ads

Tuesday 31 July 2012

நீங்கள் அனுப்பிய mail படித்து விட்டார்களா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?




நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் mail அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.


குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. இதற்கு


1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.


2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். 






அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.


3. முதல் படத்தைத் (வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள்.


4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.


5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.


நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்


தகவல் உதவி : பவானந்தன், யாழ்பாணம், இலங்கை.

Monday 30 July 2012

இந்தியா சரிகிறதா?விகடனில் வெளிவந்த கட்டுரை..


சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை!
 சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.
சிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று இரண்டு தேசமாகப் பிளந்தது. பிறகு, அது மெள்ள மெள்ள சரியத் தொடங்கியது. இந்தியா இப்போது சரிந்துகொண்டு இருக்கும் தேசம்... ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல அது சரிகிறது... அதன் பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு எனச் சகல கட்டுமானங்களும் சிதறுகின்றன!
அடிவாங்கிய அஸ்திவாரம்!
பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ''நாட்டின் வளர்ச்சியைக் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கிறோம். அனைவருக்குமான வளர்ச்சியின் அஸ்திவாரம் அதுதான்'' என்றார் சிங். நாடு முழுவதும் 1964-ல் ஆய்வுசெய்த கோத்தாரி ஆணையம், இந்தியா கல்வித் துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்றால், அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஆறு சதவிகிதத் தொகையைக் கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால், தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகள் அதில் பாதி அளவை ஒதுக்கீடு செய்யவே யோசித்தன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றபோது, கல்வித் துறையின் தேவை 16 சதவிகித ஒதுக்கீட்டைக் கோரியது. நிச்சயம் இனிமேலாவது ஆறு சதவிகித ஒதுக்கீடு செய்வோம் என்றார் சிங். ஆனால், அவரது வார்த்தைகள் அவருடைய காதுகளுக்கே கேட்காமல்போயின. விளைவு, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி! உலகில் கல்விக்குக் குறைந்த அளவே ஒதுக்கும் நாடுகள் தொடர்பான 'யுனெஸ்கோ’வின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது இந்தியா. ஆனால், சிங் பொறுப்«பற்றதற்குப் பிறகான இந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 18.84 சதவிகிதத்தில் இருந்து 26.09 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மூன்றில் இரு பள்ளிகள் என்ற அளவுக்குத் தனியார் ஆதிக்கம் பள்ளிக் கல்வியில் ஓங்கி இருக்கிறது.
கல்வித் தரத்திலும் இந்தியா ஜொலிக்கவில்லை. சர்வதேச அளவிலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்ற அமைப்பு (ஓ.இ.சி.டி.) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு இந்தியக் கல்வித் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி. 15 வயதுக்கு உட்பட்ட இந்திய மாணவர்கள் பாடங்களை வாசிப்பதிலும் அறிவியல் பாடங்களி லும் கடைசி வரிசையில் இருப்பதை அந்த அமைப்பு நடத்திய சர்வதேச அளவிலான தேர்வு முடிவுகள் கூறின. அரசு சாரா நிறுவ னமான 'பரதம்’ அமைப்பின் ஆய்வறிக்கையோ (அசெர்) இந்தியாவில் பெரும் பான்மையான ஐந்தாம் வகுப்பு மாணவர் களால் இரண்டாம் வகுப்புப் பாடங்களையே படிக்க முடியவில்லை என்கிறது.
பெண் கல்வியில் ஆப்பிரிக்கா நீங்கலாக ஆஃப்கன், பூடான், பாகிஸ்தான், பபுவா நியு கினியா ஆகிய ஐந்து நாடுகள்தான் இந்தியாவைவிடக் கீழ் நிலையில் இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் என அரசின் எந்த நடவடிக்கையாலும் ஆரம்பக் கல்வியை மீட்டெடுக்க முடியவில்லை. உயர் கல்வியோ முழுக்க முழுக்கத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது!
சுகாதாரத்தைப் பீடித்த நோய்!
ட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை எடுத்துக்கொண்டால், இந்தியா உலகிலேயே அடிமட்ட நிலையில் இருக்கிறது. சிசு மரணத்தை எடுத்துக்கொண்டால், உலகில் ஆஃப்கன், கம்போடியா, மியான்மர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இந்தியாதான் இருக்கிறது. தொற்றா நோய்கள் எனப்படும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பத்தில் எட்டு மரணங்களுக்குக் காரணம். சுகாதாரத்துக்கு அரசு கிட்டத்தட்ட 600 மடங்கு தன்னுடைய ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய சூழல். ஆனால், அரசோ ஏற்கெனவே உள்ள அரசு மருத்துவமனைக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனியாரை ஊக்குவிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. சிங் ஆட்சியின் இந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் மட்டும் வசதியின்மையால் சிகிச்சை பெற முடியாதவர் களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 10 கோடியில் இருந்து 21 கோடியாகவும் கிராமப்புறங்களில் 15 கோடியில் இருந்து 24 கோடியாகவும் அதிகரித்து உள்ளது. 71 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்பட்டனர். உலக சுகாதார நிறுவனம், 70 சதவிகித இந்தியர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மருந்துக்காகச் செலவழிக்கும் நிலையை மாற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கு என 2.5 சதவிகிதம் தொகையை ஒதுக்கீடு செய்வோம் என்று கூறியது. ஆனால், இப்போது அதையும் 1.4 சதவிகிதமாக்கும் முயற்சியில் இருக்கிறது. பொது சுகாதாரத்துக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு 2010-ல் மட்டும் மலேரியாவுக்கு 46,800 இந்தியர்கள் பலியானது ஒரு சின்ன உதாரணம்!
காத்திருக்கும் வெடிகுண்டு!
லகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதி யாளராக இந்தியா உருவெடுத்தது சிங் ஆட்சிக் காலத்தில்தான். 2007-2011-க்கு இடையே உலகில் நடந்த ஆயுத ஏற்றுமதி யில் 10 சதவிகிதம் இந்தியாவின் பங்கு. ஆனால், ''ஒரு போர் வெடித்தால் இரண்டு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க வெடி பொருட்கள் நம்மிடத்தில் இல்லை'' என்று நம் பாதுகாப்பு அமைப்பின் லட்சணத்தை நாட்டின் தரைப் படைத் தளபதியே போட்டு உடைத்ததும் சிங் ஆட்சிக் காலத்தில்தான். இந்தியாவின் மீது கிட்டத்தட்ட ஓர் அறிவிக்கப்படாத போர்த் தாக்குதலாக மும்பைத் தாக்குதல் நடந்தது. கடல் வழியே நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை அடுத்த சில மாதங்களிலேயே பாதுகாப்புப் படையினர் யாருக்கும் தெரியாமல் வர்கோவில் தரை தட்டி நின்ற 1,000 டன் கப்பல் 'எம்.வி.பாவிட்’ அம்பலமாக்கியது. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியாவின் அதிபயங்கரக் குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் அரசுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய 50 பேர் பட்டியலில் மும்பை, தானேயில் வசிக்கும் உள்ளூர் வியாபாரியான வஜுல் கமர்கான் பெயர் இருந்ததைப் பார்த்து சர்வதேச உளவுத் துறைகள் நக்கல் அடித்தன. காமன்வெல்த் போட்டிகளின்போது நேரு மைதானத்துக் குள் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தைக் கடத்திச் சென்று ஆஸ்திரேலியத் தனியார் தொலைக்காட்சி படம் காட்டியபோது, நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளைப் பார்த்து உலகமே சிரித்தது!
அணு சக்தித் துறையில் சர்வதேசத்தின் போக்கை ஃபுகுஷிமாவுக்கு முன் - ஃபுகுஷி மாவுக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆக்கபூர்வ அணு சக்தி என் பதும் அணு சக்திப் பாதுகாப்பு என்பதும் வடிகட்டிய பொய் வாதங்கள் என்பதை நிரூபித்த இடம் ஃபுகுஷிமா. அணு சக்தி மின்சார உற்பத்தியில் உலகுக்கே முன்னோ டியாக இருந்த ஜப்பான், ஃபுகுஷிமாவுக்குப் பின் தன்னுடைய நாட்டில் உள்ள அத்தனை உலைகளையும் மூடியது. அணு சக்தி வேண்டுமா, வேண்டாமா என்று இத்தாலி நடத்திய பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி, அணு சக்திக்கு எதிரான முடிவை இத்தாலி எடுத்தது. ஜெர்மனி தன்னுடைய நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளையும் 2022-க்குள் மூடப்போவதாக அறிவித்தது. தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்தில் இந்திய அணு சக்தித் துறையைப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிட்ட சிங்கின் அரசோ, ஃபுகுஷிமாவுக்குப் பிறகுதான் அணு சக்தித் துறையை வெறித்தனமாக உசுப்பிவிட ஆரம்பித்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடித்தட்டு மக்களின் பெருந்திரள் அறவழிப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக தேசத் துரோக வழக்குகளைப் பதிவுசெய்தது, இந்த அரசின் குரூர முகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. கொடுமை என்ன என்றால், அணு சக்தி நாடுகளில், பாதுகாப்பான கட்டமைப்புக்கான தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 32 நாடுகளில், இந்தியா இருப்பது 28-வது இடத்தில்!
வீங்கும் பொருளாதாரம்!
சிங் பொருளாதாரத்தில் பெரிய நிபுணராக இருக்கலாம். ஆனால், அவருடைய அரசுக்கு மரண அடி விழுந்திருப்பதே பொருளாதாரத் துறையில்தான். சர்வதேச அளவிலான பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவனமான 'ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் 'நிலைத்த தன்மை’ என்ற நிலையில் இருந்து 'எதிர்மறைத் தன்மை’ என்ற நிலைக்குப் போகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்தது. இந்த வாரம் 'ஃபிட்ச்’ நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இப்படி எச்சரிக்கைக்கு உள்ளாகும்  நாடுகள் எல்லாம் படிப்படியாகப் பொருளாதார மந்தநிலையை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த மதிப்பீடுகள் எல்லாம் இந்தியாவில் செல்லாது என்றார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால், மத்தியப் புள்ளியியல் நிறுவனம் தந்துள்ள தகவல்களின்படி பார்த்தாலே, இந்த ஆண்டு நாட்டின் மொத்த வளர்ச்சி 6.5 சதவிகிதமாகத்தான் இருக்கும். கடந்த காலாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 5.3 சதவிகிதம்தான். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச அளவு இது. அதாவது, தாங்கள் பொறுப்பேற்பதற்கு முன் இருந்த காலகட்டத்துக்குப் பொருளாதாரத்தைத் தள்ளி இருக்கின்றனர் சிங்கும் அவருடைய சகாக்களும்.
விலைவாசி, பணப்புழக்கம், பணவீக்கம் என்ற கணக்கை எல்லாம் விடுங்கள். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றபோது ஒரு டீயின் விலை  2. இன்றைக்கு  6. மூன்று மடங்கு உயர்ந்து இருக்கிறது. சென்னை நகரில் கடந்த ஆண்டு  4,000 வாடகைக்குக் கிடைத்த 300 சதுர அடி வீட்டின் இன்றைய வாடகை  6,000. நம்முடைய வருமானம் எத்தனை மடங்கு உயர்ந்து இருக்கிறது?
உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தன்னுடைய பெட்ரோலி யத் தேவையில் 70 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கும் நாடு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் என்ன செய்ய வேண்டும்? நகைமுரணாக, இப்படி ஒரு காலகட்டத்தில்தான் இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. பெட்ரோல் விற்கும் இரான்கூட ரேஷன் முறையைக் கொண்டுவந்தது. ஆனால், பொருளாதாரச் சூரர் சிங்கின் அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, விலைவாசி உயர்வைத் தடுக்க ஊகபேர வணிகத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற கோரிக்கைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவி சாய்க்கவில்லை.
இந்திய விவசாயிகள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்தல் என்பது காலம்காலமாகத் தொடரும் சாபக்கேடு. ஆனால், விவசாயிகளை மாநிலங்களுக்கு இடையே அகதிகளாக இடம்பெயரவைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரிய தனித்துவ சாதனை. இன்றைக்கு உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மணிப்பூர், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையையும் பெங்களூரையும் திருவனந்தபுரத்தையும் நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்றால், என்ன காரணம்?
ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப் பிறக் கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளி யாகவே சாகிறான். அலங்கார வாக்கியம் அல்ல இது. அரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும் உண்மை. நாட்டின் இரண்டு விவசாயிகளில் ஒருவர் கடனாளியாக இருக்கிறார். இன்னொருவர் கடன் வாங்கும் நிலையில் இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயியின் உயிர் இந்த மண்ணைவிட்டுப் பிரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய தற்கொலைப் பிரதேசம்... மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலா வது ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின்  60,000 கோடிக் கடன்களை ரத்துசெய்ததை வரலாற்றுச் சாதனையாகச் சொல்லிக்கொண்டார் சிங். ஆனால், அதே அரசு பெருநிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச் சலுகையாகவும் கடந்த ஆண்டு மட்டும் வாரி வழங்கியது  4.87 லட்சம் கோடி. வறுமை ஒழிப்புக்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட மொத்த மானியத்துக்குச் சமமானது இது.
நாட்டுக்கு சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை நம்மை எவ்வளவு சுருட்டி இருக்கிறது என்பதை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி எளிமையாகச் சொல்லிவிடும்.  1991-ல் ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு  21. இப்போது  57.00.
சர்வம் ஊழல்மயம்!
ஞாபகம் இருக்கிறதா? சிங் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பில் காப்பாற்ற ஆளும் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக பா.ஜ.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சி! இந்தியர்களுக்கு கோடி என்ற வார்த்தையின் போதாமையை உணர்த்திய ஆட்சி  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டில்  1,76,379,00,00,000 முறைகேடுநடந்து இருக்கிறது என்ற செய்தி வெளியானபோது, பெரும்பான்மை இந்தியர் கள் அதை எப்படிப் படிப்பது என்றுதடுமாறிப் போனார்கள். ஏதோ... அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள்தான் ஊழல் செய்வார் கள் என்று இருந்த சூழலை உடைத்து எறிந்ததும் இந்த அரசின் சாதனைதான். சிங்கின் ஆட்சியில் ஊழல் நடக்காத, ஊழலில் ஈடுபடாத அரசுத் துறையினரே இல்லை. ''ராணுவக் கொள்முதலில் நடக் கும் ஊழலுக்கு ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்!'' என்றார் நாட்டின் தரைப் படைத் தளபதி யாக இருந்த வி.கே.சிங். முன்னாள்தளபதி ஜெனரல் கபூர் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பலர், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டிலும் நில ஒதுக்கீடு முறைகேடு களிலும் சிக்கினர். நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சுதந்திர இந்தியாவின் முதல் பதவி நீக்க விசார ணையை நாடாளு மன்றத்தில் நீதிபதி சௌமித்ர சென் எதிர்கொண்டார். சுரங்கக் கொள்ளையர்கள் ரெட்டி சகோதரர்கள் மீதான வழக்குகளில் ஜனார்த்தன ரெட்டியை விடுவிக்க,  5 கோடி லஞ்சம் வாங்கிய ஆந்திர மாநில சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார். பிரதமரின் கட்டுப் பாட்டில் இயங்கும் நாட்டின் அறிவியல் தலைமையகமான 'இஸ்ரோ’  4.5 லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, தேசமே அதிர்ந்தது. சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்குப் போட்டியாக, காமன்வெல்த் போட்டிகளை  40 ஆயிரம் கோடிகளைச் செலவிட்டு நடத்தினார் சிங். ஆனால், அது இந்தியாவுக்குப் புகழ் சேர்க்கவில்லை. சுரேஷ் கல்மாடி மூலம் இந்தியாவின் ஊழல் முகம் சர்வதேச அளவில் வெளிப்படத்தான் வழிவகுத்தது. கட்டிய பூச்சு காய்வதற்குள் நேரு மைதானம் முன் அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள டிரெட் மில் இயந்திரங்கள் ஒன்பது லட்ச ரூபாய் வாடகைக்கு எடுக்கப்பட்டதும் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள். இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும்  10 லட்சம் கோடி முறைகேடு இந்தியப் பிரதமரின் காலைப் பாம்பாகச் சுற்றிக்கொண்டு நிற்கிறது. இவ்வளவுக்குப் பிறகும், 'திருவாளர் பரிசுத்தம்’ தோற்றத்தோடு சிங் உலவிக்கொண்டு இருப்பதுதான் அவருடைய சாதனைகளின் உச்சம்!
கறுப்புப் பூதம்!
ரேஷன் கடைக்கு  12.37-க்குக் கொடுக்கப் படும் மண்ணெண்ணெய், வெளிச் சந்தையில்  40-க்கு விற்கப்படுவது யாரால்? இந்திய ஆறுகளின் மடி வறளும் அளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்படுவது யாரால்? இந்திய ரியல் எஸ்டேட் துறை யாருடைய கண் அசை வில் இயங்குகிறது? கள்ளச் சந்தை, சூதாட்டம், கடத்தல், ஹவாலா... அட, நாட்டின் பொருளாதாரக் கேந்திரமான மும்பை யார் கையில் இருக்கிறது? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு மாஃபியாக்கள் கையில் போனது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்  முக்கியமான சாதனைகளில் ஒன்று.
உலகிலேயே தரமான இரும்புத் தாது கிடைக்கும் பெல்லாரியை உலகமே பார்க்க... ரெட்டி சகோதரர்கள் சுரண்டித் தின்கிறார்கள். ஒரு காலத்தில் ஓட்டு போடச் சென்றாலே, போலீஸார் போட்டுத்தள்ளிவிடுவார்களோ என்று பயந்து பதுங்கிக்கிடந்த அருண் காவ்லி மகாராஷ்டிரத்தின் சட்டப்பேரவை உறுப்பின ராகப் பவனிவந்தார். ஜார்கண்டில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் டன் நிலக்கரி சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கக் கொள்ளையில் தரகு பார்த்தே உலகெங்கும் உள்ள வங்கிகளில் 1,800 வங்கிக் கணக்குகளை மதுகோடா தொடங்கினார். அரசின் எதிர் வினை என்ன?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பைக் காலம் கொடுத்தது. இந்தியர்களின் பணம்  22.5 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதை அமெரிக்கா வைச் சேர்ந்த பொருளாதார அமைப்பு ஒன்று பட்டியலிட்டது. இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட சரி பாதித் தொகை இது. சிங்கும் பிரணாப்பும் சிதம்பர மும் நினைத்திருந்தால், கறுப்புப் புள்ளிகளைக் கட்டம் கட்டி அவர்கள் மூலமாகவே இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியும். ஆனால், இந்த விவரங்கள் வெளியானதையே அரசு ஒரு சங்கடமாகக் கருதியது.
கடந்த 2008-ல் ஜெர்மனி அரசு 50 இந்தியர் களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசிடம் கொடுத்தது. எல்லாம் கறுப்புப் புள்ளிகள். அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. ''அந்தப் பட்டியலில் இருக்கும் விவரங்களை வெளியிடு வதில் அரசுக்கு என்ன சிரமம்?'' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசோ, சர்வதேச உடன்படிக்கைகளைக் காரணம் காட்டி சப்பைக் கட்டு கட்டியது.
