ads

Friday 21 December 2012

திருட்டு CD க்களின் பூர்வீகம் எது தெரியுமா?


பலமாத உழைப்பு, பலரின் கூட்டு முயற்சி, கோடிகளை முதலீடு செய்து தயாரிப்பு செலவு என்று ஒவ்வொரு திரைப்படமும் எடுக்கப்படுகிறது. அது எந்த மொழி படமாக இருந்தாலும் இது பொருந்தும். 

அப்படி எடுக்கப்படும் திரைப்படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது, படத்தின் கதைக்களம், திரைக்கதை அமைப்பு, நடிப்பு, தொழில்நுட்பம், இசை, பாடல்,  இப்படி பல காரணங்கள் இருக்கும். 

நமக்கு அது பிரச்சனை இல்லை. ஆனால் இப்படி பலரின் உழைப்பை கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் திரைக்கு வந்த சில நாட்களில் கள்ள சந்தைக்கு  வருகிறதே எப்படி? 

என்னதான் சட்ட திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டாலும், காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், முற்றிலும் ஒழிக்க முடியவில்லையே என்ன காரணம்?  இது எல்லாம் திரைத்துறை ஜாம்பவான்கள் பேசி பேசி கலைத்து போன ஒரு விஷயம்.


தீவிரமான  ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும், சில பெரிய நடிகர்களுக்கு, எப்படியும் தன் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தியேட்டருக்கு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். 

ஆனால் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களின் கதி, அதில் முதலீடு செய்த தயாரிப்பாளரின் நிலைதான் கேள்விக்குறியாகி விடுகிறது.

இதை பற்றி  நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், படத்தை  விநியோக உரிமை பெற்றவர்கள் மட்டுமே கவலை பட வேண்டிய விஷயம் என்று நம்மால் ஒதுங்கி போக முடியவில்லை. யார் எக்கேடு கெட்டுப்போனால்  நமக்கென்ன என்று இருக்க முடியவில்லை. .


ஒரு திருட்டு VCD வாங்கப்படுகிறது என்றால், அந்த படத்தை அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்கள்  மட்டும் பார்ப்பதாக வைத்து கொண்டால் கூட, குறைந்தது ஐந்து நபர்கள் தியேட்டருக்கு வருவது நின்று விடும். 

இது போல் எத்தனை லட்சம் CD க்கள் விற்கப்படும். எத்தனை லட்சம் பேர் தியேட்டருக்கு வராமல் போகிறார்கள். 

அதனால் ஏற்படும் வருமான இழப்பு எவ்வளவு? பல நல்ல படங்கள் திரைக்கு வந்தும் கூட, தொழில் நுட்ப ரீதியில் சிறந்த படங்கள் கூட, வெகு விரைவில் தியேட்டரை விட்டு வெளியே போகிறது என்றால் திருட்டு CD க்களே காரணம்.

இது ஒன்றும் புது செய்தி அல்ல. அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஒரு ரசிகன் தியேட்டருக்கு வராமால் போகிறான் என்றால் அதற்கு என்ன காரணம்? இதை பற்றி  திரைத்துறை சங்கங்கள் என்றாவது யோசித்திருக்குமா?

யோசித்திருந்தால் சினிமா கட்டணம் இந்த அளவிற்கு உயர்ந்து  இருக்காது. ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பட்ஜெட் போட்டே வாழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

வீட்டு செலவு, மளிகை சாமான், எதிர்பாராத மருத்துவ செலவு, உறவினர்களின் சுபகாரியங்களுக்கு ஆகும் செலவு ,பிள்ளைகளின் படிப்பு, பெட்ரோல் இப்படி ஆயிரம் தேவைகளை பூர்த்தி செய்ய போராடும் போது, சினிமா செலவு என்பது கண்ணை கட்டுகிற சமாச்சாரம். 

தாய் தந்தை, கணவன் மனைவி, இரு குழந்தைகள் உள்ள சிறு குடும்பம் தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க  வேண்டும்  என்றால், மாதத்தில் இரண்டு படங்கள் பார்க்க வேண்டும் என்றால்கூட  குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்ப்பது என்றால் அது வேறு.


