ads

Thursday 27 December 2012

பாலியல் வன்முறைக்கு தீர்வுதான் என்ன?


ஊழலுக்கு அடுத்தபடியாக ஊடகங்களில் அதிகம் உலாவரும் செய்தி பாலியல் வன்கொடுமை. 

இந்தியா மீண்டும் ஒரு முறை அவமானத்தை சந்தித்திருக்கிறது. கட்டுப்பாடு என்றால் என்ன விலை என்று கேட்கும் அமெரிக்கா, திருவாய் மலர்ந்து,  தன் நாட்டு மக்களுக்கும், உலகத்திற்கும் முத்தாய்ப்பாய்  ஒரு செய்தி சொன்னது. 

பெண்கள் யாரும்  தனியாக இந்தியா செல்லவேண்டாம். இதை விட வெட்கக்கேடு வேறு உண்டா?

தாய்மைக்கு முதலிடம் தரும் இந்தியாவில்,  தனியாக ஒரு பெண் செல்லவேண்டாம்  என்று சொல்கிற நிலை வருகிறது என்றால், இதைவிட கொடுமை வேறு என்னவாக இருக்கமுடியும்.

கடந்த ஆண்டில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருப்பது டெல்லி என்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பதிவான குற்றங்கள் 453.

மும்பையில் 221 வழக்குகளும், பெங்களூரில்97 வழக்குகளும், சென்னையில் 76 வழக்குகளும் ஹைதராபாத்தில் 59 வழக்குகளும், கொல்கத்தாவில்46 வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

இது சும்மா பேப்பர் கணக்கு. ஆனால் மூடி மறைக்கப்பட்ட குற்றங்கள் எத்தனை இருக்கும்?

வயதின்  தன்மை, குடும்ப கௌரவம், பாதிக்கப்பட்ட  பெண்ணின் எதிர்காலம் என்ற நோக்கில் கண்டுக்கொள்ளாமல்  விடப்பட்ட சம்பவங்கள் அல்லது குற்றங்கள் எத்தனை எத்தனை!

காலம் காலமாக பெண்களை ஒரு போகப் பொருளாக  மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட ஆணாதிக்க சமுகம், பலவீனமான பெண்கள் மீது இது போன்ற வன்செயல்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதை ஒரு தனி நபர் வாழ்வியல் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு சமூகத்தின் நன்மதிப்பும் , தேசத்தின் கவுரவமும் இதில் அடக்கம்.

குற்றசாட்டு  எழுந்ததும் கொந்தளிப்பதும், அறிக்கைகள் விடுவதும், வீதிக்கு வீதீ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதால்  மட்டும் குற்றங்கள் குறைந்து விடப்பவதிலை.

தப்பு செய்தவர்கள் புத்தனாக மாறி புது அவதாரம் எடுக்கப் போவதும்  போவதில்லை.

இதற்கு தீர்வுதான் என்ன?

பலகாலமாக சொல்லப்படும் வார்த்தைதான் இது. சட்டங்கள் மாறவேண்டும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்கிற மாதிரியான அரசியலமைப்பு சட்டங்களை மாற்றி அமைக்கப்பட  வேண்டும்.

மாட்டிக்கொண்டால் தப்ப முடியாது என்ற நிலை இருந்தால் ஊழல் இந்த அளவிற்கு மலிந்திருக்குமா?  அரசியல்வாதிகள் ஊழல் பெருச்சாளிகளாய் உலா வந்திருக்க முடியுமா?

அரசு அதிகாரிகளின் கை நீண்டிருக்குமா? கடத்தல், வன்முறைகள் பெருகி இருக்குமா? பாலியல் குற்றங்கள் மலிந்திருக்குமா? இருக்காது.

சட்டங்கள் மாறவேண்டும். குறிப்பாக ஊழலுக்கும், வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும், பாலியல் குற்றங்களுக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அது தூங்கிக்கொண்டிராமல் நடைமுறைக்கு வரவேண்டும்.  வந்தால் நாடு உருப்படும்.

குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியும், மருத்துவ அறிக்கையும் தான் தேவை.

குற்றம் நிருபிக்கப்பட்டால் உடனே தண்டனை தர வேண்டும். கீழ்கோர்ட், மேல்கோர்ட், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்கை இழுத்தடிக்காமல், இறுதி தீர்ப்பை சொல்லும் நீதிமன்றங்களாக அது இருக்க வேண்டும்.

வழக்கு பதிவு செய்த 100 வது நாளில் தண்டனை தருகிறநிலை வரவேண்டும். இது குற்றங்கள் நடந்த பிறகு செய்யவேண்டிய நடைமுறை. அதற்கு முன் செய்யவேண்டியது என்ன?