2011-ல் சுவிஸ் வங்கி ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கறுப்புப் புள்ளிகள் 2,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை 'விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவிடம் அளித்தார். இதற்குப் பின், 'சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் போட்டிருப்பவர்கள் இந்தியர்கள்தான்'' என்று அசாஞ்சே சொன்னார். இந்தக் கறுப்புப் பணத்தில் கணிசமான பகுதி சட்ட விரோதமான முறையில் அந்நிய மூலதனமாகப் பங்குச் சந்தைக்குத் திரும்பி வருவதை நம்முடைய உளவு நிறுவனங்கள் அரசுக்குக் கூறின. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு.
இந்தியாவின் ஹவாலா மன்னன் ஹசன் அலி கானுக்கு சுவிஸ் வங்கியில் உள்ள ஒரு கணக்கில் மட்டும் 8 பில்லியன் டாலர் இருப்பு இருப்பது தெரியவந்தது. அலி 50 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இத்தனைக்குப் பிறகும் அலியை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை! 
வெளியுறவு பொம்மலாட்டம்!
'இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே இந்தியா தனித்து இயங்குவதே - எல்லோ ருக்கும் நல்லவராக இயங்குவதே சரி’ என்று ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தது ராஜதந்திர ரீதியாக ஓர் எடுபடாத முடிவாக இருக்கலாம். ஆனால், அதில் ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. முக்கியமாக, அந்தப் பார்வையில் அறம் இருந்தது. அணிசேரா நாடுகள் அமைப்பின் பின்னணியில், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு மதிப்பை அது தந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவுக்கு உள்ள மதிப்பு என்ன? நம்முடைய நிலைப்பாடுதான் என்ன? முதலில் நமக்கு என்று இன்று தனியாக ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கிறதா? நம்முடைய அண்டை நாடு ஏதாவது நமக்கு நண்பனாக இருக்கிறதா?
நேபாளத்தில் மக்கள் மாவோயிஸ்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தபோது, அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை சிங் அரசு நடத்தியது. இந்தியாதான் வங்க தேசம் என்ற தேசம் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இந்தியாவுக்குள் வரும் கள்ளத் துப்பாக்கிகள் தொடங்கி போதைச் சமாசாரங்கள் வரை சகலமும் வங்க தேசம் வழியாகத்தான் வருகின்றன. சீனாவுடனும் அமெரிக்காவுடனும் அளவுக்கு மீறிக் கொஞ்சிக்கொண்டு இருந்த இலங்கையை அடக்கிவைக்க தமிழ்ப் போராளிக் குழுக்களை இந்தியாதான் வளர்த்துவிட்டது. சிங் அரசோ, இறுதியில் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு அவர்களை அழித்தொழித்தது. ஆஃப்கன் அரசியலில் அடியெடுத்துவைத்த நாடுகள் அனைத்தும் இது வரை அழிவையே சந்தித்து இருக்கின்றன. இந்தியாவுக்கு அங்கு என்ன வேலை? ஆஃப்கனில் இந்தியத் தூதரகங்கள் சும்மாவா தாக்குதலுக்கு ஆளாகின்றன? மியான்மரில் மக்கள் ஆட்சியைக் கொண்டுவந்திருக்க வேண்டியது இந்தியாவின் பணி. ஆனால், சீனாவுக்கு நெருக்கமான ராணுவ ஆட்சியாளர்களுடன் அரசு கை கோத்திருந்தது. பாகிஸ்தானை இந்திய அரசால் அடக்கிவைக்கவே முடியவில்லை. சீனாவுடனோ இன்னொரு பனிப் போரை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அரபு வசந்தத்தின்போது சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இந்தியா வின் குரல் ஒலித்தது. நாளைக்கே அமெரிக்கா இரானுக்கு எதிராகப் போர் தொடுத்தால், மன்மோகன் படைகளை அனுப்பிவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
பெருநிறுவனங்களின் பேயாட்டம்!
நீரா ராடியா உரையாடல் பதிவுகளை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா? இந்த நாடு யாருடையது, இந்த நாட்டை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதை உலகுக்குச் சொன்ன உரையாடல்கள் அவை. ரத்தன் டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி, தருண் தாஸைப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராஜாத்தி அம்மாளைப் பற்றி, தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி... சிங் அரசாங்கத்தின் சூத்திரதாரிகளைப் பற்றி என்றென்றைக்குமான பதிவுகள் அவை. அலைக்கற்றை வழக்கு விசாரணையின்போது, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம் நீரா அளித்த ஒரு வாக்குமூலம் போதும், சிங்கின் அரசு யாருடைய பிரதிநிதி என்று சொல்ல! நீராவின் அந்த வாக்குமூலம்: ''ஆமாம். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்றினேன். அதற்காக  60 கோடி பெற்றேன். அது என் சேவைக்கான கட்டணம்!''
எல்லாவற்றையும்விட சங்கடம் தரும் செய்தி இது. ஜனநாயகத்தின் மீதான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தாக்குதல். இந்தியப் படைகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரிய எதிரிகள் யார் தெரியுமா? தன் சொந்த மக்கள். காஷ்மீரில் 10 பேருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் வீரர்களைக் குவித்து காஷ்மீரில் அமைதி நிலவுவதாக சிதம்பரம் நம்பச் சொல்கிறார். ஆனால், காஷ்மீரிகள் 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்றே எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலைமைதான். சுதந்திர நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்திய இயற்கை வளத்தை - பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிமச் சுரங்கங்களைப்  பெருநிறுவன முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக சிதம்பரம் நடத்தும் 'பச்சை வேட்டை’ வனங்களின் பூர்வகுடிகளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளி இருக்கிறது. விளைவு... நாட்டின் 16 மாநிலங்கள், 222 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தில். அதாவது, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மாவோயிஸ்ட்டுகள் கையில் இருக்கிறது. தெலங்கானா, ஹரித்பிரதேசம், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று ஒன்பது பிராந்தியங்கள் தனி மாநிலக் கோரிக்கையோடு நிற்கின்றன.
இத்தனையும் தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறது? இந்தியர்களின் தனி மனித உழைப்பையும் இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு உணர்வையும்தான் நம்ப வேண்டி இருக்கிறது!


