ads

Saturday 31 December 2011

NEW YEAR PALAM... KADAKAM / நியூ இயர் பலன்கள் கடகம்

NEW YEAR PALAM... KADAKAM /  நியூ இயர் பலன்கள் கடகம்

நீங்கள் கடக்க ராசியில் பிறந்தவரா?  சந்தோசமும், சந்தேகமும் சம பங்கு நிறைந்தவர்கள்.  எப்ப பார்த்தாலும் கனவுதான்.  கற்பனா உலகத்திலேயே இருப்பீங்க. 

யாரு என்ன நினைக்கிறாங்க என்பதை பற்றி கவலை படுவதில்லை. உங்களுக்கு எது சரியோ... அதை துணிந்து செய்வது உங்கள் கூட பிறந்த குணம். பெரும்பாலும் ஊருக்காக உழைப்பிங்க. உங்களுக்காக உழைக்கும் போது சறுக்கும். 

உங்களுக்குள்ளே ஒரு கவிஞன் இருக்கான். ஒரு சிந்தனாவாதி இருக்கான்.  ஒரு கலாரசிகன் இருக்கான்.  அவ்வளவு ஏன். ஒரு அரசியல்வாதி, ஒரு ஆன்மிகவாதி, இப்படி பல்வேறு குணம் ஒளிந்து கிடக்கிறது. 

நீங்க கொஞ்சம் சங்கோஜ  பேர்வழி.  யாரிடமும் எடுத்த எடுப்பிலேயே  சகஜமாக பழகுவதில்லை.  ஆனா பழகிட்டா? உங்களை போல் நல்ல நண்பர்கள் யாரும் இல்லை. 

தனிமை பிடிக்கும்.  தடாலடியாக பேசுவது இன்னும் பிடிக்கும். யாசிப்பதில்லை. யோசிக்க வைப்பவர்கள்.  உங்களை கலா ரசிகர்னு சொன்னேன்.  அப்படின்னா வேடிக்கையா  பேசுவதை பற்றி சொல்லவும் வேண்டுமா.  அதிர சிரிக்காம அற்புதமா பேசுவீங்க. 

கொஞ்சோண்டு சந்தேக குணம் இருக்கு. சந்திரன் வளரும் தேயும்  குணம் உள்ளதால் உங்கள் அன்பும் அப்படிதான் என்கிறது ஜோதிடம். அப்படியா? 

சரி வருஷம்  பிறக்கிறது. பலன்கள் என்ன என்பதை பார்ப்போம். 

உங்களுக்குள் பல கேள்விகள். பிறக்கும் ஆண்டு பிரமாதமாக இருக்குமா? அது பிரகாசமாக இருக்குமா? கணக்கு போட்டபடி கனவுகளும் லெச்சியமும் நிறைவேறுமா?  வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா? வீடு வாகன யோகம் பலிதம் ஆகுமா? இப்படி 1000 கேள்விகள். 

இப்போதைய நிலையில் நல்லவைகள் நடந்து கொண்டுதான் இருகின்றன. சந்தோசமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் இந்த பாழாய்ப்போன சந்தேகம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது. 

காரணம் ஏதேனும் ஒரு தடை. இடர்பாடுகள் வந்து விடுகிறது.  தொழில் மேன்மை, உத்தியோக மேன்மை, குடும்ப மேன்மை என்று ஒரு புறம் இருந்தாலும். சின்ன மனக்குறை, கொஞ்சம் பெரிய அளவில் பணக்குறை வருகிறது. 

அலைச்சல் திரிச்சல் அதிகம்.  ஆனால் ஆதாயம் குறையவில்லை. எதிரி தொல்லை, கடன் தொல்லை, நோயதொல்லை எதுவும் இல்லை. ஆனால் சந்தேகம் மட்டும் மறையவில்லை.

சரி புத்தாண்டு எப்படி இருக்கும்?

சனி சரி இல்லை. குரு சரி இல்லை. இருந்தாலும் பெய்ய குறை இல்லை.  தொழில் ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படும் தருணம்.  வேலையில் வேதனை, வேலை இல்லாத வேதனை கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

குரு மாறுதலுக்கு பிறகு ஒரு தனித்தன்மை, பரிபூரண சுதந்திரம் வந்துவிடும்.  உங்கள் தைரியம் தன்னம்பிகை கூடும்.  வெட்டி யோசனை, வீண் அலைச்சல் இனி இருக்காது. உங்கள் கை விட்டு போனதும், கை நழுவி போனதும் திரும்ப வரும்.

A / C ரூமில் இருந்தாலும் மனசு புழுங்கியது.  இனி அப்படி இல்லை.  செல்வம் செல்வாக்கு அதிகரித்தல், குடும்ப குழப்பம் குறைந்து சந்தோஷ சம்பவங்கள் நடத்தல். பிள்ளைகளால் மேன்மை பெறுதல் இப்படி பல நம்மைகள் நடக்கும். 

உங்களை பொறுத்தவரை வியத்தகு முன்னேற்றம் விரைந்து வந்து கொண்டிருகிறது.  திருமண யோகம், மறுமண யோகம், கை கூடும்.  வீடு வாகன யோகமும் காத்திருகிறது.  ஒட்டி கொண்டிருந்த சந்தேகத்தை வெட்டி எறிவீர்கள்.

சின்ன பயம், பதட்டம், குழப்பம் இருப்பினும் சரியாகிவிடும்.  மருந்தை மறந்து விருந்து சாப்பிடலாம்.  கடல் கடந்து போகும் பாக்கியமும் இருக்கிறது.  கணவன் மனைவி உறவில் கசப்புகள் மறைந்து விடும்.  குறைகள் நிறைகளாகும்.

ஆன்மிக பலம் அதிகரிக்கும். நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்.

 


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...