ads

Saturday 2 November 2013

சனி பாதிப்பில் இருந்து விடுபட சனி மந்திரம்

தசரதனுக்கு இருப்பு கொள்ளவில்லை.  அடுத்து நடக்கப்போவதை தடுப்பது எப்படி என்று மனம் தத்தளித்தது.  

அப்படி என்னதான் நடந்து விட்டது?

ஒட்டுமொத்த ஜோதிடர்களின் கருத்தை வசிட்டர் தன் வாயால் சொன்னதுதான் காரணம்.  

மன்னா.... சனிபகவான் கிருத்திகா நட்சத்திரத்தில் இருந்து, ரோகிணியை பிளந்து கொண்டு செல்லப் போகிறார்.  அதாவது இடப்பெயர்ச்சி.  

அந்த சகடபேதம் மட்டும் நடந்து விட்டால் நாட்டில் மழை பெய்யாது.  பயிர் வளராது.  பஞ்சம் தலைவிரித்தாடும்.  மக்கள் உண்ண உணவின்றி உயிர் விடும் நிலைமை வந்துவிடும்.

இச்செய்திதான் தீயில் உட்கார்ந்த மாதிரி திகைக்க வைத்தது தசரதனுக்கு.  என் கொடையின் கீழ் வாழும் கடைக்கோடி மனிதன் வரை கஷ்டம் என்பதே இல்லாமல் இருக்கிறார்கள்.

வறுமை என்பது வார்த்தையில் இருக்குமே தவிர, வாழ்க்கையில் வராது.  அப்படி இருக்கையில் இப்படி ஒரு துயர் வரும் என்றால்?

வசிஷ்டரே.. இதை தடுக்க முடியாதா?

எப்படி முடியும் மன்னா?  சனி யாருக்கும் கட்டுப்பட்டவர் இல்லை.  ஆயுதம் ஏந்தாமலே அழிவை தரும் சக்தி அவருக்கு உண்டு.  நோக்கிய இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மூவர்களும் கூட சனி விஷயத்தில் சற்று யோசிப்பார்கள். 

காரணம், சனி காலசக்கரத்தை பிளக்கும் வல்லமை உள்ளவர்.

வசிஷ்டரின் இந்த வார்த்தைகள் தசரதனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஏதாவது செய்து இந்த அநீதியை தடுத்தாக வேண்டும் என மனம் பரபரத்தது.

உடனே.. பத்துதிசையிலும் தங்குதடையின்றி செல்லும் தன் ரதத்தில் ஏறினான்.  ரதம் மின்னல் வேகத்தில் விண்ணில் ¢பறந்தது.  

நட்சத்திர மண்டலத்திற்குள் ஊடுறுவி, ரோகிணி மண்டலத்தை தசரதனின் ரதம் போய் சேர்ந்தது. 

அங்கே... கோடி சூரியன் கூடிவந்த மாதிரி ஒளி வெள்ளமாகய் சனிபகவான் காட்சியளித்தார்.  புஜபலபராக்கிரமத்தில் தசரதன் பலசாலி என்றாலும், தன்நிலை மறந்தான்.  எதிரில் இருப்பது யார் என்று கூட யோசிக்காமல், வில்லை எடுத்தான், நானை ஏற்றினான், சனியை குறிவைத்தான்.

தசரதா... ஈரேழு பதினான்கு லோகத்திலும் என்னை எதிர்க்கும் சக்தி எவருக்கும் இல்லை.  

   இருந்தும் உலக நலன் கருதி எமை எதிர்க்க துணிந்தாய்.  பிழை மறந்தோம்.  உன் துணிவை மெச்சினோம்.   என்ன வரம் வேண்டும் கேள்.

வில்லை எறிந்தான்.  தன்னை உணர்ந்தான்.  சாஷ்டாங்கமாக சனியின் காலில் விழுந்தான்.

சூர்யகுமாரா... உன்னால் சுபீட்சம் கெடக் கூடாது.  மழைவளம் பாதித்தால் மக்கள் நலன் பாதிக்கும்.  இதுதான் எனக்கு தரவேண்டிய வரம்.

