ads

Sunday 13 April 2014

நீங்கள் சீக்கிரம் செல்வந்தராகி விடுவீர்கள்.



நீங்கள் வாழ்க்கையை நிர்வாகம் செய்ய வேண்டும்; 
இல்லையெனில்  வாழ்க்கை உங்களை அடிமைப்படுத்திவிடும்!

சூனியத்தை வாழ்க்கை சகித்துக் கொள்ளாது. அர்த்தமுள்ள பயனுள்ள நடவடிக்கைகளால் வாழ்க்கையை நீங்கள் நிரப்ப வேண்டும். இல்லையென்றால் விதியானது குப்பை கூளங்களைப் போன்ற பிரச்சினைகள் - தொல்லைகள் இவற்றைப் போட்டு உங்கள் வாழ்க்கையை நிரப்பி விடும்.

நீங்கள் உங்களை, உங்கள் வாழ்க்கையை நிர்வாகம் செய்ய வேண்டும். திட்டமிட்டுக் கட்டுப்படுத்தி - நீங்கள் தேர்ந்து எடுக்கிற நடவடிக்கைகள் வாயிலாக அதை நிரப்பிட வேண்டும். 

இல்லாவிடில் வாழ்க்கை உங்களை அடிமையாக்கி விடும்; பிரச்சினைகள், தொல்லைகள், கஷ்டங்கள் - மாறுபாடுகள் இவற்றில் உங்களைப் போட்டு அலைக்கழித்து விடும்.

ஏன் என்றால் வாழ்க்கை என்பது சூனியத்தைச் சகித்துக் கொள்ளாது. நீங்கள் விரும்புகின்றவற்றைக் கொண்டு வாழ்க்கையை நிரப்புங்கள். 

இல்லையென்றால் என்ன நடக்கும்? வாழ்க்கையை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்து கொண்ட மற்றவர்கள், தூக்கி எறிந்த மிச்சம் மீதியை ஏற்க வேண்டிய தண்டனைதான் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆக வாழ்க்கையை எப்படி நிர்வகிப்பது? வாழ்க்கையை எப்படி நிர்வகிப்பது என்று தெரிந்து கொண்டால் பிறகு அது எளியதாகி விடும். அந்த வழிகளை இங்கே காணுங்கள். நாளை விடியும்வரை அதுபற்றிக் கவலைப்படாதே! என்று ஒரு பழமொழி உண்டு.

இதைத்தான் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். 

அடுத்தநாளைப்பற்றி இன்றே எண்ணத் தொடங்கினால் - நாளைய வாழ்க்கையை இன்றே வாழத்தொடங்கினால் - இன்றைய பிரச்சினைகளுடன் அடுத்தநாளைய பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ளும். 

நீங்கள் பிரச்சினைகளின் இரட்டிப்பு சுமையைச் சுமக்க நேரிடும். இதனால் உங்கள் வேலைச் சுமை இரட்டிப்பு ஆகும்.

டாக்டர் வில்லியம் ஒஸ்லர் என்பவர் ஒரு அறிவுரை கூறினார். ஒரு நேரத்தில் ஒரு நாளைய வாழ்க்கையை  வாழ்ந்திடுங்கள் இந்த அறிவுரையை ஏற்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக நிர்வாகம் செய்ய முடியும்.

டாக்டர் ஒஸ்லர் மேலும்¢ எச்சரித்தார் : நேற்றைய சுமையோடு, இன்றைய சுமை இருக்கிறது. இதில் நாளைய சுமை என்கிற பளுவையும் ஏற்றி விட்டால் நீங்கள் தள்ளாட வேண்டியது தான் - இது அவருடைய எச்சரிக்கை.

உடல் அளவில், மனத்தளவில் உணர்வு பூரமாக - உங்கள் மேல் அதிக சுமைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள். என்று தான் எல்லா மருத்துவ நிபுணர்களும் மனோதத்துவ நிபுணர்களும் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.

ஒரு மின்சாரம் வழங்கும் கம்பியில் அளவுக்கு அதிகமான மின்சாரத்தைப் பாய்ச்சினால் மின்சார ஓட்டம் நின்று விடும். பழுது பட்டுவிடும். 

அது போல உங்கள் இதயம் பழுது அடையலாம். அல்லது ஏதேனும் ஒரு முக்கிய உடல் உறுப்பு பழுது அடையலாம். அல்லது  உங்கள் மனம், உங்கள் உணர்வுகள் இவை பழுது அடையலாம். உங்களுடைய நரம்பு மற்றும் மனம் இவை கடும் பாதிப்புக்கு ஆளாகலாம்.

