ads

Wednesday 26 December 2012

மகாமேரு மகிமை -3

மகாமேரு முதல் பகுதியை படிக்க இந்த இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மகாமேரு இரண்டாம்  பகுதியை படிக்க இந்த இந்த லிங்கை கிளிக் செய்யவும் 



அது இதுதான். 

பரபிரம்மா ....இவர்தான் கோலங்களாய் சுழலும்  கோள்களையே உற்பத்தி செய்தவர். ஆதியில் அனாதியாய் தோன்றியவர். மூவர்கள் என்று போற்றப்படும் மூலங்களுக்கு எல்லாம் முன்னுரை எழுதியவர்.

பரபிரம்மா...!!

பர என்றால் எல்லாவற்றிற்றுக்கும் அப்பாற்பட்டது என்று பொருள். பிரம்மம் என்றால்  உற்பத்தி என்று பொருள். இவர் விஸ்வகர்மா என்று போற்றப்படுகிறார்.

ஐந்து முகங்களும் பத்து கரங்களுடன் தோன்றியவர். இவர்தான் முழு முதல் கடவுள். இவரின் ஐந்து முகங்களை சத்யோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசானம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஐந்து முகங்களும் மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு திசைகளையும், ஈசான முகம் மேல்திசையை குறிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.


இவரோடு தோன்றிய பெண்தான் விஸ்வகர்மினி என்கின்ற காயத்ரி. இவர்கள் ஒன்றிணைத்து பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், இந்திரன், சூரியன் என்ற ஐந்து தேவர்களை ஈன்றனர்.


இவர்களுக்கு துணையாக சரஸ்வதி, லட்சமி, பார்வதி, இந்திராணி, சவிதாதேவி என்ற ஐந்து பெண்களை ஈன்று உடன்பிறப்புகளான இவர்களை உருமாற்றம் செய்து உணர்வுகளை மாற்றி கணவன் மனைவியாக  மாற்றியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் மூலம்தான் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் சக்திகள் இயக்கப்படுகிறது. இவர்களிடம்தான் ரிக், யசூர், சாம, அதர்வண, பிரணவ என்னும் ஐந்து வேதங்கள் அடக்கம்.

ரிக், யசூர், சாம, அதர்வண என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் பிரணவ என்பது வேத சூத்திரம் இது பிரம்மாவிற்கு உரியது. இது உற்பத்தி தொழிலை செய்யும் சூச்சுமங்கள்  அடங்கியது.

மூச்சு தொடர்பான ரகசியம் பொதிந்தது. இப்படிதான் போகிறது முதல் தகவல். ஆனால் ஆதியில் அனாதியாய் தோன்றியவர் சிவன்.

இவர்தான் மற்ற திருஷ்டி கர்த்தாக்களை உருவாக்கியவர். ஐந்து முகங்களை கொண்டவர். அந்த முகங்கள்தான் சத்யோஜாத, வாமதேவ, அகோர, தத்புருஷ, ஈசானம் என்று அழைக்க படுகிறது.


சத்யோஜாத என்பது அழகிய இளம்பாலகனாய் இருந்து அருள் புரிகிறார். 



அந்த முகத்தை மனதில் வைத்து பூசித்தால் சிவ பதவி கிடைக்கும்.

கொடிய விஷம் கொண்ட பாம்பை தன் சடைமுடியில் வைத்து கொண்டு அருள்பாலிக்கும் உருவம்தான் வாமதேவ.


இந்த திருவுருவை மனதில் வைத்து பூசிப்பவர்களுக்கு பிறப்பு, இறப்பு என்ற இரு வினைகளும் அற்று சிவனின் திருவடிகளில் ஐக்கியமாகிறார்கள்


தனது சடைமுடியில் இளம்பிறை சந்திரனை அணிந்து பொன்னிறத்தில் அருள் பாலிக்கும் முகம் தான் தத்புருஷம். 



இந்த அழகிய முகத்துடன்தான் காட்சி தந்து காயதிரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். இந்த காத்ரியை பூஜிப்பவர்களுக்கு நரக வாசமே கிடையாது.


ஈசனின் தத்புருஷ முகத்தை மனதில் கொண்டு பூஜிப்பவர்களுக்கு கயிலாயத்தில்  இடம் கிடைக்கும்.



முக்கண்ணுடனும், தீச்சுடருடனும், காட்சியளிக்கும் முகத்திற்கு அகோர ரூபம் என்று பெயர். அத்தகைய முகத்தை மனதில் கொண்டு பூஜிப்பவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி நற்கதி கிடைக்கும்.

ஈசான தோற்றத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான் சடையிலே பிறைசந்திரன், நெற்றிக்கண், கடைவாயில் கோரைப்பற்கள், இருபுறமும் இரு தேவியரை கொண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.


அந்த ரூபத்தில் தான் ஈசன் ஆலகால விஷத்தை உட்கொண்டார்.  ஆக உலகத்தை தோற்றிவைத்தவரும் இவர்தான்.மற்ற திருஷ்டி கர்த்தாக்களை உருவாக்கியவரும் இவர்தான். இரண்டாவது தகவல் இது.


தொடரும்

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...