ads

Tuesday, 14 January 2014

நரசிம்மர்


நரசிம்மர்
சிங்கமுகம், மனித உடல், பார்ப்பதற்கு பயம் பாட்டும் கோரைபற்கள் கொண்டவர்தான் நரசிம்மர். 
அவதார நாயகன் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் இவருக்கென்று தனிச் சிறப்பு  உண்டு.
அப்படி என்ன சிறப்பு?
எப்போதுமே தெய்வங்கள் ரிஷிகள், ஞானிகள், முனிவர்களின் தவத்திற்கும், பிராத்தனைக்குமே தரிசனங்கள் தந்ததாய் புராணங்கள் சொல்கிறது.  ஆனால்  எந்த வேண்டுகோளும் இல்லாமல், வேண்டுதலும் இல்லாமல், ஒரு சிறுவனுக்காக வந்த அவதாரம்தான் நரசிம்மம்.
ஹிரன்யகசிபுவின் கோபமான கேள்விக்கு பதில் சொன்ன பிரகலாதன், நான் வணங்கும் ஹரி... தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்பிக்கையோடு சொன்னான். அந்த நம்பிக்கையை மெய்யாக்க தூணில் இருந்து வெளிவந்தவர்தான் நரசிம்மர்.
பைரவர், சக்கரத்தாழ்வார் போன்று நரசிம்மரும் பத்தர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறார்.  இவரை வணங்க எந்த பயமும், தயக்கமும் தேவையில்லை.  நம்பிக்கை ஒன்றே பிரதானம். 
பார்ப்பதற்கு பயம் காட்டும் உருவமாக இருந்தாலும் நாடியவர்களுக்கு ஒடிவருபவர் நரசிம்மர்.
சிங்கம் கொரூர குணம் கொண்ட கொடிய விலங்குதான். எந்த விலங்காக இருந்தாலும் பசி வந்தால் கொன்று உண்ணும் குணம் கொண்டதுதான்.  ஆனால் அந்த கொடிய சிங்கத்தின்னுள்ளும் ஒரு மென்மையான மனம் உண்டு.
தான் ஈன்ற குட்டிகளிடம் கடுமை காட்டுவதில்லை.  கொஞ்சி விளையாடும், துள்ளி ஓடி விளையாட்டு காட்டும்.  அதுபோல்தான் நரசிம்மரும்.  அரக்கர்களுக்கு கொடியவராக இருந்தாலும் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இனியவர். 
சரி.... நரசிம்மரை வழிபட்டால் கிடைக்கும் நன்மை என்ன?
பில்லி, சூன்யம், செய்வினைக்கோளாறுகள் உங்களை தீண்டாது.
எந்த துஷ்டசக்திகளும் நரசிம்மரை பூஜிக்கும் இடத்தில் இருக்காது. விலகி ஓடிவிடும்.
எதிரிகள், எதிர்ப்புகள், பொய் வழக்கு தொல்லைகள், புனைக்கதைகளால் பாதிக்கப்படும் சூழல் இவற்றை முற்றிலும் நீங்கும்.
பழகிய இடத்திலேயே பாதகம் நினைப்பவர்களை அடியோடு வேரறறுக்கும்.
சிவரூபங்களில் பைரவர் ஆலய பாதுகாப்பிற்கு முக்கியமானவர். கோவிலை பூட்டிய பின் இவரிடம்தான் ஆலய சாவி அளிக்கப்படுவதாய் சொல்லப்படுகிறது. 

அதேபோல் கோவிலில் உள்ள விக்ரகங்களை, கும்பாபிஷேக காலங்களில் மருந்து சாற்றுவதற்காக  மூலஸ்தானத்தில் இருந்து பெயர்த்து எடுக்க நரசிம்ம மந்திரத்தை ஜெபம் செய்தபிறகே எடுப்பார்கள்.

Saturday, 11 January 2014

கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு


தேசியக் கொடியைக் காப்பதற்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்தவர் தான் திருப்பூர் குமரன்.

நேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி கூட்டத்தின் பிரம்படி வாங்கி உயிரை விட்டு ஒவ்வொரு தமிழனையும் யோசிக்க வைத்த கொடிகாத்த குமரன் இறந்த நாள் இன்று.

கொடிகாத்த குமரனின் வாழ்க்கை வரலாறு

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. இவரது சொந்த ஊர் ஈரோட்டை அடுத்த சென்னிமலை. தறி நெய்யும் நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சென்னிமலை கைத்தறித் துணி உற்பத்திக்குப் பெயர் பெற்றது. இங்கு நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமாரசாமி. இவர் 1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார்.

தறியில் துணி நெய்துப் பிழைக்கும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் சென்னிமலையில் தனது ஆரம்பகால கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். மேலே படிக்க வசதி இன்மையால் பள்ளிப்பாளையத்தில் இருந்த தாய்மாமன் வீட்டுக்குச் சென்றார். அங்கும் இவரது குலத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டார்.

ஈரோடு சென்று அங்கு நூல் வாங்கிக் கொண்டு வந்து துணி நெய்து மீண்டும் ஈரோடு சென்று விற்று பிழைப்பு நடத்தினார். அப்போதெல்லாம் போக்கு வரத்துக்கு போதிய வசதிகளோ அல்லது பேருந்து வசதிகளோ இல்லாத நிலையில் இவர் மாட்டு வண்டிகளிலோ அல்லது சுமையைத் தலையில் சுமந்து கால் நடையாகவோ சென்று வந்தார்.

இந்தத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமையாலும், அலைச்சல் ஒத்துக் கொள்ளாததாலும், இவர்கள் குடும்பம் திருப்பூருக்குக் குடி பெயர்ந்தது. அங்கு இவர் தனக்குப் பழக்கமான தறியடிக்கும் தொழிலைச் செய்யாமல், சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூர் ரங்கசாமிக் கவுண்டர் ஆகியோர் நடத்திய தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார்.

பஞ்சு எடைபோட்டு வாங்குவது கொடுப்பது என்பதில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்பவர்களைத்தான் முதலாளிகள் நியமிப்பார்கள், அப்படிப்பட்ட நேர்மையாளராக இருந்த குமாரசாமிக்கு அந்த வேலையை அவர்கள் அளித்திருந்தார்கள்.

பஞ்சு மண்டி வேலை முடிந்ததும், பொது வேலைகளிலும் ஈடுபட்டு நாட்டுச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமாரசாமி. அப்போது திருப்பூரில் இயங்கி வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் இவர் உறுப்பினரானார்.

திருமண வாழ்க்கை

இவரது பத்தொன்பதாவது வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. அப்போது பதினான்கே வயதான ராமாயி இவரது மனைவியானாள். ஆறாண்டு காலம் இவரது திருமண வாழ்வு இனிதே நடந்தும் மகப்பேறு இல்லை.

கதர் இயக்கத்தில் இணைந்தார்

மகாத்மா காந்தி ஐந்து முறை திருப்பூருக்கு வந்திருக்கிறார். கதர் இயக்கம் இங்குதான் சிறப்பாக நடந்து வந்தது. குமாரசாமியும் கதர் இயக்கத்தில் கலந்து தலையில் கதர்க் குல்லாய், கதர் உடை என்று அந்த நாள் காங்கிர தொண்டர்களின் உண்மைத் தோற்றத்தில் விளங்கினார்.

1932ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின. பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது.

ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது.

தேசபந்து ஊர்வலம்

இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் 10-1-1932இல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது.

தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவருமான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது.

ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை. எனவே புகழ்பெற்ற தியாகி பி.எஸ்.சுந்தரம் என்பார் அவரைத் தேடி அவர் வீடு சென்றார், பின்னர் அவரது பஞ்சாலைக்குச் சென்றார். அங்கு கவுண்டர் இருப்பதைப் பார்த்தார். ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.

இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் அவர்களே ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர்.

சாலையில் கூடியிருந்த மக்கள் என்ன நடக்குமோ இந்த வீரர்களை பொலிஸ் அரக்கர்கள் எப்படியெல்லாம் தாக்குவார்களோ என்று அஞ்சியபடி பார்த்துக் கொண்டிருந்தனர். ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து பொலிஸ் நிலையத்தை நெருங்கியது.