ஆக நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக வாழ்க்கையை நிர்வாகம் செய்யத் தொடங்குங்கள். ஒரு நேரத்தில் ஒரு நாளைய வாழ்வை மட்டும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். 

இன்றைய வாழ்வை வாழுங்கள். யாருமே அன்றாடப் பிரச்சினைகளை - இன்றைய பிரச்சினைகளை சமாளித்து விடலாம். ராபர்ட் லூயிஸ்டீவன்சன் சொன்னார்: “எவ்வளவு கடுமையான சுமையாக இருந்தாலும் யாரும் அதனை இரவுவரை சுமந்து விடலா. எவ்வளவு கடுமையான வேலையாக இருந்தாலும் அதனை யாரும் ஒரு நாளைக்குள் செய்து விடலாம்” என்று.

எந்த ஒரு நாளும் எவ்வளவு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருப்பினும் உங்களை அடக்கி விட முடியாது. இது பற்றி வில்லியம் கௌடர் எனும் அறிஞர் உங்களுக்குப் பரிவுடன் கூறும் புத்திமதி வருமாறு : இருள் படிந்த நாளாக இருந்தாலும் அது நாளை காலைவரை இருந்தாலும் விடிந்ததும் அது உங்களை விட்டுச் சென்று விடும்.

நான் நேற்று நிமிர்ந்து நின்றிருந்தேன். இன்றும் அது போல் நிற்பேன் என்று டோரதி டிக்ஸ் என்பவர் எழுதினார். 

இது உங்களுக்கும் பொருந்தும். நீங்களும் அப்படி நிமிர்ந்து நிற்கலாம்.

உங்கள் வாழ்க்கையை நாட்கள் எனும் அளவு கோலால் பகுத்து வைத்து விடுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையை நிர்வாகம் செய்து விடலாம்.

ஒவ்வொரு நாளையும் மணிகள் என்கிற கால அளவையால் வகுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மணிக்கான பணியிலும் முழு அளவு கவனம் செலுத்துங்கள். ஒரு தடவைக்கு ஒரு மணிநேர வேலை என்று பகுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் நேரத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.‘

நேரத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் வாயிலாக, அந்த நேரத்தைக் கொண்டு செய்யும் வேலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் வாயிலாக - நீங்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறீர்கள் என்று அர்த்தம். 

எனென்றால் காலம் தான் வாழ்க்கை. இது உங்கள் காலம். இது உங்கள் வாழ்க்கை. வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். இல்லாவிடில் அதற்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்.

காலத்தை - நீங்கள் கட்டுக்குள் வைத்து நிர்வாகம் செய்வதற்கு வசதியாக அதனைப் பங்கு போடுங்கள். இத்தனை மணி இத்தனை நிமிடம் என்று பங்கு போடுங்கள். அதன்படி காலத்தை நீங்கள்  கட்டுப்படுத்த முடியும். நிர்வாகம் செய்ய முடியும். அதற்குக் கட்டளை இட முடியும். 

பகுத்து வைத்து வெற்றி கொள்ளுங்கள். என்கிற இந்த முறையானது,  வெற்றிக்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளில் ஒன்று. 

ஒரு தடவையில் ஒரு மணி நேரம் என்று பிரித்துக் கொண்டு உங்கள் கவனத்தை அதிலே செலுத்துங்கள். குறிப்பிட்ட அந்த கால அளவான ஒரு மணி நேரத்துக்கான பிரச்சினைகளில் உங்கள் முழுக்கவனத்தைச் செலுத்துங்கள். அது பற்றிய வேலைகளைச் செய்யுங்கள். 

அழிந்து போன மணிகளில் ஏற்கனவே நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து மனதைச் சிதறடிக்க வேண்டாம். வரப்போகிற மணிகளில் செய்ய வேண்டிய வேலைகள் பற்றிய ஊகங்களில் ஈடுபட வேண்டாம். 

இப்படிச் செய்தால் கவனத்தை ஒரு முகப்படுத்தும் ஒரு சாதனையை நீங்கள் எட்டி விடுவீர்கள். இதன் மூலம் நீங்கள் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். மணிக்கு மணி - நாளுக்கு நாள் - வாரத்துக்கு வாரம் - நீங்கள் பலன்களைப் பெறுவீர்கள்.

காலத்தை வகைப்படுத்தி அதை நிர்வாகம் செய்து - திறமையுடன் ஆற்றலுடன் உங்கள் பணிகளில் கவனத்தை ஒரு முகப்படுத்தினால் - அதன் வாயிலாக நீங்கள் எதையெல்லாம் அடைவீர்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

உங்களுக்கே தெரியும்.

நீங்கள் சீக்கிரம் செல்வந்தராகி விடுவீர்கள்.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...