன் கர்ணன் என்பது நமக்குத் தெரியும். அவன் அர்ச்சுனனுக்கு எதிராக போட்டிக்கு வரும்போது, துரியோதணனால் ஆதரிக்கப்பட்டான், 

அர்ச்சுனனுக்கு சவால் விடக்கூடிய நிலையில் இருக்கும் இவன், நாளை நமக்கு ஆதரவாய் இருப்பான் எனக் கருதியே துரியோதணன் அவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான். அங்க தேசத்தின் அரசனாக்கி அவனை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறான்.  

இருப்பினும் இந்திரன் கேட்ட தானம், குந்தி கேட்ட வரம், கண்ணபிரானின் சூழ்ச்சி எல்லாம் கர்ணனை பலவீனமாக்கிவிடுகிறது. அதனால் அர்ச்சுனனின் கையால் கொல்லப்படுகிறான். 

மேற்சொன்ன யாவும் நடைபெற்றிருக்காவிடில் அர்ச்சுனன், கர்ணன் கையால் மடிந்திருக்கவும் கூடும்.

 ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும், தர்மம் மறுபடி வெல்லும்’ என்பதுதானே மகாபாரதம் வழி நாம் அறியும் நீதி. 

 தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன நிகழ்வுகள¢ யாவும் நடைபெற்றன. இல்லையெனில் தர்மத்தின் மேல் எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போய்விடும்.

அர்ச்சுனனை விட மிகப்பெரிய வில்வீரனாய் ஏகலைவன் உருவாகியிருக்கக் கூடிய பட்சத்தில், அஸ்தினாபுரத்தின் அருகில் தங்களது  ஆட்சிக்கு உட்பட்டு இருக்கும் கானகத்தில் வசிக்கும் அவனை தங்கள் பக்கம் இழுப்பதில் துரியோதணனுக்கு பெரிய சிரமம் இருந்திருக்காது. 

கர்ணனை  குந்தி பாசத்தால் கட்டிப்போட்டதைப் போல் ஏகலைவனை  கட்டுப்படுத்த எவராலும் முடியாமல் போயிருக்கும்.

அப்படியிருந்தால் பாண்டவர்களின் நிலை தோல்விதான். தர்மம் தோற்றுப்போகும்.    

 சரி, பாண்டவர்கள் வெற்றி பெறும் சூழலே நிலவியிருந்தாலும், இறுதியில் கர்ணனைப் போலவே ஏகலைவனும் மாண்டிருப்பான், அவனது வாரிசுகளும், வேடர் இனமும் சுத்தமாய் அழிந்து போயிருக்கும்.  

இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும், தர்மத்தை காப்பாற்றும் வேலையையும்,  ஏகலைவனையும், அவன் இனத்தையும் காப்பாற்றும் உதவியையும் துரோணர் செய்திருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

ஒரு கதையில் படித்த ஞாபகம். 

 பிற்காலத்தில் குருக்ஷேத்ரப் போர்க்களக் காட்சிகளை,  அருகிலிருக்கும் குன்றிலிருந்து ஏகலைவன் பார்வையிடுகிறான். 

விற்கள் பறக்கின்றன. அஸ்திரங்கள் எரிக்கின்றன. எங்குப்பார்த்தாலும் பிணக்குவியல்கள். கழுகுகளும், நரிகளும்  மனித உடல்களைத் தின்றுக் கொண்டிருக்கின்றன.

ஏகலைவனின் மனம் பதைக்கிறது. ‘அடக்கிருஷ்ணா! மனிதர்களை கொல்வதற்குத்தான் எல்லாப் பயிற்சிகளுமா?  எப்படி அதிகமாய் மனிதர்களை கொல்வது என்பதற்குத்தான்  இத்தனை அஸ்திரப் பயிற்சிகளையும் போட்டிப் போட்டுக் கொண்டு கற்றுக் கொள்கிறார்களா?  

ஐந்தடி நிலம் கூட தரமுடியாது என்று சொன்னதற்காகத்தான் இந்தப் போரா? இத்தனை உயிர்ச்சேதமா? 

கடவுளே! நல்ல வேளை நான் அந்த அஸ்திரப்பயிற்சிகளையெல்லாம் மறந்து தொலைத்தேன். ஏன் என் குருநாதர் என் கட்டைவிரலைக்கேட்டார் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் திரிந்தேன்.  

என்னையும் என் இனத்தையும் காப்பாற்றவே என் குருநாதர் என் கட்டைவிரலைக் கேட்டிருக்கிறார் என்பது இன்றுதானே எனக்குப் புரிகிறது. என் குருநாதர் எனக்கு நல்லதையல்லவா செய்திருக்கிறார்’.  என்று ஏகலைவன் எண்ணுவதாய் கதையின் போக்கு செல்கிறது. 

‘வேதாளமே! 

பகவத் கீதையில்,  ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற  அக்குடும்பத்தில் ஒருவரைப்  பலி கொடுக்கலாம், ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தைப் பலிகொடுக்கலாம், ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தையே பலிகொடுக்கலாம் என்று கிருஷ்ணர் கூறுவதாக ஒரு வாசகம் வருகிறது. 

கட்டைவிரலைக் கேட்டது அநியாயம்தான்  என்று  வாதங்கள் வைக்கப்பட்டாலும், தர்மத்தை காப்பாற்றவே அந்தச் செயல் பயன்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.  எனவே துரோணர் செய்தது சரியே என்பதை, யோசித்து பார்க்கையில் என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.’ 

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 

Saturday 7 June 2014

வ.உ.சி. பெயரனுக்கு வாழ்நாள் சாதனை விருது!!


சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் வம்சாவளி பெயரனான ப.முத்துக்குமாரசுவாமிக்கு (இடது) இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையின் விருதை வழங்குகிறார் மலேசிய நாட்டு அபூர்வாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் கோ.பரமசிவம்(வலது).

