ads

Monday 14 April 2014

உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

காலமாற்றம், கணினி யுகம் என்பது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நடைமுறை வாழ்க்கையில் பல நிலைகளில் அது எதிரொலிக்கிறது.

மஞ்சப்பையும் கையுமாய் வேர்த்து விறுவிறுக்க கடைகடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கியது ஒரு காலம். வீட்டில் இருந்து நெட்டில் தட்டினால் வீட்டு வாசலுக்கு வந்து கதவை தட்டுகிறார்கள். 

முன்பதிவு என்று வந்த பிறகு கால்கடுக்க காத்திருந்த காலம் மலையேறி விட்டது. ரயில் பயணம முதல் விமான பயணம் வரை வீட்டில் இருந்தே புக்கிங் செய்கிற நிலை இன்று வந்து விட்டது. 

இந்த மாற்றம் ஜோதிடதுறையிலும் எதிரொலித்தால் எப்படி இருக்கும்? 

இந்த யோசனை தினமணி குழுமத்திற்கு வந்ததின் விளைவே,  ஆன்லைன் ஜோதிடம்.  ஏதோ கடமைக்கு செய்கிறோம் என்றில்லாமல், தமிழகத்தின் மிக பிரபலமான ஜோதிடர்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது தினமணி.

இத்தருணத்தில் அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 

மனிதன் பிறக்கிறான். பனிரெண்டு ராசிகளில் ஏதோ ஒரு ராசி, 27 நடசத்திரங்களில் ஏதோ ஒரு நட்சத்திரம், பனிரெண்டு லக்னங்களில் ஏதோ ஒரு லக்னத்தை பெற்று ஜனித்து விடுகிறான். 

ஜனித்த மறுகணம் அவனின் அன்றாட இயக்கம், வாழ்க்கை சூழல் என்பது கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. நம்புகிறவர்களுக்கு மட்டுமே இதன் இயக்கம் என்றில்லாமல், நம்பிக்கை அற்றவர்களுக்கும் சேர்த்தே தன் இயக்கத்தை நடத்துகிறது.  

சரி... குப்புசாமிக்கு நம்மீது நம்பிக்கை இல்லை.  அவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று விட்டுவிடுமா கிரகங்கள்? விடாது கருப்பு என்கிற மாதிரி காலநேரமாக மாறி சுற்றி சுற்றி வருகிறது. 

போகட்டும்.

காக்கா குருவியாக பிறந்திருந்தால் கவலை இல்லை.  நிகழ்கால வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போயிருக்கலாம். 

எதிர்கால சிந்தனைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக பிறந்து விட்டோமே? எதிர் நீச்சல் போட்டுத்தானே ஆக வேண்டும். வாழ்ந்தான் என்று வையகம் போற்றா விட்டாலும், வீழ்ந்தான் என்ற அவப் பெயர் இல்லாமல் இருக்க வேண்டும். 

நாமும் அழுது நம்மை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருக்க வேண்டும். இதுதான் அனைவரின் அவா. 

உண்மையில் சராசரி மனித வாழ்க்கையில் என்ன தேவை? விரல் விட்டு எண்ணினால் பத்து பனிரெண்டு ஆசைகள் பூர்த்தியானாலே போதும். போகும் பாதை எல்லாம் பூங்காவனம் என்கிற மாதிரி வாழ்க்கை அமைந்து விடும்.

சொல்லவா பட்டியலை.

நம் பிறப்பு நல் குடியில் அமைய வேண்டும். அன்பான அப்பா அம்மாவை பெற வேண்டும். நல்ல சுற்றத்தார் அமைய வேண்டும். ஆரோக்கியமான தேகத்தை பெற வேண்டும். நல்ல கல்வி, அதற்கேற்ற வேலை, தேவைக்கு அதிமாக வருமானம் வேண்டும்.

