ads

Thursday 8 March 2012

மென்சஸ்.... பெண்களின் பிரச்சனைக்கு தீர்வு

பெண்களை பொறுத்தவரை மாதம் தோறும் நிகழும் இயற்கையான விஷயம்தான் இது.  

அது ............மென்சஸ்.

இது ஒன்னும் திங்கள்கிழமைக்கு அடுத்து செவ்வாய்கிழமை வரும் என்று சொல்லுகிற மாதிரி குறிப்பிட்ட நாளில் நடக்கும் விஷயமல்ல.  கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.  

முன்ன பின்ன என்பது  ஒன்னு இரண்டு நாள் முன் பின்.  ஒரு ஆரோக்கியமான பொண்ணுக்கு இது டான்னு.. மணி அடித்த  மாதிரி 28 to 30 நாளில் நடக்க வேண்டும். 

நடக்கலையா?  நாற்பது நாள் அம்பது நாளுன்னு தள்ளி போகுதா? அப்ப பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்.

சிலருக்கு சொல்லி வைச்ச மாதிரி, தேதி தவறாமல் குளியல் தேதி இருக்கும்.  வர்ற பத்தாம் தேதி குளிக்கணும் என்று காலண்டரை பார்த்தபடி  சொன்னால், சொன்னபடி இருக்கும்.   

பலருக்கு இங்கேதான் பிரச்சனையே.  நாள் கணக்கெல்லாம் தாண்டி,  மாதங்களாகி, நம்மை அறியாம வயத்துக்குலே எதுவும் வந்துட்டா.. என்று அச்சம் கொள்ளகிற அளவிற்கு நாட்கள் தள்ளி போகும்.  

என்ன காரணம்?

உடல்கூறு,  ரத்த சோகை, மனக்கவலைகள் என்பது ஒட்டு மொத்த உளவியல் நிபுணர்களின் கருத்து.

சிலர் பிரச்சனையை தானே தேடி கொள்ளவதும் உண்டு.  வீட்டில் விஷேசம் அல்லது விழாக்காலம் வரும் போது,  இந்த தேதியும் அந்த தேதியும் பக்கத்து பக்கத்துல வந்தால் போதும், எல்லா பெண்களும் தணல் மேல் உட்கார்ந்த மாதிரி தவித்து போவார்கள்.

இது வேற சனியன் வந்து தொலையுது.  இப்படி ஒரு அங்கலாய்ப்பு வேற.  இந்த கேள்விக்கு விடை காண தாங்களே மருந்து வாங்கி உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.  

ஒரு வாரம் தள்ளி போனால் தேவலை.

 சனியன் என்று சொல்லும் பெண்கள் சற்று சிந்திக்க வேண்டும்.  இந்த மாதாந்திர நிகழ்வு சரியில்லாமல் போகும் போது.   நீங்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன?

ஓடி வந்து நின்ன மாதிரி மேல் மூச்சு கிழ் மூச்சு வாங்குதா.  என்னன்னு சொல்ல முடியாத மாதிரி உடம்பு அசதியா இருக்கா. என்னமோ உடம்பு பூதம் மாதிரி கனத்து போன மாதிரி ஒரு எண்ணம் வருதா. 

அப்பறம்...

ஒரு பெண்ணின் புனிதமே அவள் தாய்மை அடைவதில் தான் இருக்கிறது.  இது சரியாக இருந்தால் அந்த பெண் தாய்மை அடைவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.  இல்லைனா மலடி பட்டம்தான் கிடைக்கும் தெரியும்தானே.  அப்பறம் என்ன அங்கலாய்ப்பு.

சரி மருந்து வாங்கி சாப்பிடும் பெண்களின் கதி என்ன?

நார்மலாக இருக்கும் உடல்நிலை மருந்துகளின் தாக்கத்தால் குளறுபடி செய்ய துவங்கி விடுகிறது.  இது முற்றிலும் தவிர்க்க பட வேண்டிய ஓன்று.

 இந்த பிரச்சனை ஏதோ ஒரு பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனை என்று ஒதுக்கி வைக்க முடியாது.  இதற்கும், அந்த பெண்ணின் ஜாதக அமைப்பு தான் காரணம்.

பொதுவாக சந்திரனை உடல் காரகன் என்று சொன்னாலும், பெண்களை பொறுத்தவரை கருப்பைக்கு காரகம் வகிக்கும் கிரகம்.  செவ்வாய் ரத்தத்திற்கு காரகம் வகிக்கும் கிரகம்.

பெண்கள் ஜாதகத்தில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டால்  கண்டிப்பாக மேன்செஸ் தொடர்பான பிரச்சனை இருக்கும்.

அது இப்படி கூட இருக்காலாம்.

நாள் தவறி குளிப்பது ஓன்று.  மாதம் இருமுறை குளிப்பது ரெண்டு.  நீடித்த ரத்த போக்கு மூன்று.   இதில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடும்.

சந்திரன் செவ்வாய் ஒருவர்க்கு ஒருவர் ஆறுக்கு எட்டாக இருந்து, இவர்களோடு  சனி ராகு கேது இவர்கள் யாராவது ஒருவர் சேர்ந்து இருந்தால் போதும்,  இந்த பிரச்சனை தலை தூக்கும்.   கர்ப்ப சிதைவுக்கு இதுதான் காரணம்.

தனித்த செவ்வாய் ஆண் ராசியில் இருந்து ராகு சம்மந்தம் ஏற்பட்டால் குளியல் முழுகல் குறப்பிட்ட நாளில் வராது.

விருச்சிக ராசியில் பாவ கிரகங்கள் , பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில்  பல பாவ கிரகங்கள் இருப்பதும்,  மாதாந்திர குளியலில் மன கவலை  இருந்தே தீரும்.

சுக்கிரன் கன்னி ராசியில் இருந்தால் இந்த குறை இல்லாமல் இருக்காது.  சரி மருத்துவ நிவாரணம் என்ன என்பதை பாப்போம்.

ஆலம்விழுதையும்  ஆலம் விதையையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து  காலையில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை தீரும்.

பொதினா இலையின் சாரை எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பிரச்சனை தீரும்.

அத்தி பழம் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உத்திர போக்கு நிற்கும்.  

சோற்று கற்றாழை சோற்று பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிடலாம்.

வாழைப்பழம், ஏலக்காய் இரண்டையும் பிசைந்து சாப்பிட்டாலும் குணமாகும்.    இது பெண்கள் பிரச்சனை.  ஆண்கள் பிரச்சனை இருக்கே.  அதை அடுத்த பதிவில் பாப்போம். 


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...