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் வம்சாவளி பெயரனான ப.முத்துக்குமாரசுவாமிக்கு வாழ்நாள் சாதனை விருதை மலேசிய இந்து திருச்சபையும், அபூர்வாஸ் நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன.

உலக அமைதியை வேண்டி, மலேசியாவின் செலாங்கூர் நகரில் உள்ள அபூர்வாஸ் நிறுவனம் மற்றும் மலேசிய இந்து திருச்சபை சார்பில் கிள்ளான் நகர் தண்டாயுதபாணி ஆலயத்தில் அண்மையில் ஒரு ஆன்மிக வேள்வி நடத்தப்பட்டது.

இதில் தமிழகம், கேரளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் பங்கேற்று யாகத்தை சிறப்பாக நடத்தினர். 

இந்த நிகழ்ச்சியையொட்டி தமிழறிஞர்கள் கெüரவிக்கப்பட்டனர். இதில் வ.உ.சி.யின் பெயரன் ப.முத்துக்குமாரசுவாமிக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், நூற்றுக்கணக்கான இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியதற்காக வாழ்நாள் சாதனை விருதையும் அபூர்வாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் கோ.பரமசிவம் வழங்கினார்.

Monday 2 June 2014

ஜோதிடம் ஏன் பொய்க்கிறது?

நான் ஜோதிடம் பார்த்துதாங்க எல்லாம் செய்தேன். அவங்க சொன்னதை கேட்டுத்தான் அதன் வழி சென்றேன். ஆனால் என்ன நடந்திச்சு பார்த்திங்களா? இப்ப கடனாளியாக நிற்கிறேன்- ஒருவர் அங்கலாய்க்கிறார்.

ஒரு ஜோதிடருக்கு நாலு ஜோதிடரை அணுகி பொருத்தம் பார்த்துதான் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.  முகூர்த்தம் கூட அவங்க குறிச்சுக் கொடுத்த நேரம்தான்.  என்ன புண்ணியம்? ஆறுமாதம் கூட வாழ்க்கை நிலைக்கலை என்று சொல்லி கண் கலங்குகிறார் பெண்ணை பெற்றவர்.

விதி என்பதின் மேல் எனக்கு அளவில்லா நம்பிக்கை உண்டு. சரியோ தப்போ, ஜோதிடப்படித்தான் எல்லாம் செய்யுறேன். சில நேரம் சரியா வருது? பலநேரம் தப்பாக போகுது.  யாரை நொந்துக்கிறது? விதியையா? விதியை கணித்து சொன்ன ஜோதிடரையா? விதியை சொல்லும் ஜோதிடத்தையா? என்று விரத்தியாக பேசுகிறார் இன்னொறுவர்.

சரி.. இந்த விமர்சனங்கள் வர காரணம் என்ன? எங்கே தவறு நிகழ்கிறது? 
ஆராய்வோம். 

ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் உள்ளன. இவற்றில் எது முக்கியம் எது முக்கியமல்ல என்பதை புரிந்து பலன் கூறவேண்டும். ஏழைக்கு ஆசை வார்த்தை காட்டிய மாதிரி, யோகமற்ற ஜாதகத்தை யோகவான் என்று சொல்ல வேண்டியதில்லை. 

அதற்காக காலம் முழுவதும் அல்லாடப் போகிறாய் என்று கல்லை தூக்கி தலையில் போட வேண்டிய அவசியமும் இல்லை.  கிரக நிலைகளை கணித்து உங்கள் ஜாதகத்தில் இப்படியான கிரக நிலைகள் இருப்பதால் எதையும் நிதானமாக செய்யுங்கள். 

உள்ளதை வைத்து நல்லது செய் என்பது போல், வருவதை வரவில் வைத்து, செய்ததை செலவில் வைத்து உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அணுப்பு என்பார் என் குருநாதர்.   உண்மையும் அதுதான்.  

ஒகே. கிரகங்கள் எப்படி இருந்தால் யோகங்கள் தடுமாகிறது? 

உதாரணமாக சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுகிற குருபகவானும் சுக்கிரனும் கூட பெறும் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப பாவத்தன்மை பெறுகிறது.  ஒருவருக்கு அளவில்லா யோகத்தை தரும் இவர்கள், இன்னொறுவருக்கு அழவைத்து வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

அதனால் லக்னத்திற்கு என்ன நிலை பெறுகிறார்கள் என்பதை பொறுத்தே கிரகபலம் வருகிறது. 

1. என்னதான் கிரகங்கள் யோகநிலையில் அமர்ந்து விட்டாலும், லக்னம் மற்றும் லக்னத்திற்கு உரிய கிரகங்கள் பலம் குன்றி விட்டால், அந்த யோகத்தை பெறும் தகுதி அல்லது பாக்கியம் கிடைப்பதில்லை. 

லக்னாதிபதி 6,8,12 லிருக்க,  மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன்கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளுடனோ இருத்தால் யோகங்கள் தடுமாடுகிறது. 

3. யோகங்கள் ஒருபுறம் இருக்க, அந்த யோகத்தை வலுவிழக்க செய்யும் புனர்பூதோஷம், காலசர்ப்ப தோஷம், பாவகர்த்தாரி யோகம் போன்ற பாதகத்தை தரும் அமைப்புகள் இருந்தால் யோகநிலை வழி மாறிவிடுகிறது. 

4. ஜாதகத்தில் அதிக எண்ணிக்கையில்  பாபர்கள் வலுத்தும், சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தால் யோகத்தின் வலிமை பின்னடவை சந்திக்கிறது. 

5. லக்னாதிபதியை விட, ராசிநாதனை விட  6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தால் முன் சொல்லிய நிலைதான். 

6. என்னதான் யோகநிலைகள் இருந்தாலும் அதற்கான திசைகள் இளம் பருவத்திலேயே வரவேண்டும்.  இளம் பிராயத்தில் யோகதிசை என்ன செய்யும்? அப்பா அன்பாக பார்த்துக் கொள்வார். சாக்லெட், விளையாட்டுப் பொருள் எல்லாம் விதம் விதமாக கிடைக்கும். 