அப்போது பொலிஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது பொலிஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர். ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான பொலிசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர்.

அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், மகாத்மா காந்திக்கு ஜே, பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

குமாரசாமியின் மரணம்

குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது. அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பு மட்டும் பிடித்த பிடி தளரவேயில்லை.

வாய் ஜே கோஷம் போட்டபடி இருந்தது. குமாரசாமி எனும் அந்த வீரத்தியாகி உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவன் கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் மட்டும் கீழே விழவேயில்லை.

நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் பொலிசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர். அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு பொலிஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார்.

குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை.

பொலிசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.

அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர். இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் பொலிஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் பொலிஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது.

சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். மரண அடிபட்ட குமாரசாமிக்கு மண்டை உடைந்து ஏதோவொன்று மூளைக்குள் சென்று விட்டது. நினைவு இல்லை. ரத்தம் நிற்கும் வழியாக இல்லை. சிறிது நேரம் துடித்துக் கொண்டிருந்த குமாரசாமியின் உயிர் 11-1-1932 அன்று இரவு தன் மூச்சை நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றது.

அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூணியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடம் எது? பொலிசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால், அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது.

ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டதே தவிர, அவன் விளைத்த வீரப் போரின் விவரத்தை யாராலும் மறைக்க முடியாது.

வாழ்க திருப்பூர் குமரனின் புகழ்!

இந்தியா நியூஸ் 

Friday, 10 January 2014

அமெரிக்காவை விட்டு வெளியேறினார் தேவயானி

தேவயானி


விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி செய்தியை படிக்கும் இக்கணம்  இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறார்.

தேவயானியை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு தேவயானி நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்துதுறை செய்தியாளர் , சையத் அக்பருதீனும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

"இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் நிரபராதி என்பதை தேவயானி கோபர்கடே வலியுறுத்தினார்", என்றார் அக்பருதீன்.

"அவர் இந்தக் காலகட்டத்தில் தனக்கு பலத்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கியதற்காக,இந்திய அரசுக்கும், குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கும், இந்திய மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்", என்றார் அக்பருதீன்.

முன்னதாக வியாழக்கிழமை , தேவயானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முறையாகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. 

இதற்கிடையே, அவரை நியுயார்க்கில் இருக்கும் ஐ.நாவில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக இந்தியா நியமித்ததை அடுத்து அமெரிக்கா அவருக்கு ராஜீய பாதுகாப்பு வழங்கியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

தேவயானியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.


Thursday, 9 January 2014

ஆபிரகாம் லிங்கன் - ஜான் எப். கென்னடி ஒற்றுமைகள்




அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடி பண்டக சாலையில் இருக்கும்போது அவரைச் சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள்.

Wednesday, 8 January 2014

பிரஸ்ன முறைகள்

உலகெங்கிலும் ஜோதிட நிபுணர்களால் அநேகவகையிலான ப்ரச்சின மார்கங்களை - உத்தியை கையாளப் பட்டு வந்திருப்பதை தெரியமுடிகிறது. 

பிராசீன மார்கங்களை (முதல்) காலங்களில் China, Tibet, Egypt, Mughal,& Western countries என்று உலகின் பல இடங்களிலும் அந்தந்த தேசத்திற்கேற்ப பிரச்னமார்க்கங்கள் இருந்தன.

 தற்பொழுதும் ஜோதிஷம், கபால ஜோதிஷம், எல்லாம் பிரசாரத்தில் உள்ளன. அதில் நம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு நல்ல விடைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இங்கு பாரத தேசத்தில் தட்சிண பாகத்தில் கேரளத்தில் ஜோதிடக் கலையில் பிரச்சன மார்க்கம் நிறைய பிரயோக ரீதிகளால் கணிக்கப்பட்டு கையாண்டு வருகிறார்கள். அதில் சில.

1. தாம்பூல பிரஸ்னம்
2. நிமித்த பிரஸ்னம்
3. தேவ ப்ரஸ்னம்
4. ஆரூட பிரஸ்னம்
5. அஷ்ட மங்கல்ய பிரஸ்னம்

இப்படி அநேக மார்க்கங்கள் வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தந்தப் பெயர்களில் குறிப்பிடும்படியே இவை ஒவ்வொன்றும். செயல்பாடு ரீதியாக உள்ளன.

1. தாம்பூல பிரஸ்னம் (வெற்றிலை)

நிச்சயிக்கப்பட்ட நாளில், கோயில், குரு - கணபதி வந்தனங்கள் செய்து விஷயம் தெரிய வேண்டியவரால் எடுத்துக்கொடுக்கப்படும் வெற்றிலையை வைத்துக்கொண்டு, அதில் கிடைக்கும் கணிதத்தை வைத்து பாவ பலங்கள் சொல்லப்பட்டுவரும் முறை இது. 

தாம்பூல சக்யை, தாம்பூல வடிவு, நிமித்தம், நேரம், கணக்கிடும் வழி ஆகிய அனைத்தும் மிகத் துல்லியமாக இருக்கவேண்டும்.

2. நிமித்த பிரஸ்னம்

கேள்வி கேட்கப்படும் நேரம், முகூர்த்தம், ஹோரை, சந்தர்ப்பம், முதல் வாக்கியம், முதல் அட்ஷரம், தூதலட்சணம், காதில் வரும் செய்தி, அதன்பொருள், இயற்கையில் இருந்து வரும் சில அறிகுறிகள். இவை அனைத்தையும் மனத்தை ஒருநிலைப் படுத்திக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் வைத்து கணித்து கேட்கப்படும் கேள்விக்கு விடை அளிக்கும் முறையே இது.

3. தேவ  பிரஸ்னம்:

மனிதர்களுக்கு ஏற்படும் அவஸ்தை, கஷ்டங்கள் ஆகியன போன்றே மனிதர்களால், அல்லது தேவகணங்களால் கட்டப்பட்டு தலைமுறைகளால் வழிபட்டுவரும் தேவாலயங்களுக்கு ஏற்படும் கஷ்ட - நஷ்ட - ரோகாவஸ்தையை ஜோதிட ரீதியாக இறையருளால் சொல்லப்படும், 

கணிக்கப்படும் செயல் முறை தேவ பிரஸ்னம். இதில் 12 பாவங்களையும், கோவிலில் ஒவ்வொரு விஷயத்தையும், நபர்களையும், செயல்முறைகளையும் கண்டறிய உதவுகின்றன. (கோயில்களுக்கும் ஜாதகம் அமைத்து தசாசந்தி தோஷம் கணக்கிடும் முறை உள்ளது).

4. ஆரூட பிரஸ்னம்

குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களை, அதன் நிவாரணங்களைத் தெரிந்து கொள்ள குடும்ப பிரஸ்னமாக வைத்துக் கொள்வதே ஆரூட பிரஸ்னம். ஆரூடம் என்றால் வீடுஎன்றும் ஒருபொருள் உண்டு. வாஸ்துதோஷநிவர்த்தியும் இதில் வரும்.

5. அஷ்ட மங்கல்ய பிரஸ்னம்

கோயில், குடும்பம், ஸ்தாபனம், அரசு என்று ஒரு கட்டுப் பாட்டில் இயங்கிகொண்டிருக்கும் அனைத்திற்கும் மேலே கூறிய 3 (தாம்பூலம், ஆரூடம், நிமித்தம்) முறைகளால் விடை கிடைக்காமல் போனால் மட்டுமே அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்து கொள்ளவேண்டும்.  இதுவும் மிகவும் தேவையுள்ளபோது மட்டும் கையாள வேண்டிய மிக சிரமமான முறை. 

இதில் அநேக விற்பனர்கள் கலந்துகொண்டு பலமுறைகள் கையாளப்பட்டு தேவஹிதம் தெரிந்துகொண்டு 8 கோணங்களிலும் சிந்தித்து சொல்லப்படும் முறையே இது. நிறைய விவாதங்கள் இதற்கு தேவைப்படும்.

