ads

Thursday 15 December 2011

காதல் கவிதை


  
சில உறவுகள்
கை குலுக்கி முடிந்ததும்
காணாமல் போகும்
சில சந்திக்கும் பொது மட்டும் சிந்திக்கும்
சில தேவை படும்போது தேடும்
சில உயிர் வரைக்கும் உணரும்

கடைசி வாக்கியம் ஆனவளே
இபோதெல்லாம்
என் தோட்டத்தில்
ரோஜாக்கள் பூப்பதே இல்லை
என் வானத்தில்
வெண்ணிலாவுக்கு கூட
விடுமுறை
என் சமுத்திரத்தில்
இப்பொது
முத்துக்கள் விளைவதில்லை
முட்கள் முளைக்கிறது

ஏன் தெரியுமா
வெளிச்சமாக இருந்த நீ
விலகி போனதால்

போ ....
போகிறேன்
விரல் இல்லாத போது
வீணை எதற்கு
நதிகள் இல்லாத போது
படகு எதற்கு
நீ இல்லாத போது
நான் எதற்கு
போ..
போகிறேன்

என் பிரியமானவளே
என் நினைவாக
உன்னிடம்
எதுவும் இல்லை
உன் நினைவை தவிர
வேறு எதுவும்
என்னிடம் இல்லை

கடைசியாக ஒன்று
பிறவிகளில் எனக்கு
நம்பிக்கை இல்லை.
ஒரு வேலை நான் பிறந்தால்
நீ
இருந்தால்
வைரமுத்து சொல்வது போல்
நான் கேட்பேன்
நீ
உண்மையாக நேசித்தாயா

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...