அன்போடு அழகும் சேர்ந்த மனைவி, அழகான பிள்ளைகள், வீடு, ஒரு வாகனம், அட... கொஞ்சம் விஸ்தாரமான தோட்டம் தொறவு, பிக்கல் பிடுங்கல் இல்லாத, எதிரிகள் இல்லாத அமைதியான வாழ்க்கை அமைந்து விட்டால் யோகவான். 

இதுதாங்க பலருக்கு பிரச்சனை. ஒன்றை கொடுக்கும் கிரகங்கள் ஒன்றை தர மறுக்கிறது. ஒருவருக்கு காதல் பிரச்சனை. இன்னொறுவருக்கு காதலியால் பிரச்சனை. ஒருவருக்கு வேலையில்லா வேதனை, மற்றவருக்கோ வேலையில் வேதனை. 

சிலர் நல்லவராய் இருந்தும் நல்ல பெயர் கிடைக்க மாட்டேங்குது.  விலகிப் போனாலும் விடாது துரத்தும் வில்லங்க விவகாரங்கள்.  கடன் தொல்லைகள் என்று நெருக்கடிகள் ஒருபுறம்.

சொந்த யோசனைகளை மற்றவருக்கு சொன்னால் பலிக்கிறது.  அதையே  தனக்காக பிரயோகித்தால்  தவழும் பிள்ளை மாதிரி தடுமாறி விழ வேண்டிய கட்டாயம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அங்கலாய்க்க வேண்டியிருக்கிறது.

நல்ல அழகு, உயர்நிலை படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம், கை நிறைய சம்பளம் என்று வாழ்க்கையை நடத்துகிற சிலருக்கு கல்யாண தேவதை கண்ணசைக்க மாட்டேங்கிறாள். ஊரு கல்யாணத்தை பார்த்தே உச்சி கொட்டி கொண்டிருப்பார்கள். 

வேறு சிலருக்கு பருவத்தே பயிர் செய் என்கிற மாதிரி காலாகாலத்தில் எல்லாம் நடந்து முடிந்து விடும். ஆனால் வாய்த்த வாழ்க்கைத்துணையால் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பார்கள். 

இப்படி பலதரப்பட்ட மனிதர்களுக்கு பலதரப்பட்ட சோதனைகள். வேதனைகள். இதற்கெல்லாம் காரணம் கிரகங்கள். கிரகங்களின் தாக்கத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டால், ஓரளவு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதுதான் ஜோதிட சாஸ்திரம்.

ஒருவருக்கு களத்திரபாவம் சரியாக அமைய வில்லை என்றால், மாப்ளிள்ளை விநாயகர் மாதிரி காத்திருக்க வேண்டி வரலாம். அல்லது  வருகிற மனைவி பார்வதி பரம்பரையோ என்று சொல்கிற மாதிரி எதிர்வாதம் செய்கிற பெண்ணாக வரலாம். 

அப்படி நடந்து விடாமல் இருக்க வேண்டுமானால் சரியான வரன்களை தேடி அமைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அனுசரித்துப் போகும் அமைப்புள்ள பெண்ணாக பார்த்து திருமணம் செய்தால் களத்திரபாவ குளறுபடியை குறைத்து விடலாம்.  அதுதான் பொருத்தம். 

ஒரு உண்மை சம்பவம். 

எனது ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் பெயர் வேண்டாம். (நான் பெயரை சொல்லா விட்டாலும், எனது ஊரை சேர்ந்தவர்களுக்கு அவர் யார் என்று தெரிந்து விடும்)

 மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவரின் பரம்பரை என்று சொல்லக் கூடிய சொந்தபந்தங்கள் என் ஊரில் மிக வசதியானவர்கள். 

