ads

Sunday 25 December 2011

2012 mithuna raasi new year palan / மிதுன ராசி நியூ இயர் பலன்கள்

2012 mithuna raasi new year palan /  மிதுன ராசி நியூ இயர் பலன்கள்

பிறவி மேதாவிகளே வணக்கம். அறிவு தொழிச்சாலைகள் உருவாக்குற இடம் மிதுனமோ என்று யோசிக்கிற அளவிற்கு அதிமேதாவிகள் உருவாகிற ராசி மிதுனம். 
கருவிலேயே கல்வி வாசனை வருமாம். உயர் குலத்தில் பிறந்து, உயர் நிலையில் வாழும்  உத்தமர்களாம். அனுபவ அறிவு அதிகம். சபை கோழைகள் என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மட்டும்.

வாதம் செய்தால் வக்கீல், அறிவுரை செய்தால் ஆசிரியர்.  புதிய விஷயங்களை கற்று கொள்வதில் மாணவன். இது இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மட்டும் பொருத்தும்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க தெரிந்தவர்கள். எதையும், நயமாகவும், நாணயமாகவும் பேசுகிற நீங்கள், தேவைபட்டால் கோபத்தை வெளிக்காட்டவும் தயங்க மாட்டீர்கள்.

கிடைத்த வாய்ப்புகளை விடாமல் பிடித்து கொள்விர்கள். பிடிக்காதவர்களை கண்டால் விலகுவிர்கள். சரி புது வருடம் எப்படி இருக்கும்,  சனி பகவான் மாறிவிட்டாரே, இனி கால சக்கரம் எப்படி சுழலும் என்பதை பாப்போம்.

கடந்த காலங்களில் திட்டமிட்ட பணிகள் எல்லாம் பட்டு பட்டு என்று முடிந்தது. உங்கள் புகழும் செல்வாக்கும் பல மடங்கு உயர்ந்தது.  விளக்கை பிடித்து கொண்டு கிணற்றில் விழுந்த கதை எதுவும் அரங்கேற வில்லை.

சிக்கலின் ஆரம்ப முனையை கண்டு பிடித்து அங்கேயே சரி செய்தீர்கள்.  செய்ய வேண்டிய சீர்திருத்தம், ஆற்ற வேண்டிய கடமைகள் எதுவுமே இதில் விதி விலக்கில்லை.

இதில் இப்போது மாற்றமில்லை. சனி மாறியதால் எந்த மாற்றமும் வரபோவதும் இல்லை.  உங்களுக்கு வரவேண்டிய பாக்கியங்களில் தடை என்பதோ, தாமதம் என்பதோ கிடையாது.

இதில் தன பாக்கியம், சரிர பாக்கியம், சௌபாக்கியம் முதலிடம் பெரும்.  செய்தொழில் அடுத்த இடம்  பெரும். சேர்ந்தவரால் ஆதாயம் வரும். பல வகையில்  லாபம் அதிகரித்து, உங்கள் லெட்ச்சியம் நிறைவேரபோகிறது. இந்த வருடம் சங்கடமின்றி சந்தோசமாக வலம் வரலாம்.


நீங்கள் எடுக்கிற எல்ல முயற்சிகளிலும் வெற்றிதான்.  நஷ்ட வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் இனி அபரிதமான லாபத்தை பார்க்க முடியும்.

குடும்ப வாழ்க்கை சீராகும். பொது வாழ்க்கை பரபரப்பாகும்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.  உங்களுக்கே சுப காரியம் நடக்க வேண்டி இருந்தால் தடை இல்லாமல் நடக்கும்.

இதுவரை  குரு மன நிமதியை கொடுத்தார். பண வசதியை கொடுத்தார்.  பதவி யோகத்தை கொடுத்தார்.  சரிவில் இருந்த நீங்கள் சரியான இடத்தை பிடித்திர்கள்.  கற்பனையில் ஓடிய பந்தய குதிரை நிசத்தில்ஓடியது.

கூட்டு புழுவாக இருந்த பலர் பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறக்க முடிந்தது.  இது தொடரும். உங்களை பொறுத்தவரை ஏறுமுகம்தான்.  அந்த ஆறுமுகன் தயவால் நல்லதே நடக்கும்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...