அதுவே முதுமையில் வரும் யோகதிசை கூட இப்படித்தான்.  நோய் ரொம்பப் படுத்தாது.  கவனித்துக் கொள்ள ஆட்கள் இருப்பார்கள். பெரிய அலைச்சல் திரிச்சல் இல்லாமல் வாழ்க்கைப் போகும்.  இவை இரண்டை விட வாலிபத்தில் வரும் யோகதிசைதான் சிறப்பு. 

7. வலுப்பெற்ற தொழில்பாவம் இருக்கிறது. ஆனால் அதனோடு இரு பாவகிரகங்கள் சேர்ந்து இருப்பதாக வைத்துக் கொண்டால், சேர்ந்த கிரகத்தின் தன்மைக்கு ஏற்ப நஷ்டத் தொழிலையும், அதனால் கஷ்டத்தை அவர் சந்தித்தே தீரவேண்டும். 

8.. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட, கூட்டாளி சரியில்லா விட்டால், நமக்கு யோகநிலைகளை கட்டிப்போட்டு நஷ்டங்களை தருகிறது.  அதற்கும் ஜாதகத்தில் ஓர் இடம் இருக்கும். 


ஓகே... இது போல் உங்கள் ஜாதகத்தில் எத்தனையோ யோக மற்றும் சங்கடம் தரும் கிரக நிலைகள் இருக்கலாம். அவற்றை தெரிந்து அறிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அருகில் உள்ள நல்ல ஜோதிடரை அணுகுங்கள். அல்லது என்னையும் நீங்கள் அணுகலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்/

http://astrology.dinamani.com/sri-krishnan/http://astrology.dinamani.com/sri-krishnan/



Friday 16 May 2014

நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் விவரம்



நாட்டிலேயே அதிகபட்சமாக நோட்டா பொத்தானை அழுத்தியவர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. 

இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் முதன்முறையாக 49ஓ எனப்படும் முறை கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி வரிசையில், மேலேயுள்ள யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்ய ஒரு பொத்தான் வைக்கப்பட்டது. 

நாட்டில் கட்சிக்கொடிகள் பல பறக்கும் நிலையில், இந்த பட்டனுக்கு அவ்வளவாக வேலை இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்தான். 

ஏனெனில் சில தொகுதிகளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்குதான் அதிகம் பேர் 'வாக்களித்துள்ளனர்'. 

அந்த சாதனையில் முதலிடம் தமிழ் நாட்டின் நீலகிரி தொகுதிக்குத்தான். இத்தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் வேலைமெனக்கட்டு வாக்குச்சாவடிக்கு போய் நோட்டாவில் ஓட்டு போட்டுள்ளனர். 

இதைப்போல, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிட்ட குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் 18 ஆயிரத்து 53 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் 11 ஆயிரத்து 320 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. எல்லா கட்சிக்கும் நாங்கள்தான் மாற்று என்று கூறிய ஆம் ஆத்மிக்கு பதிலாக, நோட்டாவுக்கு மக்கள் வாக்களித்துள்ளதை வைத்துப் பார்த்தால், ஆம் ஆத்மியை மக்கள் ஒரு மாற்றாக நினைக்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. 

ஏனெனில் மேற்கண்ட மூன்று தொகுதிகளிலுமே நோட்டாவை விட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். 


நாடு பிரம்மச்சாரிகள் கையில்!

பிரதமர் நாற்காலியில் ஒரு புதிய பிரம்மச்சாரி வருகிறார். திருமணமானவர் என்றாலும் கூட மோடியும் இப்போதும் தனிக்கட்டைதான். 


பாஜகவிலிருந்து பிரதமர் பதவிக்கு வந்துள்ள 2வது பிரம்மச்சாரியும் இவர்தான். இதற்கு முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவர் ஒரு கட்டை பிரம்மச்சாரி. ஆனால் நமது மோடியோ, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி. 

நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு நீண்ட கால பேச்சலர். 



டெல்லி அரசியலில் முக்கியத்துவம் வகிக்கப் போகும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பேச்சலர். 



திரினமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்னொரு பேச்சலர்.




மோடி!!






Saturday 10 May 2014

வேதாளமும் வேதியனும்

  வாமனர் இப்படி செய்யலாமா?

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக் கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

வேதியா!  உன் முயற்சியைப் பாராட்டுகிறேன். விடாமுயற்சியே வெற்றியைத் தரும் என்பதை புரிந்து வைத்திருக்கிறாய்.

சரி, எப்போதும் போல் நான் உனக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டு வருகிறேன்.  வேறுவழியில்லை .. நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்.  கேட்டுக் கொண்டே வா..

 ஆதி   காலத்தில் இப்பூமியில் காஸ்யப முனிவர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவருக்கு திதி, அதிதி என்ற மனைவிகள்  திதிக்கு பிறந்தவர்கள் அசுரர்களாகவும், அதிதிக்கு பிறந்தவர்கள் தேவர்களாகவும் இருந்தனர்.

சத்யயுகத்தில் திதிக்கு இரு அசுரக்குழந்தைகள் பிறந்தன. ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்பவர்களே அவர்கள் . இருவரும் மிகவும் வலிமைபடைத்தவர்களாக திகழ்ந்தார்கள்.

இதில் ஹிரண்யாக்ஷன் பூமியை எடுத்துக் கொண்டு சமுத்திரங்களுக்கடியில் மறைத்து வைத்துவிடுகிறான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து   அவனைக் கொன்று , பூமியை மீட்டு வருகிறார்.

ஹிரண்ய கசிபு பிரம்மனை எண்ணித் தவமிருந்து, மனிதர்களாலும், தேவர்களாலும்,  விலங்குகளாலும், கர்ப்பப்பையில் பிறந்த எந்த உயிர்களாலும், ஆயுதங்களாலும், வீட்டிலும், வெளியிலும், இரவிலும் பகலிலும், மண்ணிலோ விண்ணிலோ எனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கிக் கொள்கிறான். 