அந்த குடும்பத்தின் பின்னனியில் வந்த பையன் என்பதால் பொதுவாக அவர் மீது பலருக்கு நம்பிக்கை உண்டு.  பட்டம் படித்தவர்.  படிப்புக்கேற்ற வேலை தேடுவோம் என்றில்லாமல் சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

எதையாவது என்ற கேள்விக்கு விடையாக அவர் கண்டுபிடித்தது சிட்பெண்ட்.  முதலில் சிறு சேமிப்பாகயாக துவங்கப்பட்டது. கையில் கிடைக்கும் பணத்தை அது ஒரு ரூபாயாக இருக்கலாம், ஐந்து ரூபாயாக இருக்கலாம், தனது கணக்கில் வரவு வைக்கலாம்.

நூறாவது நாள் அந்த பணம் திருப்பிக் கொடுக்கப்படும். இடையில் பணம் தேவை என்று கேட்டால், கமிஷம் தொகை பிடித்தம் செய்து கொண்டு மீதப் பணம் மட்டுமே கொடுப்பார்கள். 

இப்படி சிறுதுளியாக துவங்கப்பட்ட அவரது சிப்பெண்ட் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளர்துவிடும் பெண் பிள்ளைகள் மாதிரி வளர்ந்தது. 

சரி... சேமிப்பாக கிடைக்கும் பணத்தை வெறுமே வைத்திராமல் அதை நூறுநாள் தவணையாக வட்டிக்கு கொடுத்து வாங்கினால் என்ன என்று யோசித்தவர் அதை செயல்படுத்தவும் செய்தார்.

நல்ல வருமானம் வந்தது. சிலர் பெரிய இடத்து பையன் என்கிற எண்ணத்தில் தங்களிடம் இருந்த தொகையை இவரிடம் குறைந்த வட்டிக்கு கொடுத்தார்கள். அதை இவர் பெரிய வட்டிக்கு விட்டு வருமானத்தை உயர்த்தினார்.  பணம் தந்தவர்களுக்கு மாதா மாதாம் வட்டித் தொகை வீடு தேடிப் போனது. 

இது போதாதா அவர் நற்பெயர் எடுப்பதற்கு.  பலன் பெற்றவர் தனக்கு வேண்டியவர்களிடம் சொன்னார். 

அவர்களும் சும்மா இருக்கும் பணத்தை இவரிடம் கொடுத்தால் வட்டி வளருமே என்று கொடுக்க, இவரும் மாதம் தவறாமல் வட்டியை கொடுக்க சில ஆயிரங்களில் இருந்த இவரது வரவு செலவு பல லட்சங்களை தாண்டியது. கோடிகளை கூட தொட்டு விடுவார் என்று பேசுகிற அளவிற்கு அவரின் வளர்ச்சி பிரமாண்டமாக இருந்தது. 

இங்குதான் கிரகங்களின் சதிவேலை ஆரம்பமானது.  தேவைக்கு அதிகமான ஊழியர்கள். எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக தொலைபேசிகள். அவர்கள் தங்க பல வீடுகள் என்று நிர்வாக செலவுகளை அதிகப்படுத்திக் கொண்டே போனார். 

இந்த லட்சனத்தில் நான் ஏனென்ஸி எடுக்கிறேன் பேர்வழி என்று விளம்பரம் இல்லாத பொருட்களை வாங்கி மார்க்கெட்டிங் செய்ய முனைந்தார். அதற்காக கடன் கொடுத்தவர்களின் பணம் கைமாறியது. 

இந்த நிலையில்தான் என்னை ஒருநாள் சந்தித்தார்.  தனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்றார். அவரைப் பொறுத்தவரை ஜாதகம் பார்க்க காரண காரியம் எல்லாம் இல்லை.  சும்மா ஒரு பொழுது போக்கிற்காக அப்படி சொல்லி இருக்கிறார்.

பொதுவாக நான் யாரையும் தேடிச் சென்று ஜாதகம் பார்க்கும் பழக்கம் இல்லை. என்னை தேடி வருபவர்களுக்கே ஜாதகம் சொல்வேன். ஆனால் அழைப்பது நண்பராயிற்றே. மறுக்க முடியுமா?