இந்த கட்டுரை Nagalagam பிளாக்கில் இருந்து எடுத்து பிரசுரம் செய்யப்பட்டது 

Saturday 28 July 2012

பாம்பு வழிபாடு சரியா?



இன்று நேற்றல்ல, பன்னெடும் காலம் தொட்டே பாம்பு வழிபாடு நடைமுறையில் இருக்கிறது.

இன்றும் பலர் பாம்புக்கு பால் வார்ப்பதையும், பாம்பு புற்றுக்கு முட்டை வைப்பதையும் நடைமுறையில் பார்க்கலாம்.

ஜாதகத்தில் நாகதோஷ அமைப்பு இருந்தால் ராகு கேதுவிற்கு பரிகாரம் சொல்வதும், பின் பாம்புக்கு பால் வைக்க சொல்வதும் ஜோதிடர்களிடம் எழுதபடாத  சட்டமாகவே இருக்கிறது.

சாமானிய மனிதர்களும் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செய்கிறார்கள்.

என்ன காரணம்?

அதை வெறும் பாம்பாக மட்டும் பார்க்காமால் ராகராஜன் என்றும், நாக கன்னி என்றும் வேறு விதமாக நமக்கு வேதங்கள்  அறிமுகம் செய்ததும் ஒரு காரணம்.

அதோடு மகாவிஷ்ணு பாம்பின் மீதுதான் துயில் கொள்கிறார்.


முருகனுக்கு கால் பக்கம் இந்த பாம்புதான் காவல் இருக்கிறது.



அவர் அண்ணன் விநாயகருக்கு இடுப்பில் அரைஞான் கயிராக இருப்பது பாம்பு.



பரமசிவன் கழுத்தில் ஒரு அணிகலன் மாதிரியே எப்போதும் நீங்காமல் இருப்பது பாம்பு.



இதே பாம்புதான் பார்வதிக்கு  கை விரல் மோதிரமாக இருக்கிறது.



அதோடு நின்று விடவில்லை. பல தெய்வங்களுக்கு காவல்காரன் மாதிரி இந்த பாம்புதான் இருக்கிறது.



அவ்வளவு ஏன்? இந்த பூலோகம்  என்னும் பூமி பந்தையே நாகராஜன் என்னும் பாம்புதான் தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கிறது. 

அதோடு 

ஆனந்தாய நமஹா
வாசுகியே  நமஹா
தச்சகாயா   நமஹா
கார்கோடக  நமஹா
சங்கபாலா நமஹா
குளிகாய  நமஹா
பத்மாய நமஹா
மகா  பத்மாயா நமஹா
என்று பாம்பு வழிபாட்டை சொல்கிறது அஷ்ச்டோத்திர நவமாளி .


 சரி ......இது மட்டுமே  பாம்பு வழிப்பாட்டிற்கு காரணம் இல்லை.

நாகதோசம்தான்  முக்கிய   காரணம்.  இந்த  நாகதோஷம் பலரது வாழ்க்கையில் சடுகுடு விளையாடுவதும் முக்கிய காரணம்.

சரி இந்த நாகதோஷம் என்பது என்ன?

நாக தோஷம் மட்டும் அல்ல, செவ்வாய் தோஷம் பற்றியும் பாப்போம்.

செவ்வாய் என்பது நம் உடலில் ரெத்தத்தை குறிக்கும் கிரகம். அதோடு சிற்றின்ப கிரகமும் இதுதான். ஒருவரின் ஆண் பெண் உறவு நிலைகளை சொல்வதுதான் செவ்வாய் தோஷம்.

உதாரணமாக ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால், எந்நேரமும் படுக்கையறை சிந்தனையோடு இருப்பார்.

அவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் என்னாகும்?

அந்த பெண் ஒத்துழைக்காது. தலையை வலிக்குது, அசதியா இருக்கு, மனசு சரியில்லை, விரதம் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கொண்டே இருக்கும்.


அப்பறம் அவர்களுக்குள் மன வேற்றுமை என்பது வராமல் இருக்காது. நாக தோஷமும் இந்த கதைதான்.

ஓன்று எழில், அல்லது சந்திரனோடு, பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு எட்டில் ராகு கேது இருந்தால் நாக தோஷம் என்று பெயர்.

இந்த ராகு கேது  செவ்வாயோடு அல்லது சுக்கிரனோடு இருந்தாலும் அடுத்து நான் சொல்ல போகும் விஷயத்திற்கு ஒத்து போகும்.


நீங்க டிஸ்கவரி சானல் பார்ப்பது உண்டா.  அதில் பாம்பு எப்படி தன் துணையோடு உறவு கொள்கிறது என்பதை பற்றிய படம் எதுவும் பார்த்ததுண்டா.

பாம்பு தன் துணையோடு ஒன்றோடு ஓன்று பின்னி பிணைந்து தான் உறவு கொள்ளும்.

 இந்த நாக தோஷம் உள்ளவரும் இப்படித்தான். இது உறவு என்பதோடு நின்று விடாமல் திருமண தாமத்திற்கும் ஒரு காரணமாக இருந்து விடுகிறது.அதனால் பாம்பு வழிபாடு, பரிகாரம் என்ற பெயரில் வந்து விட்டது.

நம் சிந்தனை என்ன வென்றால்... இந்த நாகதஷ வழிபாடிற்காக காட்டு பாம்பிற்கு பால் வைப்பதும், முட்டை வைப்பதும் சரியாக படவில்லை.

நீங்கள் வழிபாடு செய்ய வேண்டுமா? ஆலயம் செல்லுங்கள். அங்கே இருக்கும் ராகு கேதுவிற்கு பரிகாரம் செய்யுங்கள். அதை விடுத்து பாம்பு புத்திற்கு பால் வார்க்க வேண்டாம். இது அறிவான செயலாக படவில்லை.

Wednesday 25 July 2012

உங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?


ஒருவர்  பிறந்த லக்னத்தை வைத்து அவரின் குணங்களையும், உருவ அமைப்பையும் சொல்ல முடியும். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்கணங்களில் பிறந்தவர் பற்றி பாப்போம்.


நீங்கள் பிறந்தது மேஷ லக்கணமாக இருந்தால்.....