மூவுலகங்களையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவருகிறான்.  தன் தம்பியைக் கொன்ற விஷ்ணுவைக் கொன்று பழிதீர்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாய் இருக்கிறான். 

அவனது மனைவி பெயர் கயது. அவள் விஷ்ணு பக்தை. இவர்களுக்கு பிறக்கும் நான்காவது ஆண் குழந்தையே பிரகலாதன்.  சதா விஷ்ணுவின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறான். 

எனவே பிரகலாதனைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு தோற்று போகிறான் ஹிரண்ய கசிபு.  முடிவில்  தூணை பிளந்து கொண்டு மகாவிஷ்ணு மனிதனும் அல்லாது விலங்கும் அல்லாமல் மனித உடலில் சிங்கத் தலையுடன் நரசிம்ம அவதாரம் எடுத்து வருகிறார். 

இரவும்  பகலும் சந்திக்கும் அந்தி வேளையில், வீடும் இல்லாமல் வீதியும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்து, வானும் இல்லாமல் பூமியும் இல்லாமல்,  அவனை தன் துடையில் வைத்து கூரிய நகங்களாலேயே அவன் வயிற்றைக்கிழித்து,  குடலை உருவி  கொன்றொழிக்கிறார்.

ஹிரண்ய கசிபுவிற்கு பிறகு  ஆஹ்லாத் என்ற சகோதரனை அசுரலோகத்திற்கு  அரசனாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறான் பிரகலாதன். ஆனால் முடிவில் பிரகலாதன்  அசுரலோகத்தின் அரசனாகிறான். ஒரு நல்ல அரசனாக நேர்மையான தலைவனாக ஆட்சி செய்கிறான். அவனது மனைவி திருதியை என்பவள்.

இவர்களுக்கு பிறக்கும் மகன் வீரோசனன். அசுர குரு சுக்ராச்சாரியாரிடம்  கல்வி கற்கிறான்.  மிகவும் திறமைசாலியாக திகழ்கிறான். கடுமையான தவங்கள் இயற்றி அரிய பல வரங்களைப் பெறுகிறான். 

தன் தந்தை போலன்றி தன் பாட்டனார் ஹிரண்யனைப் போல் அசுர குணமுள்ளவனாக இருக்கிறான்.  சூரியனை எண்ணி தவமிருக்கிறான். அவன் தவத்தின் தீவிரத்திற்கு மகிழ்ந்த சூரியன் வீரோசனனுக்கு தங்கத்திலான கிரீடம் ஒன்றைத் தருகிறார். அந்தக் கீரிடத்தை அணிந்திருக்கும் போது  அவனுக்கு மரணம் என்பது நிகழாது.

ஆனால் கிரீடம் இல்லாதபோது எவரேனும் அவன் தலையில் கைவைத்தால் அக்கணமே அவன் தலைவெடித்து மரணம் சம்பவிக்கும். ஆனால் வேறு எந்தக் காரணத்தினாலும் அவனுக்கு மரணம் சம்பவிக்காது.  எனவே உறங்கும் வேளைத் தவிர அவனது தலையில் கிரீடம் இருந்து கொண்டேயிருந்தது.

(வீரோசனன் விசாலாக்ஷி என்ற தேவாம்பாளை மணம் செய்து கொள்கிறான்.  இவர்களுக்கு பிறக்கும் குழந்தையே மகாபலி.)

பிரகலாதன் தன் மகனை அரசனாக்கி விட்டு சந்நியாஸம் மேற்கொள்கிறார்.

வீரோசனன் தனது வலிமையாலும் , கர்வத்தாலும் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்கிறான். அசுரனின் தலையில் கிரீடம் இல்லாத போது அவன் தலையில் கைவைத்து அவனைக் கொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை. 

 பரம் பொருளே மோகினிப் பெண்ணாய் வந்து அவனை மோகம் கொள்ள வைத்து,  மதிமயங்கிய வேலையில்,  அவனே அவன் தலையில் கை வைத்து உயிரிழக்க வைக்கிறார். 

அவனுக்கு பிறகு அவனது மகன்  மகாபலி அசுரர்களின் மன்னனாகிறான்.  சோணபுரத்தை சீரும் சிறப்புமாய் ஆட்சிசெய்கிறான்.  மகாபலி தன் பாட்டனாரைப்போல் விஷ்ணுபக்தனாகத் திகழ்கிறான். விஷ்ணுவை வணங்குவதோடு விஷ்ணு பக்தர்களையும் உபசரித்து மகிழ்கிறான். 

அதனால் விஷ்ணுவின் அடியவர்களான அந்தணர்கள் , மகாபலியின் சிறப்புக்காக விஸ்வஜித் என்ற யாகத்தை நடத்துகின்றனர்.   அதன் பலனாக  வானில் பயணம் செய்யும் வண்ணம் தங்கமயமான ரதமும், வெண்ணிறக்குதிரையும், சிம்மக் கொடியும், வில்  மற்றும் அழகான கவசமும்  மகாபலிக்குக் கிடைத்தது. 

மகாபலி வித்யாவதி என்ற குலமகளைத் திருமணம் செய்து கொள்கிறான்.  (அவர்களுக்கு பிறக்கும் மகனுக்கு   பாணாசுரன் என்று பெயர் சூட்டுகின்றனர்.  தந்தையின்  யாகப் பயனால் ஆயிரங்கரங்கள் கரங்கள் கொண்ட வலிமையோடு பிறக்கும் அவனே  பிற்காலத்தில்  சிறந்த சிவ பக்தனாகத் திகழ்கிறான்.)  

