ads

Saturday 24 March 2012

மருத்துவ குறிப்புகள்

என் மெயில் முகவரிக்கு  Aatika Ashreen சில மருத்துவ குறிப்புகளை அனுப்பி இருக்கிறார்.  அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.  உங்களுக்கும் எழுதும் ஆற்றல் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கலாம். கவிதை, கட்டுரை, ஆன்மீகம், தன்னம்பிக்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  என் பிளாக்கில் பிரசுரம் செய்கிறேன்.  

நன்றி.

ஆடாதொடை - இருமல் மற்றும் சளி சம்பந்த பட்ட நோய்களுக்கு உண்டான மருந்தில் சேர்க்கப்படும் ஒரு மூலிகை
நுரையீரல் ரத்தவாந்தி, மூச்சுத்திணறல்,இரத்தம் கலந்த சளி,சன்னி, இருமல், வாந்தி, வயிற்றுவலி, ஆஸ்துமா, நிமோனியா இன்னும் பலவற்றுக்கு அருமருந்து ஆடாதொடா
                                                                                                                                   Aatika Ashreen 




நார்ச்சத்து இருவகைப்படும். அவை,

நீரில் கரையும் நார்கள் (Soluble fiber)

நீரில் கரையாத நார்கள் (Insoluble fiber)

நீரில் கரையும் நார்கள்

இவை நீரில் கரையக்கூடியவை. இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைத்து இரத்தத்தின் பசைத் தன்மை அதாவது கடினத் தன்மையைத் தடுக்கிறது. இதனால் இரத்த அழுத்த நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

நீரில் கரையாத நார்கள்

செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்களின் செரிமானத்தைத் தூண்டி, உணவைச் செரிப்பித்து மலத்தை அதிகளவு வெளியேற்ற உதவுகிறது.

இரைப்பை, சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போ-ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றப்படுவதின் வேகத்தை நார்கள் குறைக்கின்றன. இதனால் உடலில் அதிகளவு சர்க்கரை, கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது.

நார்கள் குடலினுள் அதிகளவு நீரை உட்கிரகிக்கச் செய்கின்றன. இதனால் வயிறு நிறைந்ததுபோல் உணர்வு ஏற்படும். இத்தன்மை உண்ணும் உணவின் அளவைக் குறைக்கிறது. இதுவே உடல் எடை குறையவும் காரணமாகிறது.

மேலும் நார்கள் பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை குடல் உட்கிரகிக்கச் செய்யவிடாமல் தடுத்து வெளியேற்றுகிறது. இதனால் குடலில் புண், அஜீரணக் கோளாறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நார்கள் இரத்தத்துடன் கலந்து அடர்த்தி குறைந்த லிப்போ புரதத்துடன் இணைந்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

புற்றுநோய் தடுப்பு

நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் அதிகம் உட்கொள்பவர்களுக்கு GIT (Gastro Intestinal Tract) உணவுக் குழலில் புற்றுநோய் உண்டாவததைத் தடுப்பதாக அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நார்கள் குடலின் உள் பகுதியில் உணவை சீரணித்து மீதப் பொருளை மலமாக்கி வேகமாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குகிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை மலத்துடன் சேர்த்து வெளியேற்றுவதால் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேவையற்ற நச்சுப் பொருள்களை நீக்க

நார்கள் அதிகளவு நீரை உட்கிரகிப்பதால் உண்ணும் உணவில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.

நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் செரிமான மண்டலத்தில் மாற்றம் அடைவதற்கு நார்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

மாவுப் பொருள் சர்க்கரைப் பொருளாக மாற்றப்பட்டு, அது புரதம், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலம், கிளிசரோல் ஆக மாற்றமடைகிறது. இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற நார்கள் மிகவும் உதவுகின்றன.

ஒரு நாளைக்கு நார்ச்சத்து 28-35 கிராம் அளவு தேவைப்படுகிறது.

இவை கீரைகள், பசுமையான காய்கறிகள், பழங்கள் இவற்றில் அதிகமுள்ளது. அதுபோல் அதிகம் தீட்டப்படாத அரிசி, கோதுமை, பார்லியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன.

எனவே நலமான வாழ்வுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்
                                                      Aatika Ashreen 



ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பை கண்டுபிடிக்கலாம்

சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை.

தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள எண்டோ திலியல் செல் (உள் அடுக்கு படலம்) மாரடைப்பு நோயாளிகளுக்கு வழக் கத்தை விட மிகப் பெரிய மாறுபட்ட வடிவிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். அதை வைத்து மாரடைப்பு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய முடியும்.

இதற்கான சோதனையை மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்ட 50 பேரிடம் நடத்திய சோதனையில் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இந்த சோதனை இன்னும் 2 ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
                                                                                                                                     Aatika Ashreen 




பிறப்பு தழும்புகளை நீக்கும் தக்காளி சாறு!
ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்க்கு சருமத்தை மென்மையாக்கும் தன்மை உள்ளது. இது ஆலிவ் எண்ணெயைக் கொண்டு தினசரி 10 நிமிடங்கள் தழும்பு உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். தழும்பு படிப்படியாக மறையும். சருமம் மென்மையாகும்.

ஐஸ் கட்டி ஒத்தடம்

ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் கட்டி தழும்பு உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் இறுக்கமாக உள்ள தசைகள் இளகி மென்மையாகும். ஐஸ் கியூப் கொண்டு தழும்பு உள்ள இடத்தில் மென்மையாக 5 நிமிடங்கள் தேய்க்கலாம் இதனால் தழும்புகள் நிறம் மாறும்.

எலுமிச்சை, தாக்காளி சாறு

எலுமிச்சை சிறந்த இயற்கை பிளீச்சாக செயல்படுகிறது. எலுமிச்சை சாற்றினை தழும்பு உள்ள பகுதியில் நன்கு தேய்த்து ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ தழும்பு நிறம் மாறும்.

தக்காளிச் சாறு எடுத்து அதனை தழும்பு உள்ள பகுதியில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும். இதனை வாரம் மூன்று முறை செய்துவர பலன் தெரியும். தக்காளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் தழும்பு உள்ள பகுதியில் வினைபுரிந்து தழும்புகளை மறையச் செய்கிறது.

ரசாயன கலப்பு உள்ள விலை அதிகமான பொருட்களை உபயோகித்து தழும்புகளை மாற்ற முயற்சி செய்வதை விட இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக தழும்புகளை குணப்படுத்தலாம். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
                                                                                                                                                    Aatika Ashreen 
செம்பருத்திப் பூக்களும் (காம்பும் நடுவிலுள்ள மகரந்தமும் நீக்கி) ஏலக்காயும் போட்டுக் கொதிக்கவைத்தநீரில் நாட்டுச் சர்க்கரையோ வெல்லமோ சேர்த்துக்கொண்டால் செம்பருத்தி டீ சுவையாக இருக்கும் உடம்புக்கும் நல்லது. ஒரு டம்ளருக்கு மூன்று பூவும் ஒரு ஏலக்காயும் போட்டால் நல்லது.
                                                                                                                Subash Krishnasamy 

 



No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...