ads

Saturday 11 February 2012

GOD VINAYAGAR / விநாயகர்



இவர்தான் முன்னவர்.  

இவர்தான் மூத்தவர். 

இவர்தான் முழுமுதல் கடவுள். 

வேண்டியவருக்கு  வேண்டிய வரம் அருளும் வள்ளல்.  

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஒருவருக்கு பெற்ற தாய் தந்தையை விட பெரிய உறவு யாரும் இல்லை என்று உலகிற்கு உணர்த்தியர்.  

அதனால் ஞான பழத்தை பெற்றவர். 

ஊழ்வினை பலனை உலகிற்கு உணர்த்த வந்த சனி பவகவான்,  அப்பா சர்வேச்வரனையும் விட்டு வைக்கவில்லை.  ஆனால் அவரையே இன்று போய் நாளை வா என்று சொன்னவர்.

புண்ணிய நதியான காவேரி பூமிக்கு வர காரணமாய் இருந்தவர்.

வணக்கும் பத்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் வள்ளல்.  
தன்னை நினைக்க மறந்த அப்பாவின் தேர் அச்சையே ஓடித்தவர்.  மனம் உருகி வணங்கியபின் அவருக்கு வெற்றியை தந்தவர்.  

தம்பி கந்தன் தன் காதலியை கரம் பிடிக்க உறுதுணையாக இருந்தவர்.

அவ்வைக்கு முத்தி கொடுத்து,  மனித உடலுடன் கைலாயம் போக வைத்தவர்.

எண்ணிய காரியங்கள் நிறைவேற இவர் அருள் அவசியம் தேவை.
பணி தொல்லை நீக்குவார்.

பினிதொல்லை போக்குவார்.

அறுகால் வணங்கினால் ஏழு தலைமுறைக்கும் இன்னல்களை போக்குவார். 
வெல்லெருக்கால் வணங்கினால் தீராத வேதனையை தீர்த்து வைப்பார்.

இவருக்கு பிடித்தவைகளை படைத்தால், நினைத்து நிறைவேறும்.

இவருக்கு உரிய நாட்கள் வெள்ளியும், ஞாயிறும். 

சதுத்தி திதியும்,  மாத சங்கடகர சதுர்த்தியும் வணக்க உகந்த நாட்கள்.  

இவருக்கு உரிய  மூலமந்திரம்.

ஓம் ஸ்ரீம்  கிரீம் கிலீம்  க்லாம் க்லௌம்


கம் கணபதயே 

வரவரத சர்வ ஜனம்மே 


வசமாணய ஸ்வாஹா: 

 















No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...