மேலும் அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்யும் போது முன்கூட்டியே நாள்கள், மற்றும் பஞ்சாங்கம் (வாரம், நட்சத்திரம், திதி, காணம், நித்யயோகம்) நிச்சயிக்கப்பட்டு செயல்பட்டாலும் ப்ரசன சமயம் சில தோஷங்கள் உண்டாகலாம். அவற்றையும் கணக்கில் கொண்டு தீர்க்கமான பலன்களைச்சொல்ல முடிகின்றன.

உதாரணமாக தேவபிரச்னமாக அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்யும் போது
1. தேவகோபம்
2. தர்மதேவ கோபம்
3. சர்பபாதை
4. பித்ருதாபம், பித்ருகோபம்
5. பிரேத பாதை
6. திருஷ்டி பாதை
7. வாக்குதோஷம்
8. விவிபோஜனம்
9. சத்ருபாதை
10. வாஸ்துவைகல்யம் (ஸ்தானதோஷம்)
என்று அனைத்துவிதமான பதில்களும் கிடைக்க ஆராயப்படுகிறது.

யார் யார் செய்து கொள்ள வேண்டும்?

 யாரை அணுகவேண்டும்?

மிகவும் சோதனைகாலத்தில் மட்டும், கடினமான நோய்களுக்கு டாக்டர்களைப் போய் பார்ப்பதைப்போலவே பிரஸ்னம் செய்து கொள்ள வேண்டும். நாளும், பொழுதும் ஜோதிடர்களை மட்டும் நம்பியே வாழ்க்கையை ஓட்டிக் கொள்பவர்களுக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன் - ஜோதிடம் என்பது சோதனை இடம் அல்ல, ஜோதிடர் இறைவனும் அல்லர். 

தெய்வத்தின் அருளால், அவருடைய நேரமும் காலமும் நன்றாக உள்ள பொழுதும், கேள்வி கேட்பவறின் விமோசன காலமுமாகி இருந்து, தெய்வ வாக்கின் படியுள்ள பரிகாரவழிகளைக் கடைபிடித்து வருபவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியே தெய்வக்ஞன் என்ற ஜோதிடர்.

ஜோதிடத்தில் பரிகாரமே அல்ல, அது தலையெழுத்து என்று கடும் வாக்கு வாதம் செய்பவர்களும் அநுபவங்களை வைத்து ஆராய்ந்து தெரிந்து கொண்டு விதியை மதியால் வெல்லலாம் என்ற நம்பிக்கையால் (மனித வாழ்வே - நம்பிக்கையில் தான் இயங்குகிறது) நிம்மதி கிடைக்கலாம்.

பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளவர்களைத் தவிர்த்து முழுவதுமாக விடை அளித்து அவர் கூறும் பரிகாரங்களை முழு மனத்துடனும், நம்பிக்கையுடனும் செய்து கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆராய்ந்து கேட்டுத் தெரிந்துகொண்டு விளம்பரத்தால் மட்டும் பிரபலமானவர்களைத் தவிர்த்துக்கொண்டு பிரஸ்னம் செய்து கொள்வது சிறந்த பலன் தரும்.




”ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்” பி.டி.ஜெகதீஸ்வரன் செல்:9659690395


அபிஜித் முகூர்த்தம்

கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் கொட்டி கிடக்கும் வான் வெளியில் மனிதனை ஆள்பவை 27 நட்சத்திரங்கள்.

அபிஜித் முகூர்த்தம்


இந்த 27 நட்சத்திர கூட்டங்களை வைத்துதான்  அனைத்து வகையான முகூர்த்தங்களும் நிர்ணயணம் செய்யப்படுகிறது. புராண காலங்களில் அபிஜித் என்ற நட்சத்திரம் வழக்கில் இருந்தது. இப்போது வழக்கில் இல்லை.

இதன் அமைப்பு நான்கு தெரு சந்திக்கும் இடம்போல் அமைய பெற்றியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.  

ஆனால் ஒவ்வொரு நாளிலும் அபிஜித் முகூர்த்தம் உண்டு. அந்த வகையில் சூரியன் உச்சி வானில் இருக்கும் நேரமே அபிஜித் முகூர்த்தமாகும். அதாவது நண்பகல் 11-30 லிருந்து 12-30 வரை உள்ள காலமாகும்.

பிரம்ம முகூர்த்தம்,உதய காலம்,அஸ்தம காலம் போன்ற நேரங்களுக்கு எப்படி தோஷமில்லையோ அதேபோல் இந்த அபிஜித் காலத்திற்கு எந்தவிதமான தோஷமும்  கிடையாது.

ஒரு சுப காரியம் செய்ய வேண்டும் ஆனால் முகூர்த்த நாளோ,நேரமோ இல்லாவிட்டாலும் கூட சரியாக பகல் 12 மணியை முகூர்த்தமாக பயன்படுத்திகொள்ளலாம்.அதேபோல் முகூர்த்த நேரத்தை தவறவிட்டவர்களும் இந்த நேரத்தை பயன்படுத்தலாம்

நட்சத்திரங்களும் அதி தேவதைகளும்

  

பூமியில் பிறவியெடுக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளின்படியே , நட்சத்திரமும் யோகமும் அமைகின்றன. 

உண்மையைச் சொல்லப்போனால் கர்மவினை ஏதும் இல்லாதவன் பூமியில் பிறப்பதில்லை. கர்ம வினையின்றி எவரும் பூமியில் பிறவியெடுப்பதும் இல்லை. 

எனவேதான் பூமியைக் கர்மபூமி என்கிறோம்.  

நம்முன்னோர்கள்,  வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், சாஸ்திரங்கள் , புராணங்கள் போன்றவற்றை ஆராய்ந்து  கர்ம வினைகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்து வழிகாட்டியிருக்கிறார்கள். 

இனி 27 நட்சத்திரங்களையும், அவற்றின் அதிபதியான தேவதைகளையும் காண்போம்.

அசுவனி -  27 நட்சத்திரங்களுக்குள் முதன்மையானது அசுவனி நட்சத்திரம். அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  கூத்தனூரே அதிர்ஷ்ட தலமாகும். அங்கு குடி கொண்டுள்ள ஸ்ரீசரஸ்வதியே அதிர்ஷ்ட தெய்வமாகும்.

பரணி நட்சத்திரம்- இரண்டாவது நட்சத்திரமாய் பரணி நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதை தர்மதேவதையான யமன் இந்த நட்சத்திரத்தின் வடிவம் முக்கோணமாகும்.

கிருத்திகை- 3 வது நட்சத்திரமான கிருத்திகையின் தேவதை அக்னிபகவான். இதவன் வடிவம் நட்சத்திரக்கூட்டம். 

ரோகிணி- 4வது நட்சத்திரம் ரோகினி- இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை ‘பிரம்ம தேவர்’ ஆவார். இதன் வடிவமும் 8 நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக்கூட்டமாகும். 

மிருகசீரிஷம்- 5வது நட்சத்திரமான மிருக சீர்ஷத்தின் தேவதை சந்திரபகவான்’ ஆலலார். இந்த நட்சத்திரன் வடிவம் 3 நட்சத்திரக்கூட்டமாகும். 
திருவாதிரை - 6வது நட்சத்திரமான திருவாதிரையின் தேவதை ‘ருத்திரன்’ ஆவார்.  இதன் வடிவம் தாமரை மொட்டு போன்றது. 

புனர்பூசம்- 7 வது நட்சத்திரம் புனர் பூசம். தேவதை புனர்வசு தேவதையான ‘அதிதி’ ஆவார். வில்லைப்போன்ற வடிவமுள்ள நட்சத்திரம்.

பூசம்- 8வது நட்சத்திரம் பூசம்- இதன் தேவதை பிரஹஸ்பதி- வடிவம் மாலை வடிவில் நட்சத்திரக்கூட்டம்.