மூவுலகமும் வியக்கும் வண்ணம் மகாபாலியின் ஆட்சி திகழ்ந்தது. மாதம் மும்மாரி பொழிந்தது. முப்போகம் விளைந்தது. மக்கள் செல்வாக்காய்  வாழ்ந்தனர். நீதியும் நேர்மையும் மிக்க மன்னனின் ஆட்சியில் கள்ளர்கள் பயமின்றி மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். 

வெளியில் செல்லும் போதும் யாரும் தங்கள் கதவுகளைக் கூடப் பூட்டிவிட்டுச் செல்வதில்லை. காரணம் திருடருக்கு அந்நாட்டில் வேலையில்லை. நாடு செல்வச் செழிப்பாக விளங்கியது. அனைத்து மக்களுக்கும் பலியின் ஆட்சி பொற்காலமாக அமைகிறது. வறுமையில்லை. நோய்நொடியில்லை. அமைதியும் சந்தோஷமும் எங்கும் நிலவுகிறது.  

அசுரகுரு சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படியும்,  மந்திரிகளின் ஆலோசனைப்படியும் , பாதாள உலகம் , தேவலோகத்தையும் கைப்பற்றுகிறான் மகாபலி. இந்திரன் தேவர்களோடு தேவலோகத்தை விட்டு ஓடி ஒளிகிறான்.

சுக்ராச்சாரியார்  மகாபலியிடம் ஆசைவார்த்தைக்   கூறி,  நீயே இனி இந்திரப் பதவியில் அமரத் தகுதியானவன் ,  அஸ்வமேத யாகம் செய்வோம் என்று கூறுகிறார்.  நர்மதைக் கரையில் 99 யாகம் வெற்றிகரமாக முடிகிறது. தேவலோகத்தில்  நூறாவது யாகம் வெற்றிகரமாக முடிந்தால் மகாபலியை எவராலும் வெல்ல முடியாது. இந்திரப் பதவியிலிருந்து அவனை யாராலும் அகற்றமுடியாது. நூறாவது யாகம் நடைபெறுகிறது.

காஸ்யப முனிவரின் மனைவியும், இந்திரன் மற்றும் தேவர்களுக்கெல்லாம் தாயான , அதிதி கவலையுறுகிறாள். தன் பிள்ளைகளும் அவர்களின் குழந்தைகளும் காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து அவதிப்படுவதைப் பார்த்து அவள் மனம் கலங்குகிறது.

மகாபலியின் யாகம் நிறைவேறினால் அவன் இப்போது பெற்ற வெற்றியும் தேவலோகவாசமும் நிரந்தரமாகிவிடுமே, பிறகு தேவர்களின் கதி? 

தவத்திலிருந்த காஸ்யபர் , குடிலுக்கு திரும்பி வருகிறார். மனைவியின் கவலைப்படர்ந்த முகத்தை பார்த்து காரணத்தை உணர்ந்து கொள்கிறார். 

தேவர்களும் அவரின் பிள்ளைகளே , அசுரர்களும் அவரின் பிள்ளைகளே!  அவர் யாருக்கு ஆதரவாக பேசுவது.

அதிதி! கவலையைப் போக்க ஒரு வழியிருக்கிறது. பிரமன் எனக்கு உபதேசித்த பயோவிரதத்தை கடைபிடி, அற்புதமான விரதம்.  யாகங்கள் செய்வதற்கு இணையான விரதம். இதை கடைபிடித்தால் உன் எண்ணம் நிறைவேறும். நல்லவையே நிகழும் என்கிறார்.

விரதம் பற்றி மனைவிக்கு விளக்குகிறார்.

பங்குனிமாதம் வளர்பிறை பிரதமை நாளில் ஆரம்பித்து திரயோதசி வரை பனிரெண்டு நாட்கள் கடைபிடிக்க வேண்டும். விரத காலத்தில்  அதிகாலையில் தினமும் நீராடி, நித்யகர்மாக்களை முடித்து, சூரியன், அக்னி ,பூமி , பரிசுத்தமான தீர்த்தம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறைவனை ஆவாஹனம் செய்து பக்தியுடன் துதிக்க வேண்டும். 

பிறகு துதிப்பாடல்களால் பகவானை வழிபட்டு, அர்க்யம், பாத்யம் ஆகியவற்றால் பூஜித்து, பால் அபிஷேகம் செய்து  ,வஸ்திரம் சந்தனம், புஷ்பம், அட்சதை தூப தீபங்களால் உபசாரங்கள் செய்து, துவாதசாக்ஷர மந்திரத்தை அர்ச்சித்து வழிபட வேண்டும். பால் அன்னம் நிவேதனம் செய்வது சிறப்பு. 

விரதகாலத்தில் மகாவிஷ்ணுவை மூல மந்தரம் ஜபித்து வழிபடுவதும், ஏழைகளுக்கு உணவளிப்பதும் சிறப்பு. மூன்றுவேளை நீராடி பாலை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, வாசுதேவனையே தியானித்து வரவேண்டும். 

இப்படி தினமும் வழிபட்டு கடைசி நாளில் பகவானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, பாலில் கலந்த அன்னம் சமர்ப்பித்து பூஜையை முடிக்க வேண்டும் , தேவி, சகல யாகங்களும் செய்த பலனைத் தரும் இது. நீ முறைப்படி கடைபிடித்து பகவானை வழிபடு. நல்லது நடக்கும் என்கிறார்.

மிகுந்த பக்தியுடன் முறைப்படி பயோ விரதத்தை கடைபிடிக்கிறாள் அதிதி.   அதற்கான பலன் அவளுக்கு கிடைத்தது. அவளது வயிற்றில்  ஒரு அவதாரம்  அவதரித்தது.

தேவர்களின் குரு பிரகஸ்பதி, ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந்நாராயணனின் முன் நின்றுகொண்டிருக்கிறார். தேவகுருவின் கண்களில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு பகவான் புன்முறுவல் பூக்கிறார்.