நீங்கள் பெரும்பாலும் உங்கள் முன்னோரின் ஜெராக்ஸ் காப்பி. தாத்தா மாதிரி இருக்கலாம், அல்லது தாத்தாவின் அப்பா மாதிரி உருவத்தில் இருப்பிர்கள். முக அமைப்பில் இருப்பிங்க.

ஆனால்  பேசுவதில் கில்லாடி. கோவம்  வந்தால் கண்மண் தெரியாமல் வரும். ஆனாலும் அன்பானவர். தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டீர்கள்.

தத்துவம், வேதாந்தம் இவற்றில் தனி கவனம் செலுத்தும் நீங்கள் பெரும்பாலும் அதிகாரம் நிறைந்த பதவிகளில் இருப்பிர்கள்.

நீங்கள்  மேஷ லக்னத்தில் பிறந்த பெண்ணா?

வாய்  துடுக்கு அதிகம். மற்றவர் என்ன நினைப்பார் என்று கூட யோசிக்காமல் பட படவென  வார்த்தைகளை கொட்டிவிடுவீர்கள்.அதனால் உங்கள் சொந்த பந்தங்கள் உங்களை விட்டு சற்று விலகி தான் இருக்கும்.


நீங்கள் பிறந்தது ரிஷப  லக்கணமாக இருந்தால்.....

அப்படியே அப்பா மாதிரி இருக்க அதிக சான்ஸ் இருக்கு. பொறுமைசாலிதான். இருந்தாலும் முன்கோவம் இருக்கும். தவறுகளை பெரிதுபடுத்தாமல் மன்னிக்கும் குணம் கூட பிறந்தது. குடும்ப பாசம் அதிகம்.

 எந்த மாதிரி வாழ்க்கை அமைந்தாலும் அதற்க்கு தகுந்த மாதிரி தன்னை மாதிரி வாழும் குணம் இருக்குமாம். இது ஜோதிட குறிப்பு. ஆனால் ஆடம்பர பிரியர் என்பது தான் உண்மை.

நீங்கள்  ரிஷப  லக்னத்தில் பிறந்த பெண்ணா?

கணவனை முந்தானையில் முடிந்து வைக்கும் திறமைசாலிகள். பெரியோர்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பிர்கலாம். நவநாகரீக மோகம் அதிகம். உறவுகளை  மதிப்பிர்கள். உயர்ந்த வாழ்க்கை வாழ்வீர்கள். உங்களுக்கு காதல் உணர்வு அதிகம். சரிதானே...



நீங்கள் பிறந்தது மிதுன   லக்கணமாக இருந்தால்.....

அம்மா மாதிரி உருவ அமைப்பில் இருக்க அதிக சான்ஸ் இருக்கு. விளையும் பயிர் மூளையிலேயே தெரியும் என்பது போல் உங்கள் அறிவாற்றல் சின்ன வயசுலேயே தெரியும்.

ஆனால் தொட்டர்சுனுங்கி. பிடிவாதம் அதிகம். குடும்ப பாசம் அதிகம். அதைவிட அதிகமாக அப்பா அம்மா மேல் பாசம் அதிகம். நல்ல  பதவியில் இருப்பிர்கள்.


நீங்கள்  மிதுன   லக்னத்தில் பிறந்த பெண்ணா?

வார்த்தைகளை சரவெடி மாதிரி கொட்டி விடுவீங்க. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும். நாகரிக மோகம் உண்டு. கணவனுக்கு மட்டும் கட்டு பட்டவராம். உண்மையா?



நீங்கள் பிறந்தது  கடக    லக்கணமாக இருந்தால்..

பெரும்பாலும் அம்மா மாதிரிதான் உருவம். அதிக அழகாய் பிறப்பதில்லை. மனைவிக்கு மரியாதை செய்பவர் நீங்கள். உயர்ந்த வாழ்க்கை அமையும். இரக்க குணம் உள்ளவர்கள்.  தேவை இல்லாமல் அடுத்தவர் பிரச்சனையில் தலை இடுவது இல்லை. அடுத்தவர்கள் உங்கள் பிரச்சனையில் தலை இட்டால் பொறுத்து கொள்ள மாட்டிங்க. 

நீங்கள்   கடக    லக்னத்தில் பிறந்த பெண்ணா?

பிடிவாத குணம் அதிகம். ஆனால் கணவனை முந்தானையில் முடிந்து  வைப்பதில் பலே கில்லாடி. குறைவான ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள். உங்களின் ரசனையின் உயரம் அதிகம்.  அதனாலேயே உங்களை திருப்த்தி படுத்த முடியாது என்கிறார்கள்.



நீங்கள் பிறந்தது  சிம்ம     லக்கணமாக இருந்தால்.. 


அம்மா மாதிரி தோற்றம் இருக்கும். ஆனால் தாங்க முடியாத கோவம் கொண்டவர்கள். பச்ச மிளகாயை கடித்த மாதிரி எப்பவும் சுள்ளுன்னு இருப்பிர்கள்.

என்னதான் வெளியில் அளப்பரையை போட்டாலும் விட்டுக்குள் மனிதர் கொஞ்சம் அடக்கம் தான். வீட்டுக்காரம்மா ராஜ்ஜியம்தான். அதாவது மதுரை ஆட்சி.

நீங்கள்   சிம்ம    லக்னத்தில் பிறந்த பெண்ணா?


அது என்னவோ பிடிவாதக்காரியாம். கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு அனேகமாக ஒத்து வராது. கொஞ்சம் கபடு, கொஞ்சம் சூது என்று ஒரு தினிசான குணம் உள்ளவள். அடங்க்கி போகாது, அடக்க பார்க்கும் என்கிறார்கள். சரியா?



நீங்கள் பிறந்தது  கன்னி      லக்கணமாக இருந்தால்.. 



அம்மா மாதிரி தோற்றம் என்று அடித்து சொல்கிறார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சிரிப்பு அலை விசிக்கொண்டே இருக்கும்.நகைச்சுவையாக பேசுவீங்க. எந்த காரியத்தையும் முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

நீங்கள் ஏதாவது ஒரு துறையில் மிக பிரபலமாக இருப்பிர்கள். கலையார்வம் மிக்கவர்கள் என்கிறது ஜோதிட குறிப்பு.

நீங்கள்    கன்னி     லக்னத்தில் பிறந்த பெண்ணா?