ஆயில்யம்- 9வது நட்சத்திரமே ஆயில்யம்- தேவதை ‘ஆதிசேஷன்’ பாம்பு வடிவில் நட்சத்திரக்கூட்டம் இதன் வடிவம்.  

மகம்-  10வது நட்சத்திரம் மகம்- தேவதை ‘பித்ரு.’  வடிவம் -ஊஞ்சல் போன்ற அமைப்பு.

பூரம்-  11வது நட்சத்திரம் பூரம். தேவதை- ‘அர்யமான் வடிவம்’  இரண்டு நட்சத்திர தோற்றம்.

உத்திரம்-  12 வது நட்சத்திரம் உத்திரம். தேவதை - பகன்.  இரண்டிரண்டு நட்சத்திரத் தொகுப்பு. 

ஹஸ்தம்- 13 ஆவது நட்சத்திரம் ஹஸ்தம்- தேவதை- சூரியபகவான். வடிவம் 5 நட்சத்திரக் கூட்டம். 

சித்திரை-  14வது நட்சத்திரம் சித்திரம். தேவதை- ‘துர்வஷ்டர் விஷ்வகர்மா’  ஆகிய இருவராவர். வடிவம் - முத்து. 

சுவாதி-  15வது நட்சத்திரம் சுவாதி.  தேவதை - வாயு பகவான். வடிவம் மாணிக்கம்.

 விசாகம் - 16வது நட்சத்திரம் விசாகம். தேவதை ‘இந்திரன்’, ‘அக்னி’. வடிவம்- சக்கரம்.

அனுஷம்- 17வது நட்சத்திரம் அனுஷம். தேவதை- ‘மித்ரன்’. வடிவம் 3 நட்சத்திரங்கள்.

கேட்டை-  18வது நட்சத்திரம் கேட்டை. இதன் தேவதை ‘இந்திரன்.’   வடிவம்- குண்டலம்.

மூலம்- 19 நட்சத்திரம் மூலம்- தேவதை ‘நிருருதி’.  வடிவம் - அங்குசவடிவில் 6 நட்சத்திர தொகுப்பு.

பூராடம்-  20வது நட்சத்திரம் பூராடம். தேவதை அப ஜல தேவதைகள்.  வடிவம்- அரைவட்ட சந்திரன். 

உத்திராடம் - 21 ஆவது நட்சத்திரம். தேவதை ‘விச்வே தேவர்கள்’ . வடிவம்- நட்சத்திரங்கள் தொகுப்பு.

திருவோணம்- 22வது நட்சத்திரம். தேவதை  ‘திருமால்’. வடிவம் -  4 நட்சத்திரங்கள் தொகுப்பு.

சதயம்- 24வது நட்சத்திரம் சதயம். தேவதை ‘வருணன்’. வடிவம்- கோளவடிவில் 100நட்சத்திரக் கூட்டம்.

பூரட்டாதி- 25வது நட்சத்திரம  பூராட்டாதி. தேவதை ‘அஜன்’ அல்லது ‘ஏகபாதர்’. வடிவம்- சதுரவ வடிவில் 4 நட்சத்திரங்கள்.

‘உத்திரட்டாதி’- 26வது நட்சத்திரம் உத்திரட்டாதி. தேவதை ‘அஹர்புத்ரியன்’. வடிவம்- சம சதுர வடிவில் இரண்டிரண்டு நட்சத்திரங்கள். .

ரேவதி-  27 நட்சத்திரங்களுள் கடைசி நட்சத்திரம் ரேவதியாகும். இதன் தேவதை ‘பூஷா’. வடிவம் - மீன்

Tuesday, 7 January 2014

வேதாளமும் வேதியனும்- யமன் தர்மவானா?

 யமன் தர்மவானா?      

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய   மரத்தில்   தொங்கிக்கொண்டிருந்த  பிரேதத்தைக்   கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். 

 அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. 

“அ ஹோய்.. வாரும் பிள்ளாய் வேதியனே!   உன்னைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!   

நீ துருவனை போன்ற திடமனதும் பக்தியும் உடையவனாகத் திகழ்கிறாய். நசிகேதனைப் போன்று தைரியசாலியாகவும்,  முயற்சியில் பின் வாங்காதனாகவும் இருக்கிறாய்.  

மரணத்தை வென்ற மார்க்கண்டேயனைப் போல் சிறுவயதிலேயே  சாஸ்திர ஞானம் பெற்றவனாய் ஒளிர்கிறாய்.  

வெகுகாலத்திற்கு முன்னால் எனக்கொரு நண்பன் இருந்தான். உஜ்ஜனியின் அரசன்.  அவன் பெயர் விக்கிரமாதித்தன்!



அவனைப் போல ஒரு மாமனிதனைச் நான் சந்தித்தே இல்லை.

 அவனுக்கு பிறகு நான் உன்னுடன் தான் பேசுகிறேன். 

நீ பேச விரும்ப மாட்டாய் என்பது தெரியும். ஆனால் யாருடனாவது பேசாமல் இருந்தால் எனக்கு தலை வெடித்துவிடும்!  

பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க நான் கதை  சொல்லிக்கொண்டே வருகிறேன்.. நீ கேட்டுக் கொண்டே வா..

‘இந்த பூமியின் ஆதிகாலத்தில் பிரம்மாவின் மகன்கள் என்று கூறப்படும்  காஸ்யபர், அத்திரி என்ற மகாமுனிவர்கள் வாழந்து வந்தனர்.

 காஸ்யபர் அதிதி தம்பதிகள் மூலமாக சூரியவம்சமும், அத்திரி அநுசூயா தம்பதிகள் வழியாக சந்திரவம்சமும் ஆரம்பமானது.

காஸ்யபருக்கும் அதிதி என்பவளுக்கும் பிறந்தவன் சூரியன். அதிதிக்கு பிறந்ததால் ஆதித்தன் என்று அழைக்கப்படுகிறான்.

சூரியனுக்கு இரண்டு மகன்கள் ஒருவன் யமன். இன்னொருவன் சனி.

 (அசுவினித் தேவர்கள், கர்ணன் சுக்கிரீவன் போன்றோரும் சூரியனின் பிள்ளைகளே.) 

மூத்தவனான யமனின்  பெயரையும் , இளையவனான சனியின் பெயரையும் கேட்டாலே  மக்கள் பயந்து நடுங்குகிறார்கள் ஆனால் இவங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்கன்னு சொல்றவங்களும் உண்டு.

இவங்க நல்லவங்களா? கெட்டவங்களாங்கிற சந்தேகம்  இன்னைக்கு வரைக்கும் எல்லோரின் மனசுலேயும் இருந்துக்கிட்டே இருக்கு. இதில் யமன் யமலோகத்துக்கு அதிபதி.  சனி கிரகாதிபதி.

 பூமியில் பிறவி யெடுக்கிற ஆன்மாக்களுக்கு பிரம்மா விதித்த ஆயுள் முடிந்ததும் அந்த உயிரை உடலிலிருந்து கவர்ந்து வந்து,  செய்து விட்ட பாவப்புண்ணியங்களுக்கேற்ப  தீர்ப்பெழுதி சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவது யமனின் கடமை. 

காலம் தவறாமல் தன் கடமையை நிறைவேற்றுவதால் யமனுக்கு காலதேவன் என்று பெயர்.

யமன் தன் கடமையிலிருந்து நழுவ வேண்டிய இக்கட்டும் சில சமயம் நேர்ந்திருக்கிறது. 

மார்க்கண்டேயன் 

 பதினாறு வயது மட்டுமே வாழும் விதிபெற்ற , மிருகண்டு முனிவரின் புதல்வன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரச்செல்லும் போது சிவனால் சம்ஹாரம் செய்யப்பட்டு மறைநிலையடைகிறார். 

ஏனென்றால் தேவர்களுக்கேது மரணம்?. சிவப் பக்தனான மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவியாகிறான்.  சூரியனார்க் கோயிலில்  சிவனை வணங்கித் தவமிருந்து மீண்டும் இழந்த பதவியைப் பெறுகிறார் யமன். 

