ads

Thursday 19 April 2012

இறைவனுக்கு வேண்டுகோள்!

இறைவா.....!

உன்னின் அம்சமே நான்.

உன்னின் மிக நுண்ணிய சிறு துகளே என் உயிர் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

என் கல்வி, என் அறிவு, என் ஆற்றல், நற்ச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் நீயே என்பதே நான் அறிவேன். 

இறைவா...

என்னை நான் தேடி கண்டுபிடித்து, உன்னிடம் அழைத்து வர வேண்டும் என்பதற்காகவே இப்பூமியில் என் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது என்பதையும் நான் அறிவேன்.

நான் நானாகவே இருக்கிறேன்.  நீ என்னுடன் இருக்கும் வரை.

பசும் புல்லை காட்டி பசு மாட்டை அழைத்து சென்று விடுவதை போல்......

அவ்வப்போது இந்த மனம் என்னை சலனபடுத்தி, அதன் போக்கிற்கே அழைத்து சென்று விடுகிறது.

சுய உணர்வு வந்த பின் நான் அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன்.

இறைவா....

உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒன்றுதான்....

எப்போதும் என்னை விட்டு விலகாதிரு.

என்னை எனக்கு ஞாபக படுத்திகொண்டு. 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...