ads

Wednesday 16 January 2013

நீயும் நானும் !!




தொடுவானம் நீ!
தொட்டு விடும் முயற்சியில் நான்!
நான் நெருங்க..
நீ விலக...
நான் விலக...
நீ நெருங்க...
என்ன விளையாட்டு இது?

சமுத்திரம் நீ!
அதில் உப்பை தேடும் சிறு பிள்ளை நான்
ஒவ்வொரு துளியும் நீதான் என்பதை
நீயே வந்து சொன்னால் என்ன?

பெருகி பரவும் பிரபஞ்சமே..
உன்னை அளந்து விட துடிக்கிறேன்.
அறிந்து கொள்ள தவிக்கிறேன்.

விஞ்ஞானம் வியர்த்து நிற்கிறது.
மெய்ஞானம் வியந்து நிற்கிறது.
இல்லை என்கிறது ஒரு முனை.
உண்டென்கிறது மறுமுனை
இடையில்
நான் அனாதையாய்...
எப்போது என்னை ஆட்கொள்ளப்போகிறாய்?
இறைவா சொல்!!

- மதிவாணன்

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...