மாண்டவ்ய மகரிஷி

அடுத்து மாண்டவ்ய முனிவர் விசயத்தில் சாபம் அடைகிறார்.

மாண்டவ்ய முனிவர் கானகத்தில் தவத்திலிருந்த போது , அரண்மனையில் பொருட்களைக் கொள்ளையடித்துக்கொண்டு, கொள்ளைக்காரர்கள் அவ்வழியே வருகின்றனர்.  

அவர்களை துரத்திக் கொண்டு வந்த அரண்மனை வீரர்களும் கொள்ளையர்களை பின்தொடர்ந்து வருகிறார்கள்.  கொள்ளயடித்தப் பொருட்களை மாண்டவ்ய முனிவரின் அருகே போட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓடிவிடுகின்றனர்.

மாண்டவ்ய முனிவர்தான் பொருட்களை கொள்ளையடித்துள்ளார் என்று தவறாக எண்ணிய அரச வீரர்கள் அவரை  சூலத்தில் குத்தியேற்றி விட்டு, பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

சூலத்தில் ஏற்றப்பட்ட முனிவர், நீண்ட நாட்களாக உயிர்பிரியாமல் வேதனையில் தவித்தார். இதை அறிந்த அரசன் ஓடிவந்து அவரை கீழே இறக்கி தவறு செய்துவிட்டதாக மன்னிப்புக் கேட்கிறான்.

அவனை மன்னித்த முனிவர் நேரே யமனிடம் வருகிறார்.

நான் இத்தகைய துன்பத்தை அடையக் காரணம் என்ன? என்றுக் கேட்கிறார்.

 அவரது தவ வலிமையை உணர்ந்த யமன் , ‘ஸ்வாமி நீங்கள் பட்சிகளையும் வண்டுகளையும் இம்சித்தீர்கள் அதனால் இந்த தண்டனை’ என்கிறார்.

“இந்த பாவத்தை நான் எப்போது செய்தேன்?” என்று கேட்கிறார் முனிவர்.

‘நீங்கள் குழந்தையாய் இருந்த காலத்தில் செய்தீர்கள்’ , பதில் தருகிறார் யமன்.
’அறியாத வயதில் செய்த குற்றத்திற்கு கொடும்  தண்டனை  விதித்தது பெரும்குற்றம்.   நீ மனிதனாகப் பிறந்து தர்மங்களை சரியாகக் கற்று வா” என்று சாபம் கொடுக்கிறார் முனிவர்.

சாபத்தை பெற்ற யமன் அம்பாலிகையின் வேலைக்காரியின் வயிற்றில் வியாசருக்கு மகனாய் அவதரித்து விதுரர் என்று பெயர்பெற்று நேர்மையில் சிறந்து, விதுர நீதியை இயற்றி  முனிவரின் சாபத்தை நிறைவேற்றுகிறார்.

இத்தகைய  யமன் சாவித்திரியின் விசயத்திலும் தன் கடமையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். 

சாவித்திரி

அஸ்வபதி மன்னனுக்கு சாவித்திரி தேவியின் அருளால் பிறந்தவள் சாவித்திரி. 

அவள் துயுமதசேனனின் மகன் சத்திய சேனன் என்பனை விரும்பி மணந்து கொண்டு , இராஜ்ஜியங்களை இழந்த அவனோடு கானகத்தில் வசித்து வருகிறாள்.  குறை ஆயுளோடு பிறந்த சத்திய சேனனின் உயிரைக் கவர்ந்து செல்ல வருகிறார் யமன்.

கானகத்தில் சாவித்திரியின் மடியில் சத்தியசேனனின் உயிர்பிரிகிறது. கண்ணீர்விட்டு கதறிய சாவித்திரி நிமிர்ந்து பார்த்தபோது அங்கே யமன் நின்றுகொண்டிருப்பது தெரிகிறது.

சாவித்திரி உடனே எழுந்து அவரது காலடியில் பணிந்து யமராஜா! இந்த இளவயதில் என் கணவனின் உயிரைப் பறித்து செல்லல் நியாயமா ? அவரை விட்டுவிடுங்கள் என்று கதறுகிறாள்.

சற்றுநேரம் திகைத்த யமன் . தான் சாவித்திரியின் கண்களுக்கு தென்பட்டதன் காரணம் அவள் உமாதேவியின் மேல் வைத்திருந்த பக்தியே என அறிந்து கொள்கிறார். 

அதன்பின் பெண்ணே!  உன் கணவனின் உயிர் பிரிய காரணம் பிரம்மன் எழுதிய விதி. அதை என்னால் மாற்ற முடியாது என்கிறார்.

யமதர்மா! கணவனைப் பிரிந்த பதிவிரதைக்கு இவ்வுலகில் வேறென்ன வேலையிருக்கிறது நானும் உன்னுடன் வருகிறேன் என்று யமனைப் பின் தொடர்கிறாள். 

யமதர்மா! பூலோக வாசிகள் தேவலோகத்தினரைப் பார்ப்பது புண்ணியம் என்றும், அப்படிப் பார்ப்பதில் நற்பலன் விளையும் என்றும் தர்மசாஸ்திரங்கள் சொல்கின்றன. 

ஆனால் தங்களை பார்த்ததில் எனக்குக் கெடுதலே நேர்ந்திருக்கிறது. அப்படியென்றால் சாஸ்திரங்கள் சொன்னது பொய்யா? என யமனிடம் வினவுகிறாள் சாவித்திரி.

‘பெண்ணே! சாஸ்திரங்கள் சொல்வது பொய் ஆகாது. என்னைப் பார்த்த உனக்கு நன்மை விளையாமல் போகாது. உன் கணவனின் உயிரைத் தவிர வேறெதுவேண்டுமானாலும் கேள் தருகிறேன்’ என்கிறார்.

சாவித்திரியின் வேண்டுகோள்படி இழந்த நாட்டையும் , தன் மாமனாருக்கு கண்பார்வையும் வரமாய் பெற்றுக் கொண்டசாவித்திரி. நாட்டை ஆள தனக்கொரு வாரிசு வேண்டும் என்று வேண்டுகிறாள்.

‘ஒன்றென்ன நூறுபிள்ளைகள் பிறக்க ஆசிர்வதிக்கிறேன்’ என வரம் தருகிறார் யமன்.

‘நீதிதேவா? உங்கள் வாக்கு பலிக்கும்தானே?’

அதிலென்ன சந்தேகம்?  

‘நானோ பதிவிரதை.    என் கணவனைத் தவிர வேறொரு ஆணை மனதாலும் நினையாதவள் . என் கற்பின் தூய்மைக்கு பங்கம் உங்கள் வரத்தினால் வராதல்லவா?’ என வினவுகிறாள்.

தான் வசமாய்  மாட்டிக்கொண்டதை உணர்கிறார் யமன். அவளது கணவனின் உயிரைத் திருப்பித் தருவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை  என்பதை உணர்கிறார்.

கற்புக்கரசியே!  உன் விவேகத்தை மெச்சுகிறேன். உன் கணவனின் உயிரைத் திருப்பித் தருகிறேன் என்கிறார் யமன்.

மனம் மகிழ்ந்த சாவித்திரி , யமனின் பாதத்தில் பணிந்து அவரைப் போற்றுகிறாள்.

“முன்பு சூரியன் தவஞ்செய்து தர்மத்தை ஆராதனை செய்து உம்மைப் பெற்றதால் தர்மராஜன் என்ற பெயர் பெற்றீர்கள்! உமக்கு நமஸ்காரம். 

சகலவற்றிற்கும் சாட்சியாய் விளங்கும் உமக்குச் சர்வ பிராணிகளிடத்திலும் சமத்துவம் இருப்பதால் சமன் என்று பெயர் பெற்றீர்! உம்மை நான் நமஸ்கரிக்கிறேன்! 

பிரபஞ்சத்தில் எல்லா உயிர்களுக்கும் இறுதி அழிவு உண்டாக்குவதால் யமன் என்று பெயர்பெற்றீர்! உம்மை நான் வணங்குகின்றேன்.  காலத்திற்கு ஏற்றவாறு எல்லா பிராணிகளையும் நாசம் செய்வதால் கிருதாந்தகன் என்ற பெயரைப் பெற்றீர்! உம்மை நமஸ்கரிக்கிறேன். 

