ads

Sunday 31 March 2013

இலங்கை பெண்ணோடு சீமானுக்கு கல்யாணமா?




பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே,  வீரநடை,  தம்பி,  வாழ்த்துகள் என்ற திரைப்படங்களை இயக்கியவர்.பொறி,  எவனோ ஒருவன்,  பள்ளிக்கூடம்,  மாயாண்டி குடும்பத்தார், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்தவரும்மான சீமான்.

ஈழத்தமிழர்கள்   மேல் உள்ள அதீத அன்பால் சினிமாத்துறையை விட்டே கிட்டத்தட்ட  விலகியர் சீமான்.   

வருமான இழப்பை சந்தித்தாலும்  கூட, வாழ்க்கை லச்சியம் தனி ஈழம் என்பது போல்,  அவர்கள் துயங்களை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதில்  சீமானின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாது. 

ஈழ போராட்டத்துக்காக பல தடவை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.

இதுதான் சீமானை பற்றி நாம் அறிந்தது.

இன்று சீமானை பற்றி ஒரு கிசு கிசு ஓன்று வெளியாகி இருக்கிறது இலங்கை இணையதளம் ஒன்றில். அது கல்யாண கிசு கிசு.

புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளாராக இருந்தவர்  தமிழ் செல்வன் என்பது தெரிந்த விஷயம்.. அவரிடம்  நேரடி  உதவியாளராக செயற்பட்டுவந்தவர் அலெக்ஸ்.



சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்றில்லாமல் தமிழ் செல்வன் எங்கு சென்றாலும் அவருடன் நிழல் போல் தொடர்ந்து சென்றவர்  இந்த அலெக்ஸ்.

இப்போது இவர் இல்லை. இடைத்தங்கல்  முகாமில் தங்கி இருக்கும்  இவரின் மனைவியை தான் சீமான் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் கசிகின்றன.

ஒரு அபலை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க சீமான் முயல்கிறார் என்று நினைக்க விடாமல், அந்த செய்திகளுக்கு பின்னால் வேறு செய்திகளையும் கொளுத்தி போடுகிறது  அதே இணையதளம்.

நாடு கடந்து வாழும் இலங்கை தமிழர்கள் அளித்த நன்கொடைகள், அதை பெற்று, புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள்,உபகரணங்கள் பெறுவதற்காக பல்வேறு நாடுகளில் புலிகள் சார்பில் முதலீடுகள் செய்யப்பட்டன. 

இது அனைத்துமே புலிகள் பெயரில் இல்லாமல் நம்பகமான தனி நபர்கள் பெயரில் அந்தந்த நாடுகளில் செய்யப்பட்டன.



இந்த  முதலீடுகள் பலவற்றை தமிழ் செல்வனே மேற்கொண்டதுடன் அவை தொடர்பான பல தகவல்கள் புலிகளின் தலைமைக்கு தமிழ் செல்வனால் தெரியப்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும், இம்முதலீடுகள் தொடர்பாக  A to Z  அலெக்ஸ் அறிந்து வைத்திருந்தார் எனவும் நம்பப்படுகின்றது.

இங்கே குறிப்பிட்ட நம்பகமான தனி நபர்கள் என்பது தமிழ் செல்வன் மற்றும் அலெக்ஸ் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் என்கிறது அதே இணையதளம்.

இந்நிலையில் இம்முதலீடுகள் தொடர்பாக அலக்ஸின் மனைவி அறிந்திருக்கமுடியும் என முழுமையாக நம்புகிறார்  சீமான்.

அலக்ஸின் மனைவியை கரம்பிடிப்பதன் முலம் தமிழ்செல்வன், அலெக்ஸ் குழுவினரின், வெளியுலகிற்கு வராத அல்லது தெரியாத  முதலீடுகளை தான் கையாள முடியும் என்ற புது வியூகம் ஒன்றினை வகுத்துள்ளதாக அதிர்ச்சியை தருகிறது.

விதவை திருமணம் வரவேற்க தக்க ஒன்றுதான். ஆனால் அதற்கு பின்னால் சொல்லப்படும் செய்திகளில்  எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று  தெரியவில்லை.

சில சமயம் பொய்கள் கூட உண்மை உருவத்திலேயே நடமாடும்.

2 comments:

  1. ippuditthan sonnange prime minister ruththirakumar avargalayum panatthukaga ellam pannuraru endru...............

    ReplyDelete
  2. நான் எப்போ ராசா சொன்னேன்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...