ads

Monday 30 January 2012

கடன் கொடுப்போர் கவனத்திற்கு...! THA MAN WHO LENTS MONEY BE CAREFUL

ராமு வள்ளால கண்டன்.  ரூம் போட்டு யோசிப்பானோ என்னவோ,  அவன் செய்யும் தகிடு தித்தம் எல்லாம் மிக நவீனமாகவே இருக்கும்.  

ஒருநாள் அவனுக்கு திடீர் பணத்தேவை.  2000 ரூபாய் பணம் தேவை பட்டது.  அவனுக்கு தான் கம்ப்பியூட்டர் முளையாசே, பட்டுன்னு ஒரு யோசனை தோணிச்சு.  சோமுவை பார்க்க போனான்.  

சோமு யாரு?

தயாள குணம், தாராள மனப்பான்மை, என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைக்கு ஏத்த மாதிரி மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவனுக்கு நிகர் அவனே.  

ராமு பணம் கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்கலை.  ஒரு வாரத்திலே திருப்பி தர்றேன்னு சொன்னவனுக்கு பணத்தை கொடுத்தான்.  

பணம் வாங்கியாச்சு,  அதை செலவும் செய்தாச்சு.  அதை திருப்பி தரணுமே எப்படி? 

கில்லாடி ராமு யோசித்தான்.  இன்னொரு இரக்க குணம் உள்ள குமாரை போய் பார்த்தான்.  ஒரு வாரத்திலே தர்றேன்னு கடன் கேட்டான்.  குமாரும் கொடுத்தான்.  

பணத்தை வாங்கிய ராமு,  முதலில் கடன் வாங்கிய சோமுவிடம் நாணயமாய் திருப்பி கொடுத்தான்.  

நாட்கள் கடந்தது.  ஒரு வாரம் ஆய்டுச்சு.  ரெண்டாவதா பணம் வாங்கின குமாருக்கு பணத்தை திருப்பி தரணுமே... என்ன செய்யலாம்.... என்று யோசித்தவன், முதல் நண்பன் சோமுவை போய் பார்த்தான்.  இவன் தான் பணம் வாங்கி நாணயமாய் திருப்பி கொடுத்து விட்டானே.  அதனால் அவனும் கொடுத்தான்.  

இப்படியே ரெண்டு மூணு முறை நடந்துடுச்சு. சோமுவிடம் வாங்கி குமாரிடம் கொடுப்பதும், குமாரிடம் வாங்கி சோமுவிடம் கொடுப்பதுமாய் இருந்தவனுக்கு  ஒரு சூப்பர் யோசனை சிக்கிச்சு.  

சோமு குமார் ரெண்டு பேரையும் கூப்பிட்டன்.  சோமு  உங்க கிட்டே கடன் வாங்கினேன்.  அந்த கடனை திருப்பி தர குமார் கிட்டே வாங்கி உங்களுக்கு கொடுத்தேன்.  அதை திருப்பி தர மீண்டும் உங்க கிட்டே கடன் வாங்கினேன்.  

இப்போ  இடையிலே நான் எதற்கு.  அதுனால 2000  ரூபாயை குமார் கிட்டே கொடுங்க.  ஒரு வாரம் கழித்து அந்த பணத்தை அவர் திருப்பி தருவார்.  மறுவாரம் அவர் கிட்டே நீங்க வாங்குங்க.  

சோமுவிற்கும் ராமுவிற்கும் மயக்கம் வந்து இருக்குமா இல்லையா?  இப்படிதான் கடன் வாங்குற வரைக்கும் கடவுளே தெய்வமேங்கிறது,  வாங்கி முடிந்ததும் வினோத ஜந்துவை பார்க்கிற மாதிரி பார்க்கிறது.  சரி போகட்டும்.  

நீங்கள் இரக்க குணம் உடையவரா...

மற்றவரின்  துயரை கண்டு பொறுக்க முடியாதவரா....

இக்கட்டான நேரத்திற்கு உதவாத பணம் இருந்தால்  என்ன,  இல்லாவிட்டால்  என்ன என்று எடுத்து  கொடுப்பவரா....

உங்கள் கருணை உள்ளத்திருக்கு என் பணிவான வணக்கம்.  ஒரு கை கொடுப்பது மறு கைக்கு தெரியக் கூடாது என்று நினைத்தால்,  தானம் தர்மம் என்கிற மாதிரி உதவிகள் அமைந்தால் இந்த கட்டுரை பொருந்தாது.  

கொடுப்பது கடன்.  அவர் திருப்பி தர வேண்டும் என்ற நோக்கில் உதவிகள் அமைந்தால் ஒரு நிமிடம் இதை படியுங்கோ.  

சாஸ்த்திரத்தில் கடன் கொடுக்க கூடாத  நாளாக  12 நாட்களை சொல்கிறது.  அதாவது திருவாதிரை,  பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை,  மகம் இந்த நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாளில் கடன் கொடுத்தால்,  கொடுத்த கடன் உடன் வராதாம்.  

இருந்தாலும் இதில் மோசமான நட்சத்திரம் எது தெரியுமா?

சுவாதி.

சுவாதியில் கொடுத்தால் சுவாகா என்பார்... என்  அன்பு நண்பர் ராமமூர்த்தி.  

காரணம் என்ன?

சுவாதி என்பது ராகுவின் நட்சத்திரம்.  ராகுவின் குணம் என்ன?

பொய், புளுகு, பித்தலாட்டம், மோசடிக்கு துணை போகிற கிரகம்.  நம்ப வைத்து கழுத்தை அறுக்கிற கிரகம்.  அவருடைய இந்த நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராது.  செய்கிற உதவிகள் கூட உடனே மறந்து போவார்கள்.  அதனால் மற்றவருக்கு உதவி செய்வதாக இருந்தால் சுவாதி நட்சத்திரம் உள்ள நாளில் மட்டும்  கொடுக்கவே வேண்டாம். 



LOVE

சொன்னங்க சொன்னாங்க மேதைகள் சொன்னாங்க....


காரணம் இல்லாமல் காதல் வருவதில்லை...
அந்த காரணம் தான் புரிவதில்லை.
                                                                        -பாஸ்கல்


ஒருவர் இல்லாத போது அவர் நினைவுகள் 
திரும்ப திரும்ப வந்தால் 
அது தான்  காதல்.
                                                                         - H .ஸ்ரீகிருஷ்ணர்


நம்மை இன்னொருவரிடம் கண்டு பிடிப்பதுதான் 
காதல்
                                                                              -அலக்சாண்டர் சுமித் 


காதலா...
அது ஒரு அக்கபோரு....
எப்ப வேண்டுமானாலும் வரும்
எப்ப வேண்டுமானாலும் போகும்
                                                                           -H .ஸ்ரீகிருஷ்ணர்  



காதல் பேய் மாதிரி...
அதை பற்றி எல்லோரும் பேசுவார்கள்
ஆனால் சிலருக்கு தான் அது புரியும்.
                                                                                        -லே ரொக்சி போகால்ட் 


அன்பை கொடுப்பதும் 
அன்பை கேட்பதும் தான் காதல் 
                                                                                    -H .ஸ்ரீகிருஷ்ணர்  


மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது 
மாறாதிருப்பது காதல் 
                                                                                      -சேக்ஸ்பியர் 


உண்மையும் பொய்யும் 
ஒரே நேரத்தில் 
ஒரே இடத்தில் 
இருப்பது தான் காதல் 
                                                                                      -H .ஸ்ரீகிருஷ்ணர்  

Sunday 29 January 2012

தாமத திருமணம் ஏன்? LATE MARRIAGE !

புனிதா...

பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரின்னு  சொல்வாங்களே.... அந்த மாதிரி அழகு ராச்சசி.  பாரதிராஜா பார்த்தால் படத்தில் நடிக்கிறாயா என்று நிச்சயம் கேட்பார். 

அந்த சிகப்பு நிறமும்,  எடுப்பான நாசியும், பேசும் கண்களும், இடுப்புவரை நீண்ட கூந்தளும், இழுத்து போர்த்திய சேலையுமாய் வீதியில் இறங்கி நடந்தால்,  அடடா.... என்னத்தை சொல்ல,  அந்த மகாலக்ஷ்மியே நடந்து போற மாதிரி இருக்கும்.  

ஆனால் அது ஒரு காலம்.  பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை.  இப்போது வயது 32 .  அதோ அந்த ஜன்னலின் ஓரம் இன்னொரு கம்பியோ என்று சந்தேகிக்கிற மாதிரி நின்று கொண்டிருகிறாள். 
இப்போதெல்லாம் வெளியே செல்லவே விரும்புவது இல்லை.  காரணம் இது தான்.  பார்பவர்கள் அத்தனை பேருமே கேட்கிறார்கள்.  இன்னும் கல்யாணம் செய்யலையா?

இந்த கேள்வி புனிதாவை மட்டும் அல்ல,  அவள் அப்பா சாம்பசிவத்தையும் புரட்டி போட்டு விட்டது.  

உனக்கென்னப்பா... கிளி மாதிரிஒரு பெண்ணை பெத்து வச்சுருக்கே.  கட்டி கொடுக்கிறேன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும்,  பத்து காசு செலவில்லாமல் கொத்திகிட்டு போய்டுவாங்க. 

இப்படிதான் புனிதாவை பார்த்தவர்கள் சாம்பசிவத்திடம் சொன்னார்கள்.  ஆனால் அதை நிஜமாக்க முயன்ற பொது தான் நிலவரம் புரிந்தது.  அது அத்தனை எளிதல்ல என்று.

இத்தனைக்கும் சீர்செனத்திருக்கும் குறை வைக்க போறது இல்லை.  வரதச்சணையா 50 பவுன் போட ரெடி.  படிப்பு குறைன்னு சொல்ல வழில்லை பொண்ணு பட்டதாரி.  

பொண்ணு ஒழுக்கம் கெட்டவளா... நாகரிகம் அற்றவளா... அதுவும் இல்லை.  இருந்தும் என்ன குறை.  

அதுதான் விதி. இத்தனை இருந்தும் கல்யாண கதவு மட்டும் திறந்தபாடில்லை.  ஏதாவது அல்ப காரணத்தால் நெருங்கி வந்த திருமணம் நின்று போய்விடும்.   

அவள் சிரிப்பை மறந்தே சில காலம் ஆகிவிட்டது.  சாம்பசிவம் கூட எப்போது தூங்குகிறார், எப்போது விழிக்கிறார் என்று தெரியாது.  

யுர்க்காதா பின்னே.  ஒரே பொண்ணு.  பந்தல் போட்டு பத்திரிகை அடிச்சு ஊர் மெச்ச கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசை.  அதுக்கு நந்தி மாதிரி குறுக்கே நிற்பது,  ஜோதிடர்கள் வார்த்தையில் சொன்னால் தோஷம்.

அன்று காலை சாம்பசிவம் பரபரப்பாக காணப்பட்டார்.  குளித்து முடித்து புத்தாடை தரித்து, வாசலுக்கும் உள்ளேயுமாய் உலாத்தி கொண்டிருக்கும் போதே புனிதாவிற்கு புரிந்து போனது,  இன்று யாரோ வரப்போகிறார்கள்.  இன்னொரு பெண் பார்க்கும் படலமோ.

மனதில் எழும்பிய கேள்வியை சுமந்த படி, அப்பா சாம்பசிவத்தின் அருகில் சென்றாள்.  வாய் திறந்து கேட்க வில்லை என்றாலும், மகளின் மனதை படித்த மாதிரி சொன்னார்.....  அதா....  நாகபட்டினத்துல இருந்து ஒரு ஜோசியர் வர்றார்.

ரொம்ப பேமஸான ஆள்.  உன் ஜாதகத்தை காட்டி பரிகாரம் எதுவும் செய்யணுமான்னு கேட்கத்தான் வர சொன்னேன்.  அவர் சொல்லி முடிக்கும் போதே வாசலில் நிழலாடியது.  ஜோதிடர் நின்று கொண்டிருந்தார்.  

வாங்க... வாங்க... வழிய வரவழைத்து கொண்ட புன்னகையோடு கை கூப்பினார் சாம்பசிவம்.  பதிலுக்கு வணங்கியபடி ஜோதிடர் உள்ளே வந்து அமர்ந்தார்.  இதுதான் நம்ம பாப்பாவா..?  புனிதாவை பார்த்தபடி ஜோதிடர் கேட்டார்.

ம்.... என்பது போல் சாம்பசிவம் தலையாட்ட... புனிதா மொவ்னமாக உள்ளே சென்றாள்.  சாம்பசிவம் ஜாதகத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தார்.  ஜாதகத்தை பிரித்து கிரக நிலைகலில் பார்வையை ஓட்டியவர் பின் சொன்னார்.

என் வயசுக்கு 1000  கணக்கான ஜாதகம் பார்த்திருக்கேன்.  அந்த அனுபவத்தில் சொல்றேன்... ஒரு சில கிரக நிலைகள் இருந்தாலே காலம் கடந்து தான் திருமணம் நடக்கும்.  எப்படின்னு சொல்லவா.