தேவ குருவே! மகாபலி பக்திமான்! தன் குலம் பொருட்டு  ஒரு தலைவனாக அவனது கடமைகளைச் செய்கிறான். அவன் செயல்களில் என்னால் குற்றம் காணமுடியவில்லை. 

பிரகலாதனின் வம்சம் அவன். பிரகலாதனிடம் நான் ஒரு வரம் கொடுத்திருக்கிறேன். அவன் வம்சத்தில் வந்த எவரையும் நான் அழிப்பதில்லையென்று. ஆனாலும் அவன் புண்ணிய பலன்களை முடிவுறும் காலம் நெருங்குகிறது.  

இந்த உலகம் முறைப்படி இயங்கிட, நான் அவதாரம் செய்ய வேண்டிய காலமும் நெருங்குகிறது. நீங்கள் செல்லுங்கள். இனி நடப்பது தேவர்களுக்கு நன்மையைத் தரும் என்கிறார்.  நிம்மதியான மனதுடன் தேவகுரு செல்கிறார்.

காஸ்யபருக்கும் அதிதிக்கும் ஒரு ஆண்  குழந்தை பிறக்கிறது.  பிறந்த குழந்தை உடனே  வாமனனாய் குள்ள உருவில் பிரம்மச்சாரியாய் மாறி  நிற்கிறது. 

 ஒரு ஓலைக் குடையுடன் இன்னொரு கையில் சிறிய கமண்டலத்தை ஏந்திய வண்ணம் , மகாபலி யாகம் செய்யும் யாகசாலையை நோக்கிச் செல்கிறார் வாமனனாய் அவதாரம் எடுத்த விஷ்ணு பெருமான்.

யாகம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய தறுவாயில் , யாக சாலையை நோக்கி நடந்து வரும் அந்தணச் சிறுவனைப் பார்த்து மகாபலிக்கு வியப்பேற்படுகிறது.  குள்ளனாய் இருந்தாலும் அவன் முகத்தில் தெரியும் ஒளி  மகாபலியை ஆச்சரியப்படுத்துகிறது.

வரவேற்று அமர வைக்கிறார்.  வந்த நோக்க்ம் குறித்து வினவுகிறார். அரசே தாங்கள் யாகம் செய்வதைக் கேள்விப்பட்டேன் தங்களிடம்  தானம் கேட்க வந்தேன்.

மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு என்ன வேண்டும்? தாங்கள் எதை விரும்பினாலும் தருகிறேன்.

மன்னா! எனக்கு பேராசை ஒன்றும் இல்லை. என் காலடி அளவில் மூன்றடி நிலம் மட்டுமே தந்தால் போதும், நான் பெரிதும் மகிழ்வேன். வாமனச் சிறுவன் கேட்கும்போதே, 

குரு சுக்ராச்சாரியார் இடைமறித்து மகாபலியைப் பார்த்து சைகை செய்கிறார்.
மன்னிக்கவும், தாங்கள் காத்திருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என்று வாமனரிடம் கூறிய  மகாபலி குருவினை நெருங்குகிறார்.

மகாபலி, வந்திருக்கும் சிறுவனைப் பார்ததால் சாதாரணமானவனாய் தெரியவில்லை. எனக்கென்னவோ தேவர்களுக்கு உதவவே குள்ள உருவில் மகாவிஷ்ணுவே வந்திருப்பதாகத் தோன்றுகிறது.  அந்த அந்தணச் சிறுவனை நாளை வரச்சொல். நம் யாகம் முதலில் நிறைவேறட்டும்.

மன்னிக்கவும் குருவே!  தானம் தருவதாக வாக்களித்துவிட்டேன். நான் வாக்கு மீற மாட்டேன். வந்தது மகாவிஷ்ணு என்றால் அது எனக்குப் பெருமைதான். பரந்தாமனுக்கே இந்த மகாபலி தானம் வழங்கினான் என்ற சிறப்பு எனக்குச் சேரட்டும்.

பொறு மகாபலி, நான் உன் நல்லதுக்குத்தான் செய்கிறேன். உன்பதவி அந்தஸ்து எல்லாமே பறி போய்விடும். அசுரர்குலத்துக்கே நீ துன்பத்தை ஏற்படுத்தப் போகிறாய். அசுர குரு என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

என்னைத் தடுக்காதீர்கள் குருவே, என்று கூறி தானம் செய்ய  நீர் வார்க்க, கமண்டல நீரை கையிலெடுக்கிறார் மகாபலி, 

சுக்ராச்சாரியார் வண்டாக மாறி கமண்டலத்தின் நீர் வெளியேறும் குழாயில் உட்புகுந்து நீர் வெளிவராமல் அடைத்துக்கொள்கிறார். 

வாமனச் சிறுவன் ஒரு சிறு குச்சியை எடுத்து குத்துகிறான். வண்டாக இருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணில் அக்குச்சிப் பட்டு வலியால்  அவசரமாய் வெளியேறுகிறார்.

தானம் வழங்கப்பட்டுவிடுகிறது.  வாமன சிறுவன் விஸ்வரூபம் எடுக்கிறான். மகாவிஷ்ணுவாகக் காட்சியளிக்கிறான்.

தனது ஒரு அடியில் பூலோகத்தையும் இரண்டாவது அடியில் மேலுகங்களையும் அளக்கிறார் விஷ்ணு. ‘ மகாபலி மூன்றாவது அடியை எங்கே அளப்பது?’  கேட்கிறார் நாரயாணன்.

ஸ்ரீமன் நாராயணனை வணங்கிய மகாபலி.  எம்பெருமானே!  தங்கள் திருவடியை என் சிரசிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று மண்டியிட்டு பணிகிறார்.  

மகாபலியின் சிரசில் காலடி வைத்த மகாவிஷ்ணு, அவரை பாதாள உலகம் அனுப்புகிறார்.

 இவ்வாறு மகாவிஷ்ணு தேவர்களை காப்பாற்றி, இந்திரனுக்கு அவன் பதவியை மீட்டுக்கொடுத்தார்.

