ads

Monday 29 October 2012

அழகு குறிப்பு




உங்கள் பாதங்களை பாதுகாக்க, கால் கப் தயிரில் சில சொட்டுக்கள் வெனிகர் விட்டு நன்றாக கலக்கி, பாதங்களில் குதிகால் விரல்கள், விரலிடுக்குகள் முதலிய பகுதிகளில் தேய்த்து தடவி, ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவி வரலாம்.  

அல்லது வெந்நீர் உள்ள வாளியில் கால்களை வைத்திருக்கலாம். 

இப்படி செய்வதால் பாதங்களில் செதில்  செதிலாக இருக்கும் இறந்து போன திசுக்கள் சுத்தமாகும். பாதங்கள் மிருதுவாகி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொறித்த வெங்காயத்தை நன்றாக அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவி வர, ஒரு மாதத்தில் காலில் உள்ள வெடிப்புகள் காணாமல் போய்விடும். 


பற்கள் பளிச்சிட நீகள் பல் துலக்கும்போது பற்பசையுடன் சிறிதளவு உப்பையும் தூவி பல் துலக்குங்கள். உங்கள் பற்கள் வெண்மையாய் முத்து போல் பளிச்சிடும். 


பற்களில் படிந்துள்ள கரை நீங்க பற்பசையுடன் ஒரு சொட்டு கிராம்பு தைலத்தை  விட்டுக்கொளுங்கள். பற்களில் படிந்துள்ள கரை நீங்கி விடும். 

நன்றாக காய்ந்த எலும்பிச்சை தோலை பவுடராக்கி சிறிதளவு உப்பு கலந்து இரண்டு மூன்று சொட்டுடன் கடுகு எண்ணெய் விட்டு கலக்கி இதில் பற்கள் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும். வாய் துர்நாற்றம் அகலும். 

1 comment:

  1. பயனுள்ள பகிர்வு விளக்கத்துடன்... நன்றி...

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...