ads

Monday 25 March 2013

சுவாமி விவேகானந்தர்!!


எனக்கு
வலிமையை கொடு என்று
இறைவனிடம் கேட்டேன்
அவர் என் வாழ்க்கையில்
நிறைய
கஷ்டங்களை
ஏற்படுத்தினார்!

எனக்கு
புத்திசாலித்தனத்தை கொடு என்று
கெஞ்சினேன்
வாழ்க்கையில்
சில பிரச்சனைகளை
உருவாக்கினார்!

மகிழ்ச்சியை கொடு என்று
கடவுளிடம் வேண்டினேன்
சோகமான
மனிதர்களை எனக்கு
அடையாளம்  காட்டினார்!

செல்வத்தை கொடு என்று
அவரிடம் கேட்டேன்
கடுமையாய்
உழைப்பது எப்படி என்பதை
காட்டினார்!

எனக்கு சாதகமான
நிலையை
உருவாக்கி தா என
மன்றாடினேன்
உழைப்பதற்கான
சில சந்தர்ப்பங்களை
எனக்கு அவர் அளித்தார்!

அமைதியை  கொடு என்றேன்
ஆண்டவனிடம்
அடுத்தவருக்கு உதவுவது எப்படி
என்பதை கற்று தந்தார்!

இறைவன் நான் கேட்ட
எதையும் தரவில்லை
ஆனால்
எனக்கு
தேவையான
எல்லாவற்றையும்
தந்து விட்டார்!

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...