ஒரு ஜாதகத்தில் லக்னம்  என்று ஓன்று இருக்கும் இல்லையா.... அதை ஓன்று என்று வைத்து கொண்டால் அதில் இருந்து கேந்திரம் என்று சொல்ல கூடிய 4 , 7 , 10 ம் இடங்களிலோ,  அல்லது திரிகோணம் என்று சொல்ல கூடிய 5 , 9 ம் இடங்களிலோ 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் அமைவது இல்லை. 

காலம் முழுவதும் கன்னியாகவோ அல்லது பிரம்மசாரியாகவோ இருந்து விடுகிறார்கள்.

ஏன்... என்ன காரணம்... ? அப்பாவியாக கேட்டார் சாம்பசிவம். 

ஒன்றை கொடுத்து ஒன்றை கெடுக்கும் கிரகங்கள்,  யோகநிலை, சமுதாயத்தில் மதிப்பு, பொருளாதார ஏற்றம் இவைகளை தாரளமாக தரும்.  ஆனால் தாம்பத்திய உறவு நிலைக்கு அந்த ஜாதகரை தயார்படுத்தாது.

ஒரு வேலை திருமணம் நடந்தாலும் முப்பதுக்கு முன்னே என்பது குதிரை கொம்பு. 

சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3 , 7 , 10 ம் இடத்தை பார்பார்.  அந்த வகையில்  லக்னாதிபதியாக வருகிற கிரகத்தையும், சந்திரனையும் சனி பகவான் பார்த்தால்,  அந்த அமைப்பை உடைய ஜாதகருக்கு திருமணம் நடப்பதில்லை. 

ஏன்?

பொதுவாக ஜாதகத்தில் சனி சந்திரன் தொடர்பு ஏற்பட்டாலே புனர்பூ தோசம் என்று பெயர்.   அது வாலிபத்தில் திருமணத்தை நடத்த விடாது.  நெருங்கி வந்த மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு விலகி போய்விடும். 

அடுத்து...

களத்திர பாவம் என்று சொல்லக்கூடிய 7 ம் இடத்தில் சந்திரன்,  சுக்கிரன், சனி, செவ்வாய் இணைந்து இருந்தால் மனபந்தால் ஏறும் அமைப்புக்கு மறுப்பு வந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் 5 ம் அதிபதியாக வரக்கூடிய கிரகம்,  ராகு அல்லது கேதுவுடன்  சேர்ந்தால் திருமணம் நடப்பதில்லை,  அல்லது குழந்தைகள் பிறப்பது இல்லை. 

நான்கு கிரகங்கள் பத்தாம் பாவத்தில் இருந்தாலும்,  நாற்பது  வயதுக்கு முன் திருமணம் நடக்காது.   இப்படி பல கிரக நிலைகள் இருக்கிறது.  ஜோதிடர் சொல்லி முடித்து விட்டு சாம்பசிவத்தை ஏறிட்டு பார்த்தார். 

பிரமை பிடித்த மாதிரி இருந்த சாம்பசிவத்தை ஜோதிடரின் குரல் தான் இயல்பு  நிலைக்கு திருப்பியது.

பிள்ளைவாள் ... இந்த பொண்ணோட ஜாதகத்திலே கிரக பாதிப்புகள் இருக்கிறது என்பது உண்மைதான். அதுக்காக கவலை பட வேண்டாம்.  காயம் சின்னதா இருக்கும் போதே மருந்து போடணும் .  நம்மில் பலர்.. காயம் புரை ஓடிய பிறகுதான் அதை பற்றியே கவலை படுறது.

போகட்டும்... நான் பரிகாரம் சொல்றேன்.  செய்யுங்கோ.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.

என்ன ஜோசியரே செய்யணும்?

பார்வதி சுயம்வர ஹோமம் செய்யணும்.  செய்தால் கல்யாணம் நடக்கும்.  உங்களுக்கு தெரிந்த ஐயரை கேட்டு,  ரொம்ப சுத்தமா, நியதிமாறாமல் ஹோமம் செய்தால் திருமணம் நடக்கும்.  செய்யுங்கோ. 

ஜோதிடர் எழுந்து விடை பெற நன்றியோடு நமஸ்கரித்தார்  சாம்பசிவம்.

இனி கல்யாணம் நடந்துடும் ... நம்புவோம். 

Saturday 28 January 2012

பூசணி காய் உடைப்பது ஏன்?


தேவர்கள்  என்பது யார்? 

இந்திரலோகத்தை சேர்ந்தவர்கள்.  

விண்ணுலகவாசிகள். 

சதா சர்வ காலமும்,  சோமபானம், சுராபானம் அருந்திவிட்டு உல்லாசமாக இருப்பவர்கள்.  ஆடல் பாடல் என்று எந்நேரமும் கலைகட்டும்.     

ஆடல் அரங்கில் ரம்பா, ஊர்வசி, மேனகா என்னும் ஆடல் அழகிகள் வேறு நாட்டியம் ஆடுவார்கள்.  அதை பார்த்து ரசித்துவிட்டு பொழுதை போக்குவார்கள்.  

அவ்வப்போது ஹரி, சிவன், பிரம்மாவிடம் அப்பாயின்மென்ட்  வாங்காமலே ஆஜராகி தங்கள் நலனை பாதுகாத்து கொள்பவர்கள்.   

அரக்கர்கள் யார்?

மூர்க்கதணும்,  முன்யோசனை இல்லாமலும் இருப்பவர்கள்.  அடி தடி பிரியர்கள்.  இந்திரனும் தேவர்களும் தான் ரம்பா, ஊர்வசி, மேனகா டான்ஸ் பார்க்கணுமா.... நாங்களும்  கொஞ்சம் பார்க்க கூடாதா ... என்று அடிக்கடி தேவலோகத்தின் மீது படை எடுத்து செல்பவர்கள்.

அந்த வகையில்... சாரி.... அந்த வழியில் வந்த ஒருவரை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

கூச்மாண்டன்...  அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன்.   அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி,  வைகுண்டனை சரணடைவதுதான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே..... தேவர்கள் இனமே அழிந்து விடும்  போலிருக்கிறது.  தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.  தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு ஏற்ப,  அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன்.  உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான்.  தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.

அது சரி.... அழிவு காலம் வந்து விட்டால், அறிவுதான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேர் அறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா.... நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.  இது உன் பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே... இனி நான் பிழைக்க போவதில்லை.  எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வரமாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான்.

சரி கேள்... என்ன வரன் வேண்டும்?

நான் மறைந்தாலும்... என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை... உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை  எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலை படவில்லை.  உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம்.  இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன் பட வேண்டும்.  அதற்க்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி.... நீ பூசனிக்காயாக பிறவி எடுப்பாய்.  உன்னை வாசலில் வைத்தால் சகல தோழமும் மறையும்.

கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம் ஏவல் கூட பாதிக்காது.  அதோடு  நீ யாருக்கு தானமாக போகிறாயோ...... அதை  தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால் இன்றும் கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை  பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைப்பது இதற்கு பிறகுதான். அந்த பூசணிக்காயை உடைத்தால் சகல தோஷமும் மறைந்து விடும்.   






Friday 27 January 2012

குட்டி கதைகள் / TAMIL SHORT STORY



ஒருத்தன் வேகமா டாக்டர்கிட்டே ஓடிவந்தான்.  

ரெண்டு கையாலையும் வயத்தை பிடிச்சு கிட்டு...... ஐயோ டாக்டர்... வயறு வலிக்குதுன்னான்.  

அடடா...  நான் மனோதத்துவ டாக்டர்... உன் வியாதிக்கு மருந்து தர்ற டாக்டர் பக்கத்து ரூம்ல இருக்கார் போய் பாருன்னார்.

ஐயோ... என் நிலைமை தெரியாம பேசுறிங்களே....  நான் குதிரையை முழுங்கிட்டேன்  என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கத்தினான்.

ஓகோ... குதிரையை முழுங்கிட்டியா... அப்ப அதுக்கு நான் தான் வைத்தியம் பார்க்கணும்...வா, வந்து இந்த கட்டிலே படுன்னார்.

அவனும் படுத்தான்.  அவனுக்கு மயக்க முருந்து கொடுத்தார்.   அவன் மயக்கமானான்.   உடனே தன் உதவியாளரை கூப்பிட்டு, ஒரு குதிரையை கொண்டு வந்து வாசலில் கட்டி வைக்க சொன்னார்.

மயக்கம் தெளிஞ்சு அவன் எழுந்தான்.  உடனே டாக்டர் இப்படி சொன்னார்.

பார்த்தியாப்பா.... நீ முழுங்கின குதிரை.   வாய் வழியாவே எடுத்துடேன்.   இனிமே உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.  நீ போகலம்னார்.

குதிரையை பார்த்தவன் மறுபடியும்.... ஐயோ ஐயோ வயறு வலிக்குது என்னை காப்பாத்துங்க டாக்டர்னு கத்தினான்.

அதான் குதிரையை எடுத்தாச்சே அப்பறம் என்ன பிரச்சனை.

ஐயோ... நான் முழுங்கினது வெள்ளை குதிரை.  நீங்க எடுத்து சிகப்பு குதிரை... அப்படின்னான்.

இப்போ டாக்டர்... மயக்கம் போட்டு விழுந்துடார். 







அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு  கிருஷ்ணன் கோவில்.

அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க.  ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான்.  இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும்,  கோவில்ல இருக்காங்க.  நமக்கு நல்ல வேட்டைதான்.  வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட,  உருப்படியா ஒன்னும் இல்லை.  என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா  பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே.  அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு.  அவன் கழுத்துல  தங்க மாலை போட்டு இருப்பான்.  இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.

காதுல வைர கடுக்கன்.  கையில தங்க காப்பு.  கால்ல முத்து பதிச்ச தண்டை.  அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும்.

இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.   இதை கேட்டான் திருடன்.  அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது.  அவனுக்கு தெரிஞ்சது  எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.

அடடா...  அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார்.  அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு,  நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான்.  அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.

கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு,  மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.

ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார்.  எங்கே இருப்பான்.  உடனே சொல்லு.  இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு.  கடவுளே இது என்ன சோதனை.   நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன்.  இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.

அப்படின்னு யோசித்தவர்...  அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை,  அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான்.  போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான்.  கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.

அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான்.  பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.

உண்மைதான்...  அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு.  அதை எனக்கு தருவியான்னு கேட்டான்.  கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.

நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு.  திருடன் போய் சோலைல பார்த்திருப்பான்.  கண்ணன் வந்திருக்க மாட்டான்.  அந்த கோபத்தோட வருவான்.  இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது,  திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி...  ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு.  என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி  சின்ன கண்ணன் வந்தான்.  என்ன அழகு.  என்ன சிரிப்பு,  அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான்.   இதோ அந்த நகை எல்லாம் இருக்கு.  உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை.  என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி.   உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான்.  வாங்க கட்டுறேன்னு சொன்னான்.

நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார்.  சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை.  சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை...  என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன்  கண்ணுக்கு தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது.  உடனே அவன் கையை பிடிச்சார்.  நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன்.  அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது.  இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய்.  அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது.  ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும்,  நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.  நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை.  நான் இருக்கேன் என்று நம்பினான்.  நான் வருவேன் என்று நம்பினான்.  அதனால் வந்தேன்.  கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான். 

Wednesday 25 January 2012

காத்தவராயன் கதை / KAATHAVARAYAN

காத்தவராயன்.

சிவனின் பற்றி எரியும் நெற்றி கண்ணில் இருந்து தோன்றியவன்.  அந்த வகையில் மகன்.

புராண காலத்தில் ஒரு நாள் பொழுது புலர்ந்தது.   ஆதித்தியன் தன் சேவையை ஆரம்பித்தான். 

கைலாயம்.... !

சிவனின் வீடு. 

அங்கே..... சக்தி சிவன் இருவருக்கும்,  வழக்கம்போல்  வாய் தகராறு.  காரணம் இருப்பதால்தான் கலகம் வருகிறது என்றாலும்,  அன்றைய காலகட்டத்தில் மூன்று லோகத்திலும் அதிகம் முனுமுனுக்கப்பட்டது இவர்கள் குடும்ப சச்சரவுதான். 

கண்ணில் தோன்றிய காத்தவராயனுக்கு கண்ணீர் வராத குறைதான்.  உண்மையில் காத்தவராயன் அம்மா பிள்ளை.

தாய்க்கு துணையாக தந்தையை எதிர்த்தான். 

தாங்குவாரா சிவன். 

தாங்கவில்லை.  பிள்ளை பாசத்தால் ஏங்கவும் இல்லை. எதிர்த்தார்.  பொதுவாக ஆரம்பத்தின் அடுத்த பக்கம் முடிவு தானே.  வாய் சொல்லில் இருந்த  சண்டை,  கடைசியில் சிவனின் காலால் பூலோகத்திற்கு தள்ள பட்டாள் சக்தி. 

