ads

Saturday 21 April 2012

கேது பகவான்/ KETHU PAKAVAAN

கேது....

அரக்கர் இனம் என்று அரிச்சுவடி சொல்கிறது. கூடவே பாம்பின வம்சம் என்பதே உண்மை.  அந்த வகையில் பாம்பின ராகுவின் உடன் பிறந்த பங்காளி கேது. இல்லை இல்லை.....அண்ணன் ராகு, தங்கச்சி கேது.

உம்மைத்தானே ராகு ஆண் பாலாம். கேது பென்பாலாம்.  அண்ணன் ராகு கருப்பு என்றால், கேது சிகப்பி. இந்து ஜோதிட  சாஸ்த்திரத்தில் இதற்குரிய இடம் ஒன்பது. 

பின்னால் இடம் பிடித்தாலும் கண்ணால் காண முடியாத அருப உருவம் கொண்டது. இ.பி.கோ மாதிரி ஜோதிட சட்டத்தின் எந்த பிரிவும் கேதுவுக்கு நற்சான்று வழங்கவில்லை.

yes
 ஆதி நூல்கள் அனைத்துமே அசால்ட்டாய் சொல்கிறது.  கேதுவா... அவன் கெட்டவன். அந்த வகையில் ராகு ஒரு ராஜ வீட்டு கன்னுக்குட்டி. கொடுப்பதில் இருக்கும் மும்மரம், கெடுப்பதில் இருக்கும் தீவிரத்தை விட குறைவுதான்.

இருந்தாலும்...நல்லவன், யோகவான், செல்வத்தை அள்ளி தருபவன் என்று ராகுவின் தன்மையே வேறு. ஆனால் கேதுவுக்கு அந்த கொடுப்பினையே இல்லை. மாஸ்டர் டிகிரி கெட்டவன் என்ற பட்டம் தான்.

சரி..கேது நல்லது செய்யுமா செய்யாதா?

ஏன்...செய்யுமே...பொதுவாக மறைவுஸ்தான கேதுவுக்கு மரியாதையே தனி. ஆனால் ஏட்டில் இருக்கும் கேதுவு மட்டும் இந்த சட்டம் செல்லாது. கெட்டவன். ரெண்டும் அப்படிதான்.

ஏன் என்ன செய்யும்?

பணத்திலே புரளுகிற மாதிரி ஒரு பாவனை தெரியுமே தவிர உண்மை இல்லை. பாக்கெட் மணிக்கு எப்போதுமே பற்றாக்குறைதான். 12 இல் இருந்தாலும் நிலைமை மாறாது.

பிளே கிரவுண்ட் அளவுக்கு வாழக்கையில் ரவுண்ட் கட்டி அடிக்கும்.

நல்லதாவா?

அட உங்க வீட்டிலே தங்கம் விலையோ.... கேதுவா...நல்லதா...நல்ல கதை போங்க. கெடுக்கிறதுக்காக கொடுக்கும் பாருங்க ராசா. அனுபவசாலிகளை கேட்டு பாருங்க தெரியும்.

ஆனால் பாவர்கள் சாப விமோச்சனம் பெறுகிற 3 .6 ,11 ஆக இருந்தால் நிலவரம் முன்னேற்றம்தான். அந்த இடத்தில் போதுமான அளவிற்கு போதிமரம் இருக்குமோ என்னமோ, பாவத்தன்மையை குறைத்து கொண்டு சுபதன்மையை விருத்தி செய்கின்றன.

மேலும் சுபர்கள் பார்வை பெற்ற கேது கொடுக்கா விட்டாலும் கெடுப்பதில்லை. ஆனால் சின்ன வயசு கேது திசைக்கு சிக்கல் அதிகம். பிள்ளையை பெற்ற மகாராஜனுக்கு தொல்லைகள் அதிகம்.

வாலிபத்தில் வரும் கேது திசை ஒரு மார்க்கமானது. காதல் சாம்ராட், காதல் இளவரசு,  காதல் சிற்றசு, காதல் ஜமீந்தார், காதல் பண்ணையார் இப்படி எல்லாமாய் உலாவருவார்.

பள்ளி பட்டிப்பு காலமாக இருந்தால் சொந்த புத்தி மறைந்து மந்த புத்தி வந்து விடும். படிப்பில் பாஸ் பன்றது பார்டர் மார்க்குலதான்.