நல்லா பேசுது, நல்லா பழகுது, பார்த்த உடனேயே சொந்தகாரங்க மாதிரி ஒட்டிக்குது என்றெல்லாம் பெயர் எடுப்பார்கள். திறமைசாலிகள். எதிலும் ஆழ்ந்த புலமை இருக்கும்.




நீங்கள் பிறந்தது  துலாம்     லக்கணமாக இருந்தால்.. 


அதிகபச்சமாக அப்பா மாதிரி உருவ அமைப்பு பெற்றவர்கள். வாட்டசாட்டமாக உடல் அமைப்பை பெற்றவர்கள். கொஞ்சம் நியாயம் தர்மம் என்று பேசுகிறவர்கள். 

கலைத்துறை  நாட்டம் கொண்டவர்கள். அழகியல் ரசனை மிக்கவர்கள். மற்றவரை  எடைபோடும் குணம் கொண்டவர்கள்.


நீங்கள்     துலாம்    லக்னத்தில் பிறந்த பெண்ணா?


பொன்னாசை, பொருளாசை மிக்கவர்கள். ஆடம்பர பிரியர்கள். வாய் துடுக்கானவர்கள். சில சமயம் கொஞ்சம் அதிகபடியோ என்று என்ன தோன்றும். மற்றபடி நல்லவர்கள்.



நீங்கள் பிறந்தது  விருச்சிகம்     லக்கணமாக இருந்தால்.. 

தாயை போல் உருவம் கொண்டவர்கள். ஆனால் குடும்ப பாசம் குறைவு. இவர்கள் தடாலடியாக பேசும் குணம் உள்ளவர்கள்.  ஒரு நேரம் செல்வா சீமானாய் இருப்பார்கள். கொஞ்சநாள் கழித்து பார்த்தால் வறுமையில் வாடுவார்கள்.

பொதுவாக இவர்கள் எது செய்தாலும் ஏற்ற இறக்கம் உண்டு. முன்கோபிகள். வேகம் இருக்கிற அளவிற்கு விவேகம் இருக்காது என்கிறது ஜோதிடம்.

நீங்கள்      விருச்சிக  லக்னத்தில் பிறந்த பெண்ணா?

அழகுதான். ஆனால் நம்புகிற மாதிரி குணம் இருக்காது. சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி விடுவீர்கள். பொருளாசை மிக்கவர்கள். மற்றவர் பார்வைக்கு சுயநலவாதியாக தெரிந்தாலும், சில சமயம் பொதுநல வாதியாகவும் இருப்பது உண்டு.



நீங்கள் பிறந்தது  தனுசு   லக்கணமாக இருந்தால்..  

தனுசு லக்கனத்தில் பிறந்தவர்கள் தந்தையை போல் உருவம் கொண்டவர்கள். முன்  கோவமும் மூர்க்க குணமும் கொண்டவர்கள்.  அதனால் அடிக்கடி மன அமைதியை  இழந்து விடுவார்கள். 

எந்த சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்த்து போராடும் குணம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை அதிகம். ஆனால் வெளியே தெரியாமல் தங்கள் மன பயத்தை மறைத்து வாழ்பவர்கள்.

நீங்கள்       தனுசு   லக்னத்தில் பிறந்த பெண்ணா? 


பெரிய குடும்பத்தில் பிறந்த பெண்ணை இருப்பீர்கள். நியாயம் தர்மம் பேசுவீங்க.. அதை பிடிக்கீறிர்களா இல்லையா என்பது வேறு விஷயம். 
சில சமயம் நீங்கள்  எடுக்கும் முடிவுகள் மிக கடினமாக இருக்கும். குடும்ப பாசம் அதிகம். 



நீங்கள் பிறந்தது  மகர    லக்கணமாக இருந்தால்..

அப்பாவையும் அம்மாவையும் கலந்து செய்த மாதிரி தோற்றம் மற்றும் குணம் கொண்டவர்கள். பாசமும் நேசமும் கொண்டவராக இருந்தாலும், பல சமயம் நீங்கள் மாறி விடுவது  கூட பிறந்த குணம். நீங்கள் பலகலை வித்தகர்.  எதை செய்தாலும் நேர்த்தியாக செய்யும் ஆற்றல் மிக்கவர்கள்.  

நீங்கள்    மகர    லக்னத்தில் பிறந்த பெண்ணா? 

ஆண்களுக்கு சொல்லிய அனைத்தும் உங்களுக்கும் பொருந்தும். 



நீங்கள் பிறந்தது  கும்ப    லக்கணமாக இருந்தால்..

தந்தையின் தோற்றம் கொண்டவர்கள். தாயார், தந்தை, சகோதர, சகோதரி பாசம் மிக்கவர்கள். எந்த இடத்திலும் இவர்களுக்கு மரியாதை கிடைக்கும். உங்களை  பலர் வழிகாட்டியாகவும் ஏற்று கொள்வார்கள். நண்பர்களுக்கு இனியவர்கள். உங்களால்  முன்னுக்கு வந்தவர்கள் பலர்  தெய்வ பக்தி மிகுந்தவர்.

நீங்கள்     கும்ப     லக்னத்தில் பிறந்த பெண்ணா? 

கணவனின் அன்புக்கு கட்டு பட்டவர்கள். குடும்ப நலன் காப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள். சமயோசித புத்தி உடையவர்கள். மற்றவருக்கு புத்தி மதி சொல்லும் தகுதி படைத்தவர்கள்.



நீங்கள் பிறந்தது  மீன    லக்கணமாக இருந்தால்..

தாயின் தோற்றம் கொண்டவர்கள். குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தாலும் இவர்களுக்கு என்று தனி பாசம் உண்டு. எத்தனையோ ஆற்றல் இருந்தாலும், யாரையாவது  சார்ந்து இருப்பார்கள். இவர்கள் மறந்தும் மற்றவருக்கு துன்பம் செய்ய நினைக்காதவர்.

நீங்கள்      மீன      லக்னத்தில் பிறந்த பெண்ணா? 

தெய்வ பக்தி நிறைந்தவர். நீதி நேர்மை பார்ப்பவர், துன்பத்தை தாங்க முடியாதவர். இளகிய மனம் படைத்தவர். 




தெரியுமா உங்களுக்கு?


பிளாக்கர் தளத்தின் முகவரியை அந்தந்த நாடுகளில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி Redirect செய்கிறது. 

உதாரணமாக இந்தியாவிலிருந்து பார்த்தால் .in என்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .com.au என்று முடியும் படியாகவும் தெரியும். 