அவ்வளவுதான்.... நெற்றி கண் இல்லதாத காத்தவராயன் நெருப்பாக மாறினான். 

அப்பா சிவனுக்கு இப்போது ஆத்திரம் வரவில்லை.  பிள்ளை மனம் அறிந்து பிழையை பொறுத்தார். 

மகனே.... காத்தவராயா.... உன் தாய் பாசத்திருக்கு தக்க பரிசு என்ன தெரியுமா?  இனி... சக்தி எத்தனை அவதார பிறவி எடுத்தாலும்,  சத்தியோடு நீயும் அவதரிப்பாய் என்று அருள் பொழிந்தார். 

இது காத்தவராயனை பற்றிய சிறு குறிப்பு.   சரி..... சக்தி பூலோகத்திருக்கு வரப்போகிறார்.  அப்படியானால் பெற்ற வரத்தின் பிரகாரம் தாயாரும் வர வேண்டுமே. 

வந்தார்.  மாரியம்மன் என்ற பெயரில்.  உடன் அவருக்கு மகனாக காத்தவராயனும் பிறந்து வளர்ந்தார். 

வளர்ந்து வாலிபம் எட்டிய காத்தவராயனுக்கு ஒரு காதல் கதை இருக்கிறது தெரியுமா?

ஆரியமாலா...!

அந்த்தன குலத்தில் உதித்தவள்.  பூலோக தேவதை என்றால் புரியும் உங்களுக்கு.   அழகின் இருப்பிடம்.  சீரும் சிறப்புமாக, செல்வ செழிப்புமாக வளர்க்கப்பட்ட ஆரியமாலாவிருக்கு காத்தவராயன்தான் கணவன் என்பது காலத்தின் கணக்கு. 

அழகுக்கு மறுபெயர் ஆபத்து என்பது,  ஆரியமாலாவிருக்கு பொருந்தும்.  ஆபத்து அவளிடம் இல்லை.  அவள் பிறந்த போதே உடம் பிறந்த சகோதரம் கழுகு மரம். 

இது இப்படியே இருக்கட்டும். 

ஒருநாள்..... ஆரியமாலாவை பார்த்தான் காத்தவராயன்.  தன் வாழ்நாளில் இப்படி ஒரு பேரழகியை பார்த்திராத அவனுக்கு கண்டதும் காதல் வந்தது. 

காவிய சிலம்பாய் நான் இருந்தால் - உன்
கால்களில்லாவது தவழ்ந்திருப்பேன்

தென்றல் காற்றாய் நானிருந்தால் - உன்
சேலையில்லாவது ஒளிந்திருப்பேன்

மலர் கொடியே அதைநான் இழந்து விட்டேன்
மனிதனாக அல்லவா பிறந்து விட்டேன்

என்று வைரமுத்து எழுதினாரே,  அந்த மாதிரி,  ஆரியமாலாவின் அழகை பார்த்து கவிதை எழுதினானோ என்னவோ  காதல் கொண்டான். 

ஆனால் காத்தவராயன் யார்?  நாவற்பழத்திலேயும்,  நல்காயாம் பூவிலேயும்,  காக கருப்புலேயும்,  கரும் கருப்பு. 

ஆனால்.... ஆரியமாலாவோ அந்த்தன குலத்து பெண்.  செதுக்கி வைத்த செப்பு சிலை மாதிரி இருப்பாள்.   காதலை ஏற்க ஆரியமாலாவிற்கே விருப்பம் இல்லை.

அம்மாவிடம் சொல்லி எப்படியாவது ஆரியமாலவை திருமணம் செய்துவிட வேண்டும் என்பது காத்தவராயனின் திட்டம்.

திட்டம் என்னவோ சரிதான்.  மாரியம்மாவுக்கோ மனது ஒப்பவில்லை.   இருக்காதா பின்னே.  ஆரியமாலாவோ ஆபத்தின் மறுவடிவம் என்பது புரியும் அதனால் மறுத்தாள்.

மகனே.... காத்தவராயா....  ஆரியமாலா அந்தன குலத்து பெண்.  நமக்கு சரிப்பட்டு வராது.   அதோடு அவள் பிறந்த போது,  ஒரு கழுகு மரமும் பிறந்திருக்கிறது.

அவளை மணக்க போகிறவன் அந்த மரத்தில் தொங்க வேண்டும் என்பது விதி  அமைப்பு.  அந்த மாதிரி ஒரு கோலத்தில் உன்னை பார்க்க எனக்கு சம்மதம் இல்லை என்று மறுத்தாள்.

ஆனால் விடவில்லை காத்தவராயன்.  தன் பால்ய தோழன் தொட்டிகட்டி சின்னானோடு சேர்ந்து,  ஆரியமாலா தூங்கும் போது திருட்டு தாலி கட்டினான்.

கண் விழித்த ஆரியமாலாவிற்கு அதிர்ச்சி.  கழுத்தில் தாலி.  கழட்டி பார்த்தாள்,  கழற்ட முடியவில்லை.  அறுக்க பார்த்தாள் அறுக்க முடியவில்லை.  எல்லாம் விதி என்று அமைதியானாள்.

தாலி கட்டிய செய்தி தாயாருக்கு போனதும் தவித்து போனாள்.  செய்யத்தகாத காரியத்தை செய்துவிட்டு வந்திருக்கிறாய்.  இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது.  உன் பெரியம்மாவிடம் போய் சொல்லி,  ஆக வேண்டியதை போய் பார்.

யார் அந்த பெரியம்மா?

காளியம்மா...!

காத்தவராயனும் காளியம்மன் இருப்பிடம் நோக்கி போனனான்.  காளியம்மனுக்கு என்று பெரிய கோட்டையே இருந்தது.   அந்த கோட்டையை  சுற்றிலும் காவல் தெய்வங்கள் இருந்தது.  கோட்டையை பூதகணங்கள் வேறு காவல் காத்தது.

கோட்டையை நெருங்கினான்.  வாயிற்கதவு பூட்டபட்டிருந்தது.  கதவை திறந்து உள்ளே போக முயன்றான்.  பூதகணங்கள் தடுத்தது.

யாரடா நீ?  எங்கள் கட்டு கவலை மீறி உள்ளே போக முயல்கிறாயே.... என்ன விஷயம்?

என் அம்மாவை பார்க்க வேண்டும்.

இப்போது முடியாது.  அவர்கள் நிஷ்டையி ல்  இருக்கிரார்கள்.  போ.... போய்விடு.

முடியாது.  அவசரமான காரியம்.  அவசியம் பார்க்க வேண்டும்.

சொன்னால் சொன்னதுதான்.

காதல் மயக்கத்தில் இருந்த காத்தவராயனுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.  காவல் காத்த பூதங்களை அடித்து நொறுக்கினான்.  தலை வேறு,  கை கால் வேறாக பிய்த்து எறிந்தான்.

முடிந்த வரை போராடிய பூதங்கள் அபயம்...அபயம்... என்று அலறியபடி காளியம்மனை நோக்கி ஓடியது.

தவ கோலத்தில் இருந்த தாயார் கண் விழித்தார்.  என்ன நடந்தது அமைதியாக சொல்லுங்கள்.

ஒருவன் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்றான்.  இப்போது முடியாது என்றோம்.  அதற்காக எங்களை போட்டு பந்தாடி விட்டான்.

அப்படியா.... அவனை நான் ஒரு கை பார்கிறேன் என்ற காளியம்மன் தன கையில் இருந்த சக்கரத்தை வீசியது.

பாய்ந்து வந்த சக்கரத்தை மந்திரம் ஓதி... சாந்த்த படுத்தி பிடித்து போட்டாம் காத்தவராயன்.

என்னடா இது போன சக்கரஆயுதத்தை இன்னும் காணவில்லை என்று யோசித்த  காளி, அடுத்து தன், கோடரியை அனுப்பியது.

வந்தது கோடரி..  சக்கரத்திருக்கு ஏற்பட்ட கதிதான் கோடரிக்கும்.  அடுத்து வால்,  அடுத்து சங்கு என்று தன் கை ஆயுதங்களை எல்லாம் அனுப்பியது காளி.

எல்லாம் போனதே தவிர திரும்பி வரவே இல்லை.  அவவளவுதான் காளியம்மனுக்கு கண் மண் தெரியாத கோவம்.

யாரடா நீ?

என் கோட்டைக்கே வந்து என்னிடமே மோதுகிறாயா....உன்னை என்ன செய்கிறேன் பார்...என்று ஆவேசமாக எழுந்த காளி,  ஆவென்று வாயை பிளந்தபடி,  வானுக்கும் பூமிக்குமாய் பறந்து வந்தது.

பார்த்தான் காத்தவராயன்.   பதறினான்.  ஐயையோ ..... பெரியம்மா கடும் கோவத்தில் வருகிறது.  இப்போது நம்மை பார்த்தால் மகன் என்று கூட பார்க்காது.  கடித்து குதறிவிடும்.  எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று யோசித்தான்.

அடுத்த கணம் அந்த யோசனை வந்தது. சின்ன குழந்தையாக உருமாறினான்.  வாயை பிளந்து வந்த காளி வாய் வழியாக உள்ளே நுழைந்து வைற்றுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

ஆவேசமாக வந்த காளிக்கு யாரும் கண்ணில் படாததால் கோவம் தணிந்தது.  எவனோ பொடிப்பயல்,  பயந்து ஓடிவிட்டான் என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டது.

சாந்தமாக போய் தன் இடத்தில் அமர்ந்து கொண்டது.  அப்போதுதான் காத்தவராயன் அந்த காரியத்தை செய்தான்.

வைற்றுக்குள் இருந்தவன்... காளியின் ஒரு பக்க குடலை பிடித்து கொண்டு ஓங்கி உதைத்தான்.

அய்யய்யோ என்று அலறியது காளி.  என்ன ஆனது வைற்றுக்கு என்று யோசிப்பதற்குள்,  மறு பக்க குடலை பிடித்து இழுத்து உதைத்தான்.

இப்படி மாறி மாறி உதைத்ததும் வலி பொறுக்காத காளி, தன் ஞான பார்வையால் என்ன நடக்கிறது என்று பார்த்தது.

உள்ளே காத்தவராயன்.

அடேய்.... நான் பெத்த மகனே காத்தவராயா.... என்னடா செய்கிறாய்.

எனக்கு ஒரு வரம் வேண்டும்.

அதற்க்கு நேரில் வர வேண்டியதுதானே.   வைற்றுக்குள் போய் என்ன செய்கிறாய்.

நேரில் வந்தால் சம்மதிக்க மாட்டாய் என்று தெரியும்,  அதனால்தான் இப்படி வந்தேன்.

சரி என்ன வரம்.

நான் ஆரியமாலாவை திருமணம் செய்ய வேண்டும்.

என்னது ஆரியமாலாவா....முடியாது.

மீண்டும் ஒரு பக்க குடலை பிடித்து இழுத்து உதைத்தான்.  வலி பொறுக்காத காளி மீண்டும் அலறியது.

அடேய்... ஏன்டா என் பிராணனை வாங்குறே.  அதை தவிர வேறு என்ன வரம் வேண்டும் கேள்.

முடியாது.

சரி வெளியில் வா.... வரம் தருகிறேன்.

முடியாது.  இப்போதே சொல்.  நான் வெளியில் வந்தால் என்னை கொன்றே போட்டு விடுவாய்.

நான் பெற்ற மகனடா நீ... வரம் தருகிறேன் வா.

இப்போதே சொல்... வருகிறேன்.

சரி சம்மதம்.

இப்படி போராட்டம் நடத்திய பின் காத்தவராயன் வெளியே வந்தான்.  காளி தந்த வரத்தின் படி திருமணம் நடந்தது.   ஆரியமாலா பிறப்பின் ரகசியபடி காத்தவராயன் கழுகு மரத்தில் தொங்கினான்.  இறுதியில் சிவனின் அருளால் காப்பாற்ற பட்டான்.

இன்று பலருக்கு காவல் தெய்வமாக,  குல தெய்வமாக இருக்கும் காத்தவராயன் கதை இது.  ஒவ்வொரு மாரியம்மன் கோவிலிலும் வாசலில் காவல் தெய்வமாக இருக்கிறார்.


Tuesday 24 January 2012

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?



திருமணம்..........!

ஆயிரம் காலத்து பயிறாம்.  அது இரண்டு இதயங்கள் ஒன்றிணையும் ஒப்பந்த விழா.  இதற்கு பின் தான்,  இனிய இல்லறம் பிறக்க வேண்டும்.  தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும்.  

வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும்.  அது வாழையடி வாழையாக வளர வேண்டும்.  இன்னார் பையன்,  இன்னாரது குடும்பம்,  இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க,  இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.

இந்த திருமணத்தை நடத்திக்கொள்ள ஒரு ஆணும், பெண்ணும் அவசியம்.  அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை.  காரணம்... கால நேரம் ஒத்துழைக்க வேண்டும்.  

ஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும்.  இல்லை என்றால் திருமண யோகம் வராது.  

சரிங்க...  திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது.  பொண்ணு மாப்பிள்ளை ரெடி.  திருமணம் செய்து விடலாமா?

முடியாது.... குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டும்.  அதை பற்றி வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம்.  சனி பகவானின் சஞ்சார நிலைகள் எப்படி என்பதுதான் முக்கிய கேள்வி.

பொதுவா.... ஜோதிடர்கள் குத்து மதிப்பா போடுற குண்டு ஒன்னு இருக்கு.  தம்பி.... உங்களுக்கு ஏழரைசனி நடக்குது.   

ஏழரைசனின்னா என்ன?  பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம்.  கையில மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு.  கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு. வீடு கட்டு.

அப்படி செய்துட்டா.... சனிபகவான் ஒன்னும் செய்யமாட்டார்.  பொழைச்சு போன்னு விட்டுடுவார்.   அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல பணத்தை போட்டா,  விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க வைப்பார்.  கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.

சரிங்க..... இந்த வாதம் சரியா?

சரிதான்.  ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது.  

எப்படி?

ஏழரைசனி வாழும் காலத்தில மூன்று முறை வரும்.  நம் தாத்தா  காலத்தில நாலு முறை வந்துச்சு.  அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க.  இப்போ நாம சாபிடுற சாப்பாடு,  சுற்றுசூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு முடிவுக்கு வருகிறது ஆயுள்.

முதல் சுற்று மங்கு சனி,  இரண்டாவது சுற்று பொங்கு சனி,  முன்றாவது சுற்று மரணசனி.   

இருக்கட்டும்.... ஏழரைசனி காலத்தில் திருமணம் செய்யலாமா?

எப்போதுமே..... அல்லல் படுத்தி ஆனந்த படுகிற சனி.   கேள்வி கேட்டவரை பதில் சொல்ல வைக்கிற சனி.  அடுத்தவங்க கல்யாணத்தை பார்த்து ஆனந்த பட வைக்கிற சனி,   மாப்பிள்ளையாக மணபந்தளில் அமர வேண்டியவரை,  மாப்பிள்ளை தோழனாக நிற்க வைக்கும் சனி,   கல்யாண யோகத்தை தருவாரா?

தருவார் என்பது உண்மைதான்.   அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.   

ஏழரைசனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும்.  முதல் சுற்றில் திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம்.  ஏழரை சனி துவக்கமான விரைய சனி நடக்கும் பொது,  திருமணம் செய்யக்கூடாது.  அடுத்த  பெயர்ச்சியான ஜென்ம சனி காலத்தில் திருமணம் செய்யலாம்.  

அது மட்டும் அல்ல.  எந்த சுற்று சனியாக இருந்தாலும்,  சனி பகவான் ராசிக்கு  12 இல் விரைய சனியாக இருக்கும் போது,  திருமணம் மட்டும் செய்யக்கூடாது.

செய்தால்?

திருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும்.  கணவன் மனைவி ஒற்றுமை குறையும்.  இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்து கொள்ளும்.  குழந்தை பாக்கியம்  இல்லாமல் போகலாம்.  மாங்கல்ய பலம் குறையலாம்.  மொத்தத்தில்  திருமண வாழ்க்கையில் சந்தோசம் நீங்கி,  சந்தேகம் அதிகரிக்கும்.   

அதனால்... விரைய சனி நடக்கும் காலத்தில் திருமணம் செய்யக்கூடாது. 


Saturday 21 January 2012

செக்ஸ் வக்கிரம்/ SEX VAKKIRAM

ஐயா வணக்கம்.

வணக்கம் சொல்லுங்க.

என்னோட ஜாதகம் பார்க்கணும், அமொண்ட் எவ்வளவு சார்?

300 ரூபாய்.

ஒரே கேள்வி... எஸ் ஆர் நோ பதில்தான்.

ஓகே அனுப்புங்க.

அனுப்பினார்.  வந்தது ஜாதகம்.  பெயர் முகேஷ்.  வயது முப்பது.  ஊர் சென்னை.

கேள்வி இதுதான்.

மாமியாரை அடையும் பாக்கியம் உண்டா?

பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன்.  கேள்வியா இது.  கேவலம். 

நம்மை சுற்றி உள்ள சமுகத்தில் எத்தனை விதமான மனிதர்கள்.  விலங்குகள்
மட்டும் தான்,  பாகுபாடில்லாமல் பாலின உறவு வைத்து கொள்கிறது.

அவற்றின்  செக்ஸ் தேவை என்பது,    இனவிருத்தி என்பதோடு நின்றுவிடும்.

ஆனால் மனிதர்கள்?

இன்று எத்தனையோ கேள்விபடுகிறோம். கருப்பு உறவுகளை, கள்ள தொடர்புகளை பேப்பர்ல பார்க்கிறோம்.  மீடியாக்களில் வருகிறது.  இவை எல்லாம் வயசு கோளாறு என்பதா?  வக்கிர புத்தியா?

சந்தேகம் இல்லாமல் வக்கிரம்தான்.  பொதுவா வக்கிரம் என்பதே இயல்பான  என்பதை தாண்டிய ரகம்.

ஒரு குழந்தை தவறு செய்கிறது.  ஏய்... இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்வது ஒரு ரகம்.  அது வலி தாங்குற அளவுக்கு கையால் சிறு தட்டு தட்டுறது இன்னொரு ரகம்.  ஆனா கொல்லி கட்டையை எடுத்துகிட்டு சூடு போட்டா,  அதுதான் வக்கிர புத்தி.

இங்கே கேள்வி கேட்ட முகேஷ்சும் வக்கிர புத்தி ஆத்மாதான். 

செக்ஸ் என்பது ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல.  பால்யம் கடந்து பருவம் எய்தும் போது எதிர் பாலினினத்தை பார்த்து ஏற்ப்படும் ஈர்ப்புதான் காதல்.  அதன் அடுத்த நிலை காமம்.

இது இயற்கை.  வரும்.... வரணும்..... வரலேன்னா அவசியம் ஆராயணும்.

பொதுவா சொல்லனும்னா... ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலின உறுப்புக்கள் என்பது,  கழிவு நீர் பாதை. அதனுடைய அத்யாவசிய பணியே அதுதான்.  அதனுடைய உபவேலை தான் கலவியல் தொடர்பு.

இந்த கலவியளை காலம் காலமாக சமூகம் அங்கீகரித்தே வந்திருக்கிறது.

காரணம்.... உயிரின தோற்றம், சந்தத்தி விருத்தி, குழந்தை பேறு, இதற்காக கலவியல் என்பது கட்டாயமே.   புராண காலம் தொட்டே கலவியலை நேரடியாகவும், மறைமுகமாகவும் வலியுறத்த படுகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான், கோவில் கோபுரங்களில் ஆண் பெண் கூடுகிற மாதிரியான மன்மத சிற்ப்பங்கள் மறைக்காமல் வைக்கபட்டன.

இன்னும் சொல்லப்போனால் இந்து மத கடவுள்கள் பெரும் பகுதி, காதலிப்பது போலவும்,  கல்யாணம் செய்து கொண்டது போலவும்,  பிள்ளை பெற்று கொண்டதாகவும் கதை கலங்கள் உள்ளன.

இதோ இந்த கட்டுரையை எழுதி கொண்டிருக்கும் நானும்,  அதை படித்து கொண்டிருக்கும் நீங்களும் கூட,  கலவியல் வழியாக கண்டெடுக்க பட்டவர்கள்தான்.

ஆனால் இது அங்கீகரிக்கப்பட்ட உறவுகள் வழியாக வருவது.  சமுக கட்டமைப்பில்  சில விதி முறைகள் இருக்கிறது. பார்க்கிற நபரை எல்லாம் பாலின பார்வை பார்க்க முடியாது.

பெண்தான்.... தாய்க்கும் தாரத்திர்க்கும் வித்தியாசம் உண்டு.  தங்கைக்கும் தாரத்திருக்கும்  வித்தியாசம் உண்டு.  அந்த வேறுபாடு  தெரியாதவன் மனிதனாக இருக்க முடியாது.  மிருகம்தான்.

குறிப்பிட்ட நேரம் வந்தா வயறு பசிக்குது.  அதை போலவே குறுப்பிட்ட வயதை எட்டும் பொது உடம்பு பசிக்குது.   வயற்று பசிக்கு தீனி போடுவது மாதிரி, உடல் பசிக்கும் தீனி தேவை.  ஆனால் இதற்கு ஒரு எல்லை உண்டு.

தாய்க்கு சமமாக பார்க்கப்படவேண்டிய மாமியார், வெறும் போக பொருளாக இவனுக்கு தெரிகிறது என்றால், அவன் வளர்ந்த விதம் அப்படி.

ஒருவன் வண்டியில் வேகமாக போகிறான்.  அதை பார்த்ததும் எங்காவாது விழுந்து செத்தாதான் புத்தி வரும் என்று முகம் தெரியாத யாரையாவது பார்த்து சொல்வது கூட,  வக்கிரம்தான்.

ஆனால் இந்த செக்ஸ் வக்கிரங்களை அங்கீகரிக்க முடியாது.  இன்னும் சிலருக்கு மனதுக்குள் உறங்கி கொண்டிருக்கும் வக்கரம், பப்ளிக் பாத்ரூம் போனதும் பாடாய் படுத்தும்.

பெற்ற பிள்ளிக்கு ABCD கூட எழுதி காட்டாத நபர்கள், பென்சில் பேனாவால் கழிப்பிட சுவர்களில் படம் வரைந்து பாகம் குறித்து விட்டு போவார்கள்.  வர்ற ஆளுக்களுக்கு வாழ்க்கைக்கு பயன்ப்படும்மே அதற்காக.

இந்நிலை மாற வேண்டும்.  மாறுமா? 

kathal kavithai

http://jothidasudaroli.blogspot.com/

Friday 20 January 2012

வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொண்டால் வாலிபம் பறி போகுமா?

காதலுக்கு கண்ணில்லையாம்.  

காதலுக்கு மட்டுமா கண்ணில்லை?  காமத்திருக்கும் கூட கண்ணில்லை.  எத்தனையோ பேருடைய வாழ்க்கை வழிமாறி போனதற்கு,  காமம் ஒரு காரணம்.  

காமத்திருக்கு கண் இருந்திருந்தால்,  சர்வ வல்லமை பெற்ற ராவணன், சர்வேஸ்வர்ணனுக்கு இனையான ராவணன், சீதை அழகில் மயங்கி, செல்வாக்கிழந்து,  சிம்மாசம் இழந்து, கடைசியில் தன் உயிரையும் இழக்கும் அவல நிலை வந்திருக்குமா?

ராவணன் வீணை வாசித்தால் பரமசிவனே சொக்கிபோவாராம்.  பிறப்பில் இல்லை என்றாலும்,  மறுக்க முடியாத பிராமனனாம் ராவணன்.  வேதம் அறிந்த வகையில்.  

ராவணன் ராமனால் வீழ்த்த பட்டு போர்க்களத்தில் மலையென வீழ்ந்து கிடக்கிறான்.  தகவல்  அறிந்த ராவணனின் மனைவி மண்டோதரி போர்க்களத்திருக்கு ஓடி வருகிறாள்.   

ராவணனை பார்த்து கதறுகிறாள்.  தன்னை அடக்கி தவம் செய்த நீங்கள் சீதையை பார்த்து சீரழிந்து விட்டீர்களே.   என்னிடம் இல்லாத எது சீதையிடம் இருக்கிறது.  அல்லது என்னை விட சீதை அழகா? என்று ஓலமிட்டு அழுதாளாம் மண்டோதரி. 

இங்கே ராவணன் இறப்புக்கு காமம் தான் காரணம்.  கொலையில் முடிந்த காமம். தற்கொலையில் முடிந்த காமம் என்று பல கதைகள் உண்டு.  

கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரி வப்பாட்டி வேணம்னு சொன்னது கூட காமம் தான் காரணம். 

வைற்றுபசி மாதிரி,  உடல் பசியும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.  ஓரறிவு படைத்த உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை இதில் அடக்கம்.  மறுக்கவில்லை. 

 பொன்னி நதி அவ்வளவு போன ரத்தம் போன பின்பு 
கன்னியரை யேசுதடா உள்ளம் - அது 
காலிடறி யானை விழும் பள்ளம்.

சிற்றின்ப உலகில் ஊறி திளைத்த அனுபவ ஞானி கண்ணதாசன் சொன்ன வைர வரிகள். 

இந்த கட்டுரையின்  நோக்கம் வேறு.   இல்லங்கள் தோறும் நடக்கும் இதற்கு, ஒரு வரைமுறை, ஒரு கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான்.  

கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான் என்பது,   கேட்க ரசனையா இருக்கும்.  ஆனா நடைமுறைக்கு சாத்தியமா? அது தான் கேள்வி. இல்லற ஒப்பந்தத்தில் இணையும், ஆணுக்கும்  பெண்ணுக்கும் வயது வித்தியாசம்  கண்டிப்பாக வேண்டும்.  

அதுவும் வயதில் பெண் இளையவளாகவும்,  ஆண் முத்தவனாகவும் இருக்க வேண்டும். 

ஏன்?  

வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொண்டால் வாலிபம் பறி போகும். அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த நடைமுறையை கொண்டு வந்தார்கள்.  

ஆனால் காமத்திற்குதான் கண்ணில்லையே? 

சிக்கினா சிட்டையை போடுறது, சந்தர்ப்பம் கிடைச்சா சங்கூதுறது சிலருக்கு சகசம்.  அதனால் வரும் எதிர் விளைவுகள் என்ன?

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது பெண்ணின் உடலில் இருந்து  சுறேனியம் என்ற திரவம் உற்பத்தி ஆகிறது.  ஆணின் உடலில் சுக்கிலியம் உற்பத்தி ஆகிறது.  

இந்த திரவங்கள் மாறி மாறி ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் பாய்கிறது.  வயதில் மூத்த பெண்ணுடன் உறவு கொள்ளும் போது,  பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் சுறேனியம் அந்த ஆணுக்குள் செல்லும் போது,  வாலிப தன்மை குறைந்து வயோதிக தன்மை அதிகமாகிறது.  

வயதில் மூத்த பெண்ணுடன் தொடர்ந்து உறவு கொள்ளும் போது,  முப்பது வயது ஆடவன்,  பத்து வயது கூடியமாதிரி தோற்றம் பெறுகிறான்.  நாற்பது வயது ஆடவன் நரைத்து,  தோல் சுருங்கி கிட்ட தட்ட முதுமை தன்மையை அடைகிறான்.  

அப்புறம் மூலிகை மாத்திரை, வயக்கிரா என்று எதையாவது நாட வேண்டிய கட்டாயம் வந்து விடும்.

அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகும்.  அதனால் சின்ன வியாதி கூட பெரிய அளவில் பாதிக்கும்.  அதனால் இந்த விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  

இல்லைனா.... சொந்த செலவிலேயே சூனியம் வச்ச கதைதான் நடக்கும்.

Wednesday 18 January 2012

அப்படி போடு அருவாளை.

படிச்சவங்க சொன்னா பொன்மொழி.  படிக்காத பாமர மக்கள் சொன்னா அது பழமொழி. 

திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார்.  ஒன்னே முக்கால் வரியிலே உலகத்தை அதில் அடக்கினார்.  நம்ம தாத்தா, கொள்ளு தாத்தாக்கள் எழுதின திருக்குறள் தான் இப்போ நீங்க படிக்க போறது. 

சிரிக்க மட்டும் இல்ல, சிந்திக்கவும் வச்சவை.  

  1. சிங்கம் இல்லாத காட்டுல நரி சிம்மாசனம் ஏறுமாம்.
  2. கல்யாண விட்டிலேயே கட்டி கிட்டு அழுரவ,  எழவு வீட்டில் என்ன செய்ய மாட்டா.
  3. கோழி கண்ணுக்கு பூனை கூட பூதம் மாதிரிதான் தெரியும்.
  4. பணம் பேச ஆரம்பித்தால் உண்மை ஊமை ஆயிடும். 
  5. என் அகமுடையான் அடிச்சதற்காக  அழலை.  என் சக்காளத்தி சிரிப்பாலேன்னு  அழுறேன்.
  6. புவழகியாம், பொர்கொடியாம், போகிற இடமெல்லாம் செருப்படியாம்.
  7. பறக்கிற குருவிக்கு கொம்பிருகிற இடம் தெரியாது.  பரதேசிக்கு தங்கும் இடம் தெரியாது.
  8. தேரோட போச்சு திருவிழா.  தாயோட போச்சு பிறந்தகம்.
  9. வித்தார கள்ளி விறகொடிக்க போனாளாம்.  கற்றாழை முள்ளு கொத்தோட  குத்துச்சாம். 
  10. சீலை இல்லைன்னு சின்னம்மா வீட்டுக்கு போனாளாம். ஈச்சம் பாயை கட்டிக்கிட்டு எதிரே வந்து  நின்னாளாம். 
  11. கணக்கபிள்ளை பொண்டாட்டி கடுக்கன் போட்டானு,  காரியக்காரன் பொண்டாட்டி காதை அறுத்து கொண்டாளாம்.
  12. பொண்ணின் குணமறியேன்.  சம்மந்தி வாயயரியேன்.
  13. பாம்பு பசியை நினைக்கும்.  தேரை விதியை நினைக்கும்.
  14. செத்த பிணத்திற்கு கண் எதற்கு.  சிவா சிவா என்பவனுக்கு பெண் ஏத்தற்கு.
  15. அகப்பை பிடித்தவன் நம்மாளா இருந்தா, முதல் பந்தி என்ன, கடைசி பந்தி என்ன.
  16. அக்கா இருக்கிறவரைதான் மச்சான் உறவு.
  17. அன்காடிகாரியை சங்கீதம் பாட சொன்னால், வெங்காயம் கரிவேப்பிலைன்னு தான் பாடுவா.
  18. அஞ்சும் நாளும் சரியாய் இருந்தா, அறியாத பொண்ணும் கறி சமைப்பாளாம்.
  19. அது அதுக்கு ஒரு கவலை.  ஐயாவிற்கு பல கவலை.
  20. அமாவாசை கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி.
  21. ஐயாதுரைக்கு கல்யாணம். அவரவர் வீட்டிலே சாப்பாடு. 
  22. அம்மா பாக்கியம் சம்பா விளைச்சது. பாவி பாக்கியம் பதரா விளைச்சாது.
  23. அரிசி கொடுத்து அக்கா வீட்டிலே என்ன சாப்பாடு.
  24. அருமை தெரியாதவனிடம் போனால் பெருமை எல்லாம் குறைச்சு போய்டும். 
  25. அன்பில்லா மாமிக்கு கும்பிடுறது கூட குற்றம்தான்.
  26. அன்ன நடை நடக்க போய்,  காகம் தன் நடையை மறந்துச்சாம்.
  27. ஆல் பழுத்தால் அங்கே கிளி.  அரசு பழுத்தால் இங்கே கிளி.
  28. ஆத்தோட போனாலும் போவேன்.  தெப்ப காரனுக்கு ஒரு காசு கொடுக்க மாட்டேன்.
  29. இடைச்சன் பிள்ளைகாரிக்கு, சளைச்சன் பிள்ளைக்காரி பிரசவம் பார்த்தாளாம். 
  30. உயிரோடு ஒரு முத்தம் தராதவ, செத்த பிறகா உடன் கட்டை எறபோரா.
  31. எறியுறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  32. எறும்புக்கு கொட்டாங்கச்சி தண்ணீர் சமுத்திரம்தான்.
  33. என்னை கெடுத்தது நரை.   என் மகளை கெடுத்து அழகு.
  34. என்னைக்கும் போடாத மகாராசி இன்னிக்கும் போடலை.  தினம் போடுற சண்டாளிக்கு என்ன வந்துச்சு. 
  35. ஏற முடியாத மரத்துல எண்ணாயிரம் மாங்கா. 
  36. ஐயனார் கோவில்லே செங்கல் கூட தெய்வம்தான்.
  37. கருப்பட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துகிட்டு போச்சு.
  38. கள்ளன் செய்த சகாயம் காதருக்காம கடுக்கனை கழ்டியதுதான்.
  39. கறக்கிறது ஆழாக்கு,  உதைக்கிறது பல்லு போக.
  40. கன்று குட்டி கிட்டவும்,  கடன் காரன் கிட்டவும் இருக்க முடியாது. 
  41. காய்ந்து கெடுத்தது வெயில்.  பெய்து கெடுத்தது மழை.
  42. கிள்ளியெடுக்க சதை இல்லைனாலும், பேரு என்னவோ தொந்தியாபிள்ளையாம்.
  43. கிள்ளை பழுக்குமாம்.  கிளி வந்து கொஞ்சுமாம். 
  44. குட்டி குலைத்து நாய் தலையில் வைத்தது போல்.
  45. குருடனும் செவிடனும் கூத்து  பார்க்க போய்,  குருடன் கூத்தை பழிச்சானாம், செவிடன் பாட்டை பழிச்சானாம். 
  46. கூத்தாடிக்கு கிழே கண்ணு.  கூலிக்காரனுக்கு மேலே கண்ணு.
  47. தனக்குன்னு ஒருத்தி இருந்தால் தலை மாட்டில் இருந்து அழுவா.
  48. பிள்ளை பெத்தவளுக்கு தாலாட்டும், புருஷன் செத்தவளுக்கு அழுகையும் தான் வரும்.
  49. பசிக்காம இருக்க மருந்து தாரேன்.  பழைய சோறு இருந்தா போடு என்றானாம். 
  50. பாம்பை முட்டையல கொல்லனும்.  புலியை குட்டில கொல்லனும்.

பிறக்க போறது ஆணா பொண்ணா! தெரிஞ்சுகிறது எப்படி?

அடியே சுந்தரி.... சில சின்னசிறுசுகள் பிறக்க போறது ஆணா, பெண்ணான்னு தெரிஞ்சுக்க அல்லாடுதுங்க.  டாக்டர் கிட்டே போய், ஸ்கேன் பண்ணி பார்க்கலாமான்னு நினைக்கிறாங்க. 

கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.  அவங்களோட நடவடிக்கையே அடையாளம் காட்டும்.  உடம்பே காட்டி கொடுத்துடும். 

சொல்லவா?

ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கா? பொறக்க போறது ஆம்பிளை பிள்ளையா இருந்தால், வலது மார்பகம் இடது மார்பகத்தை விட, பருத்தும் விம்மியும் இருக்கும். 

அதோட.... ஒன்பாத்ரும் போகும்போது, சிறுநீர் பலவண்ணமா போற மாதிரி கலரா தெரியும். 

கரு வளருது இல்லையா? அது வலது பக்கம் இருக்கிற மாதிரி தோன்றினால், அது ஆம்பிளை பிள்ளைதான். 

அப்புறம்.... உட்க்காரும் போதும், எழுந்திரிக்கும் போதும் அடிக்கடி வலது கையை  ஊன்றுவாங்க.  அது ஆம்பிளை பிள்ளைக்கான அறிகுறி. 

அதோட தொப்புளுக்கும்,  மர்ம ஸ்தானத்திருக்கும் இடையே வலி வந்து இடுப்பு  பக்கம் வலி பரவினால் அது ஆம்பிளை பிள்ளைதான் தெரிஞ்சுதா?

பிள்ளை பிறந்தாதான் பால் சுரக்கும் என்றில்லை.  நிறை மாத கர்பிணியா இருக்கும் போதே பால் சுரக்கும்.   அந்த பாலை கொஞ்சம் எடுத்து தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால், அது அப்படியே பரவி மிதந்தால்,  அது ஆம்பிளை பிள்ளைதான் சந்தேகம் இல்லை.  

பொம்பளை பிள்ளையா இருந்தா...ரொம்ப அசதியா இருக்கும்.  அப்படியே படுத்து கிடந்தால் தேவலைன்னு தோணும். 

வலது மாபகத்தை விட, இடது மார்பகம் பெருத்தும் விம்மியும் தெரியும்.  கண்ட கண்ட பொருள் மேல எல்லாம் ஆசை வரும். 

மண்ணு திங்கிறதும், சாம்பல் திங்கிறதும் அதுதான் காரணம். 

பசிக்கிற மாதிரி இருக்கும்.  சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடியாது.  பொய் பசியா இருக்கும்.   

முகம் பளிச்சுன்னு அழகா இருக்கும். 

அதோட தொப்புளுக்கும்,  மர்ம ஸ்தானத்திருக்கும் இடையே வலி வந்து,  அந்த வலி வயிறு பக்கம் பரவினா அது பொம்பளை பிள்ளைதான்.  

நிறை மாத கர்பிணியா இருக்கும் போதே பால் சுரக்கும்.   அந்த பாலை கொஞ்சம் எடுத்து தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால், அது அப்படியே பரவி மிதக்காம, அதே இடத்தில் மிதந்தால் அது பொம்பளை பிள்ளைதான் தெரிஞ்சதா. 


Tuesday 17 January 2012

பொண்ணுகளை கவர பொன்னான யோசனை

நீங்கள் ஆண்கள் சமூகமா? 

இளவட்ட பெண்களால் ஒதுக்க பட்டவரா?

பொறுக்கி, பொறம்போக்கு, என்றெல்லாம்  பட்டங்கள் வாங்கியவரா?

அவன் கண்ணுல கொள்ளிகட்டையை வைக்க என்று பெண்கள் கரித்து கொட்டுகிறார்களா?

அவங்க மட்டும் கையை தூக்கி என் பக்கம் வாங்க ராசா.  

