ads

Thursday 14 February 2013

மீண்டும் வசந்த காலம்!.


வண்ணத்துபூச்சியின்
சிறகசைப்பின் தொடர் விளைவால்
சுனாமி ஏற்படுமா!
இது கேயாஸ் தியரி.

உன் கண்ணிமைகள் படபடப்பில்
என்
இதயத்தில் அடிக்கடி
பூகம்பம் ஏற்படுகிறதே
இது என்ன தியரி?

இனியவளே ...
உள் பக்கத்தின் ஒரு ஓரத்தில்
உன் பெயர் எழுதி இருந்தால்
அது
உன் டைரி.

உள் பக்கம் ஒவ்வொன்றிலும்
உன் பெயரே எழுதி இருந்தால்
அது என் டைரி

அன்பே...
கல்லூரி வாசலில்
நீ
காலடி வைத்தாய்
ஆரம்பித்தது அன்று வசந்த காலம்.!

விடுமுறையில்
நீ ஊருக்கு சென்றாய்
தொடங்கியது கோடைகாலம்.!

உன்னை காணாமல்
கண்ணீரோடு
தேடி வந்தேன்
அது இறந்த காலம்!

இன்று
புன்னகையோடு
என்னிடம்
நீ
சொன்னபோது புரிந்து கொண்டேன்
இது என் எதிர்காலம்
இல்லை
மீண்டும் வசந்த காலம்!.

-மதிவாணன்

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...