ads

Monday 18 February 2013

வந்தார் சுப்பிரமணியம் சுவாமி!



ஹெலிகாப்டர் பேர ஊழல் இவ்வளவு பரபரப்பா போய்கிட்டு இருக்கு. இதில் முக்கியமான நபர் இன்னும் வரலையே.  ஆள் எங்கே போனார், அல்லது மௌன விரதம் இருக்காரா என்று யோசித்து கொண்டிருக்கும்      போது சினிமா  போலீஸ் மாதிரி கடைசி நேரத்தில் வந்துட்டார்.   

அவர்தாங்க நம்ம சுப்ரமணியம் சுவாமி    வந்தால் போதுமா...அதிரடியாக ஏதாவது கூற வேண்டுமே… கூறிவிட்டார். இந்த ஊழலுக்கும், சோனியாகாந்தி குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த ஊழல் எந்தவகையிலும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. வி.வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக முன்னர், வேறொரு நிறுவனத்தின் ஹெலிகாப்டரைதான் வாங்குவதாக இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி, அந்த நிறுவனத்தை மாற்றி விட்டார்கள். இதெல்லாம் எதுக்கு?

எல்லாமே கமிஷனுக்காகத்தான்.

இந்த கமிஷனில் பெரும் பகுதியை நேரு காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர்.

இதில் சரிபாதி இத்தாலியில் வசிக்கும் சோனியா காந்தியின் இரு சகோதரிகளுக்கும் போய் சேர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது.

அதனால், இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளியே வருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை. நேரு காந்தியின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

இப்பத்தான் மனுஷன் உள்ளே வந்திருக்கார். இனி என்னிடம் பத்து ஆதாரம் இருக்கிறது என்று பத்திரிக்கைகளுக்கு சொல்ல வேண்டியதுதான் பாக்கி.  சீக்கிரம் சொல்லுங்க சுவாமி.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...