ads

Friday 23 December 2011

உடல் பருமன் உஷார்

Uadal paruman uzhaar /  உடல் பருமன் உஷார் 

ஒல்லி பிச்சான் உடம்பாக சிலர் இருப்பார்கள். ஒட்டடை குச்சி மாதிரி இருக்கே என்று சிலர் கேலி பேசுவார்கள்.  ஆனால் ஒல்லிபிச்சான் உடம்பு நல்லதே. 

களுக்கு மொழுக்குன்னு இருக்கணும் என்பதற்காகவே கண்டதை தின்று குண்டான பலர், மற்றவர் பார்வைக்கு கேலி பொருளாக ஆனது மட்டும் அல்ல, உடல் ரீதியாகவும் மனோரிதியாகவும், பல்வேறு இடையுருகளை சந்திக்க நேரிடும்.

பொதுவாக உடல் பருமனை குறைக்க என்ன வழி என்பதை உடலியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா? 

இப்ப இருக்கிற பொதுவான முக்கியமான பிரச்சனை  உடல் பருமந்தான். சின்ன குழந்தையில் இருந்து, வயதானர்கள் வரை இந்த உடல் பருமனால் அவஸ்த்தை படவேண்டிஇருக்கிறது. 

மருத்துவ ரீதில் பார்த்தால், உயர் ரத்த அழுத்தம், டென்சன், சக்கரை வியாதி, மூட்டு பிரச்சனை, மலட்டு தன்மை, இதய நோய் எல்லாம் உடல் எடையால் ஏற்படுவதுதான். 

சக்கரை வியாதி என்பது பரம்பரை வியாதியாக இருந்தாலும், உடல் பருமனால் வயதில் சிறியவர்களுக்கு கூட இந்த நோய் வருகிறது.  பலரை நிம்மதி இல்லாமல் செய்கிற அளவிற்கு அசுர சக்தியாக உடல் பருமன் இருக்கிறது. 
அதற்கு டாக்டர்கள் தரும் டிப்ஸ் என்ன?

அளவா எந்த உணவை சாப்பிட்டாலும் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது. மணிக்கு ஒரு தரம் நொறுக்கு தீனியை தின்று கொண்டிருந்தால் உடல் பருமனுக்கு அதுதான் வினையாக மாறுகிறது. 

முறையான உடற்பயிற்சியும், முறையான உணவையும் சாப்பிடனும். முறையான உடற் பயிற்சிக்காக ஜிம், நடை பயிற்சி, யோகாசனம் போன்றவற்றை செய்பவர்கள் இருக்கிறார்கள். 

அது உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்ள உதவும் என்றாலும், விடாமல் செய்ய வேண்டும். விட்டால் மீண்டும் உடல் பருமன் விஸ்வருபம் எடுக்கும். 

சிலர் உடம்பை இலைக்க வைக்கிறேன் பேர்வழி என்று பட்டினி கிடப்பார்கள். அப்படி செய்வதால் உடல் பொலிவை இழந்து வயதான தோற்றத்தை காண்பிக்கும்.  இதை தவிர்க்க வேண்டும். 

சரி என்ன செய்வது? 

பட்டினி கிடைக்காமல் அளவான உணவு, கொழுப்பு குறைந்த உணவு,  தவறாத உடல் பயிற்சி அவசியம்.   கெமிக்கல் நிறைத்த கடை சாப்பாடு  தவிர்க்க வேண்டும். இவற்றை கடை பிடித்தால் உடல் பருமனை ஒரு கை பார்த்து விடலாம்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...