ads

Wednesday 21 December 2011

NEW YEAR PALAN....RISHABHAM நியூ இயர் பலன்கள் ரிஷபம்

                   NEW YEAR PALAN....RISHABHAM  நியூ இயர் பலன்கள் ரிஷபம்

அட நீங்க யாரு... சுக்கிரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆயக்கலைகள் 64 க்கும் அத்தரட்டி பெர்சனே அவர்தான். 

அதனால் என்ன?
நீங்க சுதந்திர பிரியர். காற்று மாதிரி ஓடுவதும், புதிய விஷயங்களை தேடுவதும் உங்களுக்கு பிடிக்கும். கடின உழைப்பாளி. மாடு மாதிரி உழைபிங்கலாம்.  இருக்காதா பின்னே. காளைமாடுதானே உங்க சின்னம்.

சின்னதா சவால் விட்டு பெரிசா சாதிக்க பிடிக்கும். வெற்றி என்பது எளிதல்ல தோல்வி என்பது முடிவல்ல என்ற வாசகத்திற்கு, தலைமை ஏற்று செயல்படுவீர்கள். 

வந்தால் வரவில் வை. போனால் செலவில் வை... என்ற சித்தாந்த வாதிகள்.  பிறர் ரசிக்க பேசும் நீங்கள் ருசிக்க சாப்பிடுவிங்க.  பளிச்சென ஆடை அணிய பிடிக்கும்.  எந்த காரியத்தை தொட்டாலும் முடிக்கும் வரை தூங்க மாட்டிங்க. 

தோல்வியை பார்த்து பயம் இல்லை என்றாலும், விதியை நொந்து கொண்டு விரத்தியின் விளிம்பிற்கே போவீங்க.  சுக்கிரன் ஆசுர குரு என்பதால் உங்களிடம் கொஞ்சம் அசுர குணமும் இருக்கும்.

பணம் தேட பிடிக்கும், பணமும் உங்களை தேடி வரும். உங்கள் பலம் என்ன என்பது உங்களுக்கே பல சமயம் தெரியாமல் போகலாம்.  தன பலத்தோடு, தேவை படும்போது தெய்வ பலத்தையும் நாடும் உங்களுக்கு புத்தாண்டு பலன்கள் எப்படி என்று பாப்போம். 

சனி மாறினால் சரித்திரம் மாறுமாம். சனிதான் மாறிவிட்டாரே சரித்திரம் மாறுமா? தரித்திரம் விலகுமா? புதிய சாதனை எதுவும் இந்த புத்தாண்டில் படைக்க முடியுமா.... இதானே  . இதானே... உங்கள் கேள்வி. 

நிச்சயம்... கண்டிப்பாக... உறுதியாக வியத்தகு மாற்றம் ஏற்பட போகிறது. செய்தொழில் வியாபாரம் விரிதிக்கும். ஒன்னு பத்தாகும்.  கடந்த காலங்களில் உங்களை விட்டு போனதெல்லாம் திரும்ப வரும். 

அது காசு பணமா? சந்தோசமா? நிம்மதியா? செய்தொழிலா? உடல் ஆரோக்கியமா? என்பது உங்கள் ஜாதகம் சார்த்த விஷயம்.  மொத்தத்தில் மாற்றம் என்பது சத்தியம். 

உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் மாறும். வேலையே விடும் விபரீத யோசனை மறைத்துவிடும். பொருளாதார நெருக்கடிகள் குறைத்துவிடும். 

தடைப்பட்ட பிரமோஷன், புது வேலை, பதவி இறக்கம் மறைந்து உங்க காட்டுல அடை மழை பெய்யபோகுது.  கடந்த காலங்களில் அளவிட முடியாத அளவிற்கு துன்பம், உறவு பகை, வீண் விரையம், வழக்குகள், விருந்துக்கு வைத்திருந்த பணத்தை மருந்துக்கு செலவிட்ட கொடுமை எல்லாம் இருந்தது.  இனி மாறும். 

நல்லவர்களே எதிரியான நிலை இருக்காது. குடும்பத்தில் சந்தோசம் கூடும். கடன் வாங்கிய நீங்கள், கடன் கொடுக்கும் அளவிற்கு கையில் காசு பணம் புழங்கும். புது மனிதனாக, புது சரித்திரம் படைக்க போறீங்க. 

உங்கள் தைரியம், தன்னம்பிகை அதிகரிக்கும். கேள்விக்குறிகள் ஆச்சிரியக்குரியாக மாறும். சகோதர சகோதிரிகள் ஆதரவு அதிகரிக்கும். இதுவரை மூடிக்கிடந்த கதவுகள் திறக்கும்.

வெளிநாட்டு தொடர்பு, வழக்குகளில் வெற்றி. வீடு வாகன சேர்க்கை. குறைந்து போயிருந்த குடும்ப மகிழ்ச்சி கூடும். இதுவரை குரு நல்ல நிலையில் இல்லை.  அதனால் வீண் விரையங்களும், அதிகமான செலவுகளும் உங்களை பந்தாடியது.

நீங்களும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருந்திங்க. இப்போதும் சரி மே மதம் நிகழும் குரு பெயர்ச்சியும் சரி, உங்களுக்கு சரிஇல்லை என்பது உண்மைதான்.  ஆனால் சனிதான் சரியாக இருக்கிறாரே.

அதனால் குருவால் பெரும் பாதிப்பு இருக்காது. சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நடக்கவே நடக்காது என்று தள்ளிப்போன மறுமண வாய்ப்புகள் தேடி வரும்.

மாணவர்கள் நல்ல பெயர் எடுக்கலாம். மொத்தத்தில் புத்தாண்டு உங்களுக்கு நல்ல வருடம்தான்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...