மாறிப்போன மனித மன கோணல்களுக்கு மருந்துதான் என்ன?

இன்று நாடு வளர்ந்திருக்கிறது. மக்கள் வளர்ந்திருக்கிறார்கள். அறிவு பெருகி இருக்கிறது. அதே அளவு வக்கிர புத்திகளும் வளர்ந்திருக்கிறது.

இந்த  வளர்ச்சிக்கு ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும். அறிவார்ந்த செய்திகளை கொண்டு செல்கிற இதே ஊடகத்துறை,  வக்கிரபுத்திக்கு வடிகாலாய் இருக்கிறதே என்ன செய்ய?

துண்டும் இல்லாமல் துணியும் இல்லாமல் நடிக்கும் நடிகைகள் ஒருபுறம், அதை அட்டைப்படங்களில் வெளிச்சம் போட்டு காட்டும் பத்திரிகைகள் மறுபுறம், தகாத உறவு கதைகளையும், வீடியோக்களையும் உலாவ விடும் இணையதளங்கள்   இன்னொருபுறம் என்று வக்கிரபுத்திக்கு தூபம் போடுகின்றன.

இதை தடுக்க அரசுகள் என்ன முயற்சி செய்யப்போகிறது?

இது அரசாங்கம் மட்டுமே கவனிக்க  வேண்டிய ஒன்றல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொறுப்புகள்  வர வேண்டும். சமுக சிந்தனை வரவேண்டும். தன் வீட்டிலும் பிள்ளைகள் இருக்கிறார்கள், பெண்கள் இருக்கிறார்கள் என்ற மனநிலை வரவேண்டும்.

வருமா?

ஆசையே  துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்  ஜக்கிவாசுதேவ் . இன்னும் ஒரு படி மேலே போய், ஓசோ சொன்னார்.  அசைகளை அடக்கி வைக்காதே. அதை அனுபவித்துவிடு. அது பெண்ணாசையாக இருந்தாலும் சரி.

ஏன்?  என்ன காரணம்?  அப்படி சொன்னார்?

உனக்கு பெண்ணாசை வருகிறது என்றால் தவறில்லை. வரட்டும் வந்தால் அதற்கென இருக்கும் பெண்களை தேடிப்போ. அதை அடக்கி வைத்தால் பிறகு நல்ல பெண்களை நீ நாசம் செய்ய நினைப்பாய்.

இது சத்திய வார்த்தை.

இது ஒன்றும் வழி தவறி செல்ல சொல்லப்படும் வார்த்தைகள் இல்லை இவை. நீ கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத காமுகனாக இருந்தால் இந்த வழியை தேர்ந்தெடு என்று அர்த்தம்.   பொட்டில் அறைந்த மாதிரி... போ... போய் தொலை என்று சொல்கிற வார்த்தை இது.

நாம் யார்? கலவியலை கூட உலகத்திற்கு கற்று தந்தவர்களின் வழியில் வந்தவர்கள்தான்.

கோவில் கோபுரங்களில் ஆண் பெண் உறவு சிற்பங்களை செதுக்கி வைத்து கூட, அறியாமையை போக்கத்தான்.

தவறான வக்கிர புத்தியை மாணவர்கள் வளர்த்துக்கொள்வதை விட, உளவியல் மற்றும் உடலியல் கல்வியை நடைமுறைக்கு கொண்டு வரலாம்.

பரஸ்பரம் உடல் மதிப்பு, சுகாதாராம் என்பது முக்கியம். விருப்பம் என்பது கவனிக்க வேண்டிய  ஓன்று என்பதை பாடபதிவுகளில் சொல்லித்தரலாம்.

கட்டிய மனைவியாக  இருந்தாலும் விருப்பம் இல்லாமல் தொட்டால், கற்பழிப்புக்கு சமம் என்கிறார்கள்  மனநல நிபுணர்கள்.   இதை கற்றுத்தரலாம். இதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர். பெரியோர்கள் பலருக்கே இது இன்னும் புரியவில்லையே?

அடுத்து!

உண்மையை சொல்லப்போனால் குற்றங்கள் நடப்பதற்கு ஆண்களை   மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. குற்றங்கள் நடக்காமல் தடுக்க பெண்களுக்கு பங்கில்லையா?

இன்று பல இளம் பெண்கள் எப்படி உடுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.

அழகை கூட்டிக்காட்ட  வேண்டிய ஆடைகள், அங்கத்தை திறந்து காட்ட பயன் படுகிறது. பொது இடங்களுக்கு வரும் போது எப்படி உடுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா.

கும்பிட வைப்பதும் ஆடை, கூப்பிட வைப்பதும் ஆடை தான் என்பதை மறந்து விடவேண்டாம்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...