ஆக பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் வேறு வழியில்லாமல் திருட்டு CD களுக்கு போகிறார்கள். வெறும் முப்பது ரூபாயில் ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டில் இருந்தே படத்தை பார்த்து விடலாம் என்கிற யோசனையில்.

இதை பற்றி தியேட்டர் உரிமையாளர்களும், சினிமா நிர்வாகிகளும் தான் யோசிக்க வேண்டும்.

போகட்டும்....நாம் விஷயத்திற்கு வருவோம்.


இதுநாள் வரை திருட்டு CD விற்கும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்த CD க்கள் எங்கே இருந்து வருகிறது என்பது தெரியுமா? இதன் பூர்வீகம், தாய்நாடு எங்கே இருக்கிறது என்பது தெரியுமா?

மலேசியா... தான் அது.

தமிழகத்தை பொருத்தவரை சினிமா ரசிகர்கள் என்பது ஒரு வெறிபிடித்த கூட்டம்  கட்டவுட்டில் ஆரம்பித்து, நடிகரின் கட்டவுட்டுக்கு பாலாபிழேகம் வரை செய்வார்கள்.

இதே போன்ற மனநிலை மலேசிய ரசிகர்களுக்கும் உண்டு. ஆனால் அவர்கள் ரசிகர் மன்றம் வைத்து கொண்டு அலைவதில்லை.

மாறாக எந்த தமிழ் சினிமா வந்தாலும் பார்த்துவிடுவார்கள். எந்த நடிகர் கலை நிகழ்ச்சி நடத்தினாலும் பார்த்து விடுவார்கள்.  அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு உண்டு.

அதே மலேசியாவில் தான்  திரைக்கு வந்த இரண்டாவது நாளில் அந்த படத்தின் CD க்கள் ஒப்பன் மார்க்கெட்டாக விற்க ஆரம்பித்து விடுகிறார்கள்  அங்குள்ள கடைகார்கள்.

வெறும் பத்து வெள்ளிக்கு மூன்று நான்கு படத்தை இணைத்து விற்பனை செய்கிறார்கள். அது மட்டும் அல்ல, அந்த படத்தின் நல்ல பிரிண்ட் வேண்டும் என்றால் கூட, அதே பத்து வெள்ளிக்கு தனி படமாக எல்லா CD விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.


இங்கிருந்துதான் கள்ளத்தனமாக தமிழ்நாட்டுக்குள் புது திரைப்பட CD க்கள் வருகிறது.  இது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் இப்படி திருட்டு CD க்கள் வருவதை  முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் படத்தின் வசூலை பாதிக்காத வகையில் செய்ய முடியும்.

எப்படி? என்ன செய்யாலாம்?

படத்தை வெளியிடு செய்யும் போது, உலகம் முழுவதும் என்று வெளியிடு செய்யாமால், தழிழ்நாட்டில் குறைந்தது 50 நாட்கள் ஓடிய பிறகு வெளி நாட்டில் வெளியிடு செய்தால், கள்ள CD க்களின் வரத்து குறைந்து விடும்.

அதற்குள் தியேட்டருக்கு சென்று படம்  பார்ப்பவர்களின் கூட்டம் குறையாது. அதற்கு சினிமா கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

திரைத்துறையை சேர்ந்தவர்கள் யோசிப்பார்களா?

2 comments:

  1. very good point...

    ReplyDelete
  2. I spoke about this to Film Distributors and Film exhibitors association persons.. They told that, they cant stop this Piracy and they cant stop this FMS business.. As FMS will give them in crores and crores which is more than 50 times of business than in India and Tamilnadu.. So they wont stop sending their copies to other countries..
    And, Abirami Ramanathan said, "திருடனும்னு முடிவு பண்ணிட்டா, திருடன் வீடு பூட்டியிருந்தாலும் திருடுவான், தொறந்திருந்தாலும் திருடுவான், அதுமாதிரி, திருட்டு வீ சி டி போடறவனுங்க ஃபாரீன் ல இருந்தும் திருடுவானுங்க, இங்க இருக்கற லேப் ல இருந்தும் திருடுவானுங்க"

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...