இருப்தேழு நட்சத்திரங்களில் அசுவனி பரணி கார்த்திகைக்கு அடுத்து நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரம். இதன் அதிபதி சந்திர பகவான். சந்திரன் ஜோதிடத்தில் பெண் கிரகமாக இருந்தாலும் அவரின் ஆளுமைக்க உட்பட்ட ரோகினி ஆண் நட்சத்திரம்.
தோஷ நட்சத்திர வரிசையில் முதலிடத்தை ரோகிணி பெறுகிறது. தாய்க்கும், தாய்மாமனுக்கும் ஆகாத நட்சத்திரம் என்பார்கள். ரோகிணியில் ஆண் பிறந்தால் தாய்மாமனுக்கு அதிர்ஷ்டம் அளிப்பதையும், ரோகிணியில் பெண் பிறந்தால் தாய் மாமன் அதிக அளவில் அந்த பெண்ணுக்கு ஒத்தாசையாக இருப்பதையும் அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
எனது குருநாதர் சொல்லிக் கொடுத்த பரிகார முறையை இங்கே தருகிறேன். ரோகிணியில் ஆணோ பெண்ணோ பிறந்தால் தாய்மாமன் அந்த குழந்தையை முதலில் நேரடியாக பார்க்கக் கூடாது. மாறாக குழந்தைக்கு அறைதீட்டு கழித்த பிறகு, சாஸ்திரபடி 11ம் நாள், பல இடங்களில் 16நாட்கள் கழித்து, பிரசவ தீட்டு கழிப்பார்கள்.
அப்படி தீட்டு கழித்தபிறகு ஒரு மண் சட்டி அல்லது இரும்பு எண்ணெய் சட்டியில் நெய், நல்லெண்ணை, விளக்கெண்ணை மூன்றையும் கலந்து எண்ணை சட்டியில் ஊற்ற வேண்டும்.
முன்னதாக பொற்கொல்லரிடம் சொல்லி வெள்ளிக் கம்பி அடித்து வாங்கிக் கொள்ள வேண்டும். வெள்ளிக் கம்பியின் ஒரு முனையை எண்ணை சட்டியில் கட்டி, மறு முனையை குழந்தையின் இடுப்பை சுற்றி கட்டுவார்கள். பின்னர் குழந்தையை கையில் தூக்கி எண்ணையில் முகம் தெரிகிற மாதிரி காட்ட வேண்டும்.
தாய்மாமன் குழந்தையின் முகத்தை எண்ணையில்தான் முதலில் பார்க்க வேண்டும் அவ்வாறு பார்த்தால் நட்சத்திர தோஷம் விலகிவிடும் என்பார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகள். சுதந்திர பிரியர்கள். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்கள். அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்காதவர்கள். பிடிவாதக்காரகள். தாங்கள் நினைத்ததை அடையும் வரை போராடுவார்கள்.
இளகிய குணம் படைத்தவராக இருந்தாலும், தங்களுக்கு எதிரானவர்களிடம் இரக்கம் காட்டுவதில்லை. எந்த காரியத்தை செய்தாலும் திருத்தமாக செய்வார்கள். முற்றும் செய்யக் கற்றவர்கள். மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள்.
விரும்பியவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள். விரும்பாதவரை கடைசிவரை ஒதுக்கித் தள்ளுவார்கள். தாய் வழி நன்மைகள் அதிகம். சிற்றின்ப பிரியர்கள். எண்ணியதை பெற இயன்றவரை போராடுவார்கள.
சில சமயம் தங்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளுவார்கள். பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. இரக்கம் குணம் உள்ளவர்கள். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காதவர்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.
நட்சத்திர அதிதேவதை -: பிரம்மா
பரிகார தெய்வம் -: அம்மன்
நட்சத்திர கணம்(குணம்) :- மனுஷகணம்
விருட்சம் -: நாவல்
மிருகம் -: நல்ல பாம்பு
பட்சி -: ஆந்தை
கோத்திரம் :- ஆங்கரீசர்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ,வ,வி, வு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வா, வீ ஆகியவை.
No comments:
Post a Comment