வேதியா! இதுவரை மகாபலி சக்கரவர்த்தியின் கதையைக் கேட்டாய். மகாபலி ஒரு நேர்மையான அரசன் என்பதை அறிந்தோம். அதோடு பக்தி மிக்கவன். முறைபடி யாகங்களைச் செய்கிறான். 

தன் யாகங்களின் மூலம் பெற்ற வலிமையால் மூவுலகங்களையும் வெற்றி பெறுகிறான். ஒரு அரசனாக அவன் செய்த செயல்களில் தவறில்லை. குடிமக்கள் யாரையும் அவன் இம்சிக்கவில்லை. இறுதியில் தன் வாக்குத் தவறாமல் மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கு குரு சுக்ராச்சாரியாரின்  எச்சரிக்கையையும் மீறி தானமளிக்கிறான்.  

ஆனால் மகாவிஷ்ணு தன் பக்தனையே இப்படி ஏமாற்றலாமா?  வாமன வடிவில் வந்து தானம் பெற்று பின் எல்லாலோகங்களையும் மகாபலியிடமிருந்து நேர்மையற்ற முறையில் அபகரிக்கலாமா?  இது சரியா? தவறா? 

என் கேள்விக்கு சரியானப் பதில் தெரிந்திருந்தும் நீ சொல்லாமல் மௌனம் சாதித்தால் உன் தலை சுக்கல் நூறா£க வெடித்துச் சிதறும்!

‘சரி, சரி பொறு வேதாளமே! உன் கேள்விக்கான பதிலை சொல்ல முயற்சிக்கிறேன்’ என்ற வேதியன் வேதாளத்தின் கேள்விக்கு பதில் கூறத் தொடங்குகிறான்.

“ஹிரண்யகசிபு ஒரு அசுரர் குல மன்னன். அசுரலோகத்தை ஆட்சி செய்கிறான். பிரம்மனை எண்ணி தவமிருந்து பலவரங்களையும் பெறுகிறான். மூவுலகங்களையும் ஆட்சிசெய்கிறான். இந்திரனையும் இந்திராணியையும் சிறைவைக்கிறான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்துகிறான்.

பிறகு நானே கடவுள் என்று இறுமாப்பு எழுகிறது அவனுக்கு ,  இரண்யாய நமஹ என்று தன்னை வழிபடும்படி கூறுகிறான்.  அசுரர் தலைவனான அவன் பெற்ற சக்திகள் யாவும் படைக்கும் கடவுளால் வழங்கப்பட்டது. ஆனாலும் எல்லோரையும்விட தானே  சக்திமிக்கவன் என்ற அகங்காரமே அவனுக்கு அதிகமாக இருக்கிறது.  

அவனது மகன் பிரகலாதன் விஷ்ணுவின் மேல் பக்தி பூண்டு திகழ்கிறான். நாராயணாய நமஹ என்றே ஜபித்து¢ வருகிறான். தன்னை வழிபடும்படி  பிரகலாதனை வலியுறுத்துகிறான் இரண்யன்.  

எல்லாம் வல்ல கடவுள் ஸ்ரீமன்நராயணன் ஒருவரே, நீங்களும் அவரை வழிபடுதலே முறை. உங்களின் செயல்பாடுகள் தவறு என்று கூறுகிறான் பிரகலாதன். இதனாலேயே  அவனைக் கொல்ல பல முயற்சிகளை மேற்கொள்கிறான் இரண்யன். தன் மகனையே கொல்லத்துணிந்து தீய குணங்களின்  வடிவாய் நிற்கும் ஹிரண்யனை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொல்கிறார்.

பிரகலாதனின் பக்தியால் மனம் நெகிழ்ந்து பிரகலாதனுக்கு வரங்கள் பல தருகிறார். அவனது வம்சத்தை இனி வதைக்க மாட்டேன் என்றும் அருளுகிறார். 

பிரகலாதனுக்கு பின் அவனது மகன் வீரோசனன் அசுரர்குல அரசனாகிறான். இவனும் பிரம்மனையும், சூரியனையும் வழிபட்டு வரம்பல பெற்று, தன் பாட்டனாரைப்போல் அகங்காரம் கொண்டு அலைகிறான். தேவர்களை சிறைப் பிடிக்கிறான். தேவஅசுரப் போர்க்காலத்தில்  நாராயணனின் தந்திரத்தால் தானே தனக்கு கொள்ளி வைத்துக் கொள்கிறான்.

அவனது மகன் மகாபலி விஷ்ணு பக்தி கொண்டு திகழ்கிறான். ஆனாலும் அசுரர் குல குரு சுக்ராச்சாரியார் மற்றும் தன் மந்திரிகளின் ஆலோசனைகளால் மூவுலகங்களையும் வென்றெடுக்கிறான். 

நாடிழந்த தேவர்கள் அல்லல் படுகிறார்கள்.  மகாபலி தன் நாட்டைமட்டும் நல்லபடி ஆளவேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி மூவுலகங்களையும் வென்றது, அவன் உள்ளத்தின் பேராசையையும், சுயஅறிவின்றி மற்றவரின் தூண்டுதல்களின் பேரில் அவன் செயல்படுவதாகவும் இங்கே தெரிய வருகிறது. 

மகாபலி விஷ்ணுவின்  மேல் கொண்ட பக்தியின் காரணமாகவே அவனுக்கு புண்ய பலன்கள் பல கிட்டுகிறது. அவனது ஆட்சி நேர்மையாய் நடக்கிறது.  மகாவிஷ்ணுவே அவனது பக்தியை மெச்சி இந்திரப்பதவியை அவனிடம் அளித்ததாக புராணமொன்று கூறுகிறது.  

மகாபலி தன் குருவின் ஆலோசனையின் பேரில் செய்யும் யாகம் வெற்றிகரமாக நிறைவேறினால் , தேவர்கள் என்னென்றும் நிரந்தரமாக அல்லல்பட நேரிடும் என்கிற நிலை உருவாகிறது.  