அதா.... பொண்ணுங்க மனசை கடலுக்கு ஒப்பிடுவாங்க.  நான் சொல்றேன்... பொண்ணுங்க மனசு கடலும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை.  அது அழகான நந்தவனம். 

உங்க பார்வையில் கண்ணியம் இருந்தால்?

உங்க கிட்டே ஒரு கட்டுப்பாடு இருந்தால்?

எதையும் சீர்தூக்கி பார்க்கிற தொலை நோக்கு பார்வை இருந்தால், முன்னே சொன்ன எந்த பட்டமும், பதக்கமும், கேடையமும் உங்களுக்கு வந்து இருக்காது.   சரியா?

உங்களை பார்த்தா.... அட... இப்படியும் ஒரு மனிதனான்னு,  வாயை பிளக்கனும்னா,  மேல வந்து விழாத குறையா  சிரிச்சு சிரிச்சு பேசணும்னா....நான் சொல்லும் வேத மந்திரத்தை உடனே பாராயணம் செய்யுங்கோ. அமுல் படுத்தி பாருங்கோ.

  • மந்திரம் 1 

பொண்ணு யூத்தா, ஒல்டோ,      பிகரு சூப்பரோ,  சுமாரோ, அதுங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன தெரியுமா?

அருவெருக்கத்தக்க பார்வை. 

ஆளை பார்த்ததும் ஆ........ன்னு,    பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்கிறததை நிறுத்தனும்.  அதோட முக்கியமா.... குறிப்பிட்ட  இடத்தை குறி வச்சு பார்கிறதை அறவே நிறுத்தனும். 

இப்படியான பார்வையாளர்களை கண்டாலே பெண்களுக்கு அலர்சி தான். அப்பறம் நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட போறக்களையானு ஹைதர் அலி காலத்து வசனம் எல்லாம் வரத்தான் செய்யும்.

ஒரு உண்மையை சொல்லவா....  16 வயசுல தாவணி போடுற பொண்ணுங்க,  20 வயசுல புடவை கட்டுது.  அவங்க எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்களோட பார்வை பிடிக்காம,  சுடிதாருக்கு மாறிட்டாங்களாம்.  இது ஒரு சர்வே ரிபோர்ட். 

இன்னொரு முக்கியமான  விஷயம். ஊசி இடம் கொடுத்தாதான் நுலு நுழையும்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? 

கை  இல்லாம ஜாக்கெட் போடுறது, ஜன்னல், கதவு, வராண்டா வச்சு ட்ரெஸ் பண்றது எல்லாம், சபல ஆண்களுக்கு ஒரு வாய்ப்பை தருது.  மாத்திகிறது நல்லது.  இது பெண்களுக்கு சொல்றது புரியுதுங்களா மேடம். 

  • மந்திரம் 2 

சந்துல சிந்து பாடுறதுன்னு கேள்வி பட்டதுண்டா?

அதாவது....உரசுறது, தட்டுறது, இடிப்பது போன்ற சில்மிசங்களில் ஈடுபட்டால் பொண்ணுங்களுக்கு பிடிக்காது. 

பஸுல, ரயில்ல, தியேட்டர்ல, திருவிழான்னு கூட்ட நெரிசலில,  சந்தர்ப்பம் கிடைச்சா சங்கு ஊதுறது. 

இது மாறனும், அல்லது  மாத்திக்கணும்.  இல்லேனா கேட்ட பெயரே பட்ட பெயரா மாறிடும்.  பொம்பளை பொறுக்கின்னு ஒரு பொதுவான பெயர் இருக்கு தெரியுமா?

  • மந்திரம் 3 

பார்ட்டி... எப்படிங்க.... ரொம்ப ஜாலி டைப்பா.  கலகலன்னு சிரிச்சு பேசுமா.  அது அவங்க குணமா இருக்கும்.  அவங்க கிட்டே நைசா நுலு விடுறது தப்பு.  
உங்க பக்கத்துக்கு வீட்டு பொண்ணா.... உங்கள் கூட ஒண்ணா வேலை பாக்குதா?    எதார்த்தமா தனியா பார்த்தால், கூர்ந்து பார்க்கிறது, அவங்க தற்செயலா திரும்பி பார்த்தால்,  பக்கத்துல போய் நிக்கிறது, வழிந்து பேசுறது, சிரிப்பது, சிக்னல் கொடுப்பது,  பச்சை பச்சையா பேசுறது நல்லதே இல்லை. 

அதுக்காக பேசவே கூடாதுன்னு சொல்லவே இல்லை.  பேச்சில் ஒரு மரியாதை,  பார்வையில் ஒரு கண்ணியம்,  பழகுவதில் ஒரு பண்பு என்பதெல்லாம்  பெண்கள் பீனல் கோர்ட்டுல ஒரு சட்டம்.   மீறினா அவபெயர்தான்.  

  • மந்திரம் 4  

சிலருக்கு செல் மேனியா நோய் பிடிச்சு இருக்கும்.  அது என்ன நோய்னு  கேட்கிறிங்களா....?   பொண்ணுங்க துணி விலகும்போது தூரத்துல நின்னு படம் பிடிக்கிறது. 

தெரிந்த பொண்ணுகளிடம் அட.... தப்பா நம்பர் அடிச்சுட்டேன்னு பேச ஆரம்பிச்சு ஜொள்ளு விடுறது.  இந்த டைப் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.  

இவன் ரொம்ப நல்லவன்னு பொண்ணுங்க நம்பனும்.  அவங்களா பேசாம பேசாதிங்க.  நாகரிகமா பேசுங்க.  நல்ல பெயர் எடுங்க.  அப்பறம் என்ன...... உங்க காட்டுல மழைதான்.  

மந்திரம் 5 

உங்க கிட்டே அந்தரங்கமா பேசுற பெண்ணுங்க கிட்டே கவனமா இருங்க.   முகத்துக்கு நேரா நல்ல பேசிட்டு,  போன பிறகு தப்பா பேசாதிங்க.  தெரிஞ்சா உங்க முகத்திலேயே முழிக்காது கவனம்.  





Monday 16 January 2012

சனி பகவான்/ SANI PAGAVAAN

சனி 

இவர் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும்.  சாதாரண மனிதர் முதல்,  சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்குவார்கள்.  நீதிமான். நியாயவாதி. அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார். 

கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர்.  ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர்.  சூரியபகவானின் இரண்டாவது புதல்வர். 

அப்போ முதல் புத்திரர்.....

அது யமன்.  பின்னவர் ஆயுளை வளர்த்தால்,  முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர்.  சகோதரி யமுனை.  காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். 

புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகினி நச்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் ஸூரியபகவானுக்கும்,  தாயார் சாயாதேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனீஸ்வரன் என்ற சனிபகவான் ஜனனமானார். 

அவர் பிறந்தநாளைதான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம். 

எதற்கு?

நீடித்த ஆயுளை பெற, சனிபகவானின் அருளை பெற.  இது கோவிந்தனுக்கும் உரிய நாள் என்பது உண்மைதான்.  எள்தான் இவரது தானியம்.  அந்த எள் விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கே குறிப்பிட்டாக வேண்டிய ஒரு விஷயம் இது.   மற்ற கிரகங்கள் என்னதான் யோக நிலையில் இருந்தாலும் சனிபகவானின் சம்மதம் இல்லாவிட்டால்  யூகத்தை பெறுவதற்கு சான்ஸ் இல்லை.

அதே சமயம் சனி கொடுக்க துணிந்து விட்டால்,  சும்மா அதிரும்முள்ள என்று சொல்கிற மாதிரிதான் இருக்கும்.  எதுக்குடா வம்பு என்று மற்ற கிரகங்கள் விலகி கொள்ளும்.  புரியுதா.

சனி கர்ம வினை கிரகம்.  கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார்.  அதனால் எந்த ராசியில் நின்றாலும்  தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி வரும்போது செயற்குழு, பொதுக்குழு, காரிய கமிட்டி கூட்டமெல்லாம்  போடா மாட்டார்.  நேரடியாக ஆகஷன்தான்.

என்னதான் காசு பணம், சொத்து சுகம்  இருந்தாலும் அனுபவிக்க முடியாது.  நோயை கொடுத்து பாயில் படுக்க வைத்து விடுவார்.  விபத்து கண்டங்களை உருவாக்கி ஒரே இடத்தில் முடக்கி போடுவார்.

இல்லா விட்டால் ஒரே நாளில் ஓட்டாண்டியாக்கி நொந்து நுலாக அலைய விடுவார்.  அப்படியும் இல்லையா..... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது மாதிரி நம்பிக்கை மோசடிக்கு யாராவது நம்மை தேடி வருவார்கள்.

அட அதுவும் முடியலையா?  இருக்கவே இருக்கு அரசாங்க அறை.  அதாங்க... ஜெயில்.  இருட்டிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்வது போல், கொஞ்ச நாளைக்கு கம்பி எண்ணுடா தங்கம்னு அனுப்பி வைக்க பார்பார்.

உங்களுக்கு ஏழரை சனியா?  அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க.  சனி பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.  அந்த மந்திரம் இதுதான்.

நீலாஞ்சனச மாபாஷம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்புதம்
தம் நவாமி சனைசரம்


Friday 13 January 2012

FACE BOOK DANGER / பேஸ்புக் டேஞ்சர்



பேஸ்புக் 

எங்கோ ஒரு நாட்டின் மூளையில் இருந்தவர்களை உலகமெங்கும், உயர்த்தி பிடிக்க வந்த உன்னத சாதனம். நட்பிற்கு இலக்கணமாய் வந்தது. 

நாடு, மொழி, இனம், சாதி, வயது, அந்தஸ்த்து என்கிற அனைத்து நிலைகளையும் கடந்து,  ஒருவரோடு ஒருவர் நட்பை பழக,  தங்கள் கருத்துக்களை வெளியிட,  தங்களுக்கு பிடித்தமான விடியோ, மற்றும் புகைப்படங்களை பரிமாறிக்கொள்ள வசதி செய்து கொடுத்து பேஸ்புக்.

இன்று பல லட்ச்சகணக்கானவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை தங்கள் மனதுக்கு இனியவர்களுடன் பேசி பழகுகிறார்கள் என்பது உண்மையே. 

ஆனால் எந்த ஒரு நல்ல செயல் இருந்தாலும்  அதற்கு பின்னால் சில புல்லுருவிகளும் இருப்பார்கள் என்பதுதான் உண்மை.  அந்த வியாதி பேஸ்புக்கிலும் தொற்றி கொண்டு விட்டது. 

உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் ஆபாச வக்கிரங்களை அவிழ்த்துவிட சிலர் பேஸ் புக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என்பதும் உண்மை. 

இதில் புனை பெயர், போலியான போட்டோ, அல்லது முகம் இல்லாத முகவரிகள், பூ, பழம், மிருகம் என்று பல்வேறு படத்தை தங்கள் அடையாளமாக சூட்டிகொண்டவர்கள்,  இன்று பேஸ்புக்கில் தொற்று வியாதி மாதிரி தொடர்ந்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இந்த கட்டுரை எழுத தூண்டியது. 

பார்ப்பதற்கு படு சாந்தமான பெண்மணி போட்டோ.  பார்த்த உடனே கை எடுத்து கும்பிட தோணும்னு சொல்வாங்களே,  அந்த மாதிரி ஒரு கலையான முகம்.   

கடந்த வாரம் தான் பேஸ்புக்கில் தன் தன் கணக்கை துவக்கி இருக்கிறார். இந்த பூனையும் பால்  குடிக்குமா என்று போலிருந்த அவரிடம் இருந்து நண்பராக அழைப்பு வந்தது.  நான் உறுதி செய்தேன். 

அடுத்த இரண்டு நாள் நான் லேப்டாப்பை தொட சந்தர்ப்பமே கிடைக்க வில்லை.  வெளியூர் பயணம். வீட்டிற்கு வந்ததும்,  என் பேஸ் புக்கை  திறந்து என் பதிவிற்கு சென்றேன். 

எனக்கு அந்த பெண்மணி ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் விடியோ பதிவை அனுப்பி இருந்தார்.  அதிர்ந்து போனேன்.  எனக்கு பின்னால் ஏன் குழந்தைகள் வேறு நின்று கொண்டிருந்தார்கள்.  அவசரமாய் மூடினேன். 

உண்மையில் யாரும் பக்கத்தில் இருந்தால் திறந்து பார்க்கவே அச்சம் கொள்கிற அளவிற்கு இருக்கிறது நிலைமை. 

இன்னும் சிலர்.. பதிவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தால்,  HI என்று சாட்டிங் செய்ய அழைப்பு வரும்.  ஆர்வ கோளாறில் அந்த பக்கம் போனால்,  நாகரிகமாக பேச துவங்கியவர்களிடம் இருந்து ஆபாச வர்ணனைகள் வரும்.

இதில் அதிகம் பாதிக்க படுவது பெண்கள்தான். இந்த நோக்கத்திற்காக பதிவுகளில் உலா வருகிறவர்கள் பற்றியோ, அவர்களுக்கு துணை போகிறவர்களை பற்றியோ நமக்கு கவலை இல்லை.  ஆனால் அப்பாவிகள் பாதிக்கபடுவதுதான் அநியாயம். 