ஆனால் முதுமையில் வரும் கேது திசை பக்தி மார்க்கத்தை தரும். வீட்டு நிர்வாகத்தில் இருந்து விருப்ப ஒய்வு பெற வைக்கும்.

பொதுவாக கேது திசை நடக்கும் போது நல்லதல்ல என்று சொல்லக்கூடிய எத்தனையோ விஷயங்களை  சந்திக்க வேண்டி இருக்கும்.

எப்படி?

வியாதிகளால் பீடிக்க  படலாம்.கடன் தொல்லையில் சிக்குண்டு கழுத்து நெரிபடலாம். உற்ற உறவுக்குள் உரசல் ஏற்பட்டு பிரிய நேரலாம்.

சரி

செய்யாத தப்புக்கு ஐயா மாட்டிக்க நேரலாம். என்ன வாழ்க்கையது என்று விரக்கதி கொள்ளும் அளவிற்கு சோதனைகள் தொடரலாம். ஜோதிட சாஸ்த்திரத்தில் கேதுவுக்கு ஒப்படைக்க பட்ட பணி ஞானம்.

ஞானம் என்றால் பக்தி மார்க்கத்தை குறிப்பது. பற்றில்லாத வாழ்க்கையை குறிப்பது. தான்  என்ற அகந்தையை குறிப்பது. அதனால் தான் கேதுவை ஞானகாரகன் என்றும் சந்நியாசி என்றும் அழைக்கிறார்கள்.

அப்படியானால் இல்லறத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாதா?

நேரடி தொடர்பு கிடையாது. கொல்லைப்புறத்தில் புகுந்து தொல்லைகள் தருவதுண்டு.

சொல்றேன்.

பொதுவா.. பொண்டாட்டியா ஒரு பொம்பளையை வச்சுகனும்னா அதுக்கு களத்திர பாவம் தான் கண் திறக்கனும். மேலும் இத்துறைக்கு ரீஜனல் மேனேஜர் சுக்கிரன். 

தங்கள் துறை சம்மந்த பட்ட அனைத்து விஷயங்களையும்  பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் போது, இந்த சந்நியாசி கேது இடையில் புகுந்து சடுகுடு விளையாடும்.

எப்படி?

வேறன்ன...கலத்திரபாவத்தில் ஒட்க்கார்ந்து கழுத்தறுக்கும்.எப்படியும் நாற்பது தொடும் வரை நல்லதே நடக்காது.

நம்மாளுக்கு சுமார் ரகம் எல்லாம் சூப்பர் பிகரா தெரியும். ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் ஊர்வசிதான்.

அட கடவுளே அப்பறம்.

வேறென்ன செய்றது. கேதுதான் பிகரோட அப்பா மாதிரி பிகு பண்ணுவாரே.

அது சரி அப்பறம்.

சுக்கிரன் கேதுவோட நட்சத்திரத்தில் இருந்தால் திருமணம் ஆகியும் பிரம்மசாரி யோகத்தை தருவார். கணவன் மனைவி ஒற்றுமையா இருக்கிற மாதிரி ஒரு தோற்றம் தெரியுமே தவிர, உள்ளுக்குள் இருக்கும் குடைச்சல் ... வெளியில் இருந்து ஆதரவு தரும் அரசியல்வாதி மாதிரி பெரும் அவஸ்தை.

எப்ப பூகம்பம் வேடிக்கும்ன்னு சொல்லமுடியாது. சுக்கிரனை எடுத்துகோங்க. கேது சாரம் பெற்றால் கெடுதல் ஒன்றும் இல்லை. ஆனால் தாம்பத்திய உறவு மட்டும்  தாமரை இல்லை தண்ணீர் மாதிரிதான்.

ஆனால் ஆன்மீக நாட்டம் இருக்கும். கலைதொழிலில் கவனம் இருக்கும். ஆனால் சுகிரனோடு சேர்க்கை பெற்றால் சங்கதி வேறு.

என்ன?

கண்கள் எபோதுமே பெண்கள் பக்கம் இருக்கும். பலவீனமான பெண்களை சேர்த்து விட்டு இல்லாத வம்பை எல்லாம் இழுத்து விட்டுடும். ,மொத்தத்தில் கேது பொல்லாத கேது.  

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...