மகாபலி விஷ்ணு பக்தன்தான். நேர்மையான அரசன்தான் ஆனால் அவன் தந்தை வீரோச்சனனும், வீரோச்சனனின் பாட்டனார் ஹிரண்யனும்   தேவர்களையும் , முனிவர்களையும் கொடுமைப்படுத்தியவர்களாகவே இருந்தார்கள்.  

மகாபலியின் யாகம் மூலம் மூவுலகமும் அசுரர்குல ஆதிக்கத்தின் கீழ்நிரந்தரமாய் வந்து விட்டால், எதிர்காலத்தில் வரும் அசுரகுல மன்னன் மகாபலி போல் சிறந்த அரசனாக இருப்பான் என்பதற்கு நிச்சயத் தன்மை எதுவும் இல்லை.

அனைத்தும் அறிந்த பரந்தாமன் எதிர்காலத்தில் நடப்பதையும் அறிந்திருக்கிறார்.  மகாபலியின் மகனான பாணாசுரன் தன் தந்தையின் குணம் கொண்டவனல்ல , அசுரர்களின் முரட்டுத் தனம் அவனிடம் அதிகமாய் இருக்கிறது. 

அவனால் தேவர்களும் , முனிவர்களும் , மகக்ளும் துன்பப்படுவார்கள்  என்பதையும் அவர் அறிகிறார். எனவே மகாபலியின் யாகம் நிறைவேறாமல் இருக்கச் செய்வதோடு , மூவுலகங்களிலிருந்தும் அவனது ஆட்சியை  அகற்ற முடிவுசெய்கிறார்.  

இந்நிலையில் தேவகுருவின் வேண்டுதலும், அதிதியின் வழிபாடும் நிகழ்கிறது. அவர்களுக்கும்  அருள் செய்ய வேண்டிய கடமை வருகிறது.

விஷ்ணுவின் செய்கை எப்போதும் சரியாக   இருக்கிறது என்பது  இப்போது நமக்கு விளங்குகிறது.

மகாபலி, விஷ்ணுவின் தீவிர பக்தன். அவனுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டியருள விருப்பம் கொள்கிறார்.  ஒரு பக்தன் பெறுகின்ற மிகப்பெரிய பேறு இது. மகாவிஷ்ணு தன் விஸ்வரூபத்தை முதன் முறையாக மகாபலிக்கே காட்டியருள்கிறார். (பின்னர் எடுக்கும் கிருஷ்ண அவதாரத்தில் அர்ச்சுனனும், கர்ணனும் அவரது விஸ்வரூபத்தை கண்டுமகிழ்கிறார்கள்.)

மகாபலி தீவிர ஹரிபக்தன், அவனை அழித்து யாகத்தை தடுத்த நிறுத்த விஷ்ணுபிரான் விரும்பவில்லை. அதோடு மகாபலியின் பாட்டனாரான, தன் பக்தன் பிரகலாதனிடமும் ஏற்கனவே அவனது வம்சத்தை அழிக்க மாட்டேன் என்ற வரத்தையும் கொடுத்திருக்கிறார். எனவே மாற்றுருவில் அவதாரம் எடுத்து மகாபலியிடம் வருகிறார்.

அதோடு சுயரூபத்தில் விஷ்ணுபிரான் வந்திருந்தால்,  தான் வழிபடும் தெய்வத்திற்கே தானம் அளிப்பதை மகாபலி விரும்ப மாட்டான். 

அனைத்தையும் அவர்காலடியில் சமர்ப்பித்துவிடுவான். எனவே விஷ்ணு தன் பக்தனின் சிரசில் திருவடி பதித்து அவனுக்கு   அருள்புரியும் நோக்கில் வாமன அவதாரத்தில் வந்து மூன்றடி மண் கேட்கிறார்.   பிறகு விஸ்வரூபதரிசனம் காட்டுகிறார். மூவுலகையும் மகாபலியிடமிருந்து மீட்டெடுக்கிறார்.  பிறகு அவனது சிரசில் காலடி வைத்து அருள்புரிகிறார். 

பரம்பொருளுடன் இணைவதே  ஆன்மா பிறவியெடுத்ததன் நோக்கம். மகாபலியின் தூய ஆன்மா பகவானின் காலடி பட்டு தன்னையுணர்கிறது. அதன் பின்   மோட்சத்தை  எய்துகிறது என்பதை புராணம் வழிநாம் அறிய முடிகிறது. 

மகாபலிக்கு மோட்சத்தை அளித்த பரம்பொருள், நிரந்தரமாய் பாதாள உலகத்தை ஆளும் வரத்தையும், வருடம் ஒருமுறை தன் நாட்டிற்கு சென்று தன் குடிமக்களை காண்டு வரும் வரத்தையும் அருளுகிறார். 

அந்நாளையே கேரள மக்கள் திருஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். பாதாள உலகத்தை ஆளும் போது மகாபலி ராஜயோகத்தில் ஈடுபட்டு ஆத்மநிவேதன பூஜையின் மூலம் இறைவனோடு ஒன்றுவதாகவும் புராணமொன்று கூறுகிறது.

பரம்பொருளான மகாவிஷ்ணுவின் செயல்பாடுகள் எதுவானாலும் அது எல்லா உயிர்களுக்கும் நன்மைகளை செய்வதற்காகவும், தீயவர்களை அழித்து, நல்லவர்களை காப்பதற்காகவும்தான் என்பதை நாம் உணரமுடிகிறது. 

அவரது செயல்களில்  சரி எது, தவறு எது? என்று ஆராய்ந்து பார்க்கும் சக்தி நம் சிற்றறிவுக்கு இல்லை, அப்படி ஆராய்வதும் மடமை. அவர் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதே நான் முடிவாய் கூறும் பதிலாகும்.”  வேதியன் கூறி முடிக்கிறான். 

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டு¢¢ம் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.

மதிவாணன் 

    

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...