ads

Tuesday 6 March 2012

மூன்றாம் உலக போர் நடக்க காரணமாய் இருக்க போவது இந்தியா பாகிஸ்தான் - நாஸ் டடாமஸ் சொல்கிறார்.

அது 14 ம் நூற்றாண்டு. 

வானவியல் ஆராச்சியில் முதலிடத்தில் இருந்தது பாரதம்.  ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள் இத்துறையில் பல படிகளை கடந்த நேரம் அது.  

ஆனால் ....  அக்காலத்தில் ஐரோப்பியர்கள் பூமியைத்தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று  நம்பி வந்தார்கள்.  அது தவறு என்பதை கண்டு பிடித்தார் கலிலியோ.  

சூரியனைத்தான் பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகிறது என்றார்.  அவ்வளவுதான் வெகுண்டு எழுந்தார்கள் பழமைவாதிகள்.  கலிலியோ ஒரு மூடன், முட்டாள்.... நீ எப்படி வாயில் வந்ததை சொல்லலாம்.  வா விசாரணைக்கு என்றார்கள்.  

அப்போது பழமைவாதிகள்,  ஒன்றும் அறியாத மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்த நேரம் அது.  தங்களோடு ஒத்து போகாதவர்களை எல்லாம் கொடுமையான தண்டனை கொடுத்து வந்தார்கள்.

அதே அதிகார தோரணை கலிலியோக்கும் போனது. முதுமையில் இருந்த கலிலியோ உண்மையில் பயந்து போனார். 

அவரிடம் நகத்தை புடுங்கும் கொறடு,  நகத்துக்குள் செலுத்தும் ஊசிகள், பழுக்க காச்சிய கம்பிகள் போன்றவற்றை காட்டி,  நீ சொல்லியதை தவறு என்று ஒத்து கொள்கிறாயா... அல்லது இந்த தண்டனைகளை ஏற்று கொள்கிறாயா என்று மிரட்டினார்கள்.

பயந்து போன கலிலியோ மன்னிப்பு கோரினார்.  இதை அறிந்த நாஸ் டடாமஸ் பயந்து போனார்.  நாட்டை விட்டு வெளியேறி கொஞ்ச காலம் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார்.

யார் அந்த நாஸ்டடாமஸ்.  

நம் கட்டுரை இன் கதாநாயகன். எதிர்காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்.  பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு ஞானி.  மருத்துவ நிபுணர். இறந்தவர்கள் உடலை பாதுகாக்கும் முறையை கண்டு பிடித்தவர்.

இவர் முறையை பயன்படுத்திதான் பிற்காலத்தில் பிரமீடுகள் கட்டப்பட்டன. இவர் தன் ஞானத்தால் அடுத்து நடக்க போகும் சம்பவங்களை சொன்னார்.  பல 100 வருடங்க்களுக்கு பிறகு நடக்க போகும் சம்பவங்களை கூட துல்லியமாக பாடல்களாக எழுதினார். 

இவர் எழுதிய பாடல்களை இன்றும் பலர் ஆராச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  இவர்தான் மூன்றாம் உலக போர்  நடப்பதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் காரணமாக இருக்கும் என்கிறார். 

இந்த இரு நாடுகளுக்கும் ஆதரவாக,  எதிரும் புதிரும்மாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி, இஸ்ரேல், சிரியா, ஜெர்மனி, ஈரான், போன்ற நாடுகள் களத்தில் குதிக்கும் என்கிறார். 

இந்தியாவை பொறுத்தவரை உலகின் மிக பெரிய ராணுவம்.  சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியாதான் அந்த இடத்தில் இருக்கிறது.  தொழில் நுட்பத்தில்  அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையாக இந்தியா வளர்ந்து வருகிறது. 

இதை அமெரிக்க அதிபர் ஓபமா.. ஒப்பு கொண்டார்.  எல்லா நாடுகளும் இரண்டாம் இடத்திற்கு போட்டி போடுகின்றன.  ஆனால் இந்தியாவோ முதல் இடத்தை குறி வைக்கிறது என்றார். இந்த விஷயத்தில் நாம் விழித்து கொள்ளா விட்டால் இந்தியா நம்மை பின்னுக்கு தள்ளி விடும் என்று சொன்னார் தன் நாட்டு மக்களுக்கு.

சரி.... இந்தியாவின் ராணுவ பலத்திற்கு முன்பு பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய்.  ஆனால் அணு ஆயுதம் என்று வரும் போது,  இந்தியா யோசிக்க வேண்டி இருக்கும்.

ஒரு வேலை அணு ஆயுத போர் வெடித்தால் இந்தியாவின் பல மாநிலங்கள் பாதிக்க படும்.  

இந்தியா... 2011 க்கு பிறகு பல சோதனைகளை சந்திக்கும்.  பல உள்நாட்டு குழப்பங்கள் ஏற்ப்படும்.  அரசியலில் நேர்மை இருக்காது.  மொழி மற்றும் இன ரீதியாக மக்கள் வேறுபடுவார்கள்.  இதை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு போரை திணிக்கும்.  அந்த போர் மூன்றாம் உலக போராக மாறும் என்கிறார் நாஸ் டடாமஸ். 

அந்த கால கட்டம் எது?

2011 முதல் 2016 க்குள் என்கிறார் நாஸ் டடாமஸ். இந்த போருக்கு பின்னால் இந்தியா பல சோதனைகளை சந்திக்க வேண்டிவரும்.  வறுமை, வேலை இல்லாத திண்டாட்டம் ஏற்படுமாம்.

இந்த போரினால் பல கோடி மக்கள் உயிர் இழப்பார்கள்.  பின் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக வளரும்.  2026 இல் இந்தியா வளர்ந்த வல்லரசாக இருக்கும். உலகின் முதல் நாடாக இந்தியாவே இருக்கும்.

மக்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து விடும். மிகவும் வசதியாக வாழ்வார்கள்.  செல்வம் கொழிக்கும் என்கிறார் நாஸ் டடாமஸ்.

போர் நடக்காமல் இந்தியா வளர கடவுள் துணை இருக்கட்டும்.  

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...