ads

Monday 25 February 2013

பாரதிராஜாவும் இளையராஜாவும்



இளையராஜாவும் பாரதிராஜாவும் நல்ல நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம். இப்போது இருவருக்கும் இடையில் சிறு ஊடல் நடந்தது கொண்டிருக்கிறது. 

இளையராஜா அளித்த பேட்டி ஒன்றில், பாரதிராஜாவின் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்.... என்று கூறியதற்கு உடன் பதிலடி கொடுத்துள்ளார்  பாரதிராஜா, 

அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு அல்ல.. ஆனால் குழந்தைத்தனமானது. வேலை செய்ய முடியாதவன் தான் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்,  என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான் ஒருவன் தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு சரியானதொரு  களம் கிடைக்கல.

சினிமாவுக்கு வெளியே ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் மட்டும் கிடைச்சுது. 

நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட் என்று நினைக்கணும்.  நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான்.

இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைகனத்தோடு  திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.

நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு எப்பவும்  சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் எப்போதும் தயங்கல. நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒளிவு மறைவும் கிடையாது.

நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. 

ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியுறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்” என்றார்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...