சரி... இந்த மாதிரியான அனாமத்து பேர்வழிகளை தவிர்ப்பது எப்படி?  பேஸ் புக்கில் நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பது எப்படி என்று பாப்போம். 

  •   நீங்கள் பேஸ் புக்கில் புது கணக்கு துவங்க போகிறிர்களா.... துவங்கியதும் நண்பர்கள் அழைப்புக்கு,  உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு விடுக்க சொல்லுங்கள்.  அல்லது உங்கள் நண்பரின் பெயர் மற்றும் ஊரை SEARCH பகுதியில் தேடி அவர்களுக்கு அழைப்பு விடுப்பது.   அப்படி செய்யும் போது அறிமுகமான நண்பர்களே இருப்பார்கள். 

  • ஒருவரை நண்பராக்க முயற்ச்சிக்கும் முன்,  அவரின் கடந்த கால  பதிவுகளை போய் பாருங்கள்.  அதில் என்ன மாதிரியான செய்திகள், படங்கள், விடியோ தொகுப்புகள் வைத்து இருக்கிறார் என்று தெரியும்.   அதை பார்த்தாலே அவரின் குணாதிசயம் என்ன என்பது புரியும்.

  • முகம் காட்டாதவர்கள், பழம், பூ, படம் வைத்து இருப்பவர்கள், அல்லது ஒரு குழந்தையின் படத்தை வைத்து இருப்பவர்களை நண்பராக்க முயற்ச்சிக்க வேண்டாம்.  அழைப்பு விடுத்தாலும் தவிர்த்து விடுங்கள்.   எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று தெரியாது.  

  • அரை குறை ஆடையுடன் போஸ் கொடுப்பவர்களை நண்பர்களாக்க வேண்டாம்.  ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் பலான படமோ, படுக்கை அறை காட்சிகளோ உங்களுக்கு வரவே செய்யும். 

  • 1000 நண்பர்களை சேர்த்து அபூர்வ சிந்தாமணி என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களை எல்லாம் நண்பர்களாக ADD செய்ய வேண்டாம்.  

  • சரி.... தெரியாத்தனமா ஒருத்தரை நண்பராக்கி விட்டோம். தொடர்ந்து எழவெடுத்த படமா வருது.  எப்படிங்க நிறுத்துறது. 
  • சம்மந்த பட்டவரின் PROFILE படத்தை கிளிக் செய்தால் அவர் பக்கம் திறக்கும். அவர் நண்பர்களின் வரிசைக்கு கிழே REPORT / BLOCK  என்று வரும்.  கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஒப்பன் ஆகும். 

  • அதில் BLOCK  சம்மந்த பட்டவரின் பெயர் அங்கே இருக்கும். அதில் BLOCK   ய்  கிளிக் செய்து CONTINUE என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பாக்ஸ் ஒப்பன் ஆகும்.  அதை OK செய்தால் போதும்.  உங்களுக்கு அவர் அனுப்பும் எந்த செய்தியும் வராது. 

  • இன்று பேஸ் புக்கில் ரகசியமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு வார்த்தை FAB . அதாவது பிரண்ட்ஸ் அண்ட் பெனிபிட் என்று அர்த்தம். 

இன்னும் விளக்கமாக சொல்வதானால் அர்த்தம் வேறு விதமாக இருக்கும். 

அதாவது... நீங்கள் யார்... உங்களுக்கு காதலன் இருக்காரா... கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா என்பது எனக்கு கவலை இல்லை.  

அதை போல் எனக்கு காதலி இருக்காளா... மனைவி இருக்காளா... அதை பற்றியும் கவலை இல்லை.  

உங்கள் வாழ்க்கையில் நான் குறுக்கிட மாட்டேன்.  அதைபோல் என் வாழ்க்கையில்  நீங்கள் குறிக்கிட கூடாது.   ஆனால் உங்களுக்கு நான் தேவையா சரி வா... சந்தோசத்தை கொடு.  எனக்கு நீ தேவை வா... என்னுடன் சந்தோசமாய் இரு என்று ஜென்டில்மேன் அக்கிரிமென்ட் போட்டு கொள்வதுதான்.

பச்சையாக சொன்னால் செக்ஸ் மட்டும் தான்.

இது போன்ற மேஜெசுகள் வந்தால் எச்சரிக்கையாகி விடுங்கள்.

வாழ்க நல்ல நண்பர்கள்.



Wednesday 11 January 2012

கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ என்ன செய்யணும்?

படித்தவர்கள் மத்தியில் இருக்கும் பரவலான கேள்வியே இதுதான்.  

என்ன?

பொருத்தம் பார்க்கனுமா?

சரி... பொருத்தம் என்பது என்ன?

இன்னாருக்கு இன்னாரை சேர்த்து வைத்தால், வம்சம் தழைக்கும், வாழ்வு செழிக்கும்,  பாலும் தண்ணீரும் போல் பாகுபாடில்லாமல் ஒன்றிணைந்து வாழ்வார்கள் என்று கண்டுபிடித்து சொல்வதுதான் பொருத்தம்.  இப்போ சொல்லுங்க பொருத்தம் பார்க்கனுமா, இல்லையா?

இதுக்கு சுற்றி வளைத்து ஏங்க முக்கை தொடணும். பையன் படிப்பு என்ன...உத்தியோகம் என்ன....குடும்ப பின்னணி என்ன... வருமான வாய்ப்புகள் என்ன...பையன் நல்ல  குணவானா... பொண்ணை கடைசி வரை வச்சு காப்பாத்துவானா இது தெரியனும் முதல்ல.

பொண்ணு சைடுல பின்புலம் என்னன்னு பார்த்தா போதாதா.  விட்டுக்கு அடங்கின பொண்ணா, வெளியே சுத்துற பொண்ணான்னு பார்த்தா போதும்.  அதுவும் பட்டதாரியா இருக்கணும், அதோட காசு பணம் இருந்தா, கணவன் மனைவிக்குள்ள ஏன் கருத்து வேறுபாடு வருது.

அப்படின்னா... நீங்க சொல்றததை பார்த்தால் ..... ஒன்னு சேர வேண்டியது ரெண்டு   பட்டதாரிகள்,  ஒன்னு சேரப்போவது ரெண்டு பணக்கார குடும்பங்கள்,  ஒன்னு சேரப்போவது ரெண்டு அந்தஸ்துக்கள் அப்படிதானே.

தப்பு பண்றீங்க ராசா.... தப்பு பண்றீங்க. ஒன்னு சேர வேண்டியது  படிப்போ, அந்தஸ்தோ, கவுரவமோ இல்லை.

மனசு.

இருமனம் கலந்த உறவுதானே திருமணம். அந்த வாழ்க்கையை தீர்மானிக்கிற கிரகங்கள் வலுவிழந்து காணப்பட்டால், குடும்ப வாழ்க்கையில் கொந்தளிப்பு வருமா இல்லையா.

காசும் பணமும், கௌரவமும் செல்வாக்கும் உடைந்த மனசுக்கு ஒத்தடம் போடுமா. எத்தனை நாளைக்கு போடும்.

ஒரு ஜாதகத்தில் தின பொருத்தம் இல்லாவிட்டால் மன வருத்தம் வருவதை தவிர்க்க முடியாது.  காம்போடு பூவு கருத்து வேறுபாடு கொண்ட மாதிரி ஒரு நிலைதான் வரும்.

அதை விடுங்க.  கண பொருத்தம் என்பது என்ன?

அவர்களின் குண நலன்களை குறிக்கும் வார்த்தை.  ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள்.  கணவன் மனைவி உறவில் உரசல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், அனுசரித்து போகும் அமைப்பும், கடும் சொல் பேசாத நிலையும் வேண்டும்.

இந்த கண பொருத்தம் காலை வாரினால், அன்பு நிலை குறைந்து அதிகார தோரணை அல்லவா வந்துவிடும்.  அவ்வாறு அதிகார தோரணை வந்து விட்டால்,  பணம் ஒன்றிணைக்குமா,  அல்லது பட்டதாரி படிப்பு ஒன்றிணைக்குமா? சொல்லுங்க.

சரி... மகேந்திர பொருத்தம் என்பது என்ன?

சௌபாக்கியங்களை விருத்தி செய்வது. பொன்னும் பொருளும், ஆடை ஆபரணம் மட்டுமல்ல, குடும்பத்தில் சந்தோசம், மகிழ்ச்சியை தழைக்க செய்வது, நிம்மதியை நிலைக்க செய்வது.  இந்த பொருத்தம் வேண்டுமா வேண்டாமா?

அதுதான் போகட்டும்.  ஸ்திரி தீர்க்கம் என்பது என்ன?

ஒரு பொண்ணு புகுந்த வீட்டில் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா என்பதை எடுத்துரைப்பது. அவள் தன கணவனுக்கு இனியவளாய், கணவனின் குடும்பத்தோடு ஒற்றுமையாய் வாழ வைப்பது.

அதை விடுத்து பெட்டி படுக்கையோடும், கட்டிய கணவனோடும் தனி குடித்தனம் போவது அல்ல.  போய்... கொஞ்ச நாளில எதிரும் புதிருமா வாழ்வது இல்ல.

அப்பறம் யோனி பொருத்தம்.

காசு பணமும், கௌரவமும் அந்தஸ்த்தும் தராத சந்தோசத்தை தருவது.  அதாவது தேக சாந்தி இருந்தால் தானே மன சாந்தியே வரும்.

புரியலையா?

ஒப்பனா ஒடைச்சு சொல்லவா.  கட்டில் சுகம்ங்க.  ஒரு ஆணையும் பெண்ணையும் உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக ஒன்றிணைப்பது தாம்பத்திய உறவு தான்.

இங்கே கசப்பு வாராமல் காபதுதான் யோனி பொருத்தம்.  ADM  மிஷுனே வீட்டுல இருக்கு, ஆனால் கட்டில் சுகம் கசக்குது சந்தோசம் வருமா? பணம் பாதாளம் வரைக்கும் பாயும்தான் மறுக்கலை. பணத்தால் சாதிக்க முடியாததை இது சாதிக்குமா இல்லையா?  யோசிச்சு பாருங்க.

அடுத்தது ராசி பொருத்தம்.

ஒருவரின் சிந்தனை, செயல்பாடு, இவற்றை குறிப்பது.  ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்து வாழ்கையை நடத்தும் போது, எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்.  அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கூட அடக்கம்.

இந்த ராசி பொருத்தம் சரியாக அமைந்து விட்டால், விட்டு கொடுக்கும் மனோபாவம், புரிந்து கொள்ளும் மனோநிலை தானாகவே வந்துவிடும்.

சரி அதுதான் போகட்டும்.  ராசி அதிபதி பொருத்தம் தெரியுமா?

சந்திரன் இருக்கும் வீட்டுக்கு உரிய கிரகம் நட்பு கிரகமாய் இருப்பது.  பொதுவா வாழ்க்கை என்பது என்ன?

யாரும் யார் பக்கமும் வளைந்து போவது இல்லை.  யாரும் யார் பக்கமும் வளைப்பதும் இல்லை.  பரஸ்பர புரிந்துணர்வு.  இதை சொல்வதுதான் ராசி அதிபதி பொருத்தம். இல்லேன்னா ஒருவர் மீது ஒருவர் குற்ற பத்திரிக்கை வாசிச்சு கிட்டு இருப்பாங்க.

வசிய பொருத்தம்.

அதா... வீட்டுக்கு வீடு வாசல்படியாம். வாசல் படி மட்டும் இல்லை, நிலைப்படி, கதவு, ஜன்னல், எல்லாமே இருக்கு. ஒரு குடும்பம்னா பிரச்சனை எழவே செய்யும்.  குடும்ப அரசியலில் இது எல்லாம் சகசம்தானே சுவாமி.

ஆனால்.... காலையில் எழும் பிரச்சனை மாலையில் வரும் மல்லிகை பூவு அல்வாவோடு மறைந்து போவதுதான் வசிய பொருத்தம்.

ஒன்னு சொல்லவா?

கண்ணு ரெண்டுதாங்க.  பார்க்கிற காட்சி ஒன்னுதானே.  அந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் சிம்மாடு கட்டி தூக்காம விடுறதுதான் வசிய பொருத்தம்.

இன்னொரு பொருத்தம் இருக்கு.  ரஜ்ஜு பொருத்தம். இதைதான் மாங்கல்ய பொருத்தம்னு சொல்வாங்க.

பொதுவா பொண்ணுங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பூண்டு ரசத்திற்கும் புளிக்கிற மாங்காய்க்கும் மட்டும் ஆசை வர்றது இல்லை.  நிறைந்த மாங்கல்ய பலத்தோடு,  பூவும் போட்டுமா கடைசி வரைக்கும் தீர்க்க சுமங்கலியா இருக்கணும்னு ஆசை.