பாவிகளைச் சுத்தப்படுத்த தண்டாயுதத்தை தரித்துள்ளதால் தண்டாயுதன் என்னும் பெயர் பெற்றீர்! உம்மை நமஸ்கரிக்கிறேன். தபஸ்வியாகவும், பிரம்ம நிஷ்டராகவும், ஜிதேந்திரியாராயும் ஜீவர்களுக்குக் கர்ம பலத்தைக் கொடுப்பராகவும் இருப்பதால் யமன் என்றும பெயர்பெற்ற உம்மை நமஸ்கரிக்கிறேன். 

எல்லாம் உணர்ந்த சர்வஞராயும், பாவிகளுக்கு துயரத்தை வழங்குபவராகவும் புண்ணியசாலிகளுக்கு சிநேகிதராகவும் இருப்பதால் புண்யமித்திரன் என்னும் பெயர் பெற்றீர்! 

உமக்கு நமஸ்காரம். பிரம்ம அம்சம், பிரம்ம தேஜஸ் ஆகியவற்றால் பிரகாசித்து , பிரம்மத்தையே தியானிக்கும் உம்மை நமஸ்கரிக்கிறேன்”.   

சாவித்திரி யமனை வணங்குகிறாள். 

மனம் மகிழ்ந்த யமன் சாவித்திரிக்கு தர்ம சாஸ்திரங்களையும், பாவ புண்ணியங்களையும், தத்துவ ஞானங்களையும் , தான தருமங்களின் சிறப்பினையும் எடுத்துக் கூறுகிறார். சத்தியசேனனையும் உயிர்ப்பிக்கிறார்.

இப்படி வாக்குத் தவறாமல்  நடந்து கொண்ட யமன்,  நசிகேதன் என்பவன் மீது  காட்டிய கருணையைச் சொல்கிறேன் கேள்..

நசிகேதன்

உபநிஷ காலத்தில் வாழ்ந்து வந்தவர் வாஜசிரவஸ். அவரது மகன் நசிகேதன்.   புத்திசாலியாகவும் நேர்மையானவனாகவும் திகழ்ந்தான் நசிகேதன். 

ஒருமுறை வாஜ்சிரவஸ் வேள்வி ஒன்றை நடத்தினார். அப்போது கிழட்டு பசுக்களையும், பயனில்லாத பொருட்களையும் தானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அவரது மகன் நசிகேதனுக்கு தன் தந்தையின் நேர்மையற்ற செயல் பிடிக்கவில்லை. 

வாஜசிரவஸ் தான் முறைப்படி தன்னிடமிருந்த எல்லா பொருட்களையும் தானம் கொடுத்ததாக பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தார்.

இடைமறித்த நசிகேதன் , ‘தந்தையே என்னை யாருக்கு தானமாக கொடுக்கப் போகிறீர்?’ என்று கேட்டான்.

அதைக் கவனியாததைப் போல தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் வாஜசிரவஸ்.   அதேக் கேள்வியை  தொடர்ந்து கேட்டுக¢கொண்டிருந்தான் நசிகேதன்.

நசிகேதனின் நச்சரிப்பால் எரிச்சலுற்று, “‘உன்னை நான் யமனுக்குத் தானமாக கொடுக்கப் போகிறேன்” என்கிறார் வாஜசிரவஸ்.

நசிகேதன் யமனைத் தேடிக்கொண்டு யமலோகம் வந்துவிட்டான்.

யமன் வெளியுலக சஞ்சாரம் சென்றிருந்ததால் நசிகேதன் யமலோக வாயிலிலேயே காத்திருக்க நேர்ந்தது.

மூன்று நாட்கள் கழித்து திரும்பிய யமன்  தனக்காக யம லோக வாயிலில் காத்திருந்த சிறுவனைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

“சிறுவனே!  உன்னைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக  இருக்கிறது. உன் உயிரைத் தானமாக தரத்துணிந்து மூன்று நாட்களாக எனக்காக காத்திருக்கிறாய். ஆனால் உன் உயிரைத் தானமாகப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

ஆனாலும் உன்னை காக்க வைத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். அதனால் நாளுக்கு ஒன்றாக மூன்று வரங்களை உனக்குத் தருகிறேன் . உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள் , சந்தோஷமாக தருகிறேன்” என்றார் யமன்.

சிறிது நேரம் யோசித்த நசிகேதன் முதல் வரமாக , ‘என் தந்தைக்கு என் மேலுள்ள கோபம் அகல வேண்டும்’ என்று கேட்கிறான். ‘சரி அப்படியே ஆகுக’ என்கிறார் யமன்.

இரண்டாவதாக ‘சொர்க்கத்திற்கு செல்லும் மார்க்கம் என்னவென்று’ கேட்கிறான் நசிகேதன். 

‘அக்கினி வித்தை’ என்ற வேள்வியைச் சொல்லிக் கொடுத்து, சொர்க்கத்திற்கு போக உண்டான வழிமுறையையும் சொல்லிக் கொடுக்கிறார் யமன்.

அடுத்ததாய் ஒரு கேள்வி கேட்கிறான் நசிகேதன்.

“யம தர்மரே!  மனிதர்களின் இறப்புக்குப்பின் இந்த ஆத்மாவின் நிலை என்னவாகிறது என்பதைச் சொல்லுங்கள்?” என்று கேட்கிறான்.
யமன் உண்மையிலேயே திடுக்கிட்டுப்போகிறார்.

நசிகேதா! தேவர்களுக்கேத் தெரியாத ரகசியம் அது. அதைத் தவிர வேறு எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேள் சொல்கிறேன். அல்லது உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேள், எதுவானாலும் தருகிறேன் என்கிறார். 

“தர்மதேவா! எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. நீங்கள் தந்த வாக்குப்படி எனக்கு மூன்றாவது வரமாக எனது கேள்விக்கான பதில் மட்டுமே வேண்டும்”  நசிகேதனின் குரலில் பிடிவாதம் தெரிந்தது.

யமன் இறங்கி வந்தார்.

நசிகேதன் ஒரு மாணவன் போல் யமன் முன்னால் பவ்யமாய் அமர்ந்து கொண்டான்.

“நசிகேதா!  கேள்!   இந்த உடம்பு அழிந்து போனாலும் ஆன்மாவிற்கு அழிவில்லை. அதைக் கண்ணால் காணமுடியாது. ஆத்மாவை அறிந்தவன் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை.   அது நிரந்தரமானது அது எங்கிருந்தும் உற்பத்தியாவதில்லை. அது எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.

நசிகேதா! இந்த உடம்பு தேர் போல. மனசு கடிவாளம் போல. புத்தி இருக்கே , அதுதான் சாரதி. 

 சாரதிக்கு கட்டுப்படாமல் ஓடினால் வண்டி தவறான பாதையில் போகும். அதுபோல் புத்தியின் சொல்லுக்கு  மனம் அடங்க வில்லையென்றால்  நாம் தப்பான வழியினில்  போய் கெட்டுப்போவோம்.

நசிகேதா!  ஜீவன் கட்டைவிரல் அளவு ஜோதியாய் இதயத்தில் உட்கார்ந்திருக்கிறான். 

எப்பொழுது இதயத்தின் முடிச்சுகள் இங்கே அவிழ்ந்து போகிறதோ அப்போதே சாகும் இயல்புடைய மனிதன் சாகாதவன் ஆகிறான்.  இதுதான் ஞான மார்க்கம்” என்ற  யமதர்மர் மேலும் ஆன்மாவின் நிலைகளைப் பற்றி விரிவாகப் போதிக்கிறார்.