சரி... ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் என்று சொல்லி விட்டேன். ஏற்கனவே வாடகைக்கு பிடித்துப் போட்டிருந்த ஒரு வீட்டை சுட்டிக் காட்டி அங்கே வந்து விடுங்கள் என்றார். விருப்பம் இல்லை என்றாலும் மறுக்கவில்லை நான். நண்பராயிற்றே.

ஞாயிறு வந்தது.  நானும் நண்பரின் இருப்பிடம் தேடி சென்றேன்.  அங்கே அவர் எனக்காக தன் நண்பர் ஒருவருடன் காத்திருந்தார். சற்று நேர உரையாடலுக்கு பிறகு ஜாதகம் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

ஜாதகத்தை பிரித்து கிரக நிலைகளை ஆராய்ந்தேன். தசா புத்தியை கணக்கிட்டேன். தொழில் பாவத்தை பார்த்தேன். அதிர்ந்து போனேன். 

காரணம்... ஆசைக்காட்டி மோசம் செய்யும் நிலையில் ராகுபகவான் அமர்ந்து தன் தசாவை நடத்திக் கொண்டிருந்தார். வழுக்குப் பாறையில் வண்டி ஓட்டுகிற மாதிரி ஒரு ஆபத்தான கட்டத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

அதனால் அவருக்கு பக்குவமாக எடுத்துரைத்தேன். நண்பரே தங்கள் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமாக உள்ளன, மறுக்கவில்லை. ஆனாலும் தற்சமயம் நடக்கும் திசை தங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால் மிக கவனமாக காலடி எடுத்து வைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இருக்கிறது என்றேன்.

உடனே அவர் இளக்காரமாக என் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருக்கிறது தெரியுமா என்றார்.  

உண்மைதான் நான் மறுக்கவில்லை. ஆனால் இப்போது அந்த யோகத்தை பெறுகிற நேரம் இல்லை என்பதுதான் ஜாதக நிலை என்றேன்.  என்ன நினைத்தாரோ... சட்டென எழுந்து விட்டார். ஒகே... கிருஷ்ணன் எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது. நான் வெளியே போக வேண்டும். 

மேற்கொண்டு பலனை நண்பரிடம் சொல்லுங்கள் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னவர் என் பதிலை கூட எதிர்பார்க்காமல் விறுட்டென வெளியேறினார். 

எனக்கோ தர்ம சங்கடமான நிலை.  யாருக்காக என் கொள்கையை விட்டுக் கொடுத்து ஜாதகம் பார்க்க வந்தேனோ, அவர் இல்லாத பொழுது அவருக்காக ஜாதகம் சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. 

அப்போது என் நண்பரிடம் இருந்து, ஜாதகம் கேட்க சொன்னவருக்கு போன் வந்தது.  போன் அழைப்பு யாராக இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அவரை அழைத்தது என் நண்பரே தான்.  

ஒன்னும் கேட்க வேண்டாம். காசை கொடுத்து அனுப்பு என்று போனில் சொல்வது எதிரில் இருந்த எனக்கே தெளிவாக கேட்டது.  போனை அணைத்தவர்... ஒரு முக்கியமாக வேலை நான் மறந்துட்டேன்.  தப்பா நினைக்காதீங்க, நாம நாளைக்கு பேசலாமா என்றார்.  

உடன் பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டியவர், இதை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

சாரி... நண்பரே... நான் பணத்திற்காக வரவில்லை. அவர் எனது நண்பர் என்ற முறையில்தான் வந்தேன், உங்க வேலையை போய் பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன்.

சில நாட்கள் கழித்து எனக்கு நெருக்கமான நண்பர் மூலமாக ஒரு தகவலை கேள்விப் பட்டேன். கிருஷணனுக்கு ஜாதகம் பார்க்க தெரியலை என்பதே என் நண்பரின் கமெண்ட்.  

