ads

Friday 16 March 2012

படித்ததில் பிடித்தது.... காதல் கவிதைகள்

உன்னை பாத்து
கண்ணடிக்கிறார்கள்
படவா.....
நட்சத்திரங்கள்
தொடுகிறான்
தழுவுகிறான்
தூதுவேளை செய்ய வந்த
தென்றல்...
அதனால்
இயற்கையை
நான் வெறுக்கிறேன்.    -  பட்டுகோட்டை பிரபாகர். 


நான் ஒரு பிச்சைக்காரன்
உன்
வீடு வாசலில் நிற்கிறேன்
உள்ளே இருந்து
எதுவும் எடுத்து வர வேண்டாம்
நான்
ஏந்தி நிற்கும் பாத்திரத்தில்
உன்னையே போட்டுவிடு.   - மு. மேத்தா.


உனக்கென்ன...
ஒரு பார்வையை வீசிவிட்டு போகிறாய்
என் உள்ளமல்லவா
வைக்கோல்  போறாய் பற்றி எரிகிறது

உனக்கென்ன
ஒரு புன்னகையை
உதிர்த்துவிட்டு போகிறாய்
என் உயிர் அல்லவா
மெழுகாய் உருகி வழிகிறது        - மீரா


அந்தியில் மூழ்கு
நிலவை பார்
மலர் ரசி
சங்கிதம் பழகு
கவிதை வாசி
மனம் சொல்கிறது முடியவில்லை
நீ
தொலைவில் இருப்பதால்

தெரிந்து கொள்
உன் உதடுகள் தொடாத வரை
இந்த புல்லாங்குழலும்
முங்கில்தான்                             ---துறவி 


கிழ் இமைகளில் நீ  இருக்கிறாய்
மேல் இமைகளில் நான் இருக்கிறேன்
இந்த இமைகள் மட்டும்
சற்று உறங்கிவிட்டால் என்ன ---- அறிவுமதி


நீ என்னை ஒரு முறை பார்த்தாய்
இதயத்தில் முள் பாய்ந்தது
தயவுசெய்து
இன்னொருமுறை பார் ....
முல்லை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்.             ---- மீரா


நான் பாலைவனம்
நீ
பார்த்தாய்
நான் பூத்தேன்.

நான் மரம்
நீ கண்ணசைத்தாய்
நான்
மண் சாய்ந்தேன் 

நான் கவிதை
நீ
விழி அசைத்தாய்
நான் மொழி மறந்தேன் --- ஸ்ரீ கிருஷ்ணர் 


நான் தென்றலாகத்தானே
வந்தேன்
நீ ஏன் ஜன்னலை
சாத்துகிறாய்         -- மதிவாணன் 


காற்றுக்கும் ஆசை வந்து
உன் ஆடை தொட்டு விளையாடும்
வாழ்க்கை கவலைகளில்
நான் வாங்கி விட்ட பெருமுச்சு
கடற்கரைக்கு போய் இருந்தால்
கப்பல்களும்
கவிந்திருக்கும்           -- நா. காமராசன் 

என்னை எரிக்கும் ஈர இரவுகள்
உன்னை பிரிந்ததை
சொல்லுகிறேன்
காதல் சுமந்த கனவுகள் எல்லாம்
கண்ணீர் துளிக்கு சொல்லுகிறேன்
உன்னை இனி மேல்
சந்திக்கும் போது
உயிரோடு இருந்தால் சொல்லுகிறேன்
கண்ணீர் திராவகம் விழுந்து
படுக்கை கருகி போனதை
சொல்லுகிறேன்                                -- வைரமுத்து    



தத்துவம் 


பொன்னி நதி அவ்வளவு
போன ரத்தம் போன பின்பு
கன்னியரை எசுதடா உள்ளம்
அது
கால் இடரி  யானை விழும் பள்ளம் 
                                                            கண்ணதாசன்















 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...