அப்படியே ஆகட்டும்.  மழைவளம் சுரக்கும்.  மக்கள் இன்னல்படார் என்று வரமளித்£ர். மகிழ்ச்சியில் திளைத்த தசரதன் சனிபகவானை ஸ்தோத்திரங்களால் புகழாரம் சூட்டினான். அதுவே தசதரத ஸ்தோத்திரம் எனப்படும்.

யாருக்கெல்லாம் சனி பாதிப்பு இருக்கிறதோ, யாருக்கெல்லாம் ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, கண்டகசனி, அர்த்தாஷ்டம சனி, அல்லது சனி திசை நடப்பில் இருக்கிறதோ, அவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை   சனிக்கிழமையில் சொல்லி சனியை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.  

ஸ்ரீகணேசாய நம

அஸ்ய ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
தசரத ரிஷி சனைச்சரோ தேவதா
த்ரிஷ்டுப் சந்த சனைச்சர
ப்ரீத்யர்தே ஜபே விநியோக தசரத உவாச

1. கோணாந்தகோ ரௌத்ரயமோத பப்ரு
க்ருஷ்ண சனி பிங்களமந்தஸௌரி
நித்யம் ஸ்ம்ரு தோ யோ ஹரதேச பீடாம்
தஸ்மை நம ஸ்ரீ ரவிநந்தனாய

2. ஸுராஸுரா கிம்புருஷோர கேந்த்ரா
கந்தர்வ வித்யாதர பன்னகாச்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்தினேன
தஸ்மை நம ஸ்ரீ ரவிநந்தனாய

3. நரா நரேந்த்ரா பசவோ ம்ருகேந்த்ரா
வன்யாச்ச யே கீடபதங்கப்ருங்கா
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

4. தேசாச்ச துர்காணி வனானி யத்ர
ஸேனா நிவேசா புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

5. திலைர்யவைர்மாஷ குடான்னதானை
லோஹேன நீலாம்பரதானதோவா
ப்ரீணாதி மந்த்ரைர் நிஜ வாஸரே ச
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

6. ப்ரயாககூலே யமுனாதடே ச
ஸரஸ்வதீ புண்ணியஜலே குஹாயாம்
யோ யோகினாம் த்யான கதோபி ஸி§க்ஷ்ம
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

7. அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட
ஸ்திதீயவாரே ஸ நர ஸுகீ ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோக ந புந ப்ரயாதி
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

8. ஸ்ரஷடா ஸ்வயம் பூர்வனத் ரயஸ்ய
த்ராதா ஹரீசோ ஹரதே பிநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜு சாமமூர்த்தி
தஸ்மை நம ஸ்ரீரவிநந்தனாய

9. சன்யஷ்டகம் ய ப்ரயத ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை பசுபாந்தவைச்ச
படேத்து ஸௌக்யம் புவி போக் யுக்த
ப்ராப்நோதி நிர்வாணபதம் ததந்தே

10. கோணஸ்த பிங்களளோ பப்ரு
கிருஷ்ணோ ரௌத்ரோ பிந்தகோ யம
ஸௌரி சனேச்சரோ மந்த
பிப்பலாதேன ஸம்ஸ்துத

11. ஏதாநி தச நாமாநி ப்ராதருத்தாய ய படேத்
சனைக்சரக்ருதா பீடா ந காசித் பவிஷ்யதி

இதி ஸ்ரீசனைச்சர ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

1 comment:

  1. உடனே.. பத்துதிசையிலும் தங்குதடையின்றி செல்லும் தன் ரதத்தில் ஏறினான். ரதம் மின்னல் வேகத்தில் விண்ணில் ¢பறந்தது.

    நட்சத்திர மண்டலத்திற்குள் ஊடுறுவி, ரோகிணி மண்டலத்தை தசரதனின் ரதம் போய் சேர்ந்தது.

    அங்கே... கோடி சூரியன் கூடிவந்த மாதிரி ஒளி வெள்ளமாகய் சனிபகவான் காட்சியளித்தார். புஜபலபராக்கிரமத்தில் தசரதன் பலசாலி என்றாலும், தன்நிலை மறந்தான். எதிரில் இருப்பது யார் என்று கூட யோசிக்காமல், வில்லை எடுத்தான், நானை ஏற்றினான், சனியை குறிவைத்தான்.////////////


    :)))

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...