ads

Wednesday 1 January 2014

அம்மா நீ என் உலகம்

   

இப்பூமியில்
நான் பார்த்த முதல் முகம்-
நான் கேட்ட முதல் குரல்-
நான் அழைத்த முதல் பெயர்-
நீதான் அம்மா!
  *     *
அம்மா..
நீ என்னைப் பார்த்த போதுதான்
என் முதல் சிரிப்பு மலர்ந்தது
நீ என்னைப் பார்க்காத போதுதான்
என் அழுகை அதிகம் ஆனது.
   *     *
என் முதல் ஸ்பரிசம்  - நீ தொட்டது
என் முதல் முத்தம்  - நீ தந்தது
என் முதல் உணவு - நீ கொடுத்தது

என் முதல் மொழி - உன்னை அழைத்தது
என் முதல் பயணம் - உன்னுடன் வந்தது
என் மொத்த வாழ்க்கையுமே
நீ தந்தது தானம்மா..
*      *       *
அம்மா..
என் முதல் சொந்தம் நீதான்
என் முதல் ஆசான் நீதான்
என் முதல் சிநேகிதி நீதான்
என் முழுமுதல் தெய்வமும் நீதானம்மா...
 *        *
அம்மா நான்..
மதர் தெரஸாவைப் பார்த்ததில்லை.
மகாத்மாவைக் கண்டதில்லை.
ஏசு ..புத்தன்.. வள்ளலார்
எவரையும் சந்தித்ததில்லை.
நான் அறிந்ததெல்லாம்
அன்பின்
ஒட்டு மொத்த உருவமாய்
உன்னை மட்டும் தானம்மா..
   *       *
அம்மா ..
என் குணத்தில்   நீ
என் பேச்சில்     நீ
என் நடை உடை பாவனையில் நீ
எனக்குள் எல்லாமாயும்
நிறைந்திருப்பவள் நீதான் தாயே..
      *        *
ஈரைந்து மாதங்கள்
கருவறையில் சுமந்தவளே
எனக்கு உயிர் தந்தவளே
நீ அடித்து
நான் அழுததாய்  நினைவில்லை.
நீ கடிந்து  பேசி
நான் வருந்திய சம்பவம்
ஒருபோதும் நடந்ததில்லை

அம்மா..
உன் அன்புள்ளத்தை
நினைத்து நினைத்து நெகிழ்கின்றேன்.!
பூமியில் இன்னும்
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
நீயே எனக்குத் தாயாக வேண்டும்  என
இறைவனை வேண்டுகிறேன்.

-மதிவாணன்


*   *    *   *   *
                                       





1 comment:

  1. அருமை...

    தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...