எப்போதுமே கிரகங்கள் ஒருவரை வஞ்சிப்பது என்று முடிவெடுத்து விட்டால், போகாத ஊருக்குத்தான் வழிகாட்டும்.  தப்பான முடிவுகளைதான் எடுக்க வைக்கும்.

அப்படி ஓர் தப்பான முடிவை அவர் எடுத்தார். 

இந்நிலையில் இரால் வளர்ப்பு என்னும் புதுத் தொழிலில் கால் பதித்தார். இரால் வளர்ப்பு என்பதே சூதாட்டம் மாதிரிதான். வந்தால் வரும், போனால் தலையில் முக்காடுதான். போட்ட காசை எடுக்க முடியாது. 

ஆனாலும் நண்பர் பல வளர்ப்பு குளங்களை வாடகைக்கு எடுத்து இரால் வளர்ப்பில் ஈடுபட்டார். நூறு நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல், நோய்கள் தாக்காமல் இரால் வளர்ந்து விட்டால் பலமடங்கு லாபத்தை தந்து விடும் என்பது உண்மையே. ஆனால் அதற்கு கால நேரம் ஒத்துழைக்க வேண்டுமே. 

நம்பவைத்து நயவஞ்சகமாக கழுத்தறுப்பது என்று ராகு முடிவெடுத்து விட்ட பிறகு கிருஷ்ணன் சொல் அம்பலம் ஏறுமா?

ஒரு மாதம் கடந்திருக்கும்.  ஒரு நாள் மழை வந்தது.  மழை என்றால் உங்க வீட்டு மழை எங்க வீட்டு மழை இல்லை. பேய் மழை.  இரவில் பிடித்த மழை விடிந்த பிறகுதான் விட்டது.  விட்டப் பிறகு பார்த்தால் எங்குப் பார்த்தாலும் தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர். 

நண்பர் இரால் வளர்க்கும் தொட்டிலை மூழ்கடித்திருந்தது மழை.  அவருக்கு மட்டும் அல்ல, அச்சமயம் அங்கே இரால் வளர்ப்பில் ஈடுபட்டிருந்த அத்தனைப் பேருக்குமே அந்த பாதிப்புதான். 

வெள்ளம் வடிய சில வாரங்கள் பிடித்தது. அதன் பிறகுப் பார்த்தால், குளத்தில்¢ வளர்க்கப்பட்ட இரால் எதுவுமே அதில் இல்லை. எல்லாம் வெள்ளத்தோடு வெள்ளமாக போய்விட்டது. நண்பருக்கு பலத்த நஷ்டம்.  ஈடு செய்ய முடியாத இழப்பு.  

இதில் செய்யப்பட்டது எதுவுமே சொந்தப் பணம் அல்ல.  குறைந்த வட்டிக்கு வாங்கிய பணம்.  உரியவர்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை.  நஷ்டத்திற்கு உள்ளானார் என்பதை அறிந்த முதலீட்டார்கள் முன்னெச்செரிக்கையாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார்கள்.

முதலில் இதோ அதோ என சாக்கு போக்கு சொல்லி தப்பித்தவருக்கு, தொடர்ந்து ஒரே வசனத்தை பேச முடியாத சூழல்.  

மிக சாதாரணமாக வந்து கேட்டவர்கள், தங்கள் கோபத்தை காட்ட துவங்கியதும்,  ஒரு கட்டத்தில் அலுவலக பொருட்களை வண்டியில் ஏற்றிச் சென்றதும் என தகவல் பரவ... ஒரே சமயத்தில் அனைவரும் திரண்டு விட்டனர். நண்பர் தலைமறைவாகி விட்டார். 

பின் ஒரு மாதத்திற்கு பின், வேறு ஒரு நண்பர் மூலமாக தலைமறைவாக இருந்தவர் எனக்கு அழைப்பு விடுத்தார். 