இதன் காரணம் பிளாக்கர் தளங்களை கூகிள் தணிக்கை செய்யப்போகிறது. 

முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டத்தின் படியாக தேவையில்லாத கருத்துகள் எனில் நாடு வாரியாக பிரித்தெடுத்து நீக்கி விடலாம். பிரச்சினையில்லாத மற்ற நாட்டினர் பார்த்துக் கொள்ளலாம்.

எனது நண்பர்  ஒருவர் இந்த பயனுள்ள தகவலை எனக்கு அனுப்பி இருந்தார். அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

சரி ...நாடு வாரியாக எப்படி பிளாகர் மற்றும் இணையதள முகவரி காட்டப்படுகிறது என்பதை பார்ப்போம்.

ac
ad
Andorra
ae
United Arab Emirates
af
Afghanistan
ag
Antigua and Barbuda
ai
Anguilla
al
Albania
am
Armenia
an
Netherlands Antilles
ao
Angola
aq
Antarctica
ar
Argentina
as
American Samoa
at
Austria
au
Australia
aw
Aruba
az
Azerbaijan
ba
Bosnia and Herzegovina
bb
Barbados
bd
be
Belgium
bf
Burkina Faso
bg
Bulgaria
bh
Bahrain
bi
Burundi
bj
Benin
bm
Bermuda
bn
bo
Bolivia
br
Brazil
bs
Bahamas
bt
Bhutan
bv
Bouvet Island
bw
Botswana
by
Belarus
bz
Belize
ca
Canada
cc
Cocos (Keeling) Islands
cf
Central African Republic
cg
Congo
ch
Switzerland
ci
Cote d'Ivoire (Ivory Coast)
ck
Cook Islands
cl
Chile
cm
Cameroon
cn
China
co
Colombia
com
US Commercial
cr
Costa Rica
cs
Czechoslovakia (former)
cu
Cuba
cv
Cape Verde
cx
Christmas Island
cy
Cyprus
cz
Czech Republic
de
Germany
dj
Djibouti
dk
Denmark
dm
Dominica
do
Dominican Republic
dz
Algeria
ec
Ecuador
edu
US Educational
ee
Estonia
eg
Egypt
eh
Western Sahara
er
Eritrea
es
Spain
et
Ethiopia   


fi
Finland
fj
Fiji
fk
Falkland Islands (Malvinas)
fm
Micronesia
fo
Faroe Islands
fr
France
fx
France (Metropolitan)
ga
Gabon
gb
Great Britain (UK)
gd
Grenada
ge
Georgia
gf
French Guiana
gh
Ghana
gi
Gibraltar
gl
Greenland
gm
Gambia
gn
Guinea
gov
US Government
gp
Guadaloupe
gq
Equatorial Guinea
gr
Greece
gs
South Georgia and South Sandwich Islands
gt
Guatemala
gu
Guam
gw
Guinea-Bissau
gy
Guyana
hk
hm
Heard and McDonald Islands
hn
Honduras
hr
Croatia (Hrvatska)
ht
Haiti
hu
Hungary
id
Indonesia
ie
Ireland
il
Israel
in
India
io
British Indian Ocean Territory
iq
Iraq
ir
Iran
is
Iceland
it
Italy
jm
Jamaica
jo
Jordan
jp
Japan
ke
Kenya
kg
Kyrgyzstan
kh
Cambodia
ki
Kiribati
km
Comoros
kn
Saint Kitts and Nevis
kp
Korea (North)
kr
Korea (South)
kw
Kuwait
ky
Cayman Islands
kz
Kazakhstan
la
Laos
lb
Lebanon
lc
Saint Lucia
li
Liechtenstein
lk
Sri Lanka
lr
Liberia
ls
Lesotho
lt
Lithuania
lu
Luxembourg
lv
Latvia
ly
Liby
ma
Morocco
mc
Monaco
md
Moldova
mg
Madagascar
mh
Marshall Islands
mil
US Military
mk
Macedonia
ml
Mali
mm
Mynamar
mn
Mongolia
mo
Macau
mp
Northern Mariana Islands
mq
Martinique
mr
Mauritania
ms
Montserrat
mt
Malta
mu
Mauritius
mv
mw
Malawi
mx
Mexico
my
Malaysia
mz
Mozambique
na
Namibia
nc
New Caledonia
ne
Niger
net
US network
nf
Norfolk Island
ng
Nigeria
ni
Nicaragua
nl
Netherlands
no
Norway
np
Nepal
nr
Nauru
nt
Neutral Zone
nu
Niue
nz
New Zealand (Aotearoa)
om
Oman
org
US Non-Profit Organization
pa
Panama
pe
Peru
pf
French Polynesia
pg
Papua New Guinea
ph
Philippines
pk
Pakistan
pl>
Poland
pm
Saint Pierre and Miquelon
pn
Pitcairn
pr
Puerto Rico
pt
Portugal
pw
Palau
py
Paraguay
qa
Qatar
re
Reunion
ro
Romania
ru
Russian Federation
rw
Rwanda
 sa
Saudi Arabia
sb
Solomon Islands
sc
Seychelles
sd
Sudan
se
Sweden
sg
Singapore
sh
Saint Helena
si
Slovenia
sj
Svalbard and Jan Mayen Islands
sk
Slovak Republic
sl
Sierra Leone
sm
San Marino
sn
Senegal
so
Somalia
sr
Suriname
st
Sao Tome and Principe
su
USSR (former)
sv
El Salvador
sy
Syria
sz
Swaziland
tc
Turks and Caicos Islands
td
Chad
tf
French Southern Territories
tg
Togo
th
Thailand
tj
Tajikistan
tk
Tokelau
tm
Turkmenistan
tn
Tunisia
to
Tonga
tp
tr
Turkey
tt
Trinidad and Tobago
tv
Tuvalu
tw
Taiwan
tz
Tanzania
ua
Ukraine
ug
Uganda
uk
um
US Minor Outlying Islands
us
United States
uy
Uruguay
uz
Uzbekistan
va
Vatican City State
vc
Saint Vincent and the Grenadines
ve
Venezuela
vg
Virgin Islands (British)
vi
Virgin Islands (US)
vn
Viet Nam
vu
Vanuatu
wf
Wallis and Futuna Islands
ws
Samoa
ye
Yemen
yt
Mayotte
yu
Yugoslavia
za
South Africa
zm
Zambia
zr
Zaire
zw
Zimbabwe

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...