ads

Monday 31 December 2012

2013



எத்தனை எத்தனை
அனுமானங்கள்
அத்தனையும் பொய்த்து போய்
புத்தாண்டில் மீண்டும்
புதிதாய் பிறந்தோம்

பூமியின் அருமையை அனைவருக்கும்
உணரவைத்து
பூமிக்கு வந்த
அந்த கண்டம் விலகியது.
சூரிய குடும்பமும் தப்பியது.

இது இறைவன்
மனிதர்களுக்கு தந்த இன்னொரு வாய்ப்பு
அனைத்து உயிர்களுக்கும் மறு பிறப்பு

இனி புதிதாய் வாழ்வோம்
பூமியை நேசிப்போம்
இயற்கையை பூசிப்போம்

பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணித்துளியும்
மனிதனாய் வாழ்வோம்
மனித நேயம் கொள்வோம்

கோவத்தை களைந்து குப்பையில் வீசுவோம்
அன்பெனும் உடையை அணிந்து கொள்வோம்
போட்டி
பொறாமை
பூசல்கள்
இல்லாமல் பூமியை சுத்தமாய் வைப்போம்

சண்டை சச்சரவு
சத்தங்கள் இல்லாமல்
உலகில் அமைதியை விதைப்போம்

பாசம் என்னும் பசுமையை வளர்ப்போம்
வாழ்க்கையை மட்டும் அல்ல
வாழ மடி தந்த பூமியையும்
வசந்தமாய் மாற்றி அமைப்போம்

என்றும்....
என்றென்றும்.....

மதிவாணன் 

2 comments:

  1. பாசம் என்னும் பசுமையை வளர்ப்போம்
    வாழ்க்கையை மட்டும் அல்ல
    வாழ மடி தந்த பூமியையும்
    வசந்தமாய் மாற்றி அமைப்போம்

    அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  2. உங்கள் வாழ்த்துக்கு நன்றி. இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...