சில உறவுகள்
கை குலுக்கி முடிந்ததும்
காணாமல் போகும்
சில சந்திக்கும் பொது மட்டும் சிந்திக்கும்
சில தேவை படும்போது தேடும்
சில உயிர் வரைக்கும் உணரும்
கடைசி வாக்கியம் ஆனவளே
இபோதெல்லாம்
என் தோட்டத்தில்
ரோஜாக்கள் பூப்பதே இல்லை
என் வானத்தில்
வெண்ணிலாவுக்கு கூட
விடுமுறை
என் சமுத்திரத்தில்
இப்பொது
முத்துக்கள் விளைவதில்லை
முட்கள் முளைக்கிறது
ஏன் தெரியுமா
வெளிச்சமாக இருந்த நீ
விலகி போனதால்
போ ....
போகிறேன்
விரல் இல்லாத போது
வீணை எதற்கு
நதிகள் இல்லாத போது
படகு எதற்கு
நீ இல்லாத போது
நான் எதற்கு
போ..
போகிறேன்
என் பிரியமானவளே
என் நினைவாக
உன்னிடம்
எதுவும் இல்லை
உன் நினைவை தவிர
வேறு எதுவும்
என்னிடம் இல்லை
கடைசியாக ஒன்று
பிறவிகளில் எனக்கு
நம்பிக்கை இல்லை.
ஒரு வேலை நான் பிறந்தால்
நீ
இருந்தால்
வைரமுத்து சொல்வது போல்
நான் கேட்பேன்
நீ
உண்மையாக நேசித்தாயா
ராமா..
ReplyDelete