ads

Wednesday 19 December 2012

நீ தானே என் பொன்வசந்தம் - விமர்சனம்


கெளதம்மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மென்மையான காதல் படம், நீதானே என் பொன்வசந்தம். 

வருண் ( ஜீவா ) நித்யா ( சமந்தா ) இவர்களுக்கு இடையே ஏற்படும் காதல், நான்கு நிலைகளை கடக்கிறது. 

இந்த நான்கு நிலைகளிலும் சிறு சிறு சண்டையால் பிரிந்து போகிறார்கள். பின் ஓன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை சொல்வது தான் நீதானே என் பொன்வசந்தம்.

நீ தானே என் பொன் வசந்த்தம்


முதலில் சிறு வயது காதல். இதை காதல் என்று சொல்வது தவறு. நட்பு என்பதே சரி. தன்னோடு விளையாட வரவில்லை என்கிற சிறு வருத்தத்தில் அந்த நட்பு முடிகிறது. பின் இவர்கள் பள்ளி பருவத்தில் சந்திக்கின்றனர். இது இரண்டாம் நிலை பருவம் காதல்..

நீ தானே என் பொன் வசந்த்தம்

பழைய வருத்தம் இருந்தாலும் ஒதுக்கி விட்டு காதலிக்கிறார்கள். அந்த பள்ளி பருவ காதலில் சமந்தாவும் ஜீவாவும் கதாபாத்திரமாகவே மாறி போய் இருக்கிறார்கள். 

பத்தாம் வகுப்பு மாணவியாக வரும் சமந்தா உருவ அமைப்பில் ஒன்றிப்போவது மட்டும் அல்ல, அந்த வயது குறும்புத்தனமும், அலைபாயும் கண்களும், துள்ளி துள்ளி ஓடும் சந்தோசமும், எல்லையற்ற உற்ச்சாகமும் அடடா... படம் முடிந்த பிறகும் கண்ணுக்குள் நிற்கிறார். 

சக மாணவன் தீபக்கை சமந்தா தொட்டுப் பேச, அந்த வயது காதலர்களுக்கே வரும் வருத்தம் ஜீவாவை வருத்தம் கொள்ளசெய்கிறது.

நீ தானே என் பொன் வசந்த்தம்

என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமால் சமந்தாவிடம் பேச, அந்த நண்பன் நான் கிளாசுக்கு போறேன் என்று நாசுக்காக விலகவும்... நீ ரொம்ப டீசண்டா... ஓவரா ஆக்ட் பண்ணாதே என்று ஜீவா கோவிப்பத்தும், அந்த காரணமே அப்போது அவர்கள் பிரிவிற்கு காரணமாக மாறுகிறது. 

பின் கல்லூரிகள் கலந்து கொள்ளும் விழாவில் மீண்டும் சந்திப்பு. பழைய பகையை மறந்து மீண்டும் காதலிக்கிறார்கள்.  இது மூன்றாம் நிலை  பருவ காதல்

நீ தானே என் பொன் வசந்த்தம்

இந்நிலையில் தன் அண்ணனுக்கு பெண் பார்க்க போன இடத்தில், தங்கள் குடும்ப சூழலை சொல்லி பெண் கொடுக்க மறுத்த தகவலால், நல்லா படித்து நிறைய சம்பளத்தில் வேலை செய்ய வேண்டும் என்று வைராக்கியத்தில் CAT எக்ஸ்சாம் எழுதி பாஸாகிறார்.  

MBA படிக்க கேரளா போகவேண்டிய நிலையில் தன்னையும்  அழைத்து போக சொல்லி சமந்தா வற்ப்புறுத்த ஜீவா மறுக்க, மீண்டும் சண்டை.. காதலர்கள் பிரிகிறார்கள்.

நீ தானே என் பொன் வசந்த்தம்

கல்லூரி படிப்பு முடிந்து வரும் ஜீவா, தன் பள்ளி தோழர்களின் உதவியோடு சமந்தா இருக்கும் இடத்தை தேடிபோகிறார். 

ஆனால் பழைய கோவத்தை காட்டும் சமந்தா தன்னை நேசிக்க வில்லை என்ற முடிவுக்கு வருகிறார் ஜீவா, அதனால்  வீட்டில் பார்க்கும் பொண்ணுக்கு தலையாட்டி வைக்க, தகவல் தெரிந்த சமந்தா தன் அக்காவிடம் நான் சொதப்பிட்டேன் என்று உடைந்து அழும் போது, கல் மனனமும் கரையும். 

சமந்தாவிற்குள் இந்தனை ஆழமான நடிப்பு இருக்கிறது என்பதை கண்டுபிடித்த கெளதமிற்கு பாராட்டுக்கள். அதோடு பல இடங்களில் வெறும் வசனங்களால்  காட்சியை சொல்வதும் கெளதம் மனதில் நிற்கிறார்.

நீ தானே என் பொன் வசந்த்தம்

தன் படத்தில் சில வினாடி வந்து போகும் பாத்திரமாக இருந்தாலும் அழகாக காட்டும் கெளதம்,  இந்த படத்திலும் தொடர்கிறார். 

குறிப்பாக சந்தானம் கலக்கல் காமடி நடத்தி இருக்கிறார்.  அவர் வரும் போது எல்லாம் தியேட்டர் அதிர்கிறது. 

படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை. ஆனால் பின்னணி இசைதான் சுமார். எப்போதுமே ராஜாவின் இசை கதாபாத்திரங்களோடு இணைந்து பயணிக்கும்.  ஆனால் இந்த படத்தில் அது இல்லை. ஏன்.. ஒரு வேலை அவர் இசை அமைக்க வில்லையோ.


பள்ளி கல்லூரி பருவ காதல் என்றதும், ஒரு முட்டு சுவர், அதில் நாலைந்து  உருப்படாத மாணவர்கள், பெண்களை கிண்டல் செய்வது, அதனால் சண்டை வருவது என்று வழக்கமான தமிழ் சினிமா போல்  இல்லாமல் இயக்கிய கெளதம் பாராட்டுக்கு உரியவர்.

தேவை இல்லாமல் எந்த காட்சியையும் திணிக்க வில்லை இயக்குனர். அதோடு ஜீவா  தன் திருமணத்தை நிறுத்தி விட்டு, சமந்தாவை தேடி வரும் போது, அந்த பக்க களோபரத்தை காட்டாமல் தவிர்த்தது சிறப்பு.

மொத்தத்தில் ....அந்த படம் மாதிரி இல்லை, இந்த படம் மாதிரி இல்லை என்று சொல்வதை விட இந்த படம் எப்படி என்றால்... அழகான கவிதை.

2 comments:

  1. ayya vanakkam ennai therikiratha rasa..

    ReplyDelete
  2. அடடா... தங்கம். என்ன இப்படி கேட்டுப்புட்டிங்க. எப்படி இருக்கீங்க. நான் நலம்...நலமறிய ஆவல். முத்துசாமி எப்படி இருக்கார்? கேட்டதா சொல்லுங்க.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...