இந்த பாக்கியத்தை தருவதுதான் ரஜ்ஜு பொருத்தம்.

கடைசியா வேதை பொருத்தம்.

கிட்ட தட்ட ராசி பொருத்தத்திற்கு சமம்.  இது எல்லாத்தையும் விட கிரக பொருத்தம் முக்கியம்.  ஜாதக அமைப்பு எப்படி  இருக்கு?  மாங்கல்ய பலம் என்ன? புத்திர பாக்கியம் எப்படி?

ஒருவர் ஜாதகம் மேலே தூக்கும் போது மற்றவர் ஜாதகம் காலை பிடித்து இழுக்காமல் இருக்குமா, என்பதை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாய் சொல்வதுதான் ஜாதக பொருத்தம்.

இந்த நச்சத்திர பொருத்தம் 20 % னா,  ஜாதக பொருத்தம் 80 %.  இப்ப சொல்லுங்க பொருத்தம் பார்க்கணுமா இல்லையா?  ஆக கணவன் மனைவி ஒற்றுமையாய் வாழ என்ன செய்யணும் பொருத்தம் பார்க்கணும்.









வரமா சாபமா? varamaa saapamaa?



ஜென் குருவை தேடி, அவ்வூரின் செல்வந்தர் ஒருவர் வந்தார்.  ஜென் குருவின் பெயர் ஜென்சாய். விழிப்புணர்வு அடைந்த  ஞானி.  அவரது வார்த்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும்.

அவரது செற்பழிவை கேட்பதற்கு என்றே வெகு தொலைவில் இருந்து மக்கள் வருவார்கள்.  செல்வந்தர் குருவை மரியாதை செலுத்தி தான் கொண்டு  வந்த பழக்கூடைகளை அவரிடம் கொடுத்தார். 

பின் குருவின் சொற்பழிவுகளை கேட்டு முடித்தவுடன், அவரை நெருங்கி.... குருஜீ ... எனக்கொரு இறுதி வாசகம் எழுதி கொடுங்கள்.  அந்த வாசகம் வாழ்க்கயின் உண்மையை குறிப்பதாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டு கொண்டார். 

குருவும் மறுக்காமல் எழுதி கொடுத்தார். 

அந்த தாளில் 

அப்பனும் இறப்பான்...
அவன் பிள்ளையும் இறப்பான்....
அதன் பின் 
அவன் பேரனும் இறப்பான்....
என்று எழுதி இருந்தது. 

என்ன குருஜீ இப்படி எழுதி விட்டீர்கள் என்று வருத்தத்துடன் கேட்டார். 

குரு புன்னகைத்தார்.  

நீ கேட்டது வாழ்வின் உண்மையை.  அழியாத சாசுவத உண்மை இதுதான்,  உன் தாத்தா எப்போதோ இறந்து விட்டார்.  அதன் பின் சில வருடங்கள் கழித்து  உன் தந்தையும் இறந்து விட்டார். 

நீயும் ஒருநாள், நாளையோ, அடுத்த மாதமோ, இல்லை பத்து வருடங்கள் கழித்தோ, அல்லது அதற்கு பின்னரோ இறந்து போவாய்.  அதன் பின் உன் மகனும் எதிர்காலத்தில் ஒரு நாள் மறித்து போவான்.  இதுதானே வாழ்வின் உண்மை. 

உண்மைதான்   குருஜீ.  பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பார்கள்.  இதை எல்லோருமே அறிவார்கள்.  ஆனால் உங்களை போல் ஞானி மக்களுக்கு வரம் தருவது போல் வார்த்தைகளை சொல்லாமல், சாபம் அளிப்பதுபோல். அப சகுனமாகவா எழுதுவது.  செல்வந்தர் குமுறினார். 

ஞானி சிரித்தார். 

இதுவா... சாபம்.  பெரிய வரமப்பா இது.  சுபமான வார்த்தை.  நன்றாக சிந்தித்து பார்.  முதலில் அப்பன் இறப்பான்,  அடுத்து பிள்ளை இறப்பான்,  அதற்கடுத்து பேரன் இறப்பான் இதுதானே முறை. 

உன் பெற்றோர்கள் நீ அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று தானே எதிர்பார்பார்கள். 

நீ மறைந்து உன் மகன் ஈம கடன் செய்வதுதானே முறை.  அதை விடுத்து அவன் இறந்து நீ அவனுக்கு இறுதி கடனை செய்ய வேண்டிய நிலை வந்தால் அது விரும்ப கூடியதாகவா இருக்கும். 

அதல்லவா பாவம்.  அதல்லவா சாபம் என்று சொல்லி வருத்த படலாம். நான் சொன்னது வரமல்லவா. 

மரணம் என்பது இயற்கை .  அது  இயல்பான முறையில் நடந்தாலே சுபமான வரம்.  இறையருள் எல்லாமே. 

ஞானி அந்த வார்த்தையை முடிக்கும் முன்னரே செல்வந்தர் அந்த தாளை எடுத்து கண்களில் ஒற்றிகொண்டார்.
mathivaanan

Tuesday 10 January 2012

தெரியுமா உங்களுக்கு?



  • சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும். 

  • அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை. 
  • விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது.  பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது,  மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள்.

  • அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும்.  இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்
  • கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி,  எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம். 
  • மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது. 
  • எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள்,  அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி,  அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது.
  • உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது  ஏழரை சனி,  அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி நடந்தால் அல்லது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 , 12 ம் இடங்களில் சஞ்சாரம் செய்தால், கிழக்கு நோக்கி தீப முகம் இருந்தால் கிரக தோஷங்களும், சகல பீடைகளும் விலகும். 
  •   அளவுக்கு அதிகமான கடன் தொல்லையா,  வாரம் தோறும் வைத்தியர் வீட்டுக்கு போகிற மாதிரி நோய் தொல்லையா,  பங்காளி பகையா எதுவாக இருந்தாலும் மேற்கு நோக்கிதீபம் ஏற்றினால் மாறும்.
  • வாலிபம் கடந்தும் வரன் அமைய வில்லையா? வந்ததெல்லாம் கொள்ளும் வங்காள விரிகுடா மாதிரி எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடிய வில்லையா, வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் விலகும். 
  • தெற்கு திசை நோக்கி தீப முகம் இருந்தால் தடைகள், தாமதங்கள், அபசகுனங்கள் , அமங்கலங்கள் ஏற்படும். 

  • மனதில் அமைதி இல்லையா, எப்ப  பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, ஏகாதசி விரதம் இருங்கோ சரியாகும். 

  • தொட்டது எல்லாம் தோல்வியா? எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறியா. தடை, தாமதம், தள்ளிவைப்பு, அலைகழிப்பு என்று அல்லல் படுகிறிர்களா. மாத சிவராத்திரி விரதம் இருங்கோ மாறும். 
  • எதிர் பாராத விபத்து, எதிரிகளால் ஆபத்து, நோய் தொல்லைகள் இவற்றில் இருந்து விடுபட சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்தால் சரியாகும். 
  • வேலை வாய்ப்பில் பிரச்சசனை, வேலை இல்லாத பிரச்சனை என அன்றாடம் அல்லல் படுகிறவர்கள் சதுர்த்தி விரதம் இருந்தால் விலகும். 
  • பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை கோளாறுகள் நீங்கவும், தீராத வியாதிகள் தீரவும் கிருத்திகை விரதம் இருப்பது சிறப்பு. 
  • வீட்டில் ஆஞ்சநேயர் படம் அல்லது சிலை இருந்தால் பூமாலைகள் பயன்படுத்த  வேண்டாம். துளசி மாலை மட்டும் அணிவித்து வழிபட்டால் நல்லது.
  • கோவிலின் பிரதான கதவுகள் முடி இருக்கும் போது, வெளியில் நின்று வணங்க கூடாது.
  • கோவிலில் அணைந்த விளக்கை ஏற்றலாம்,  ஏற்றிய விளக்கை அணைக்க கூடாது. 
கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்த பிறகு குளிக்க கூடாது.
வீட்டில் சிலை வைத்து வழிபடும் பழக்கம் இருந்தால், ஒரே சாமி சிலையை ஒன்றுக்கு மேல் வைத்து வழிபடகூடாது.

Monday 9 January 2012

பாடல் உருவான கதை MSV / கண்ணதாசன்



ஒரு பாடல் கேட்கிறோம், அடடா... அற்புதமான பாட்டு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போய்விடுவோம்.   ஆனால் அது உருவான விதத்தில் ஒரு சுவாரஸ்யமான கதை ஒளிந்து இருக்கும்.  அப்படி ஒரு சம்பவத்தைதான் பார்க்கபோகிறோம். 

கண்ணதாசனுக்கும், MSV க்கும் உள்ள நட்பு உலகம் அறிந்த ரகசியம்.  பல சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையே, சிறு சிறு மோதல்கள் ஏற்பட்ட போதும் கூட,  அது நட்பை பாதிக்கிற அளவுக்கு இருந்ததில்லை.

அப்படி ஒரு சம்பவத்தை பார்போம்.

பட்டினபிரவேசம் படம். கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவாக்கி கொண்டிருந்தது.  அதில் ஒரு அற்புதமான மெட்டை போட்டார் MSV , அதற்கு கவிஞர் பாட்டெழுத வேண்டும்.

விசு....வாசிடா என்றார் கவிஞர்.
 
MSV ன்  விரல்கள் ஆர்மோனியத்தை மீட்டி கொண்டிருக்க, வாய் மெட்டை கண்ணதாசனுக்கு சொன்னது.

நா... நன்னா...நன்னா... நன்னா..நன்னா... நா.... நான்.... நா...

மடையா நிறுத்து என்றார் கவிஞர்.


என்னடா ஒரு இதுவே வேண்டாமா.  நீ பாட்டுக்கு நா... நன்னா...நன்னா.. வாயில் வந்ததை சொன்னால்,  நான் வார்த்தைகளை கொண்டு வர வேண்டாமா.  வேற மெட்டு போடு.

இதை பார்த்து கொண்டிருந்தார் கே.பாலசந்தர்.  அவருக்கு அந்த டியூன் ரொம்ப பிடித்து விட்டது.  எப்படியும் கவிஞர் பாட்டெழுத வேண்டும். நிச்சயம் அவரால் நல்ல வார்த்தைகளை தர முடியும் என்று நம்பினார்.


மெதுவாக MSV யை ஒரு ஓரமாக அழைத்து போனார் பாலசந்தர்.  இந்த டியூன் ரொம்ப அற்புதமா வந்திருக்கு.   விட்டுடாதிங்க.  நான் இந்த இடத்தை விட்டு கிளம்பிடுறேன். நீங்க எப்படியும் கவிஞரை ரேக்கி விட்டுடுங்க.  பாட்டு தானா வரும்.


மறு நிமிடம் பாலசந்த்தர் கிளம்பிவிட்டார். நேராக கவிஞரிடம் வந்தார் MSV ,  சற்று நேரத்திருக்கு முன்பு தன்னை கவிஞர் எப்படி பேசினாரோ,  அதே தினுசில்,  நீ எல்லாம் என்னையா பெரிய கவிஞர்,  இந்த சந்தத்திற்கு பாட்டெழுத முடியாதாம்.


ஏன்.... முடியாது.  உங்களுக்கு என்ன பெரிய விஷயமா.

கவிஞரை தாக்குவது  போல் தாக்கி, அதே வினாடியே உங்களால் முடியாதது உண்டா கவிஞரே என்று தூக்கி வைத்து தனக்கு வேண்டியதை சாதித்து கொள்ளும் கலை MSV க்கு கை வந்த கலை.

அதிலும் கண்ணதாசனின் கவி திறமையை பல சமயங்களில் வெளி கொண்டு வந்த விதமே அலாதி.  தன்னுடைய ஈகோ  தொடப்பட்டதும், கவிஞர் வெகுண்டு எழுந்தார்.


டியுனை வாசிடா.

இந்த சமயத்தில் விஸ்வநாதன் சாமார்த்தியமாக ஒன்றை செய்தார்.  கவிஞர் மூடுக்கு வந்து விட்டதை புரிந்து கொண்டு சற்று  நேரத்திருக்கு முன்பு பாடி காட்டிய, நா... நன்னா...நன்னா... நன்னா..நன்னா... நா.... நான்.... நா..வை மாற்றி லா... லல்லா..லல்லா என்று பாடி காட்டினார்.

என்னடா... சற்று நேரத்திருக்கு முன்பு நா.... நன்னா... வில் இருந்தது.  இப்போ லா.. லல்லாவில் இருக்கிறதே என்றெல்லாம் கவிஞர் நினைக்கவில்லை.  அவரது தமிழ் தயாராகி விட்டது.


வான் நிலா... நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
என்று வார்த்தைகளை கொட்டினார்.


கோப கனலாக இருந்த கண்ணதாசன் இப்போ போதுமா  என்றதும், MSV அவரை கட்டிகொண்டார்.   கோபம் மறைந்து கண்ணதாசன் சிரித்து  விட்டார். 

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...