யம தர்மரின் போதனைகளைக் கேட்ட நசிகேதன் , ஞான மார்க்கத்தைக் கடைபிடித்து , வினைகளிலிருந்து விடுபட்டு இறப்பில்லாத பிரம்ம நிலையை அடைகிறான். ( நசிகேதனுக்கு யமன் போதித்த ஞான மார்க்கமே யம கீதை என்று கூறப்படுகிறது)

“வேதியா!   கால தேவன் என்கிற யமனைப் பற்றிய, பல  சம்பவ  நிகழ்வுகளை  விரிவாகக் கேட்டாய்.

இனி நீ சொல் ! யமன் நல்லவனா ? கெட்டவனா?  அப்படி நல்லவன்னு சொன்னால்  ஏன் இப்படி யமன் பெயரைக் கேட்டவுடன்  எல்லோரும் பயப்படுகிறார்கள்..

ஏன் சிவனிடம் தண்டனையும் , மாண்டவ்யரிடம் சாபமும் பெற்றான்? கெட்டவனாக இருந்தால்  ஏன் இப்படி சாவித்திரிக்கும் நசிகேதனுக்கும் நன்மைகளைச் செய்தான்? 

இந்தக் கேள்விக்கு உனக்கு பதில் தெரிந்தும் சொல்லாமல் மௌனமாக  இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும்” என்று கூறுகிறது வேதாளம்.

“வேதாளமே!  சூரியக்குமாரன் யமன் நல்லவனே! என்பதுதான் எனது உறுதியான பதில். 

மார்க்கண்டேயன் விசயத்திலும், மாண்டவ்ய முனிவரின் விசயத்திலும் யமன் செய்தது தவறேயல்ல.. தன் கடமையைச் மட்டுமே செய்தார். சிவப்பக்தனின் உயிரைக் கவரும்போது சிவலிங்கத்தையும் சேர்த்து தன் பாசக்கயிறால் இழுத்ததும், மாண்டவ்யர் விசயத்தில் நடந்ததும் கடமையின் போது ஏற்பட்டுவிட்ட கவனக் குறைவே.  

இதற்கான தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறார் யமன்.  யமனின் நடத்தையில்  குறைசொல்ல இயலவில்லை.
  
மேலும், தர்மநெறிகளின்படி வாழ்பவர்களை தர்மத்தின் தலைவனான யமனுக்கு மிகவும் பிடிக்கும், சாவித்திரியின் பதிவிரதைத் தன்மையும் அவளது தர்மநெறிகளுக்குட்பட்ட வாழ்க்கையும், பராசக்தியின் மேல் அவள்  கொண்ட பக்தியுமே ,  அவளுக்கு யார் கண்களுக்கும் படாமல் இருந்த யமனையும் காணும் சக்தியைக் கொடுத்தது. 

இதிலேயே அவளது உயர் தன்மையை யமன் அறிந்து கொண்டார். அவள்  கேட்ட வரத்தில் அவளது  விவேகமும் தெரிந்தது .  அதன்படியே  அவளது கணவனின் உயிரைத் திருப்பித் தரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாலும் கொடுத்த வாக்கை சந்தோஷமாக  நிறைவேற்றி அவளுக்கு தர்மநெறிகளைப்பற்றியும் போதித்தார்.  

 நசிகேதன் சிறுவனாக இருந்தாலும் அவனது விவேகமும்,  யமனுக்காக காத்திருந்த பொறுமையும், உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிற ஆர்வமும் யமனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. 

அதோடு தன் தந்தை தந்த நேர்மையற்ற தானத்தை  விமர்சித்த அவனது நேர்மையான குணமும் அவரைக் கவர்ந்தது.  எனவேதான் ஆத்ம ஞானத்தை அவனுக்குப் போதித்தார். 

இந்த உலகில் நீதி , நேர்மை நிலவுவதற்கும்  , பாவங்கள் அதிகரிக்காமல் இருப்பதற்கும் யமனே காரணம். நேர்மையான மனிதர்கள்  யமனைப் பார்த்து ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்.  

நேர்மையற்ற  மனிதர்களே யமனைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.    அவர்களே யமனைக் கெட்டவன் என்கிறார்கள். 

தர்மநெறிபடி வாழ்பவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. அவர்களின் ஆன்மா ஒளிபெற்றிருக்கும்.  யமன் அவர்களை   மரியாதையுடன் வரவேற்று  அவர்களுக்குரிய நல்உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.

சாவித்திரி தன் கணவனுக்காக யமனிடம் வாதிட்டது முப்பத்து மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணி நேரம்.  இந்த ஒன்றரை மணி நேரத்தை இன்றும் யமன் பாராபட்சமின்றி ஒவ்வொரு உயிருக்கும் தந்திருக்கிறார். 

அதாவது காலதூதுவர்களால் கொண்டு வரப்படும் உயிரின் ஆயுள் உண்மையிலேயே முடிந்து விட்டதா? அதை திருப்பி அனுப்ப  வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?  திருப்பி அனுப்பத் தேவையில்லையா என்பதையெல்லாம்  முடிவு செய்ய யமன் எடுத்துக் கொள்ளும் நேரமே இந்த மூப்பத்து மூன்றே மூக்கால் நாழிகை என்பது. 

எனவேதான் இன்றும் ஒருவர் இறந்த பின் ஒன்றரை மணிநேரம் கழித்தே அவருக்கு இறுதிச் சடங்குகளை ஆரம்பிக்கிறார்கள். 

இப்படி எல்லாவிதத்திலும் நேர்மையைக் கடைபிடிக்கும் சூரியனின் மைந்தன் யமதர்மன்

  மற்ற தெய்வங்களைப் போல , ஏன் அவர்களை விடவும் மிகவும் நல்லவனே! என்பதே என் பதில்”. என்று கூறுகிறான் வேதியன் .

வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன்  மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால்  வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச்  சென்று,   கிளையொன்றைப் பற்றிக்கொண்டு   தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.






மதிவாணன் 

Sunday, 5 January 2014

ஏன்?

* இல்லத்தில் எந்தெந்த நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். 

அதிகாலை சூரிய உதயத்திற்கு சற்று முன்னும் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னும் விளக்கேற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.

 * கன்னி மூலை என்றால் என்ன?

வடக்கிழக்குப் பகுதி கன்னி மூலை எனப்படும். 

* உறங்கும் போது எத்திசை நோக்கி தலை வைக்கக்கூடாது?

வடதிசை நோக்கி  தலை வைத்து உறங்குவது சரியில்லை. இந்த பூமியை வடக்கு தெற்காக ஒரு காந்தவளையும் சுற்றி வருகிறது அது வடக்கில் மையம் கொள்கிறது.   

நமது உடலிலும் அவ்வாறே  ஒரு காந்தச் சுழல் இருந்து கொண்டிருக்கிறது அது சிரசில் மையம் கொள்கிறது.  வடதிசையில் நாம் தலை வைத்துப் படுக்கும் போது இந்த இரு மையங்களும் ஒன்றுக் கொன்று எதிராக செயல்புரிவதால் மனம் அமைதியற்ற அலைபாயும். உறக்கம் கெடும். உடல் பாதிப்பும் ஏற்படும் இதனால் வடதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

* நித்ய பூஜை என்றால் என்ன?

தினசரி செய்து வரும் பூஜைகளே நித்ய பூஜையாகும். 

* நைமித்திக பூஜை என்றால் என்ன?

சிறப்புத் தினங்களில் செய்யப்படும் சிறப்புப் பூஜை நைமித்திக பூஜை எனப்படும்.

* மலர்களைத் தவிர்த்து எந்தெந்த பத்ரங்களை அர்ச்சனை பூஜைக்குப் பயன்படுத்தலாம்?

துளசி, வில்வம், வேப்பிலை, அருகு.

* ‘துவஜ ஸ்தம்பம்’ என்றால் என்ன?

துவஜ ஸ்தம்பம் என்றால் கொடி மரம்.

* கோபுர தரிசனம் என்றால் என்ன?

ஆலய கர்ப்பகிரகத்திற்கு மேலே இருப்பது கோபுரம். இறைவனின் ஸ்தூல உருவமாக கருதப்படுவது கோயில் அமைப்பு. இதில் சிரசு கர்ப்பக்கிரகததின் மேலுள்ள  கோபுரமாகும். 

