ads

Thursday 5 April 2012

TAMIL FACEBOOK / தமிழ் பேஸ்புக்

நடக்கும் என்பார் நடக்காது,  நடக்காது என்பார் நடந்து விடும்.  இந்த பாட்டு வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்தது.  அதன் நிர்வாக மேலாளர் செய்தியாளர்களிடம்,   2012 மார்ச் மாதத்துடன் பேஸ் புக் வலைதளத்தை மூடப்போகிறோம் என்றார்கள்.  இந்த செய்தி அவர்களின் அதிகாரபூர்வ வலை தளத்திலும் வெளியானது. 

உலகம் முழுவதும் இதற்கு ஆதரவாகவும்,  அடக்கடவுளே  என்று அதிர்ச்சியாகவும் செய்தி வெளியிடப்பட்டது. 

இந்த செய்தியை படித்த நானும் மூடுவிழவை நோக்கி போகிறது பேஸ் புக் என்று ஒரு கட்டுரையும் வெளியிட்டேன். 

ஆனால் இப்போது இது அத்தனையும் பொய்யாகி போய் விட்டது.  இப்போது பேஸ் புக் புது அவதாரம் எடுக்கிறது. 

உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்கள் நண்பர்களுடன்  தாய் மொழிலேயே,  பேசிக்கொள்ள வசதி செய்து தருகிறது. 

அந்த வகையில் இந்திய வட்டார மொழிகளில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிகளில் பேஸ் புக் இனி   செயல் படும். 

நான்  ஆங்கிலத்திலேயே தான் பேசுவேன் என்று அடம் பிடிப்பவர்களை விட்டுவிட்டு,  தமிழில் பேச ஆசை படுபவர்கள் மொழி மாற்றம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

இனி குட் மார்னிங் என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை.  ஆழகான தமிழில் காலை வணக்கம்  என்று சொல்ல முடியும்.  

சரி... பேஸ் புக் நிறுவனத்திருக்கு திடீர் ஞானோதையம் வந்ததற்கு காரணம் என்ன?

வருமானம் தான் காரணம்/

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான  மக்கள் பேஸ் புக்கில் உறுப்பினராக இருக்கிறார்கள்.  ஆனால் எந்த கட்டணமும் செலுத்துவதில்லை.  ஆயுள் காலம் முழுதும் இலவச சேவை தான். 

இவ்வளவு பெரிய வலை தளத்தை இலவசமாக தர பேஸ் புக்கிற்கு எவ்வளவு பெரிய மனசு.

இப்படித்தான் நினைக்க தோன்றும்.  

ஆனால் நேரிடையாக உறுப்பினர்களிடம் இருந்து பணம் பெறுவதில்லையே தவிர,  உங்கள் முக பக்கத்தில் வரும் விளம்பரத்திற்கு அந்த நிறுவனங்கள் விளம்பர தொகையை தருகிறது. 

கூகுள் சர்ச்சில் நீங்கள் தேடி எடுக்கும் படங்களுக்கும்,  செய்திகளுக்கும் கூகிள் பணம் தருகிறது. 

இது என்ன கூத்து.  நாம் தானே செய்தியை போய் படிக்கிறோம்.   முறையாக நாம்தானே பணம் தர வேண்டும்.  

உண்மைதான்.  ஆனால் இதற்கு பின்னால் பல அம்சங்கள் இருக்கிறது.  உதாரணமாக நீங்கள் AIRCELL இன்டர்நெட் பயன் படுத்துகிறிர்கள் என்று வைத்து கொள்வோம். இன்டர்நெட்டிற்கு மாதாந்திர கட்டணம் செலுத்தி இருப்பிர்கள்.  

நீங்கள் பணம் செலுத்திய காரணம் என்ன?. 

வலைதள வசதியை பெற.  

அந்த வலை தள வசதி  எதற்கு?

அங்கே கொட்டி கிடக்கும் கோடிக்கணக்கான தகவல்களை போய் பார்க்க,  தேவை பட்டதை படிவம் எடுக்க,  பிடித்த படங்களை காப்பி செய்ய போறீங்க.  

இந்த வசதியை யார் செய்து தருகிறார்கள்.  

கூகிள்.  

கூகுள் வலை தளத்திற்கு இத்தனை செய்திகள் எப்படி வந்தது.  

உலகத்தின் பல இடங்களில் இருந்தும் பலர் பல தகவல்களை  தங்கள் வலையில் பதிவு செய்கிறார்கள். 

ஏன்?  அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?  இத்தனை கஷ்ட்ட பட்டு படங்களையும்,  தகவல்களையும், விடியோவையும் இலவசமாக தர.  அதனால் அவர்களுக்கு என்ன பலன்.

இதுதான் பாயின்ட். இந்த தகவல்களை தரும் வலை தளத்திருக்கு கூகுள் பணம் தருகிறது. 

இந்த சேவையை  பெற  நான் முன்னமே AIRCELL க்கு பணம் கட்டி விட்டோம்.  அந்த பணத்தில் ஒரு பகுதியை கூகுள் நிறுவனத்திற்கு AIRCELL கொடுக்கிறது.  அதை பெற்ற கூகுள் வலைத்தளம் நடத்தும் பலருக்கும் பிரித்து கொடுக்கிறது. 

இப்போ புரியுதா.  நாம் இலவசமாக ஒன்னும் இந்த வலை தள வசதியை பெற வில்லை.  மறைமுகமாக பணம் செலுத்தி விட்டோம் என்று. 

எப்படியோ .... அவர்களுக்கு வருமானம் பெருகியது.  அதனால் பேஸ் புக்கின் ஆயுள் காலமும் அதிகமாகி விட்டது.  இல்லாவிட்டால் நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய முட்டாள்தனமே பேஸ் புக் ஆரம்பித்ததுதான் என்று அல்லவா அதன் நிறுவனர் சொன்னார்.  

போகட்டும்.  இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த வசதி வந்து விடும்.  மனதுக்கு பிடித்தவர்களோடு பேசலாம்.  ஜாமாய்ங்க நண்பர்களே.  




No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...