எதற்கு?

ஜாதகம் பார்க்க. 

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  ஆனாலும் அவரிடம் சொல்லி அனுப்பினேன்.  எனக்கு ஜாதகம் பார்க்க தெரியவில்லை என்று அவர்தான் சொன்னார்.  வேதனையில் இருப்பவரை மேலும் வேதனைப்படுத்த இதை சொல்லவில்லை. 

என் மூலமாக அவருக்கு கிரகங்கள் முன்னெச்சரிக்கை செய்யவே முனைந்தன. ஆனாலும் அதை அவர் அலட்சியப்படுத்தி விட்டார்.  போகட்டும். 

நடந்ததை பேசி பலனில்லை.  என்றாலும் அவரிடம் சொல்லுங்கள்.  இது தற்காலிகம்தான். மீண்டும் அவருக்கு நல்லகாலம் திரும்பும். ஆனால் அதற்கு அவர் பத்து வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதே உண்மை நிலை என்று சொல்லி அனுப்பினேன். 

இது மனசமாதான பதில் இல்லை.  அவர் ஜாதக பலாபலன் அதுதான். அவர் மீண்டு வருவார் என்பதுதான் உண்மை. இதை நான் இங்கு சொல்லிக் காட்டுவதின் நோக்கமே உங்கள் ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்து, காலநேரத்தை  கணக்கிட்டு செயல்பட்டால் குறைந்தபட்ச தோல்வியோடு தப்பித்து விடலாம். 

தொழில் என்றில்லை, குடும்ப சூழல், வீடு வாகன யோகம், கல்வியோகம், கடல் கடந்த பயணங்கள், மண வாழ்க்கை அமைப்பு என்று அனைத்தையும் சிறப்புடன் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் உண்மை.  

இப்போது தினமணி கட்டண சேவையில் என்னை தவிர்த்து மற்ற மூன்று பிரபலமான ஜோதிடர்கள் பலன் சொல்ல காத்திருக்கிறார்கள். நீங்கள் தெளிவான பதிலை பெற விரும்பினால் அவர்களையும் நீங்கள் அனுகலாம்.

இச்ச் சேவையை பெற முதலில் தினமணி இணையத்திற்கு செல்லுங்கள்.  



அங்கே தலைப்பு வரிசையில் உள்ள ஜோதிட சேவைகள் என்பதை கிளிக் செய்யுங்கள்.  செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும்.



  
அதில் பிரத்தியோக ஜோதிட ஆலோசனைகள் என்பதை கிளிக் செய்யுங்கள்/
செய்தால் கீழ்காணும் பக்கம் திறக்கும். ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கே தான் என்னோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் உங்களுக்கு ஜோதிட ஆலோசனைகள் வழங்க தயாராக இருக்கிறார்கள்.

முதலில் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். 

தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர். இவரின் முன்னோர்கள் ஜோதிடத்திலும், வானவியலிலும் ஞானம் பெற்றவர்கள். 

வேதங்கள் மந்திரங்கள் சொல்வதிலும் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படித்தவர். நம் தினமணி தளத்தில் ஜோதிட பலன்களைச் சொல்லி வருகிறார். தினப் பலன், மாத பலன்கள், நியூமராலஜி என்ற எண்ணியல் பெயர்ப் பலன்களைச் சொல்லி வரும் இவருக்கு வாசகர்கள் வட்டம் பெரிது. பல குடும்பங்களுக்கு ஜோதிட ஆலோசனைகளை வழங்கி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றவர்.

இவரிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் அவர் பெயரை கிளிக் செய்தால் புதிய பகுதி திறக்கும். அங்கே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கிளிக் செய்தால் உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருஷம், பிறந்த இடம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து add to cart என்பதை கிளிக் செய்து பணத்தை செலுத்தி பதில்கள் பெறலாம்.


