ads

Sunday 11 February 2018

நீர் அருந்தா விட்டால் வரும் ஆபத்து




சருமத்தில் சுருக்கம், கன்னத்தில் வெடிப்பு, கருப்பு புள்ளிகள், தோல்சிவந்து காணப்படுதல், முட்டி, மூட்டு எலும்பு இணைப்புகளுக்கு உரிய இடத்தில் தோல் கருத்து, நிறம் மாறுதல் ஏற்படுகிறதா? அல்லது ஏற்பட்டு இருக்கிறதா? 

திடீரென நாக்கு உலந்து போச்சா, கடுமையான தாகத்தை உணர்றீங்களா? 

லேசாய மயக்கம் வர்ற மாதிரி இருக்கா? கூடவே தலைவலியும் ஆரம்பமாகுதா? அப்படியானால் உங்கள் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு விட்டது. உடனடியாக தண்ணீர் பருக வேண்டும் என்பது அவசியம். 

ஒரு நாள் ஒன்றுக்கு 8கிளாசுக்கு குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதையும் அறிவுருத்துகிறது. 

ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்து விட்டால், கூட்டம் சேராதீங்க, காற்று வரட்டும் விலகி நின்னுங்கப்பா என்று சொல்வதும், உடனடியாக அவர் முகத்தில் பளிச் பளிச்சென தண்ணீரை தெளித்து, அவர் கண் விழித்ததும்,  அருந்த நீர் கொடுப்பதும் இயல்பான ஒன்று. அதாவது மனிதன் உயிர்வாழ பிராண வாயும், தண்ணீரும் அவசியம். பொதுவாக மனித உடல் என்பது தசை எலும்பு, ரத்தத்தால் ஆனது என்று சொல்லப்பட்டாலும், அது அத்தனைக்கும் மூலப்பொருள் தண்ணீர்தான்.  தாயின் வயிற்றில் இருக்கும்போதே பனிக்குடத்தில் தண்ணீரில்தான் மிதக்கிறோம். பிறந்து வந்த பிறகும் உடலில் 60சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது என்கிறது மருத்துவம். 

மனித உடலில் மூளை 75 சதவீதம் நீர் சத்து கொண்டதாம், ரத்தத்தில்  92 சதவீதம் தண்ணீர்தான் இருக்கிறது. வலிமையான எலும்புகள் கூட 22 சதவீதம் தண்ணீரால் ஆனதாம். தசைகள், தசைநார்கள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. இன்னொரு வியப்பூட்டும் செய்தி தெரியுமா?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. ரத்தத்தில் ரத்தசிவப்பனுக்கள், வெள்ளை அனுக்கள், பிளேட்லட்டுக்கள் என மூன்று வகையான அனுக்களும், திரவ நிலையில் பிளாஸ்மாவும் இருக்கிறது. 100 மில்லி ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் அதாவது தண்ணீர் திரவமும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் கலந்து இருக்கும். 

இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் து?ரம் எவ்வளவு தெரியுமா, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீட்டராம்., ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம். ஆக அந்த ரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால், கெட்டியானால் எவ்வவு பெரிய விபரீதத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

உண்ணும் உணவு ஜீரனமாக, கழிவுகளை வெளியேற்ற இன்னும் பல வேலைகளுக்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் அளவு உடலில் குறைவு ஏற்படும்போது உடல் சோர்வு, நீர் குறைவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உடல் இயக்கத்தை இயல்பான நிலைக்கு வைத்துக் கொள்ள முயலும் போது ஆக்ஸிஜன் குறைபாடு, நீர்தேவையை பூர்த்தி செய்து கொள்ள தேவையில்லாமல் கொழுப்பை உற்பத்தி செய்தல், உடலில் உள்ள நீர்ம கழிவுகள் வியர்வை வழியே வெளியேற முடியாமல் தேங்குவதால் அமிலத்தன்மை அதிகமாதல், அதனால் கிருமிகள் உருவாதல், சிறுநீரகம் பாதிக்கப்படுதல், நீர்சத்து குறைவதால் கழிவுகள் பெருங்குடலுக்கு செல்லாமல் தங்கி மலச்சிக்கல் உருவாதல், எலும்பு மூட்டுகள் பாதிப்புக்கு உள்ளாதல், இதைவிட முக்கியமாக புறத்தோற்றத்தில், தோல்களில் சுருக்கம், கரும்புள்ளிகள், படர்தாமரை போன்று தோல் மாற்றமடைதல் என்று ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன. 

சுவாச இழப்பு, ரத்த இழப்பு எப்படி மரணத்தை நோக்கி அழைத்து செல்கிறதோ, அதைப்போல் நீர் இழப்பும் ஆபத்தானது. அதனால் தினந்தோறும் 2லிட்டருக்கு குறையாமல் நீர் அருந்துவோம்.  தாகம் எடுக்கா விட்டாலும் தண்ணிர் அருந்த வேண்டும். 


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...