இராஜ கோபுரம் இறைவனின் பாத கமலமாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எனவே திருக்கோவில் அருகே வந்ததும் கோபுரத்தை நிமிர்ந்து நோக்கி வணங்குகிறார்கள். 

* நைவேத்யம் என்றால் என்ன?

நைவேத்யம் என்பது திரு அமுது படைத்தல். சமைத்த சைவ உணவு, பொங்கல் வகைகள் , பலகாரங்கள் இவற்றிற்கு நெய் விட்டு இறைவனுக்கு அன்புடன் படைப்பது நெய் வேத்யமாகும்.

* மூலஸ்தான விக்கிரகம் கருங்கல்லில் அமர்ந்திருப்பது ஏன்? 

பிரபஞ்சத்திலுள்ள சக்தியை ஈர்ப்பதற்காகவே மூலஸ்தான விக்கிரகம் கருக்கல்லில் அமைந்துள்ளது. கருங்கல்லில் சிலிகான் எனப்படும் ஒலி அதிர்வுகளை ஈர்க்கும் தாதுப்பொருள் உள்ளது. 

இவைதான் தற்போது தொலைக்காட்சி, கணிணி, கைபேசி போன்றவற்றில் உபயோகப்படுகிறது. ஒலி அதிர்வுகளை ஈர்க்கவும்  அனுப்பவும் இந்த சிலிகான் பயன்படுகிறது.  

பிரபஞ்சத்திலுள்ள அதிர்வுகளை ஈர்க்கவும், மந்திர ஒலி அதிர்வுகளை பிரபஞ்ச வெளிகளுக்கு அனுப்பவும் கருங்கல்லுக்கு ஆற்றல் அதிகம் இருப்பதை வெகுகாலத்திற்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால் கருங்கல்லால் மூலஸ்தான விக்ரகத்தை அமைத்தார்கள். 

* இறைவனுக்குத் திரை போடப்படுவதன் காரணம் என்ன?

மாயை என்கிற திரை இறைவனை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை விலக்கினால் இறைவன் காட்சி கிடைக்கிறது. இறைவனை வழிபட முடிகிறது.

மனதின் மாசுகளை விலக்கினால் நம் மாயை விலகி ஆத்ம தரிசனம் கிடைக்கிறது. ஆத்ம தரிசனம் ஞானத்தை அளிக்கிறது. 

* இந்து என்ற சொல் எவ்வாறு ஏற்பட்டது?

பரத கண்டம் என்ற பெயரிலேயே அக்காலத்தில் இந்தியா அழைக்கப்பட்டது. வெளி நாட்டிலிருந்து வருகை புரிந்த அந்நியர்களும் படையெடுப்பாளர்களும் இமய மலையில் உற்பத்தியாகும் ஆங்கிலத்தில் இந்து நதி என்றழைக்கப்பட்ட,  சிந்து நதிக் கரையோரமும், அதற்கு தெற்கேயும் வாழ்ந்த மக்களை குறிக்கும் பொருட்டு இந்துக்கள் என்று அடையாளமிட்டு அழைத்தனர். 

அம்மக்கள் கடைபிடித்த கொள்கைகளே இந்து மதம் என கூறப்படலாயிற்று என்பது ஆய்வார்களின் கருத்தாகும்.  உலகில் பிற மதங்கள் அனைத்தும் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே நம் மக்கள் கடைபிடித்த இறை, மற்றும் நன்னெறிக் கொள்கைகளுக்கு தோற்றம், கால வரம்புத் தெரியவில்லை. 

இன்று இந்து மதம் என்றே அழைக்கப்படுகிறது. நாம் இந்துக்கள் என அழைக்கப்படுகிறோம். நாடு இந்தியா என்று அழைக்கப்படுகிறது. ‘இமய மலைக்கும் இந்து மகாசமுத்ர பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி இந்தியா எனவும் அங்கு வாழும் மக்கள் இந்துக்கள் எனவும், அவர்களின் கலாச்சாரம் இந்து சமயம் எனப்படுகிறது.’ என்று கூறுவோரும் உண்டு.

* இந்து மதம் சனாதன தர்மம் என ஏன் வழங்கப் படுகிறது?

எப்பொழுது யாரால் தொடங்கப்பட்டது என்றறிய  முடியாத அளவு தொன்மை வாய்ந்த,  பழமையான நெறி, சனாதன தர்மம் என வழங்கப்படுகிறது. 

* இந்து மதத்தின் சிறப்பம்சம் என்ன?

1. இறைவன் ஒருவனே, அவனைப் பல உருவங்களில் வழிப்படுகிறோம். எம்முறையில் வழிபட்டாலும் இறையருளைப் பெற முடியும். 

2. இறைவன் உருவமில்லாதவன், நம் மனத்தில் அவனை நிலை நிறுத்த ஒரு அடையாளம் தேவைப்படுவதால் உருவ வழிபாடு ஏற்பட்டது. இறைவனை அடையும் வழியில் முன்னேற்றம் காணக் காண உருவ வழிபாடு தேவையற்றதாகி விடுகிறது. அதை உணர்த்தவே அருவ வழிபாடாகிய ஜோதி வழிபாடு ஏற்பட்டது. 

3. ஆத்மா மனிதனாக பிறவியெடுக்கிறது. பல பிறவிகள் எடுத்தெடுத்து மறைந்தாலும்,  ஆத்மாவிற்கு அழிவில்லை. அது முடிவில் பரம் பொருளோடு ஒன்றிவிடுகிறது. அப்போது பிறவிப் பயணம் முடிவுறுகிறது. 

4. செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒருவனின் அடுத்த ஜென்மம் அமைகிறது. ஒருவனின் உயர்நிலை, தாழ்நிலைகளை அவனது முன் ஜென்ம வினைகளே தீர்மானிக்கிறது. 

5. அன்பே இறைவன். அனைத்துயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும். தன்னை நேசிப்பது போலவே அனைவரையும் நேசிக்க வேண்டும். இதுவே இறைவனை அடையும் எளிய வழி.

* ரிஷி என்பவர் யார்?

மந்திரங்களை உணர்ந்தவர் ரிஷி எனப்படுவர். வேதங்கள்,  ஒலி ஒளிவடிவமாக  வான் வெளியில் நிறைந்துள்ளது. தவ வலிமையால் அவ் வொலி அலைகளை தரிசித்து ஒலிகளை உணர்ந்து அவற்றை உரைத்தவர்களை ரிஷிகள் என்று அழைக்கிறோம்.

--மதிவாணன்  

Saturday, 4 January 2014

இணையத்தில் உலாவரும் தேவயாணி கைது வீடியோ!!

தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்தபோது அவருடைய ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள், சில இணையதளங்களில் நேற்று வெளியானது. 

அதில், ஒரு பெண்ணை தரையில் படுக்க வைத்து, அவருடைய ஆடை களை போலீசார் அவிழ்ப்பதும், அப்போது அந்த பெண் கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த வீடியோ காட்சி போலியானது என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் மேரி ஹார்ப் அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும் நடவடி க்கைக்கு அமெரிக்க அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 

இருநாட்டு உறவில் சமீப காலமாக சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால், அது தற்காலிகமானது என்றே அமெரிக்க அரசு உறுதியாக நம்புகிறது.

தேவயானியை நிர்வாணப்படுத்தி சோதனையிடுவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பதை கேள்விப்பட்டோம். அது போலி என்பதை உறுதியாக கூறுகிறோம். அதில் இருக்கும் பெண் தேவயானி அல்ல. 

அமெரிக்க போலீசார் சோதனை செய்வதில் குறிப்பிட்ட பாணி கடைபிடிக்கப்படுகிறது. அதுபோன்ற நடைமுறை எதுவும் இந்த வீடியோ காட்சியில் இல்லை. எனவே, அது போலி என்பது உறுதியாகிறது’’ என்றார்.

எது உண்மை என்பது தெரியவில்லை. என்றாலும் உண்மை வெளிவரும். வீடியோவை நீங்களும் பாருங்கள்.




குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...