ஜோதிட அமிர்தம் மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியராக இருந்தவர். ஜீவஜோதிடம் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஜோதிடக் கட்டுரைகள், பலன்கள், ஆய்வு நுணுக்கங்களை எழுதிவருகிறார்.

ஆன்மிக சொற்பொழிவாளர். தொலைக்காட்சிகளில் ஜோதிடம் குறித்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக ஜோதிடத் துறையில் உள்ள இவர், ஜோதிட வாணி, ஜோதிட வித்யாஸ்ரீ, ஜோதிட அரசி உள்ளிட்ட பட்டங்கள் பெற்றவர்.

பல குடும்பங்களுக்கு குடும்ப ஆலோசகராகவும் உள்ள இவர், திருமணம், தொழில், குடும்பப் பிரச்னைகள், வியாபாரம், கல்வி, வீடு மனை உள்ளிட்ட பலவற்றுக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கி நன் மதிப்பைப் பெற்றவர்.

குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி குறித்த புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும், ஜோதிட நுணுக்கங்களை விவரித்து புத்தகங்கள் சில எழுதியுள்ளார்.

இவரிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் அவர் பெயரை கிளிக் செய்தால் புதிய பகுதி திறக்கும். அங்கே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கிளிக் செய்தால் உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருஷம், பிறந்த இடம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து add to cart என்பதை கிளிக் செய்து பணத்தை செலுத்தி பதில்கள் பெறலாம்.


 தொழில் முறையில் கடந்த சில வருடங்களாக ஜோதிட ஆலோசனைகள் கூறிவரும் இவர், ஜோதிடம், யோகா, இசை கற்றவர். இதழ்களில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜோதிட சேவைக்காக விருதுகள் பெற்றவர்.

இவரிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் அவர் பெயரை கிளிக் செய்தால் புதிய பகுதி திறக்கும். அங்கே நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கிளிக் செய்தால் உங்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருஷம், பிறந்த இடம் போன்ற விபரங்களை பூர்த்தி செய்து add to cart என்பதை கிளிக் செய்து பணத்தை செலுத்தி பதில்கள் பெறலாம்.

அல்லது என்னிடம் ஜோதிட ஆலோசனைகள் பெற விரும்பினால் என்னை பற்றிய குறிப்பை பார்க்கவும்


பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் முறை ஜோதிடர். பத்தாயிரம் ஜாதகத்திற்கு மேல் பலன் கூறிய அனுபவம் உள்ளவர். ஆய்வு, அலசல், தீர்வு என்ற அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய அனுபவம் பெற்றவர். 

ஜோதிட பயிற்சி பாடங்கள் வழியாக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியவர். வாக்கு பலித்த ஜோதிடர் என்று வாழ்த்து பெற்ற இவர், இதுதான் பலன் என்று துல்லியமாகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஜோதிட மாத இதழ்கள் பலவற்றில் ஜோதிட நுணுக்கங்களுடன் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

மலேசியாவில் தற்போது, தொழில் முறை ஜோதிடராகவும், பகுதி நேர பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார். தினமணியின் ஜோதிட தளத்தில் ஜோதிடக் கட்டுரைகள், பொதுப் பலன்கள் எழுதி வருகிறார்.

என்று தினமணி தளத்தில் குறிப்புகள் உள்ளது.  யாரிடம் கேள்வி கேட்டு பதில் பெற ஆசைப்படுகிற்களோ அவர்களிடம் பதில் பெற்று வாழ்வை வளமாக்கி கொள்ளுங்கள். 

நன்றி வணக்கம்/
அன்புடன் 
ஜோதிடர் ஸ்ரீகிருஷ்ணர் 


2 comments:

  1. நவ கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல ஜோதிடர்கள் சொல்வதையும் கேக்க வேண்டும்.

    ReplyDelete
  2. நவ கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல ஜோதிடர்கள் சொல்வதையும் கேக்க வேண்டும்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...