ads

Wednesday 10 July 2013

நான் மனிதன்!

கொஞ்சம் நீர் !
கொஞ்சம் மண் !
கொஞ்சம் நெருப்பு !
கொஞ்சம் காற்று !
கொஞ்சம் ஆகாயம் கலந்து
கட்டிய வீடு என் வீடு !
இதில் நான்
குடியிருக்க வந்திருக்கிறேன்!!

எனக்கு பிடித்த
வீடு இதுவென்றாலும்
இதில் நான் நிரந்தரவாசில்லை!
ஆனாலும்
இருக்கும் வரை
வீட்டை பழுத்துப் பார்ப்பேன்!
வாழும்வரை இதைநான்
அலங்கரிப்பேன்!

நான் இருக்கும் வரை
வீட்டில் வெளிச்சம் இருக்கும்!
அதிர்ச்சி வேண்டாம்
போகும்போது வீட்டை
இடித்து விட்டே போவேன்!

நீர்
நீரோடும்!
மண்
மண்ணோடும்!
நெருப்பு
நெருப்போடும்!
காற்று
காற்றோடும்!
ஆகாயம்  
ஆகாயத்தோடும்
கலந்துவிடும்!

மீண்டும்
நான் வரநேர்ந்தால்
ஐம்பூதங்களையும்
இணைத்து
எனக்கொரு அழகிய
வீட்டினை
செய்து கொள்வேன்!

ஏனெனில்
நான் ஆன்மா!
நான் கடவுள் !
நான் தெய்வம்!
நான் இறைவன் !
ஆனாலும்
என் விட்டினுள்
நான் மனிதன்!

- மதிவாணன் 







No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...